Category: சிறுகதை

ஆபீசிலிருந்து  தீம்பாருக்குள் நுழைந்து செம்மண் சாலையை அடைந்து, அரக்கப் பறக்க தார் சடக்குக்கு ஓடிவந்து சேர்வதற்குள்ளாகவே பத்து மணி பஸ் கண் பார்க்கக் கடந்து போய்க்கொண்டிருந்தது. எப்படியாவது நிறுத்திடவேண்டும் என்ற பதற்றத்தோடு கையசைத்து  ஓடி வந்தும்  பஸ் டிரைவர் சட்டை செய்யாமல் போய்விட்டிருந்தான். தன் கண்முன்னால் கடக்கும் பஸ்ஸை கரித்துக்கொட்டினான்  வேலைய்யா. தன்னை ஒரு புழுவென…

சக்கரம் சுழலும்

டான்ஶ்ரீ என்னைச் சந்திக்க குவாலா கிராய்க்கு வரும்படி அழைத்திருந்தார். அவருடைய தனி எலிகப்டரில் வந்து அன்றே திரும்பிவிடலாம் என்றார். நான் அதை அன்போடு மறுத்து நானே காரில் புறப்பட்டு வருவதாகச் சொன்னேன். அவர் தயங்கி, வேண்டுமானால் காரும் டிரைவரும் ஏற்பாடு செய்வதாக வற்புறுத்தியபோதும் நான் தனியாகவே புறப்பட்டு வருவதாகச் சொன்னேன். அவர் தயக்கத்தோடு சம்மதித்தார். பிற்பகல்…

நாகம்

பக்கிரி உள்ளே நுழைந்ததும் வீட்டிலிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். வந்து ஒருமாதம் ஆகவில்லை. அதற்குள் சாமியின் மனதில் இடம்பிடித்துவிட்ட பக்கிரியின்மேல் அவர்களுக்குக் கோபமும் பொறாமையும் ஏற்பட்டது. வெற்றிலை சிவப்பு உதடுவரை ஒழுகியிருந்தது. கால்களில் பலமிழந்தவனைப்போல சடாரென அமர்ந்தான். “நாகம் செத்துப்போனத சொல்லிட்டியா?” என்று கேட்கும்போது சாமியின் கைகள் படமெடுப்பதுபோல விரிந்து பின்னர் சுரத்தில்லாமல் விழுந்தது.…

மிஸ்ட் கால்

நீண்டு பிளந்த மீன்னல் கதவுகளின் ஊடாக வாரிப்பொழிந்து கொண்டிருந்தது வானம். வெளிச்ச நரைகள் படிந்த இருளின் அமைதி அந்த விமான நிலையத்தை முழுமையாக ஆக்கிரமித்துக்கிடந்தது. மாறி மாறி வந்திறங்கிய விமானங்களுக்குள் பெருமூச்செறியும் பலநூற்றுக்கணக்கான உயிர்களின் நிம்மதியினாலோ என்னவோ அந்த பெருவிதானம் தொடர்ந்து காற்றோட்டம் நிறைந்ததாகவே காணப்பட்டது. வாழ்வின் சகல அழுக்குகளையும் அகத்தில் சுமந்த ஒருவனையும் மீதி…

பிணை

ஞாயித்துக்கெழம முடிஞ்சி திங்கக்கெழம ஆச்சுன்னா எதாச்சும் ஒரு ஏழறையோடதான் ஆரம்பிக்குது என் பொழப்பு. ஊர்லருந்து வந்தமா ஒழுக்கமா வேல செஞ்சி பொழப்பமான்னு இல்லாம ஒனக்கு என்னா குடி வேண்டி கெடக்குது? வாரம் முழுக்க வேல செய்றேல்ல, ஒழுங்கா மூடிகிட்டு தூங்க வேண்டியதுதான, ஊர்ல ஆத்தா, அப்பன் கஸ்டபடறாங்க, தங்கச்சி, தம்பிகள கரையேத்தனும்னு சொல்லிதான வந்த? அதுக்குதான…

டிலீப் டிடியே

பெயர்: டிலீப்  டிடியே பிறப்பு: நோர்மண்டி தொழில்: பல்கலைக்கழக மாணவன் அப்பா பெயர்: டிடியே பிரான்சுவா தொழில்: மருத்துவர் அம்மா பெயர்: மைதிலி தம்பிப்பிள்ளை                                                                                         *** ஓர் இளவேனிற்காலச் செக்கல் பொழுதில் நோர்மண்டி மத்திய தொடருந்து  நிலையத்தில் திலீப்  டிடியே-யை இறக்கி விட்டு அந்த தொடரூந்து தனது பயணத்தைக் தொடர்ந்தது. டிலீப்  பாரிஸ் சோர்பேண்…

கல்லறை

சின்னச் சின்ன மனிதக் கூடுகள் நிறைந்த காங்கிரீட் அடுக்குகள்.  இருபது அடுக்குகளுக்குள் நூற்றுக்கும் குறையாத பத்துக்குப் பதினைந்து கூடுகள். மனிதப் புழக்கத்திற்கும் குறைந்தபட்ச இடைவெளிக்கும் சாத்தியப்படாத நெரிசல். அது அது, அதனதன் கூட்டுக்குள் முடங்கி, நொந்து நூலாகிக் கிடக்கும் வானந்துச் சிறை அது. தரையில், மண்ணோடு கலந்து வாழும் சுகத்தை  இழந்த மானுடப்பறவைகளின், சோகம் இழையும்…

வழித்துணை

விடியலை, அகண்ட வாசலில் நின்று வரவேற்ற கருக்கல். மென் பூச்சாய், இருளுள் படர்ந்து விரியும் ஒளி இழைகளின் ஊடாய், மெல்லச் சிவக்கும் அடிவானம். நீண்டுகிடக்கும் மென் இருளடர்ந்த சாலை. பகல்நேர வெயிலின் உக்கிரமோ ஆர்ப்பரிப்போ குழப்பமோ வாகனப் புகை நெடியோ ஜன சந்தடியோ ஏதுமில்லாமல் – ஒரு அகண்டு விரிந்த கோயில் பிரகாரத்தின் நுழைவாயிலில் தரிசனம்…

சாம்ராஜ்யம்

மடங்கின வாக்கில் இருக்கும் பாட்டியின் கைகள் என்னை எட்டிப்பிடிக்கும் வேகத்தில் நீண்டன. நல்லவேளை. அம்மா எப்படி மெனக்கெட்டும் என் தலைமுடி நீண்ட சடை போடும் அளவுக்கு வளராமலேயே இருந்தது. இல்லையென்றால் மரக்கிளையில் மாட்டிக்கொண்ட கொம்புமான் போன்று என் சடை பாட்டியின் கையில் சிக்கியிருக்கும். பாட்டியைக் கொம்புமானைத் துரத்திவந்த சிறுத்தைப் புலியாக நினைத்துப் பார்த்தேன். அந்த வேளையிலும்…

நகர்வு

பிபிஆர் பிளட்சின் 15-வது மாடியில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து ஒருஆண் குரல் பலமாக கத்திக் கொண்டிருந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும் வாசற்படியை மலாய்கார குடும்பம் ஒன்று அமைதியாக கடந்து போனது. கீழ் மாடியில் குடியிருக்கும் சாந்தி சத்தம் கேட்டு வேகவேகமாக படியேறி மேலே வந்தாள்.…

இரைகள்

நேற்றுத்தான், போனவனுக்கு, கல் நிறுத்தி காரியம் செய்து முடிந்திருந்தது. சீனன் கடைச் சாராயம் சல்லடைக் கண்ணாகி இதயத்தைத் துளைத்தெடுத்திருப்பது, ஆஸ்பத்திரிக்காரன், எக்ஸ்ரே எடுத்து, வெளிச்சம் போட்டுப் பார்த்துச் சொன்னபோதுதான் தெரிந்தது. சொல்லச் சொல்லக் கேட்காமல், வீட்டில் கிடந்ததையெல்லாம் எடுத்துப்போய், விற்றுக் குடித்தது, ஆஸ்பத்திரியில் ஒருமாதம் கிடத்திவைத்தது. அப்போதெல்லாம், கை ஒத்தாசைக்காக, கோயில் கூத்து மேடையில் அடைக்கலம்…

இன்னொரு கிளை முளைக்கிறது

அது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவே தெரியும். அந்த மரம் எப்போதும் தனித்தே தெரியும். அதன் தடிமனாகட்டும், இலைகளாகட்டும், அதில் தொங்கும் பிணங்களாகட்டும். முதன் முதலாக தூக்கில் தொங்கியது ஒரு…

அறை

“பத்மா க்கா… நாந்தான் பேசறேன். எனக்கு ஒரு உதவி வேணும். நான் இப்ப அவசரமா வெளிய போக வேண்டிய சூழல். தங்கச்சிக்கு ஏதோ பிரச்சினைபோல.” “ஏம்மா? என்ன பிரச்சினை? ஏன் இங்கிருந்துகிட்டே ரகசியமா போன் செய்யற?” “உங்ககிட்ட நேரில் பேசிட்டு வெளியாவதை யாரும் பார்த்தா உங்களுத்தான் சிக்கல். மற்றதை வந்து சொல்றேன். எப்படியும் 2 மணி…

புதிதாக ஒன்று

அம்மா மட்டுமல்ல, அம்மாவுடன் சென்ற நானும் அண்ணியும் பரிசோதனை முடிவு என்னவாக இருக்கும் என்பதில் நெஞ்சம் படபடக்க அந்தத் தனி அறையில் மருத்துவரின் முகத்தையே பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் அண்ணன் மகள் ரூபா முடிவு எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணித்திருந்தாலும், அப்படி ஒரு துரதிஷ்டமான நிலைமை தன் அப்பம்மாவுக்கு, வரக்…

பிரதி

அக்கா, ரமேஷ் அண்ணனோடு ஓடிப்போய் விட்டாள். நிரந்தரமான காலை ஷிப்ட் முடிந்து மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருப்பவள், ஆறரை மணிக்கு எஸ்டேட் ஜெனரேட்டர் ஸ்டார்ட் செய்யப்பட்டு கரண்டு வரும்வரை வீட்டுக்கு வராததை தம்பிதான் முதலில் கவனித்தான் போலிருக்கிறது . தீபாவளிக்கு அப்பாவுக்குக்கூட தெரியாமல் டவுன் முழுவதும் அலைந்து திரிந்து இறுதியாய் R. அப்பாராவ் சில்க் ஸ்டோரில்…