சை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை

ஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை…

சை.பீர்முகம்மதுவின் அ-புனைவுலகம்

இந்த உலகத்தை சாமானியன் காண்பதற்கும், இலக்கிய மனம் கொண்ட படைப்பாளி காண்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ரசனையும் நுண்ணுணர்வும் கொண்ட படைப்பாளி வெறும் புறவயக் காட்சிகளை மட்டும் காண்பதில்லை. அக்காட்சிகளின் ஊடே அகத்தையும் ஊடுருவியே அவனது அவதானிப்பு அமைகிறது. தான் காணும் காட்சிகளை எதிர்காலவியலோடு நுணுகிப் பார்க்கும் சிந்தனையும் வரமென பெற்றவன் உண்மையான படைப்பாளி. ‘கைதிகள்…

மண்ணும் மனிதர்களும்: வரலாற்றில் பயணம்

ஒரு கலைஞனுக்கான உலகம் நிச்சயம் சராசரியர்களிடமிருந்து மாறுபட்டவை. தான் கடந்து போகும் ஒவ்வொன்றையும் வரலாறாக்க தெரிந்தவர்கள் அவர்கள். நமக்கு முன் வாழ்ந்த பல தலைமுறைகளின் வரலாற்றை படைப்பாக்கவும் அறிந்தவர். ஓர் இனத்தை, ஒரு மதத்தை, ஓர் ஆட்சியை, ஒரு மண்ணை அதன் மக்களை, அவர்களின் பின்புலத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன் சென்று அறிய மட்டுமே வரலாறு…

சை.பீர்முகம்மது பத்திகள்: அலை வரையும் கோலம்

நீரின் மேற்பரப்பு ஓயாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது, நீரின் கீழ்தளத்தில் மேற்பரப்பின் அலைகழிதல்களால் வேறொரு பெளதிக மாற்றம் மெல்ல நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படியாகத் தன்னுள் இருந்த படைப்பு மனத்தை அலைகழித்த, சமூகம், ஆளுமைகள், இலக்கியங்கள் சார்ந்த நினைவடுக்குகளை ‘திசைகள் நோக்கிய பயணம்’ எனும் பத்தித்தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார் சை.பீர்முகம்மது. சை.பீரின் படைப்பு மனத்தின் செல்திசையையும் இலக்கியச்…

கைதிகள் கண்ட கண்டம்

பயண இலக்கியங்கள் என்பது பயணித்தவரின் பட்டறிவு பதிவுகள். பயண நகர்வுகளில் காட்சிவழி பெற்ற புற அனுபவங்களையும் அதனூடே அமைதியாக சில கணங்கள், ஆர்ப்பரிபோடு சில பொழுதுகள், அழுத்தமாகச் சில தருணங்கள் போன்ற மிக நுட்பமான அக வெளிபாடுகளையும் சேர்த்து சுவைப்படத் தருவதே பயண இலக்கியங்களின் இயல்பு. “பிறரது வாழ்க்கை அனுபவங்களை நாம் நம் வாழ்க்கைக்கு எடுத்துப்…

கலைஞனின் தும்பிக்கை

‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது. மலேசிய நாவல் இலக்கியத்தில் இது, குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு படைப்பாக இருக்கும். இந்நாவலை, மூன்று அடிப்படைகளில்…

பேய்ச்சி: முதல் வாசிப்பு

நாவலைப் பற்றிய சில பொதுவான எதிர்பார்ப்புகள் உண்டு. நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என சொல்லப்படுவதுண்டு. ஒரு நல்ல நாவல் வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும். ஒரு வரலாற்று பிரக்ஞை நாவலுக்குள் செயல்பட வேண்டும். கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகருடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாக பரிணாமம் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ஒரு…

மொபைல் வைத்திருப்போருக்கு மோட்சம் இல்லை

நவீனின் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு மூன்று வகையான கவிதைகளைப் பிரதானமாகப் பேசுகின்றன. பிரிவு குறித்தான ஏக்கம், மாயா என்ற சிறு குழந்தையின் உலகம், அலைக்கழிக்கப்படும் சமகால வாழ்வு. பொதுவாகக் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் அந்தத் தொகுப்பிலிருந்து கவிதைகளை மேற்கோள் எடுத்துக்காட்டி எழுதுவது உ.வே.சா காலத்தில் தொடங்கிய வழக்கம். நான் அவற்றிலிருந்து விடுபடலாம் எனக் கருதுகிறேன்.…

வென்று நிலைத்தவை

தமிழ் நவீன இலக்கியம் நிலைபெற்றுள்ள நாடுகளில் மலேசியா தனித்த போக்கைக் கொண்டது. பல்வேறு குழுக்களாக தமிழர்கள் இங்கு புலம்பெயர்ந்திருந்தாலும், ரப்பர் தோட்டங்களில் பால்மரம் சீவுவதற்காக வந்தவர்களே இங்கு இலக்கியத்தை அதிகம் முன்னெடுத்தனர். இவர்கள், தங்களிடம் இருந்த அடிப்படைத் தமிழறிவையும் கலையுணர்வையும் கொண்டு இலக்கியத்தை வெளிப்படுத்தினர். தமிழ் மொழியின்மீது இருந்த தீராக் காதலால் இவர்களின் படைப்பு முயற்சிகள்…

அக்கினி: அபோதங்களை அணிந்த பறவை

“உன்னைய சின்ன பையனா இளஞ்செல்வன் எங்கிட்ட கைய புடிச்சி ஒப்படைச்சாரு. இப்ப என்னென்னவோ செய்யுற.” அக்கினி சுகுமாறன் – பத்மினி ஆகியோரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த வசனங்களைக் நிச்சயமாக சொல்லிவிடுவர். அது உண்மைதான். என் பதினேழாவது வயதில் அது நடந்தது. 1999இல் எம்.ஏ.இளஞ்செல்வன் கூலிமில் தனது நூல் வெளியீட்டுக்குப் பின்னர் அக்கினி மற்றும் பத்மினியை அழைத்து என்…

கடவுளின் மலம்

அப்பா வரும் நேரம் ஆயிற்று. அவர் வரும்போது படிப்பதுபோல பாவனை செய்தே ஆகவேண்டும். எனக்குத் தெரிந்த கலைகளில் முக்கியமானது படிப்பதுபோல பாவனை செய்வதுதான். ஈர வேட்டி சரசரவென தொடைகளில் உரச தோளில் துண்டும் இரு கைகளையும் மறைக்கும் விதமாக கை முழுக்க ஒற்றைச் செம்பருத்திப் பூக்களை முத்தாப்பிள்ளை தோட்டத்தில் பறித்துக்கொண்டு நடந்து வரும் நேரம் இது. நாள்…