Category: புத்தகப்பார்வை

திறவுகோல் 3: குருவிக் கோட்டம்

2014 ஆம் ஆண்டு, அங் மோ கியோ நூலகத்திற்குச் சென்றிருந்தபோது ஒரு காட்சி என்னைக் கவர்ந்திழுத்தது. வட்ட வடிவ வெள்ளை நிற மேசை ஒன்றின் நடுவில் பறவைக் கூடு ஒன்று முட்டைகளோடு அமைக்கப்பட்டு அதைச் சுற்றி பலவிதமான காகிதப் பறவைகள் உருவாக்கப்பட்டிருந்தன. சில காகிதப் பறவைகள் மேசைக்கு மேலே பறக்குமாறு செய்யப்பட்டிருந்தன. முழுவதும் வெண்மையாகக் காட்சி…

திறவுகோல் 2: செலாஞ்சார் அம்பாட்

தங்கமீன் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல்மாதம் நடைபெற்ற நாவல் பயிலரங்கில்தான் மலேசிய எழுத்தாளர் திரு கோ.புண்ணியவான் அவர்களை முதன் முதலில் சந்தித்தேன். தனது எழுத்துலக அனுபவத்தை பார்வையாளர்களிடம் விரிவாக பகிர்ந்துகொண்ட அவர் தனது நாவலான ‘செலாஞ்சார் அம்பாட்’டைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். அன்றுமுதல் இந்நூலை சிங்கை நூலகங்களில் தேடத்தொடங்கினேன். என்னோடு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த இந்நாவல் இரண்டுவாரங்களுக்கு…

திறவுகோல்1 : நாடு விட்டு நாடு

கடந்த மாதம் முப்பத்தொன்பதாவது சென்னைப் புத்தக கண்காட்சிக்குச் சென்றபோது பேராசிரியர் வீ.அரசு அவர்களின் வீட்டிற்குச் செல்லும் அரியவாய்ப்பு கிட்டியது. அவரது வீட்டில் உள்ள நூலகத்தைப் பார்வையிட்டபோது “கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை மறக்காமல் வாங்குங்கள். உங்கள் ஊர்க்காரர் எழுதியது” என்று கூறி ஒரு புத்தகத்தைக் காண்பித்தார். அந்த நூலின் பெயர் ‘நாடு விட்டு நாடு’. தமிழினி பதிப்பகத்தின்…

ஜூல்ஸுடன் ஒரு நாள் : தப்பிக்க முடியாத உண்மை

ஒரு சின்னஞ்சிறிய நாவல் மிக நீண்டநாள் வாழ்ந்துமுடித்துவிட்ட அயற்சியைக் கொடுக்கமுடிவது குறித்து இப்போதுவரை ஆச்சரியமாக இருக்கிறது.  ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரம் ஒன்றுக்கு மரணம் நிகழ்வதை எளிதாகக் கடக்க முடிகிறது. மனித அழிவுகளும் வதைகளும் நாவலில் இடம்பெறுவதைக்கூட வரலாற்றின் ஒரு பக்கமென கசப்புகளைச் சுமந்து செல்ல முடிகிறது. ஒரே ஒரு மரணத்தை நாவல் முழுவதும் நிறைப்பதென்பது…

மஹாத்மன் சிறுகதைகள் : சுழற்சியில் இருந்து வெளியேறுதல்

பெருநகர வாழ்வு என்பது பெரும் பரபரப்பை தன் அடையாளமாக ஆக்கிக்கொண்டுள்ளது. காலை முதல் இரவுவரை நகர மக்கள் தங்கள் வாழ்கையைப் பரபரப்பாக ஆக்கிக் கொள்வதற்குப் பல காரணங்களை எப்போதும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். நகர வாழ்வில் யாரும் யாரையும் நின்று கவனிக்க நேரமிருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையைவிட வேகமாக ஓடக்கூடிய வித்தைகளை நகரமக்கள் கற்றுவைத்திருக்கிறார்கள். ஆயினும்,…

சு. யுவராஜனின் அல்ட்ராமேன் சிறுகதை தொகுப்பு – ஒரு பார்வை

மலேசிய இலக்கிய பரப்பில் 2000த்தாம் ஆண்டுகளில் முனைப்புடன் எழுத வந்த இளைஞர்கள் சிலரில் சு.யுவராஜன் குறிப்பிடத்தக்க சிறுகதைப் படைப்பாளியாவார். இவர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலத்தில் இருந்து எழுதிவருவதோடு தேசிய அளவில் நடத்தப்பட்ட பல சிறுகதைப் போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறார். ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக எழுதுவதில் இருந்து ஒதுங்கி இருந்த சு. யுவராஜன் இந்த ஆண்டு தனது…

என்னை நாயென்று கூப்பிடுங்கள்

மலேசிய நவீன இலக்கிய உலகில் கவனத்திற்குரிய கவிஞர் ரேணுகா. மனதிற்கு உவப்பான பல கவிதைகளை எழுதியிருக்கிறார். அதிகப்படியாக கவிதைகளை அரசியல் சார்ந்து; சமூக சூழல் சார்ந்து எழுதியிருக்கிறார். பொதுவாகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் சார்ந்த நிகழ்வுகளை வெளிப்படையாகவும் நேரிடையாகவும் படைப்புகளில் எழுதுவதற்குத் தயங்குகிற சூழலில் ரேணுகா துணிந்து எழுதியிருக்கிறார். வெளிப்படையாகவும் எழுதியிருக்கிறார். “என்னை நாயென்று கூப்பிடுங்கள்”…

ரேணுகா கவிதைகள்

இலக்கிய வடிவங்களில் மிக அடர்த்தியான கவித்துவமும் அழகியலும் படிமங்களும் கொண்டது கவிதை. அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ அதன் வாசகப் பரப்பு மிகச்சிறிய எண்ணிக்கையிலானது. ஏன் இந்த முரண்? ஏனெனில் கவிதை அகவயப் பொருள். மௌனத்தின் மொழி. அது அவன் காயத்தை ஆற்றும் மருந்து. அவன் காதலை அவனே திரும்பச் சொல்லிக்கொள்ளும் பரவசப் பதிவு. அவன் ஆற்றாமையை…

பூங்குழலியின் கவிதைகள்

முதலில் கவிதையை நான் எவ்வாறு புரிந்து கொள்கிறேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன். அறிவிற்கும் மனதிற்குமான இடைவெளியை வார்த்தைகள் மூலம் நிரப்புவது கவிதை. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு பாதிப்பில் உழன்று கொண்டிருக்கும் மனிதனின் வாழ்வில் விடுபட்ட பக்கங்களை நினைக்க வைப்பதும், அவன் விட்டுவிட்ட இடங்களை நிரப்ப வைப்பதும் கவிதையின் செயல்பாடாகப் பார்க்கிறேன். இன்னொன்றையும் இங்கு…

கனவுச் சாலையில் பொடி சொற்கள்

ஒரு நிகழ்வு நம் மன உணர்வைத் தாக்கும்போது, அதன் பாதிப்பு சொற்களாய், செயல்பாடுகளாய் வெளிப்படுவது இயல்பு. அவ்வகை நிகழ்வு ஒரு படைப்பாளனைப் பாதிக்கும்போது, அதுவே ஒரு கலைப்படைப்பாய் உருவாகிப் போகும். தனக்கு ஏற்படும் நிகழ்வை ஒரு ஓவியன், ஓவியக் கண் கொண்டு ஓவியமாக்குகிறான். கதை  சொல்லும் கதைசொல்லி அதைச் சிறுகதையாகவோ அல்லது நெடுங்கதையாகவோ படைத்தளிப்பான். ஒரு…

மண்டை ஓடி: ஒரு நாவலின் சில அத்தியாயங்கள்

சில முன் குறிப்புகள் நான் சிறுகதைகள் படிப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. உள்நாட்டு படைப்புகளைப் படித்து நீண்டகாலம் ஆகிறது. அப்படியே விமர்சனங்களும் திறனாய்வுகளும். இந்த புத்தகத்தில் எழுத்தாளர் இமையத்தின் உரையைப் படிப்பதைத் தவிர்த்தேன். சிறுகதைகள்- பொதுப்பார்வை தொடக்கம், உள்ளடக்கம், முடிவு, கரு, உத்தி என்பனவற்றிலிருந்து சிறுகதைகள் பல வகையான மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. சிறுகதை அதற்கான வடிவத்தையும், சொல்லும்…

ஏக்நாத்தின் ஆங்காரம் நாவல்

ஏக்நாத் எழுதியிருக்கிற ஆங்காரம் நாவல் ஒரு தனிமனிதனுடைய கதையோ, ஒரு குடும்பத்தினுடைய கதையோ அல்ல. ஒரு ஊரைப் பற்றிய, குறிப்பிட்ட ஊரில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களைப்பற்றிய கதை என்று சொல்லலாம். கதை நடக்கிற ஊரிலுள்ள மனிதர்களைக் காப்பதற்காக ஊருக்கு வெளியேயும், ஊரைச் சுற்றியும் இருக்கிற மந்திரமூர்த்தி, பூதத்தார், சொரி முத்தையன், சொரி முத்து அய்யனார், வடக்குவா…

ஒளி புகா இடங்களின் ஒலி: எளிமையில் உள்ள உண்மை!

எழுத்தென்னும் பெரும்பசிக்குத் தன்னையே தின்னக் கொடுப்பதும் கலையின் வெளிப்பாடுதான் என்பதை நானே புரிந்து கொள்வதாகத்தான் இத்தொகுப்பைக் கண்டு சிரிக்கிறேன் என்று கூறி இருக்கும் எழுத்தாளர் தயாஜி, அவர் தொகுத்திருக்கும் ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் கட்டுரை தொகுப்பின் வழி வெளிப்படுத்தி உள்ளார். எழுத்துலகில் புதிய அறிமுகம் என்றாலும் எழுத்து இவருக்குப் பழைய நண்பன் என்பதை அவருடைய…

கேலிச்சித்திரத்துக்கான உச்சம் அதிகாரத்தை நோக்கிப் பாய்வது!

மொத்தம் பதினைந்து தலைப்புகளைக் கொண்டு ஒளிபுகா இடங்களின் ஒலி எனும் பத்திகளடங்கிய தொகுப்பு தயாஜியின் முதல் நூலாக வெளிவந்திருக்கிறது. நல்லதொரு ஆரம்பம்தான். இந்த ஆரம்பத்திலேயே படைப்பின் பலத்தையும் பலவீனத்தையும் சார்பற்ற நிலையில் விமர்சிப்பது தொடரும் வெளியீடுகளில் நன்மையைக் கொண்டு வருமென நம்புகிறேன். இத்தொகுப்பில் கவன ஈர்ப்பும் முக்கியத்துவமும் கொண்டவையாக ‘கேலிச்சித்திரமெனும் ஆயுதம்’ மற்றும் ‘ஒளி புகா…

மண்டை ஓடி: மண்ணின் மணத்தை நிறைத்திருக்கும் கதைகள்

ஓர் எழுத்தாளனாகப் பிறர் நூலை விமர்சனம் செய்யும் அளவுக்குத் தகுதி கொண்டிருக்கவில்லையென்றே நம்புகின்றேன். இதுவரையிலும் சிறுகதை இலக்கியம் என் கைக்கு அடங்காதொரு கலையாக இருக்கும் பட்சத்தில் ம.நவீனின் ‘மண்டை ஓடி’ சிறுகதைத் தொகுப்பை ஒரு வாசகனின் பார்வையிலிருந்து விமர்சனம் செய்வது சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன்.