Category: கட்டுரை

தருக்கத்தால் நிலைக்கொள்ளும் படைப்புலகம்

அ. பாண்டியனின் இலக்கியப் பங்களிப்பைப் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் என மூன்று முக்கியமான புலத்திலிருந்து அணுகலாம். அவரது புனைவுகள் வரலாற்றின் நுணுக்கமான இடைவெளிகளை நிரப்புவதாலும்; அ-புனைவுகள் கொண்டுள்ள சீரான தருக்கப்பார்வையாலும் வலுவான தனித்த இடங்களை நிறுவிக்கொண்டவை. ஒரு குறுநாவல் சில சிறுகதைகதைகள் எழுதியுள்ள அ. பாண்டியனின் கட்டுரைகள் பலவும் மலேசிய…

லதா: சிங்கையின் தனித்துவ படைப்பாளி

லதாவை  முதலில் அறிந்தது ‘சீனலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பின் வழியாகத்தான். தமிழ் இலக்கிய விமர்சகர்களின் பார்வையில் அந்தத் தொகுப்பே இதுவரை வந்த அவரது நூல்களில் பிரதானமானது என அறிந்தபோது அவரை அணுகிச் செல்ல அது எனக்கான நல்ல தொடக்கம் என்றே தோன்றியது. லதா என சுருக்கமாக அறியப்படும் கனகலதா என்பவர் சிங்கப்பூர் எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர்,…

அழகுநிலா: சிங்கையில் வேர்பிடிக்கும் எழுத்தாளர்

பதியம் போடப்பட்டச் செடிகள் வேகமாய் வளர்கின்றன என்கிறார்கள். அது உண்மையா அல்லது பிரமையா என்பது தெரியாது. ஆனால் தமது தாய் வேர்களைத் தமிழகத்தில் விட்டுவிட்டுச் சிங்கை வந்து பதியம் பிடிக்கும் எழுத்தாளர்கள் ஊக்கமாகத்தான் இருக்கிறார்கள். கோவில் உண்டியலில் போட்ட காசு போல தமிழகத்தில் ஆயிரத்தில் ஒன்றாய் கலந்து காணாமல் போகும் அபாயம் இல்லாமல் சிங்கையில் படைப்பாளர்களின்…

அருண்மொழி நங்கை : பயணிக்கும் பாதையை பதியமிட்டவர்

அருண்மொழி நங்கை என்ற பெயரை ஜெயமோகனுடன் இணைத்தே பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். அவரும்கூட அவ்வாறுதான் தன்னை அறிந்துவைத்திருக்கக் கூடும். அருண்மொழி நங்கை எழுத்தாளர் ஜெயமோகனை 1991 ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இருவரின் பிரதான ரசனையும் இலக்கியமாக இருந்தது. அருண்மொழிநங்கை தன் கல்லூரி நாட்களில் இருந்தே தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர். கல்லூரி…

டத்தோ ரஹ்மான் பின் ஷாரி: மலேசியாவின் 15-ஆவது தேசிய இலக்கியவாதி

‘தேசிய இலக்கியவாதி’ எனும் விருதானது, மலேசியாவில் மலாய் மொழி இலக்கியத் துறையில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருது 1981-ஆம் ஆண்டில், மலேசியாவின் மூன்றாவது பிரதமரான துன் உசேன் ஓன் அவர்களின் அறிவுரையின் விளைவாகத் தோற்றுவிக்கப்பட்டதாகும். 1981 தொடங்கி மொத்தம் 15 மலாய் மொழி இலக்கியவாதிகளுக்கு இதுவரையிலும் மலேசியாவின் ‘தேசிய இலக்கியவாதி’ எனும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.…

பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம்

1 “கொஞ்சம் சத்தமாகத் தான் பேச வேண்டியிருந்தது. அவள் மதிலுக்கு அந்தப் பக்கம். நான் இந்தப் பக்கம்.” சிறைசாலையில் ஒரு மதிலின் ஓரத்தில் உள்ள அறையில் கதாநாயகனை அடைக்கின்றனர். நாயகன் அறையும் மதிலும் தான் இருக்கின்றன. மதிலுக்கு அந்தப் பக்கம் பெண்களின் சிறை. நாயகன் ராஜ துரோகம் செய்ததால் சிறையில் வைக்கப்பட்டுள்ளான். ராஜியத்திற்கு எதிராக எழுதியது…

ஜி.எஸ்.எஸ்.வி நவின் அறிமுகம்

ஒரு பண்பாட்டுச் சூழலில் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு என்பது அவருடைய தனிப்பட்ட செயல்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அவரது பங்களிப்பு அவரது மாணவர்களின் செயல்களாலும் சேர்ந்தே மதிப்பிடப்படுகிறது. அவ்வகையில் தமிழில் ஒரு பெரு நிகழ்வென நம்முன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு என்பது அவர் தனிப்பட்ட முறையில் ஆற்றிய பெருஞ்செயல்கள் மட்டுமின்றி அவர்…

அரவின் குமார் படைப்புலகம்

மலேசிய தமிழ் இலக்கியச் சூழல் என்பது 50-களில் தொடங்கப்பட்டு இன்றைய நிலையிலும் பல மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டடைந்து கொண்டு வருகின்றது. பாலபாஸ்கரன், சை. பீர்முகம்மது, ம. நவீன் போன்றவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கும்போது மலேசியாவில் தனித்துவமான இலக்கியம் உருவாக வேண்டும் எனும் எண்ணம் விதைபட்டு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்து வந்த தலைமுறையால்தான் 70களில் நவீன இலக்கியத்தின்…

கோ. புண்ணியவான் : காலங்களுள் தக்கவைத்த கலைஞன்

மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்குத் தேசிய அங்கீகாரம் கிடைக்காதது பற்றிய பேச்சுகள் அவ்வப்போது எழுவதுண்டு. அப்பேச்சுகள் அனைத்தும் எழுந்த வேகத்திலே உடனடியாக அடங்கிவிடும். மலேசியத் தமிழ் இலக்கியம் எனும் தனித்த அடையாளத்தைக் கண்டடையும் முயற்சி தொடங்கிய காலத்திலிருந்தே, மலேசிய தமிழ் இயக்கவாதிகளும் இலக்கியவாதிகளும் தங்களின் அடையாளத்தை இம்மண்ணில் விதைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனர். சஞ்சிக்கூலிகளாகப் வந்த…

எழுத்தாளர் கணேஷ் பாபு அறிமுகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்து வளர்ந்தவர் எழுத்தாளர் கணேஷ் பாபு. செப்பேட்டுக்குப் புகழ்பெற்ற சின்னமனூர்,  சி.சு. செல்லப்பாவின் ஊரும் கூட. திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். சென்னையிலும், கோயம்புத்தூரிலும் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, சிங்கப்பூருக்கு 2008ஆம் ஆண்டு குடிபெயர்ந்து, கடந்த பதினான்கு ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் நிரந்தரவாசியாக வசித்து வருகிறார். எண்ணெய் மற்றும் எரிவாயுத்…

‘மிளகு’ நாவல் : கனவுவெளியும் காலடி நிழலும்

[1] தல்ஸ்தோய் பற்றிய கூற்று ஒன்றுண்டு. ‘அவரின் படைப்புலகம் ஏன் அத்தனை யதார்த்தமாக இருக்கிறதென்றால் அது முழுவதும் அவரது கற்பனையால் கட்டமைக்கப்பட்டது.’ சிந்திக்க வைக்கும் வரி இது. ஒரு படைப்பை எப்போது நாம் நிஜ உலகிற்கு இணையாக நம்புகிறோம்? அதில் வரும் மனிதர்களை எந்தக் கணம் நாம் நெருங்கிக் கண்டவர்களாக உணர்கிறோம். உதாரணமாகப் போரும் அமைதியும்…

எண்கோண மனிதன்: மனமெனும் கலிடியோஸ்கோப்பின் சித்திரங்கள்

நவீனத்துவ தமிழ் இலக்கியத்தில் புனைவாக்கச் செயல்பாடு என்பது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. நவீனத்துவ புனைவுகள் நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதன்வழியே வாசகனுக்குப் புனைவின் நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளிக்கின்றன. சிறுகதைகள் குறைந்த அளவு சம்பவங்களைக் கொண்டு வாசகனுக்கு அவ்வனுபவத்தைச் சாத்தியப்படுத்த முயலுகையில், நாவல்களோ பல்வேறு சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்து உருவாக்கும் விரிவான…

கபடவேடதாரி: நீல நகரமும் நல்லா இருந்த நாடும்

கேட்பதற்குச் சற்று விசித்திரமாகக் கூடத் தோன்றலாம், ஆனால் இணை தேடும் நவீன செயலிகள் அத்தனையிலும் இந்திய நாட்டு பெண்கள் தங்கள் எதிர்பார்ப்பாகக் பொதுவாகக் குறிப்பிடுவது, தன் இணை ஒரு ‘சங்கி’யாக இருக்கக்கூடாது என்பது. இது அவ்வளவு பொருட்படுத்தத்தக்க ஒரு சமூகக் கவலையா என்ற கேள்வி எழலாம். ஆனால் இதற்குப் பின்னால் பிரதிபலிக்கும், கடந்த பத்தாண்டுகளில் உருவாகி…

கெம்பித்தாய்களின் சப்பாத்துகளுக்கு கீழே

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிவந்த பல நூல்களில் பொன். சுந்தரராசுவின் சுண்ணாம்பு அரிசி, இந்திரஜித்தின் ரயில், ரமா சுரேஷின் அம்பரம் ஆகிய மூன்று நாவல்களும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைக் களமாகக்கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற இந்த மூன்று நாவல்களுமே நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் முதல் நாவல்கள். சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆதிக்க…

பீஷ்மரின் மகன் – ஹரிலால் நாவலை முன்வைத்து

1 காந்தி – கடந்த 125 ஆண்டுகளில் உலகை வெவ்வேறு விதங்களில் பாதித்த பெயர்களில் முக்கியமான பெயர். மிக அதிகமான எண்ணிக்கையில் நூல்கள் எழுதப்பட்ட பெயர்களில் முதன்மையான பெயர். ஒருவரது பெயர் ஒரு விழுமியத்தின், சிந்தனைமுறையின், லட்சியத்தின் சொற்பொருளாக மாறும் அதிசயத்தை உலகுக்கு இன்று வரை காட்டிக் கொண்டிருக்கும் பெயர். இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு…