Category: சிறுகதை

செங்குன்னியார் பூசை

மாலையில் ஊர்க்கூட்டம் என்று தெரிந்ததும் பிரகாசு மௌனமாகி விட்டான். அதிகம் பேசாதவன் என்றாலும் வழக்கமாகப் போடும் ‘ம்’ கூட அவனிடமிருந்து வரவில்லை. அதைப் பார்க்கச் சரசம்மாவுக்கு மனதில் கருக்கென்றது. வலியப் பேசினாலும் பதில் இல்லை. கைவேலைகளை ஏனோ தானோவென்று செய்தபடி அவனையே கவனித்துக் கொண்டிருந்தார். தன் பார்வையில் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல. ஆனால்…

விருப்பம்

“பாக்கறதுக்கு இது கலவை மாதிரியே தெரியலையே மேஸ்திரி. மாரியாத்த கோயில்ல ஊத்தறதுக்கு கூழு கரைச்சி வச்ச மாதிரி இருக்குது. இதை வச்சி எப்படி பூச்சுவேலை செய்வீங்க? சிமெண்ட் வேணாமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் ஜெயலட்சுமி. அவள் தன் கையில் வைத்திருந்த குச்சியை பக்கத்தில் ஒரு சிறிய தொட்டிக்குள் விட்டுத் துழாவினாள்.  தொட்டியில் வேப்பம்பட்டை, ஈச்சம்பட்டை, கற்றாழை,…

தழலின் தீண்டல்

“நீங்க அவன மண்ணுளி பாம்புன்னு நினைச்சீங்க. நான் அப்பவே சொன்னேன். அவன நம்பாதீங்க, அவன் பெருமாள் கோவில் கருப்பன்னு. நீங்கதான் கேக்கல. இதோ உங்ககிட்டயே சீறிட்டுப் போறான் இப்ப,” என்று மாமாவிடம் சொல்லிவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்த கிரிதரனிடம் நான் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் சிரிப்பிலேயே நிலைத்திருந்த முகத்தில் அவனின் சிறிய…

மத்த யானையின் ஈருரி

“விதண்டாவாதமாகப் பேசுவதை நிறுத்து. இப்படிப் பேசிப் பேசித்தான் எல்லாமே சிக்கலாகிறது. என்னை மடக்கி மடக்கிப் பேசி ‘கிரிட்டிக்கலாக’ அனலைஸ் செய்யாதே,” லலிதா கோபமாகச் சொன்னாள். “என்ன விதண்டாவாதம்? அரை மணிக்கு மேல் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்கிறேன்!” “உனக்குத்தான் நான் பேசினால் காது கேட்பதில்லை!” கோபமாக பரந்தபன் கத்தினான். அவள் ஒரு துளி காப்பியை அருந்தினாள்.…

அந்த மாவட்டத்தின் டாக்டர்

இலையுதிர் காலத்தில் ஒருநாள் நான் ஓர் உட்புறப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது எனக்குத் திடீரென்று சளிபிடித்து  உடல் காய்ச்சல் கண்டது. நல்ல வேளையாக அப்போது நான் அவ்வூரின் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன். ஒரு டாக்டரை வரச் சொல்லியிருந்தேன். சொல்லி அரை மணி நேரத்துக்குள் அவர் வந்துவிட்டிருந்தார். ஒல்லியான தேகம், கருமையான தலைமுடி, சராசரி உயரம்…

அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை

அலுவலகம் முடிந்த பின் எல்டாம்ஸ் ரோட்டிலும் நுங்கம்பாக்கம் ஹைவே டிராஃபிக்கிலும் முக்கால் மணிநேரம் லோல்பட்டு, இதற்கு நடுவில் ஒன்வேயில் மேலே ஏறிவந்த ஒரு பைக்காரனைத் திட்டிவிட்டு ஒருவழியாக அண்ணாநகர் வந்துசேரும்போது ஏற்கெனவே ஆறு முப்பது ஆகியிருந்தது. குறுகலான மாடிப்படியில் ஏறினால் குளிரூட்டப்பட்ட ஹால். சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வுக்கான கோச்சிங் வகுப்பில் சேர்ந்திருந்தேன். வரலாறு வகுப்பு.…

நாற்றம்

வெலிங்டன் விடுதியின் காப்பாளர் பங்களாவுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் பனைமரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. அடர்ந்த பனைமரத் தூர்களின் அடியில் முற்றி உதிர்ந்த நுங்குகள் கிடக்கின்றன. வெட்டி இறக்கப்படாத நுங்கு குலையாகத் தெரித்து மட்டைகளின் இடையில் தொங்குகின்றன. பாதையில் சிதறிக்கிடக்கும் இரண்டு பெரிய நுங்குகளில் பளபளப்பு மங்கி மஞ்சள் நிறக்கோடுகள் விழுந்திருக்கின்றன. டேனியல் விஜயகுமாரின் அம்மா…

சருகு

1 படுக்கை அருகே இருந்த மேசை மீது அலைபேசியை வைத்த சீனிச்சாமி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார். நகங்கள் கட்டில் விளிம்பில் பலமாய் பதிந்திருக்க தொண்டை வழி இறங்கிய வியர்வை மயிரற்ற மார்பின் ஊடாக வழிந்தது. பழுப்பேறியிருந்த வேட்டியைத் தொடைகளுக்கிடையே ஒடுக்கிக்கொண்டு வாசல் பக்கம் பார்த்தார். வெயில் ஏறுவதற்கு வெகுநேரம் இருந்தது. முழுதாய் விடிந்திருக்காத இவ்வேளையில் செல்லப்பாவை…

முத்தத்திற்குப் பிறகு கடவுளானவன்

“எங்கே சென்றிருந்தாய் மகதலா? நாம் இரவுணவுக்குச் செல்ல வேண்டும். அங்கே சீடர்களும் நமக்காக காத்திருப்பார்கள்.” இந்த அழகான மாலை பொழுதில் எருசலேம் நகரமே பாஸ்கா திருவிழாவிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. எகிப்தில் அடிமைகளாயிருந்த இஸ்ரயேல் மக்களை மோசே வழியாக கடவுள் மீட்ட நாளையே பாஸ்கா திருவிழாவாகக் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடுகிறார்கள். இன்று இரவு எருசலேம் நகர மக்கள்…

கிள்ளான் காகம்

நீ கிள்ளானில் வசிக்கும் ஒரு காகம். இன்றும் நீ நடுக்கத்துடன் தான் எழுகிறாய். என்னதான் சூரியன் மெல்ல உதித்துக்கொண்டிருந்தாலும், வானம் இன்னும் இருண்டவண்ணமே இருக்கிறது. குச்சிகளாலான உன் கூட்டிலிருந்து எதிரே இருக்கும் திரு.ங்-ஙின் வீட்டை நீ எட்டிப் பார்க்கிறாய். நீ உன் கறுத்த இறக்கைகளை அசைக்க, உன்னுடன் வசிக்கும் சகோதரர்கள், உறவினர்கள், அண்டை மரத்துக் காக்கைகள்…

சைமனின் தந்தை

பள்ளியின் வாசல் திறந்தவுடன் மாணவர்கள் ஈசல் கூட்டம்போல ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும் முந்திக்கொண்டும் அரக்கப் பரக்க வெளியே விரைந்தனர். கட்டொழுங்கோடு வரிசையாகப் புறப்படாமல், முடிச்சுக்களிலிருந்து அவிழ்த்துக்கொண்டது போன்று சிதறிக்கொண்டும் திட்டுத் திட்டாகவும், கூட்டமாய்ப் பேசிக்கொண்டும் கலைந்தும் மாணவர்கள் இரவு உணவுக்காக விரைந்துகொண்டிருந்தனர். மாலை வேளை. லா பிளாஞ்ச்சோட் அந்த ஊருக்குப் புதிதாய்க் குடியேறி இருக்கிறாள் என்பதை…

மறதி

“வேசி… நான் மட்டும் இப்பொழுது ஊரில் இருந்திருந்தால், நிச்சயமாக அவளை ஏதாவது செய்திருப்பேன்… வேசி… காமப்பசி எடுத்து அலைகின்றாள்…” என உடைந்த ஆங்கிலத்தில் துண்டுதுண்டாக அக்கினோ சொல்லிக் கொண்டிருந்தான். அவனருகில் சுவரைப் பற்றியவாறு கிழவர் நின்று கொண்டிருந்தார். “அடுத்ததாக, அவள் மீது வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யலாமென இருக்கிறேன்… எனக்குச் செய்த துரோகத்துக்கும் மகனைச் சரியாகப்…

டாம் அண்ட் ஜெர்ரி

அந்த மொட்டை வால் பூனையைப் பிடித்து பொறித்து தின்ன வேண்டும். அதற்குச் சரியான திட்டமொன்றை வரைய வேண்டும். மஞ்சள் நிறமான அந்தப் பூனை எங்கள் தோட்டத்தில் ஒரு கோழிக்குஞ்சைக் கூட விட்டுவைத்ததில்லை. கலர் கோழிக்குஞ்சுகள், இறைச்சிக் கோழிக்குஞ்சுகளென பேதமின்றி தின்று விடுகிறது.  தோட்டம் முழுக்க எல்லா கோழிக்குஞ்சுப் பிரியர்களும் பயந்து நடுங்குவது அந்த மொட்டை வால்…

புதையல்

1 அரியது எனத் தோன்றும் பொருட்களையெல்லாம் சேர்த்து வைக்கும் பழக்கம் எந்தப் பிராயத்தில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது என சரியாகச் சொல்ல முடியவில்லை. என் ஊரிலேயே நன்கு பம்பரம் விடத் தெரிந்தவரான பாண்டி அண்ணன் அழகான கோலிக்குண்டுகளைச் சேர்ப்பவராக இருந்தார். என்னுடனேயே சுற்றித் திரியும் ஓவு என்ற சின்னப்பையன் எதிர்க்காற்றில் வேகமாகச் சுற்றுவதற்கு இசைவான ஓலைகளைச்…

அனல் மடி

சிலாவாடீ கடற்கரை ரிசார்ட்டிலிருந்து பார்க்கையில், ஒட்டு மொத்த தாய்லாந்து கடலும்  விழிகளுக்குள் அடங்கி விடுவதாகவே எண்ணிக் கொண்டேன். நோக்கு மறையும் தொலைவிற்கு வெறும் நீல திரை போன்ற நீர்தான். ‘என் ஊரிலும் இதே நீர்தான் இருக்கின்றது. ஏன் அங்குப் பார்த்த கடலை விட, இங்குப் பார்க்கும் கடல் வேறொரு உணர்வைத் தருகிறது’ என யோசித்தேன். அப்பொழுதுதான்…