
சிங்கப்பூரை வணிக மையமாக நிறுவி தமது பணியை முடித்துக்கொண்டு 1824ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி லண்டனுக்குப் புறப்பட்டார் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ். அவரையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியாளர்கள் மற்றும் மூன்று பெரிய பெட்டிகள் நிறைய இந்த மண்ணின் இலக்கியங்களையும் சுமந்துகொண்டு சுமாத்திராவிலிருந்து கிளம்பிய ஃபேம் என்ற கப்பல் அன்று இரவே தீப்பிடித்து எரிந்துபோனது.…