ஹெமிங் வே: வாழ்வெனும் கடலுக்கு அஞ்சிய கிழவன்

ஊட்டி முகாமில் கலந்துகொண்டு திரும்பியபின் பல புதிய படைப்பாளிகள் எனக்கு அறிமுகமானார்கள். அம்முகாமுக்காக உருவாக்கப்பட்ட தளத்தில் இருந்த பல கதைகளை ஆர்வத்துடன் வாசித்தேன். அதில்தான் ஹெமிங் வே எனும் படைப்பாளி எனக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் எழுதிய கிழவனும் கடலும் என்ற நோபல் பரிசு பெற்ற நாவலின் குறும்படத்தைத் தேடிப் பார்த்தேன். அவர் குறித்து விரிவாக…

அவிழாத மொட்டுகள்

உங்கள் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களின் பரப்பளவு ஒருநாள் சிறுத்துவிடுவதைப் பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அல்லது கால் உடையாமல், ஊனப்படாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை முழுவதிலும் அமர்ந்துகொண்டு,சிறு வேலைக்குக்கூட அடுத்தவருடைய உதவியை நாடி வாழ்வதைப் பற்றி எண்ணியதுண்டா? இவையெல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் வலிந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் அது ஒரு அலங்காரமாக அவர்கள்…

இரத்தம் விற்பவனின் சரித்திரம்

சீன எழுத்தாளர் யூ ஹூவா 1994ஆம் ஆண்டில் எழுதிய இந்த நாவல் ‘Chronicle of Blood Merchant’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர் யூமா வாசுகி  தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். நாவலின் பெயரைப் பார்த்தவுடன் போரைப் பற்றிய புனைவாக இருக்குமென்ற என் யூகத்தை இந்நாவல் முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது. உலகிலேயே பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்…

சுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)

இந்தத் தடவை பள்ளி விடுமுறையின்போது, நான் கட்டாயம் சுன்னத் (விருத்தசேதனம்) செய்துகொள்ள வேண்டும் என்று  அப்பா கட்டளையிட்டார். நானும் அதற்குத் தயாரானேன். அப்பாவின் முடிவைக் கேட்டு அம்மா அழுதார். இந்த  சின்னப் பையன் சுன்னத் செய்வதை அம்மாவின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அது அப்பா எடுத்த முடிவு, அம்மாவால் எதுவும் செய்ய இயலாது. எங்கள்…

கரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)

அன்று நான் எனது தந்தையின் குடிசையைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனாக இருந்தேன். அப்போது எனக்கு எத்தனை வயது இருந்திருக்கும்? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. மிகக் குறைந்த வயது. ஐந்து அல்லது ஆறு வயதாக இருந்திருக்கக்கூடும். எனது தாய், தந்தையோடு பட்டறையில் இருந்தாள். சுத்தியலால் அடிக்கும் ஓசையும், விதவிதமானவற்றை வாங்க வருபவர்களது குரல்களும் எப்போதுமே…

மலைக்காடு: இன்னொரு முகம்

‘மலைக்காடு’ சீ. முத்துசாமியின் புதிய நாவல். தனது வழக்கமான களமான தோட்டப்புறத்தை மையப்படுத்தி இந்நாவலை அவர் எழுதியிருந்தாலும் அதன் பின்னணியில் தெளிவான வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். மலைக்காடு நாவல் மலேசியாவின் 1940ஆம் ஆண்டு காலகட்டத்தைத் தளமாகக் கொண்டது. புக்கிட் செம்பிலான் என்னும் தோட்டத்தை மையமாகக் கொண்டு சொல்லப்படும் இக்கதை, 1940களின் தோட்டப்புற வாழ்வுடன், மலேசிய வரலாற்றில் இன்றும்…

விஜிப்ரியா கவிதைகள்

ஒரு வன்மம் சுழற்றி அடிக்கிறது புள்ளியில் தான் தொடங்குகிறது . டார்வின்தியரி போல பல்கி பெருகி ஒரு திமிங்கலம் அளவு வளர்ந்துவிட்டது. வழக்கமான வசைகளை வாறிஇறைத்து கற்களை கொண்டு அடித்தும் வீழ்த்துகிறேன். என் வசைகளின் பெருவெள்ளத்தில் கரை ஒதுங்கி மூச்சு அறுபட்டு துடித்து சாகும்மென என நினைத்து நான் நிறுத்துவதில்லை. வளர்ந்துவிட்ட அவை என் கண்ணில்…

சமகால சிறுகதைகளின் செல்நெறிகள் : ஓர் அனுபவம்

கடந்த தடவை வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது, அவ்வறையின் ஒரு பகுதியில் விற்பனைக்கு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் சிலவற்றை வாங்கியும் கொண்டேன். வாங்கிய புத்தகங்களில் நான் விரும்பி வாசித்து என்னுள் தாக்கத்தினை ஏற்படுத்தியபுத்தகமாக குறிப்பிட விரும்புவது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பாகிய ‘அம்பு படுக்கை’ எனும்…

எதிர்வினை

அண்மையில் முகநூலில் வல்லினம் செயல்பாடுகள் குறித்த சில சர்ச்சைகள் எழுந்தன. பதிப்புரிமை, ராயல்டி குறித்து அவை இருந்ததால் பொது வாசகர்களின் குழப்பங்களைப் பொருட்படுத்தி அவர்கள் கேள்விகளுக்கான பதிலை வழங்கியுள்ளோம். அவதூறுகளைக் எளியக் கேள்விகளாக மாற்றி அவற்றுக்கான பதில்களை இணைத்துள்ளது மேலும் தெளிவடைய உதவும் என நம்புகிறோம். – ஆசிரியர் வல்லினம் 100க்கு தேசிய நிலநிதி கூட்டுறவு…

சமகால சிறுகதைகளின் செல்நெறிகள் (வீடியோ)

  சமகால சிறுகதைகளின் செல்நெறிகள்             சமகால சிறுகதையின் செல்நெறிகள் (கேள்வி – பதில்)             சுனில் கிருஷ்ணனின் புனைவுலகம்

எழுத்தாளர் சாம்ராஜ் மலேசிய வருகை

ஜோகூர் ‘பார்வை கல்விக் கழகம்’ ஏற்பாட்டில்  ‘சினிமாவும் அரசியலும்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வல்லினம் பதிப்பில் பிரசுரமான ‘ஊதா நிற தேவதைகள்’ நூல் வெளியீடும்  நவீன சினிமா குறித்த சொற்பொழிவும் இடம்பெறும். நாள்    : 27.7.2019 (சனிக்கிழமை) நேரம் : மாலை 4 மணிக்கு இடம் : அருள்மிகு இராஜகாளியம்மாள் ஆலய மண்டபம்…