Category: கட்டுரை

பி. கிருஷ்ணன்: எல்லையைக் கடக்கும் கடல் பறவை

1 தமிழகத்தில் நாடகம் என்பது நவீன கலை மட்டுமல்ல. இங்கே குறைந்தது இருபது நாடக வகைகளுக்கு மேல் உள்ளன அல்லது நாடகத்தை போல் அமைப்புக் கொண்ட நிகழ்த்துக் கலைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களும் அதற்கான தனி நாடக வகைமை/அமைப்புக் கொண்டிருப்பதைக் கரகாட்டத்தின் துணைக்கலைகள் வழி காணலாம். கரகாட்டத்தின் உட்பிரிவுகளான ராஜா ராணி ஆட்டம், கப்பல் பாட்டு,…

பி. கிருஷ்ணனின் நாடக வெளியில் உலக இலக்கியம்

அறிமுகம் எழுத்தாளர் பி. கிருஷ்ணனின் ‘சருகு’ நாடகத் தொகுப்பின் முன்னுரையில் சிங்கப்பூர் வானொலி கடந்து வந்திருக்கும் மாற்றங்களையும் கால அடிப்படையில்  இந்தியப்பகுதியில் பணியாற்றிய அறிவிப்பாளர்களையும் தலைவர்களையும் குறிப்பிட்டு மிக நீண்ட விரிவான வரலாற்றுக் குறிப்பொன்றை அளிக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்பு அளிக்கும் சில அவதானிப்புகள் மிக முக்கியமானவை. தொடக்கக்காலத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் வானொலியின் இடமென்பது…

பி. கிருஷ்ணன் சிறுகதைகள்: புதுமையின் ஊற்றுமுகம்

எழுத்தாளர் பி. கிருஷ்ணன் நாடகம், கட்டுரை, கதைகள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை எழுதிய முன்னோடி படைப்பாளர். புதுமைப்பித்தனின் நேசனான அவர் தன் பெயரைப் புதுமைதாசன் என வைத்துக் கொண்டார். அந்தப் புனைப்பெயரிலேயே அவர் இன்றும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இன்று அவர் சிங்கப்பூர் வாசியாக அறியப்பட்டாலும், பூர்வீகமாக ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும், சிங்கப்பூர்…

ரத்தம், கண்ணீர், சொற்கள் – பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரின் மூன்று நாடகங்கள்

2016ஆம் வருடம் நாங்கள் லண்டனுக்கு அருகில் ஏவன்  நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ட்ராட்போர்ட் என்ற ஊரில், ஷேக்ஸ்பியரின் இல்லத்தைப் பார்க்கப் போயிருந்தோம். அக்காலத்தைய கணக்கில் அது ஒரு நடுத்தர வர்க்க வீடு. இப்போதைய அளவுகோலில் சற்று வசதியான இல்லம்தான். அவ்வீட்டில் அவரது தந்தை கையால், பாதி தைக்கப்பட்ட தோல் செருப்பைப் பார்வைக்கு வைத்திருந்தனர். அது எனக்கு அப்போது…

அள்ளிய கைகள்: புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பை முன்வைத்து

சிங்கை இலக்கியச் சூழலில் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏதாவது ஓர் இலக்கிய அமைப்பில் அல்லது நண்பர் கூடுகையில், மொழிபெயர்ப்புப் படைப்புகளைக் குறித்த உரையாடல் நடைபெறுவது வழக்கம். படைப்புகளைப் பற்றிய உரையாடலில் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்பின் தரம் அல்லது மொழிபெயர்ப்பாளரின் வெற்றி, தோல்வி குறித்த விவாதம் நடைபெறும். அவ்வகை உரையாடல்களில் பங்குப் பெறும்போதெல்லாம் இரு வகையான உவமைகள் என்…

மண்டலா – 2

மண்டலா 1 படிவம் நான்கில் அறிவியல் துறையில் (Science Stream) படிக்க தகுதியிருந்தாலும், கலையியல் துறையைத் (art stream) தேர்ந்தெடுத்திருக்கும் என்னை அடையாளம் காண டீச்சர் கோர் (Khor) அன்று வகுப்பறைக்கு வந்தார். அவர் கலைக் கல்வி பாட ஆசிரியர். ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரின் சுவரோவியம் பள்ளி முழுதும் நிரம்பியிருக்கும். நான் கலையியல்…

வல்லினம் & GTLF இலக்கிய விழா சிறப்பு வருகையாளர்கள்

இவ்வாண்டு சிங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் ஃபாலின் ஃபானிடமிருந்து ஒரு புலனச்செய்தி வந்தது. இவ்வருடம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் இரு தமிழ் அமர்வுகள் இணைக்கப்பட போவதாகவும் அதற்கு நான் பொறுப்பேற்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். இரு அமர்வுகளையும் தமிழிலேயே நடத்தலாம் என்ற அவர் குறிப்பு உடனடியாக என்னைச் சம்மதிக்க வைத்தது. பி. கிருஷ்ணனின் வருகை அந்த…

தமிழ் விக்கி: எழுத்தாளனுக்குக் கொடுப்பதென்ன?

இவ்வாண்டு ஜனவரி 13, ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழ் விக்கி குறித்த தனது எண்ணங்களைச் சொல்லி அதில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார். அது சுருக்கமான கடிதம்தான். எப்போதுமே ஆசிரியர்கள் தம் மாணவர்களை நோக்கி குறைவாகவே பேசக்கூடியவர்களாக உள்ளனர். குறைந்த சொற்களின் ஊடே தன் மாணவன் தமது உள்ளக்கிடக்கை புரிந்துகொள்வான் என ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.…

தமிழ்மாறன்: ஆளுமைகளை உருவாக்கும் ஆசான்

(தமிழ் மாறன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை ) மெய்யான கற்றல் என்பது அது வரையில் கற்று வந்த தடத்தைக் கேள்வியெழுப்பச் செய்து, அதை மறுத்தும் விவாதித்தும் வந்தடையும் ஒரு புள்ளி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதலாண்டில் விரிவுரைஞர் தமிழ்மாறனின் வகுப்புகளில் அத்தகைய…

கோ. சாமிநாதன்: தந்தையாகும் குரு

(கோ. சாமிநாதன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) கற்றலென்பது கற்றலால் மட்டுமே நிரம்பும் தருணம் அல்ல. கற்றலுக்கு அப்பால் அகம் சார்ந்த, உணர்வு சார்ந்த சூழலைக் கட்டியெழுப்பி அதனுடன் இயைந்து நீள்வது கற்றலின் ஆயுள் நீளம் என சாமிநாதன் அவர்களின் வகுப்புகளின் வழி…

முனைவர் முனீஸ்வரன் குமார்: மொழியியலை முன்னெடுக்கும் ஆளுமை

(முனைவர் முனீஸ்வரன் குமார் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) 2011-ஆம் ஆண்டுத் தொடங்கி சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரிந்து வரும் முனைவர் முனீஸ்வரன் குமார் 1984-ஆம் ஆண்டில் கிள்ளான் நகரத்தில் பிறந்து, பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில்…

முனைவர் கிங்ஸ்டன்: நாட்டுப்புற கலை, பண்பாட்டு அடையாளங்களைச் சேகரிக்கும் கல்வியாளர்

(முனைவர் கிங்ஸ்டன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) வாழ்க்கையில் சிலரை நாம் சந்திக்கும் தருணங்கள் நொடிப்பொழுதில் நடந்துவிடக்கூடியவை. எதிர்பாராமல் நடக்கும் சந்திப்புகள் நமது வாழ்க்கைக்குச் செறிவான பாதை அமைக்குமென்றால் அவற்றைத் தரிசனங்கள் என்றே குறிப்பிடுதல் தகும். மலேசியத் தமிழ் நாட்டுப்புறவியல் ஆராயும் நோக்கத்தோடு…

தாவாய்: இயற்கையுடனான ஒத்திசைவு

இயற்கையைச் சார்ந்து மட்டுமே வாழ்வை அமைத்துக் கொள்வதென்பது மாதிரியான கருத்துருவாக்கங்களைச் சமூக ஊடகத் தளத்தில் அதிகமாகக் காண முடிகிறது. விலங்கு ஊன்களைத் தவிர்ப்பது, தாவரங்களிலிருந்து பெறப்பட்ட உணவுகள், உடைகளை மட்டுமே பயன்படுத்துதல், தனிப்பயணம் மேற்கொள்ளுதல் என இயற்கையுடன் ஒன்றித்து வாழ முற்படும் வகையிலான முயற்சிகளை வாழ்க்கை முறையாகவே முன்வைக்கும் பதிவுகளுக்குப் பெருமளவிலான ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. அந்த…