Category: கவிதை

அன்பழகன் செந்தில்வேல் கவிதைகள்

            வெண் தந்தங்களால்  பகைவர் மதில் தகர்த்து புலிகள் அஞ்சும்படி  வனங்களில் திரிந்து  மூங்கில் தின்று  பசி  தீர்த்து  தடாகம் குடித்து தாகம் அடங்கி   மரங்கள் பெயரும்படி உதைத்து காடதிர பிளிருபவை  யானைகள்  இலஞ்சி குமாரசாமி கோவிலில்  கைப்பிள்ளைக் காரி வைத்திருக்கும்  தலை சுமக்கா குழந்தையின் சிரம்…

நவீன் மனோகரன் கவிதைகள்

                கவிதை என்பது… கவிதை என்பது தற்கொலைக்கு முன்பான ஓர் அந்தரங்கக் கடிதம் கவிதை என்பது யாருக்கும் புரியாத கண்ணியமான கண்ணீர் கவிதை என்பது தோல்விகளை மூடிமறைக்கும் தற்காலிக மேகமூட்டம் கவிதை என்பது ரத்தம் வடியாதிருக்க தோலில் இட்டுக்கொள்ளும் ரணமான தையல் கவிதை என்பது மௌனம்…

நரன் கவிதைகள்

                தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் வீட்டைச் சுத்தப்படுத்தி குப்பைகளைத் தெருவில் வீசுகிறான் . பின் தலையைச் சொரிந்தபடி தன்னிடமே காசு வாங்கிக் கொள்கிறான் .   தேர்ந்த துப்புரவுத் தொழிலாளி தன் தெருவைச் சுத்தப்படுத்தி குப்பைகளை . நகரத்தின் வெளியே கொண்டுபோய் வீசுகிறான் நகரத்தில்…

பாட்டாளிகளின் சூதாட்டம்

            பாட்டாளிகளின் சூதாட்டம்   ஏக வல்லமை பொருந்திய கன்வேயர் பெல்ட்டுகளின் பிதாக்களே பௌர்ணமியைக் கண்டு வருடங்களாகின்றன அமைதியாகக் கொஞ்சம் தூங்கவும் வேண்டும் கூர் பற்சக்கரங்களை இணைத்தபடி நீண்டுகொண்டே போகும் இக் கன்வேயர் பெல்ட்டை எப்போதுதான் நிறுத்துவீர்கள் காணாமல் போவது போலும் கனவு காண்பதுபோலவும் நான் தொழிற்சாலையின் வாயிற்…

லீனா மணிமேகலை கவிதைகள்

உலர்ந்தவை, உலராதவை  1. எனக்குப் பிறகு உன்னைக் காதலிக்கப் போகிறவளைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன் பாவமாய் இருக்கிறது நான் நொறுக்கிப்போட்டிருக்கும் உன்னை எதைக்கொண்டு அள்ளி முடிவாள் நீ மறக்க முடியாமல்  அவ்வப்போது உச்சரிக்கப் போகும் என் பெயர் இரும்புத்துகள்காய் அவள் கண்களை அரிக்கும் உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கழுத்தை, தோள்களை, உதடுகளை, காதுகளை, தேமல்களை,…

ஓர் மௌன அழைப்பு

மூன்றாவது மாடியிலிருக்கும் என் பணிமனையின் அகண்ட சாளரக்கண்ணாடி  வழியாகத் தென்படும் ஒரு மரத்தின் முகடு உச்சி முகரும் உயரத்தில் தலைகாட்டி நின்றிருக்கும் வாஞ்சையோடு அரூபக் கரங்கள் அந்தரங்கமாயத்  தீண்ட நிரவமாய் அது குலுங்கிச் சிரிக்கும் விஸ்தாரமாய்க் கவைத்த கொம்புகள் அந்தரத்தில் எம்பிக் குதிக்கையில் பதின்மக் கிளைகளில் ஊஞ்சலாடும் பால்ய நினைவுகள் சின்னஞ்சிறு இலைகள்மீது ஒருதுளி வெயில் ஒளிரும் மாய விரல்கள்…

பிறப்பற்ற பிறப்பு

சுகத்திற்கு மட்டுமே கட்டில்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தூங்கம் தூக்கு கயிறுகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன வயிற்றை நிறைத்துக் கொண்டது போல் மனத்தை  நிறைத்துக் கொள்ள வழியில்லை அன்பு ததும்பிய நான்கறையும் துருபிடிக்கத் தொடங்கிவிட்டன இப்போதுதான் துடிக்கிறது என்னுள் இன்னொரு இருதயம் . கண்ணீரை நிரப்பிக் கொண்டு சிரித்து மழுப்புகிறேன் சிரிப்பொலியின் சீற்றத்தில் நானே சாகிறேன் அசைவுகளில் நான் அசைவற்று…

பூசாரி அம்மத்தா

காணாக்கிளைப் பறவை அனுப்பும் குரல் உரசி இலை உதிர்க்கும் ஒலியோடு ஜோடியாக வெயில்மணம் பூசிப் பைய வரும் மதியக் காற்றின் முதுகில் தொற்றிக்கொண்டு வந்திறங்கும் அம்மத்தாவின் வீட்டு வாசலில் மகனைப் பிரிந்து தொலைவூர் சொந்தவீட்டில் தனியாகவே வாழும் அம்மத்தா முதுமை தேய்த்த கால்மூட்டுக்கு உள்ளங்கையை ஊன்றக் குடுத்து சாய்த்தவாறே அம்பலம் சுற்றி அஞ்சு முழுத்திங்கள் கண்டுவிட்ட…

நிழலின் சொகுசு

பிரதான சாலையோடு சங்கமிக்கும் தடம் வழியே வரும் சொகுசுக் கார் முனையில் நின்று மூக்கு நீட்டி எட்டிப் பார்க்கும் தூர்தர்ஷனின் மகாபாரத வில் தொடுத்த கணைச் சரங்களாய் விசையுற்று ஏகும் வாகனங்கள் ஒருகண சிறுவெளி கிடைத்ததும் அதில் உடம்பை நுழைத்து வெறிவேக வேங்கைகள் ஸ்தம்பிக்க ஒய்யாரமாய் வளைத்து சல்லென்று முந்திச் செல்லும் நரியின் மீது உறுமும்…

ச. விஷ்ணுதாசன் கவிதைகள்

புழுக்கம்   வெளிகள் பலதாய் சமுக வெளிகள் பண்மியமாய் வேண்டும்.   வெளிகளை உருவாக்கிட இருப்பை உணர்த்தும் போதெல்லாம் முற்ற முழுதாக முள்வேலிச் சிறை அடைப்புக் கூடாய் அதிகாரத்தோடு …   சிறை முகாம் முழுவதுமாய் பாசி படர்ந்த இருட்டு இருட்டு கக்கிய விஷக் காய்ச்சல்.   வெளிச்சக் கீற்றை நாடும் அகவெளியும் புறவெளியும் அழுத்தப்பட்ட…

யோகி கவிதைகள்

நான் உன்னை பிரிகிறேன் என் அன்பே மூன்றாவது முறையாக இன்று உன்னை பிரிகிறேன் பிரிதல் உனக்கும் ஓர் ஓவியத்துகான புள்ளியை கொடுக்கலாம் புள்ளிகளைக் கோடுகள் ஒன்றினைக்கலாம் நீ அவற்றுக்கு வர்ணம் தீட்டி அழகான படம் வரைந்து காட்டி அதைக் காட்சிக்கு வைக்கலாம் என் அன்பே ஓர் ஓவியனின் ஓவியம் போல் இல்லை இந்த பிரிவு அதை…

அனார் கவிதைகள்

 விடுதலைக்கு அப்பால் உள்ளிருக்கும் பட்டுப்பூச்சியால் நெய்யப்படுகிறது பட்டுக்கூடு மின்னல் கீற்றுகள் பழிச்செனத் தெறித்து மங்குகின்றன கண்கூசச்செய்யும் கோடிவண்ணங்களின் பிரகாசத்தை யாராலும் தாங்கமுடியாது பொன்னிழைத் தூவல்களால் இழைத்த பட்டுக்கூடு ஆகாயவெளியின் பிடிமானத்தில் அசைகிறது வினோத ஒலிகளால் நேர்த்தியான சத்தங்களை எழுப்பும் பறவைகள் சிறு குருவிகள் நிகழ்த்தும் நாட்டிய அணிவகுப்பு சூழ்ந்திருக்க சர்ப்பமாகவும் சாத்தானாகவும் மாறித்தோன்றும் பேர் எழிலை…

உயிர் சுமக்கும் வேர்கள்

குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில் கனவுகளை எழுதுகிறது சாம்பல் பறவையொன்று இனிவரும் வசந்தகாலத்தின் இலைகள் பறவையின் கனவுகளை மொழிபெயர்க்கவும் இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும் அந்தக் கணங்களில் அந்தப் பறவையும் மரமும் என்ன பேசிக்கொள்ளும் கனவுகளை வைத்திருந்து கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ கிளையின் துயர் மீது கண்ணீர் சிந்திக் கழுவிப்  போகுமோ…

சித்தாந்தன் கவிதைகள்

போதையுலராப் பொழுதின் ஜந்துகள் தன் துக்கத்தை மலைகளுக்குப் பரிசளித்தவனின் நிழலில் பதுங்குகிறது வரியடர்ந்த மிருகம் காடுகள் விழித்துக் கொண்ட பிறகு நகரங்களின் மூலைமுடுக்குகளெல்லாம் பதுங்கித் திரிந்து களைத்து திரும்பியிருக்கிறது இவனிடம் தன் சொற்களுக்குள் அதை ஒளித்து வைத்திருக்குமிவன் துயில் மறந்த நோயால் அவஸ்தையுற்றான் அவனின் புத்தக் கட்டுகளுக்குளிலிருந்து அது உறுமும் பொழுதுகளில் சாபத்தைத் தன் தலையில்…

எம். ராஜா கவிதைகள்

கருப்பு நிறத்திற்குக் காக்கையின் குரல் இமைகள் மூடினால் இருளின் ஆழம் ஆழத்து நிறத்தில் தலை சாய்த்து விழி உருட்டி உறுத்தும் உருவம் ஒன்று ரெண்டாகி ரெண்டு மூன்றாகி காவெனக் கரையும் o க்கா க்கா தெருச் சாலை எதிர்க் கரையில் சிறகு மறந்து தரையில் நிற்கும் கரிய உருவம் இளஞ் சிவப்பு அடித் தொண்டை தெரியக்…