உதிர்ந்த இலை

தடக்…. தடக்… தடக்…  இரயில் வண்டியின் ஒட்டுமொத்த சப்தம் வேறொன்றாக இருப்பினும், மூன்றாம் வகுப்புக்கென்று சில பிரத்யேக சப்தங்கள் உண்டு. அதன் நெரிசலும் பிதுங்கலும் கொதிக்கும் மரப்பலகை இருக்கைகளும் ரயிலின் போக்கோடு இணைந்துக் கொண்டாலும் சில சமயம் ரயிலின் சத்தமும் சில நேரம் ஆட்களின் சத்தமும் ஒன்றையொன்று விஞ்ச முனைந்தன. நானும் அம்மாதிரியான முயற்சியில்தான் ஈடுப்பட்டுருக்கிறேன்…

கூலி தரும்

திரைப்பாடல்களைக் கூர்ந்து கேட்பதும், அவை மனதில் பதிந்ததும், சன்னமாக முனகிக்கொள்வதும் எனக்கு சுமார் பத்துவயதிலிருந்தே வழக்கமாக இருந்தது. ஆனால் இசையை முறையாகக் கற்கவேண்டும் என்றோ இசைக்கருவிகளை வாசிக்கவேண்டும் என்றோ தோன்றியதில்லை. பின்னாளில் ஶ்ரீபெரும்புதூரில் வேலைக்குச் சென்றபோது கிடார் வாசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது. ஏன் குறிப்பாக கிடாரைத் தேர்வுசெய்தேன் என்பதற்கு இன்றுவரை காரணம் கிடைக்கவில்லை. …

வல்லினம் சிறுகதை சிறப்பிதழ்

தமிழில் சிறுகதைகள் ஆரம்பத்தில் இருந்தே உலகத்தரத்தை ஒட்டிப் பயணிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கில நாவல்களைப் பார்த்து எழும் பிரமிப்பு, சிறுகதைகளைப் பார்த்து எழாததன் காரணம் நாம் தமிழில் அதற்கு இணையான பலவற்றைப் படித்ததன் காரணமாக இருக்கக்கூடும். இணைய இதழ்களில் சிறுகதைச் சிறப்பிதழ்கள், தமிழ் சிறுகதைகளுக்கு மேலும் ஒரு வலுவான நடைமேடையும், அதிக வாசகர்களை அவர்கள் இருக்கும்…

வல்லினம் செயலி

இலக்கிய இணைய இதழ்களில் வல்லினம் முதன் முறையாகச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாசகர்கள் இதை கைபேசியில் நிறுவிக்கொண்டால் வல்லினம் அதில் தானாகவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அச்செய்தியையும் அறிவிக்கும். வல்லினத்தின் அத்தனை பகுதிகளையும் படிக்கவும் முடியும். தரவிறக்க https://play.google.com/store/apps/details?id=appvallinamcommyversion2.wpapp

எண்ணும்பொழுது

“தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான். அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது.

யானைக் கதை

மொழியியல் பேராசிரியர் கியோம் வேர்னோ ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு, கேரளாவுக்கே சென்று ஆசான் வைக்கம் முகமது பஷீரை நேரில் தரிசித்து, பிரஞ்சு மொழியில் ஒரு நீள்கட்டுரை எழுதி வெளியிட்டவர். அநேகமாக பஷீர் சந்தித்த கடைசி வெள்ளைக்காரன் இவராகத்தான் இருப்பார். அந்தப் பேராசிரியரும் நானும் ஒரே இரயில் பெட்டியில், அதுவும் அருகருகாக…

ஆறுதல்

களைவெட்டி மூன்று நாள் வாடப் போட்டிருந்த வெண்டைச் செடிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கோபால்சாமி, “ஈரத்தில் வெளையாடாத கபிலா, சேத்துப்புண் வரும் தடத்துக்குப் போ, எத்தனவாட்டி சொல்றது” என்றார். நீர்வற்றி சொதசொதவென்று இருந்த வாமடை மண்ணைப் பிசைந்து குதிரை செய்துகொண்டிருந்த கபிலன், “நீயும்தானே சேத்தில நிக்கிற தாத்தா. உனக்கு வரலையன்னா எனக்கு எப்படி வரும்?” என்றான்.…

நிசப்தத்தின் அருகில்

“அவள் ஒரு மோகினி!” என்று மெழுகு தாளில் மை தொட்டு எழுதியிருந்த கையெழுத்துப் பிரதியின் முதல் வரியைப் படித்த பின்னர்தான் ராவ் மனதுள் துணுக்குறல் பிறந்தது. அந்த பங்களாவின் மேல் தளத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஹென்றியின் அறையிலுள்ள தனிப்பட்ட நூலகத்தில் அந்த கையெழுத்துப் பிரதியினை அவர் தேடிக் கண்டடைந்திருந்தார். நீளமான தாள்களை இரண்டாக வெட்டி எழுதி,…

தூமகேது

சுந்தரம் சைக்கிளை வேகமாக மிதித்தான்.  நான் பின்னால்,  ஒரே பக்கமாக இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். வலது  கையால் சுந்தரத்தின் தோளை இறுகப்பிடித்துக் கொண்டேன்.  மருத்துவமனை மேடு தெரிந்ததுமே தலையைச் சாய்த்து ஜப்பான் கல்லில்  சுருட்டுத்தாத்தா உட்கார்ந்திருக்கிறாரா என்று பார்த்தேன்.  அவர் எப்போதும் போல அங்கேதான் உட்கார்ந்திருந்தார். வாயில் துண்டு சுருட்டு நெருப்பு  இல்லாமல் துருத்திக்கொண்டிருந்தது.…

தேக்காவில் ஒரு பாலம் இருந்தது

இந்தப் பொழுதில் இங்கே தனியாகநிற்கிறோம். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து நரம்புகள் வெலவெலத்தன. உய்யென்று காற்று சத்தத்ததோடு கடந்து செல்லவும் பயந்து கண்களை மூடிக்கொண்டேன். அக்காவும் நானும் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் கேம்பிலிருந்து தப்பித்து வந்திருந்தோம். எங்களைப் பார்த்த இடத்தில் ஐஎன்ஏகாரர்கள் சுட்டுவிடலாம். ஜப்பான்காரன் கழுத்தை வெட்டி இந்த தேக்கா பாலத்தில் கண்காட்சி வைப்பான். “ஐஞ்சாம் படைக்கு…

ஓர் அழகியின் கதை

பெயர்: ஜூலி முகவரி: 16, ஜாலான் மலாக்கா அ.அட்டை எண்: (கிறுக்கலான எழுத்தை வாசிக்க முடியவில்லை.)  வயது: 35 திகதி : மார்ச் 25 அறையின் உள்ளே நுழைந்து என் எதிரில் உள்ள நாற்காலியில் அமரும் முன் ஒரு கணம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். என்னை கணிப்பது போல் இருந்தது அவளது பார்வை. மெல்லிய…

முடிவின்மையின் வடிவம்

நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வெளியே என்றால் ரொம்பவும் வெளியே. நான் நிற்கும் இடத்தில் இருந்து மகிழ்ச்சியின் மையக்கூடத்திற்குச் செல்வதற்கு இறுகி நெருங்கி நின்றிருக்கும் எண்ணற்ற மனிதர்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு நாளோ ஒரு வருடமோ ஒரு யுகமோ கூட ஆகலாம். ஆனால் இப்போது நான் நிற்கும் இடத்தில் அவ்வளவு நெருக்கடி இல்லை. இடர்பாடுகள் இல்லை.

பசித்திரு தனித்திரு விழித்திரு

1  வெள்ளைச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்த மாரிமுத்து நாற்காலியில் அமர்ந்து வாசல்கதவையே பார்த்திருந்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மூன்று இருபது. “இந்தா வந்துருவார்… உக்காருங்க” எனச் சொல்லி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இருப்பு கொள்ளவில்லை. அவன் முன் இருந்த முக்காலியில் வைக்கப்பட்டிருந்த பில்டர் காபி சூடிறங்கி ஆடை கட்டியிருந்தது.  எதிர் சுவற்றில் மூன்றுக்கு இரண்டடி அளவிலான பெரிய…