Category: புத்தகப்பார்வை

அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல: வாசிப்பனுபவம்

தமிழில் உரைநடை இலக்கியத்தின் தொடக்கம் முதலே நீதிகளை உணர்த்துவதற்காக அளவில் சிறிதாக எழுதப்படும் கதைகளான நீதிகதைகள், ஈசாப் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகியவை இருந்து வருகின்றன. அதைப் போன்று, சமூக ஊடகத்தளங்களான முகநூல், டுவிட்டர் போன்றவற்றில் சிறிய பதிவுகளாகப் பதிவிடப்படும் அனுபவப்பதிவுகள், கதைகளும் அளவில் சிறியவையே. இந்த இரண்டுமே, தற்போது எழுதப்பட்டுவரும் குறுங்கதைகளில் அதிகமான…

கடைசி நாற்காலிகளும் வகுப்பறைகளும்

சிறுவர், சிறுமியர்களின் மனம் தணிக்கைகள், தடைகள் என எதுவுமின்றி புறச்சூழலை முற்றிலுமாக உள்ளிழுக்கும் திறன் கொண்டது  என்கிறார் மரியா மாண்டிசோர்ரி. விளையாட்டு, கற்பனை மற்றும் அடுக்கடுக்கான கேள்விகள் என்பவைகள்தான் இந்த இளம்பருவத்தின் முக்கியமான மூன்று வெளிப்பாடுகள். பெற்றோரும், ஆசிரியரும் சிறுவர், சிறுமிகளின் இந்த வெளிப்பாடுகளை கவனமாக கண்காணித்து அந்த குட்டி முதலாளிகளுக்கு சேவை செய்யும் தொழிலாளிகளாக…

நிகழ்காலத்தில் இருப்பவர்களும் நித்தியத்துவமானவர்களும்

சிங்கப்பூர் இயக்குனர் கே.ராஜகோபால் அவர்கள் இயக்கி 2016 ஆம் ஆண்டில் வெளியான ‘A Yellow Bird’ திரைப்படத்தைப் பார்த்தபோது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. பதினைந்து வருடங்களாக வாழ்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூரின் எந்தச் சுவடுகளும் இல்லாமல் முற்றிலும் வேறொரு சிங்கப்பூரை எனக்கு அறிமுகம் செய்த படம் அது.

சிறிய காடும் சில மனிதர்களும்

மொத்தம் 18 தனித் தனி கட்டுரைகளைக் கொண்ட சிறுகாட்டுச் சுனை அடிப்படையில் சிங்கப்பூர் நாட்டின் தனித்தன்மையை, நாமறியாத பல புதிய வண்ணங்களைக் காட்டக்கூடிய தொகுப்பு. மிக எளிமையான மொழி நடையில்  சிரமமற்ற வாசிப்பை வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் அழகு நிலா. இக்கட்டுரைகள் வெறும் தகவல் கோர்வைகளாக அல்லாமல், உயிர்ப்பான அனுபவப் பின்னணியிலிருந்து யதார்த்தமான பாணியில்  எந்த…

கையறு: இல்லாத கடலின் இடையறாத இருள்

இரண்டாம் உலகப்போரின்போது கட்டப்பட்ட ஒரு புகைவண்டித் தடம், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையில் அழுத்தமாகப் பதிந்துபோன ஒரு கறுப்பு வரலாறு. 415 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்க ஜப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி முழுக்கவும், மனித அழிவுகளையும் அவர்களின் அழுகுரல்களையும் தாங்கியவை. இந்தப் பேரழிவின் குரூரங்கள் குறித்து ஜப்பான் மொழியில் புனைவுகள் எதுவும் உருவாகவில்லை. இருபது…

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை

“அந்தக் கணம் என்றுமே என் நினைவில் இருந்து மறையாது… ஒரு கணத்திலேயே அது என்னவென்று புரிந்தது… ஆனால் அந்த ஒரு கணத்துக்குள் அது ஆயிரம் வடிவம் காட்டியது. முதலில் ஊரின் மச்சு வீட்டு வாசலில் இருந்த கரும் திண்ணையின் நினைவு வந்தது. பின் ஊர்க்காவல் பெரியாச்சி அம்மனின் விரித்த சடை ஞாபகம் வந்தது. ஒரு பெரும்…

பேய்ச்சி: பிரளயமும், ஆனந்த சயனமும்

நமது புராணங்களில்  வரும் உருவகங்கள், படிமங்கள், எப்போதும் நம்மை நிலைக்குலையவும், நிலைபெறவும்  செய்பவை. அன்றாட செயல்பாடுகளினூடாக, இன்றும் நம்மை சுற்றி சூழ்ந்துள்ளவை.  நம் அறையில் தொங்கிக்கொண்டிருக்கும், காலண்டரிலும், வீதிகளின்  விளம்பரங்களிலும், மக்கள் நாவில் எழுந்து வந்து செல்லும், வார்த்தைகள் ஊடாகவும் என எண்ணிலடங்கா  உருவக வெளி அது. அப்படி ஒரு திகைப்பையும், நிறைவையும் தரும் இரண்டு…

செல்லாத பணம் : தீயில் வேகும் மனித மனங்கள்

கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டு கால வாழ்க்கையில் சந்தித்த சூழல், நசுக்கிய நிகழ்வுகள், உரசிச்சென்ற அரக்ககுணம் கொண்ட மனிதர்கள், அனுபவித்த அவமானங்கள், செய்த தவறுகள், ஏற்பட்ட தவிப்புகள், எதிர்க்கொண்ட அழுத்தங்கள், ஏமாற்றங்கள், முதுகில் குத்திய சம்பவங்கள், மனித அவலங்கள் என எனக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களோடுதான் நான் மிக இலகுவாக ‘செல்லாத பணம்’ நாவலில் புகுந்து கொண்டேன்.    …

உறவுகளின் சுகந்தம்

ஆற்றோட்டமான செவ்வியல் கதைசொல்லல் முறை, கதைக்குள் கதையாக குள்ளசித்தன் பாணி, முன்னும் பின்னுமாக சொல்லிச்செல்லும் பிளாஷ் பேக் பாணி, ஓர்மையான மையத்திலிருந்து விலகி விளிம்பை மையப்படுத்தும் பின்நவீனத்துவ பாணி என சிறுகதை இலக்கணமாக பல்வேறு கோட்பாடுகளை நிறுவி படைப்பாளிகள் படைக்கும் ஆக்கங்களை ரசித்து ருசிக்கிறோம். மேலும் இந்த வித கோட்பாடுகளை தாண்டி சொல்ல வந்த கதைக்கருவை…

மலேசிய நாவல்கள்: ஒரு தீவிர வாசகனின் மறைக்கப்பட்ட குரல்

கடந்த ஆண்டு கோவிட்19 நோய்க் காரணமாக நாடு திடீர் முடக்கத்திற்கு உள்ளாகியிருந்த காலகட்டத்தில் ம.நவீன் சுறுசுறுப்பாக எழுதத் தொடங்கியிருந்தார்.  தொடர்ந்து அவர் படைப்புகளை எழுதி சுடச்சுட என் வாசிப்புக்கு அனுப்பி வைப்பார். நானும் அதே வேகத்தில் அந்தக் கட்டுரைகளையும் கதைகளையும் வாசித்து என் கருத்துகளை குறிப்பிட்டு அனுப்புவேன். அதில் சில விவாதங்களும் தொடர்ந்து கொண்டே இருந்தன.…

மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

மலேசியச் சூழலில் கறாரான இலக்கிய மதிப்பீடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படும் போதெல்லாம் சில கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவற்றை, விமர்சனத்தை முன்வைப்பவரின் மீதான தகுதி,  விமர்சன அளவுகோல்  மீதான கேள்விகள் எனத் தொகுத்துக் கொள்ளலாம். மொழியும் இலக்கியமும் யாருடைய தனிப்பட்ட உடைமை இல்லை என்ற வாதமும் அவரவரின் ரசனை வேறுவேறானது; ஆகவே, பொதுவான ரசனை விமர்சன அளவுகோலின்…

மனசை ஆய்ந்த மனசிலாயோ!

பயணங்கள் மிகச் சுவாரசியமானவை. அவ்வப்போது நம்மை  எதார்த்தத்திலிருந்து தப்பிக்கச் செய்து, நமக்கே நம்மை யாரென்று அடையாளங்காட்டி மீட்டெடுப்பன. இந்தச் சுழற்சி இப்படியே தொடர்ந்துகொண்டிருப்பதால்தான் மனிதனால் தன்னியல்பில் செயல்பட முடிகின்றது. பயணங்கள் நின்று போனால், மனம் இறுக்கமுறும். அதன் நீட்சியாகச் செயல்பாடுகளில் சிக்கல் நேரும். உளவியல் சார்ந்த எதிர்பாரா சம்பவங்கள் நிகழும். இவையெல்லாம் நாம் கடந்த ஓராண்டு…

உச்சை: தருணங்களை வியப்பாக்கும் கதைகள்

இன்று மலேசியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக இலக்கியப் புனைவுகளின்வழி தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் ம.நவீன். கவிதை, கட்டுரை, நாவல், விமர்சனம், பயண இலக்கியம், நேர்காணல்கள் என நீளும் படைப்புகளின் வரிசையில் அவரின் சிறுகதைகள் அதன் தனித்தன்மைகளால் சிறப்பிடம் பெறுகின்றன.  நவீனின் 90 விழுக்காடு சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவரின் முதல் சிறுகதை தொகுப்பு மண்டை ஓடி 2015இல் வெளியீடு…

வரலாற்றின் கைவிளக்கு – ‘சுளுந்தீ’ நாவலை முன்வைத்து.

‘வரலாற்றுப் புனைவு’ என்பது வரலாறும் புனைவும் முயங்கி உருகொள்வது. வரலாற்றுப் புனைவு இரு விதங்களில் செயல்பட முடியும். அறியப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்ப முடியும். வரலாற்று நாயகர்களின் செயலுக்குப் பின் இயங்கும் விசைகள் மற்றும் மனவோட்டத்தை அடையாளப்படுத்த முடியும். 2018 ஆம் ஆண்டு இறுதியில் ஆதி பதிப்பக வெளியீடாக வெளிவந்து, பல்வேறு விருதுகளைப் பெற்று, வாசகப்பரப்பிலும்…

இச்சா: குரூரங்களில் வெளிப்படும் இச்சை

பெற்றோர், சமூகம், கல்வி, அறிவு என தன்னைச் சூழ்ந்துள்ள எதுவுமே தனக்குப் பாதுகாப்பு தரப்போவதில்லை என்பதை கள்ளமற்றவளாக வளரும் ஒரு சிறுமி அறியும் தருணம் அவளுக்கு இந்த வாழ்க்கை என்னவாக அர்த்தப்படும்? அதுவரை அவளுக்குச் சொல்லப்பட்ட விழுமியங்களும் மானுட உச்சங்களும் என்ன பதிலை அவளுக்குக் கொடுக்கும்? பதில்களற்ற திக்குகளில் அர்த்தமற்ற கேள்விகளைச் சுமந்து திரியும் ஆலா…