இலங்கையின் தமிழ் இலக்கியம்

இலங்கை, சிறிலங்கா, சிலோன், தாமிரபரணி என்றெல்லாம் சொல்லப்படும் ஈழத்தின் தமிழிலக்கியம் 14ஆம் நூற்றாண்டுடன் தொடங்குகின்றது என்கிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. ஆனால், ஈழத்தின் வரலாறு அதற்கும் அப்பால் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஈழ வரலாறு நீண்டதாக இருந்தாலும் அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக அதனுடைய அடையாளத்தைக் காண முடியவில்லை. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கூட அது…

முரண் உண்மைகளைச் சொல்வோம்

ஈழ சிறப்பிதழாக வெளிவந்துள்ள ஜனவரி-மார்ச் 2015 பறை இதழுக்கு எழுத்தாளர் ஷோபா சக்தியின் தலையங்கம் ‘கலைக்கு கறாரான கோட்பாடுகளோ சித்தாந்தங்களோ வரைவிலக்கணமோ எல்லையோ கிடையாது. ஆனால் ஒரு நிபந்தனையுண்டு; அது உண்மையை மட்டுமே பேசவேண்டும்’ என்ற லியோன் த்ரொட்ஸ்கியின் நிபந்தனை எளிமையான ஒன்றைப்போல தோன்றினாலும் அந்த எளிமையைக் கடைப்பிடிக்க அனைத்துலகிலும் இலக்கியவாதிகள் கடுமையாகச் சிரமப்படுகிறார்கள் என்பதுவே…

வாய் தவறிச் செல்லும் வார்த்தைகள்

கவிஞர் காசியானந்தனை தெரியாத தமிழர்கள் இந்தப் பூமிப்பந்தில் எத்தனை பேர் இருப்பார்கள்? அவரது பாடல்கள் மிக நீண்டகாலத்திற்கு ஈழத்தமிழர்களிடத்தில் செல்வாக்கு செலுத்தும். அவரது பாடல்களினால் உணர்வு நரம்புகள் முறுக்கேறியபடி குளிர்தேசங்களில் எண்ணற்ற இளரத்தங்கள் இன்றும் கொதித்துக்கொண்டுமிருக்கலாம். காசியானந்தன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என ஆரம்பத்தில் நான் மிகத் தீவிரமாக நம்பியிருந்தேன். ஒரு கையில் துப்பாக்கியும், மறு…

முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ்: சில சிந்தனைகள்

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தில் முக்கியமானவர்களில் ஒருவர் கே. கணேஷ் (1920-2004). முற்போக்கு எழுத்தாளர்களுள் சிரேஸ்டர் என வழங்கத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்தவர். பல்துறை சார்ந்த ஆற்றலும் பயிற்சியும், சிருஸ்டிகர ஆற்றலும் பெற்றவர்கள் வெகு சிலரே உள்ளனர். அவர்களுள் கணேஷ்க்குத் தனியிடமுண்டு. இருப்பினும் அன்னாரின் பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை வெளிக் கொணரும் வகையிலான ஆய்வுகள் மதிப்பீடுகள் மிகவும்…

இல்லாத திசைகள் 3 – காத்திருத்தல்

எனக்கும் என் மனைவிக்கும் பெரும்பாலும் நிகழ்கிற சண்டைக்குக் காரணம் சொன்ன நேரத்துக்கு வந்து சேர்வதில்லை நான் என்பதுதான். பெரும்பாலும் அவரை காக்க வைத்து விடுவேன். அதனாலையே சண்டை வந்துவிடும். தப்புதானே… அதுவும் காத்திருக்கும் கோடூரம் அறிந்த நானே காக்கவைப்பது பெரிய தப்புதானே. கோலாலம்பூருக்கு வந்திறங்கிய முதல் நாள் இரவு காத்திருப்பை மறக்க முடியுமா? கோலாலம்பூருக்கு வந்து…

யோகி கவிதைகள்

நான் உன்னை பிரிகிறேன் என் அன்பே மூன்றாவது முறையாக இன்று உன்னை பிரிகிறேன் பிரிதல் உனக்கும் ஓர் ஓவியத்துகான புள்ளியை கொடுக்கலாம் புள்ளிகளைக் கோடுகள் ஒன்றினைக்கலாம் நீ அவற்றுக்கு வர்ணம் தீட்டி அழகான படம் வரைந்து காட்டி அதைக் காட்சிக்கு வைக்கலாம் என் அன்பே ஓர் ஓவியனின் ஓவியம் போல் இல்லை இந்த பிரிவு அதை…

நோவாவின் புதிய தொடர்…

‘உடைந்த கண்ணாடியை பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை வாங்க கூடாது’ கர்ப்ப காலத்தில் கூந்தல் வெட்டக்கூடாது’ இப்படி ‘கூடாது, கூடாது. கூடாது’ என நிறைய கூடாதுகளை நாம் யாவரும் கேட்டிருக்கலாம். ஏன் கூடாது என்று…

அனார் கவிதைகள்

 விடுதலைக்கு அப்பால் உள்ளிருக்கும் பட்டுப்பூச்சியால் நெய்யப்படுகிறது பட்டுக்கூடு மின்னல் கீற்றுகள் பழிச்செனத் தெறித்து மங்குகின்றன கண்கூசச்செய்யும் கோடிவண்ணங்களின் பிரகாசத்தை யாராலும் தாங்கமுடியாது பொன்னிழைத் தூவல்களால் இழைத்த பட்டுக்கூடு ஆகாயவெளியின் பிடிமானத்தில் அசைகிறது வினோத ஒலிகளால் நேர்த்தியான சத்தங்களை எழுப்பும் பறவைகள் சிறு குருவிகள் நிகழ்த்தும் நாட்டிய அணிவகுப்பு சூழ்ந்திருக்க சர்ப்பமாகவும் சாத்தானாகவும் மாறித்தோன்றும் பேர் எழிலை…

மலேசியாவில் தமிழ் தேசியம் தேவையா?

முதல் பாகம் முன்னுரை தமிழ் உணர்வு சிந்தனையாளர்கள் இடையேயும், தமிழர் அரசியல் முன்னெடுப்பளார்கள் இடையேயும் இன்று பெரிய சிந்தனை தாக்கத்தையும் தீவிர உரையாடல்களையும் தோற்றுவித்திருக்கும் களமாக அமைந்திருப்பது தமிழ்த் தேசியம் என்னும் இனவழி அரசியல் முன்னெடுப்பாகும். கடந்த நூற்றாண்டில் தேசியவாத கருத்தாக்கங்களின் எதிராகவும் காந்தியச்சிந்தனைகளின் எதிராகவும் நின்று, திராவிடர்கள் என்ற இனமரபுக்குள் தமிழர்களின் மாற்றுச் சிந்தனை…

What Your Teacher Didn’t Tell You: மெய்ப்பொருள் காண்பதறிவு

ஒரு பொருள் அல்லது கருத்தியலை நம் ஆய்வுக்குரியதாக ஏற்று அதுபற்றிய முந்தைய கருத்து மற்றும் முடிபுகளை தொகுத்தெடுத்து, இனியும் ஏற்க கூடியதை ஏற்று, தகர்க்கக் கூடியதை தகர்த்து, தொகுத்த தகவல்களைக் கட்டுரையாக வகை தொகைப்படுத்தி படைக்கும்போது அது ஆய்வுக்கட்டுரையாக உருப்பெறுகிறது என்கிறார் முனைவர் ந.ரெங்கநாதன் இ.செ.ப (தகவல் தொடர்பியல் துறை பற்றிய ஆய்வு அனுபவம், தமிழில்…

பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு: ஒரு பார்வை

பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு கோலாகலமாக தொடங்கியது என்று சொல்வதற்கு எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. காரணம், ‘வரலாற்றைத் தேடி’ என்ற தலைப்பில் உலக நாடுகள் தழுவிய நிலையில் ஒரு மாபெரும்  மாநாடு நடக்கிறது என்ற காரணத்தினால், அதன் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்த வரலாற்றுப் பூர்வ நிகழ்வுக்கு மக்கள் தொண்டாளரான மதிமுக தலைவர் வைகோ கலந்து கொள்கிறார்…

வென்றவன் அரசன்; தோற்றவன் பயங்கரவாதி!

இரண்டாம் பாகம் இன்றைய நிலையில் பிபி நாராயணனை பற்றி மிகையாக சிலர் சொல்கிறார்கள்? அவர் எம்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்? சிலர் அந்த காலத்தில் பிபி நாராயணன் போன்றவர்கள் மிக ஆடம்பரமாக வாழ்க்கை வாழ்ந்தார்கள்? அவர்கள் தோட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். இன்னொரு சாரார் நாராயணன் தோட்ட மக்களுக்காகவே வாழ்ந்தார் எனச் சொல்கிறார்கள்? உங்கள்…

மலேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை

திரு. கா. ஆறுமுகம் மலேசியக் கல்விச் சூழலில் மிக முக்கியமாக அவதானிக்கப்படுபவர். குறிப்பாக கல்வி கொள்கைகள்வழிதான் தாய்மொழிக்கல்வி என்பதை ஓர் அரசியல் அடையாளமாக உருவாக்க இயலும் என்பதிலும் அதன்வழிதான் பண்பாட்டை காக்க இயலும் என்றும் வாதிடுபவர். தொடர்ந்து நமது நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கல்வி சார் கருத்தரங்குகள், மாநாடுகள், சந்திப்புகளில் முக்கிய பேச்சாளராகப் பங்குகொண்டு விவாதித்து…