விருந்தினர் இலக்கியம்

மலேசியாவில் இலக்கியம் என்று சுட்டப்படுவது மரபு இலக்கியம், பக்தி இலக்கியம், கண்ணதாசன், வைரமுத்து, வாலி வரிசையில் பாடலாசிரியர்களை மையமாக கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள், நன்னெறி இலக்கியங்கள், நவீன இலக்கியம் போன்ற எல்லா தரப்பு இலக்கிய முயற்சிகளையும் சேர்த்ததுதான். வெகுஜன இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற அகவய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுபுறவயமாக இவை அனைத்துமே இலக்கியம் என்ற…

நடமாடும் பள்ளிக்கூடம்

13.5.2017- மலாயா பல்கலைக்கழகத்தில் வெளியீடுகாணும் ம.நவீனின் ‘மாணவர் சிறுகதை’ எனும் நூலுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி அவர்கள் எழுதிய அணிந்துரை. யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப்பட்டறையுடன் நடைபெறும் இந்த வெளியீட்டில் கலந்துகொள்ள மாணவர்களின் முன் பதிவு அவசியம். தொடர்புக்கு: தயாஜி 0164734794 / 0149005447 சிறுகதை என்கிற நவீன இலக்கியவடிவம் தமிழில் தோன்றிய நாள் முதலே…

குடியேறிகள்

நண்பர்களுடன் சீன டீயை குடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கடையை விட்டு வெளியேறினான். அவனது கால்கள் நிலைகொள்ளவில்லை. நடைபாதைகளில் கடந்து பழகிய கட்டடங்கள் அவனை நோக்கி சுழன்று வந்தன. அருகில், குப்பைக் குவியலை கிழறிக் கொண்டிருந்த காகமொன்று பேரிரைச்சலுடன் அதன் கூட்டை நோக்கி பறந்தது. அவன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, கிருஷ்ணன் தனக்குள் பேசிக்கொண்டான். நாங்கள் ஒருவருக்கொருவர்…

மன்னர் மன்னனுக்கு ஒரு திறந்த மடல்.

மதிப்பிற்குறிய மன்னர் மன்னன் அவர்களுக்கு. தங்கள் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. தாங்கள் பல ஆசிரியர்களை உருவாக்கிய ஆசிரியர். அவ்வகையில் உங்களைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லனவற்றையே கூறியுள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த துறை மீதும் அதில் தாங்கள் காட்டிய நாட்டம் மீதும் எனக்கு மதிப்புண்டு. நீங்கள் ஒரு நல்லாசிரியர். அதேபோல தாங்கள் மலேசியத்தமிழ்…

கீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (பெயர் வழி அறிதல்)

வரலாற்றின் பொருளைக் காண்பதில் இருவிதச் சிந்தனைப் போக்குகள் இருக்கின்றன. தற்காலத் தேவைகளை கடந்த காலத்தில் காண முயல்வதும், பழங்காலத்தின் படிமத்தைத் தற்காலத்தின்மீது பதிக்க முயல்வதும் அவ்விரு போக்குகளாகும். – ரொமீலா தாப்பர் கீழடி அகழாய்வு பற்றிய அறிமுகக் கட்டுரையினைக் கடந்த இதழில் எழுதியிருந்தேன். கீழடி அகழாய்வினை இந்திய அரசு தாமதப்படுத்துவதாகவும், புறக்கணிப்பதாகவும், உள்நோக்கத்துடன் அகழாய்வின் கண்காணிப்பாளர்…

நம் வாழ்வில் சிறுத்து வரும் சிரிப்பு!

மனித வாழ்வின் அரிய பொக்கிஷம் அவனது இதழ் சிந்தும் சிரிப்பு என்பது பெரும்பாலானோருக்குப் புரியாமலே போகிறது.நித்தமும் வேகம் வேகமென்று ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இன்று வாழ்க்கையெனும் பயணத்தை கடக்கையில், வழியில் சிதறிக்கிடக்கும் சிரிப்பை ரசிக்க மறந்துபோவது இன்றைய நிலையின் பரிதாபத்தின் உச்சம். இவர்கள் ஒருகட்டத்தில் சோர்ந்துபோய் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கையில், நிறைய இடங்கள் வெற்றிடங்களாகவே காட்சியளிக்கின்றன. வாழவேண்டும்!…

நிகழ்காலத்தில் வாழ்வோம்!

காலத்தை மூன்று வகையாகப் பிரித்தனர் நம் முன்னோர். நாம் வாழ்ந்து முடித்ததைக் கடந்தகாலமென்றும், வாழ்ந்துகொண்டிருப்பதை நிகழ்காலமாகவும் இனி  வாழப்போவதை எதிர்காலமென்றும் வகைபடுத்தினர். இதிலென்ன எனக்கு சந்தேகம் வந்ததென்று நீங்களும் கேட்கலாம். இன்றைய உலகில் நிகழ்காலத்தில்  ‘வாழ்பவர்களின்’ எண்ணிக்கை குறைந்து வருவதே என் ஆதங்கத்திற்குக்  காரணமாகிறது. கடந்த காலமென்பது காலத்தின் கட்டாயமானது. அது மனிதனின் கைமீறியச் செயல்,…

நுரை

சூரிய ஒளியிலிருந்து கருப்புநிற கண்ணாடிகளைக் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது அந்த இடம். பின்னணியில் காதுகளை எரிச்சல் செய்யும் டும் டும் ஓசை. சுற்றியும் மிதப்பில் இருக்கும் ஆட்கள். எல்லாமே அவளை என்னமோ பண்ணியது. நாளைவரை வீட்டுக்கு யாரும் வரப்போவதில்லை. அப்பாவின் கூட்டாளி செத்துப்போனதும் அவர் இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பதும் நல்ல சகுனமாக நினைத்துக்கொண்டாள். மேசைக்கு…

மன்னிப்பு

“இந்த மூணு பிள்ளைங்களுக்கும் கொஞ்சம் விபரம்  தெரிஞ்சதும், கண்காணாம தொலைச்சிட்டு போயிருனும். அப்பத்தான் நிம்மதி. நமக்குன்னு ஒரு வாழ்க்கை, நம்ம வழியில்…” அடுப்பறையில் பாலோடு சேர்ந்து பொங்கிக் கொண்டிருந்தாள் பாக்கியம். கடைக்குட்டி இந்திராணி மூன்றாவது முறையாக ஓடிவந்தாள். “அப்பா எப்ப வருவாரு?”  என்ற அதே கேள்வியுடன். “வருவாரு. போய் அக்காகூட   விளையாடு” எனச் சொல்லி, நேற்று…

வல்லினம் பொறுப்பாசிரியர் அ.பாண்டியன்

வல்லினம் தொடர்ந்து புதிய சாத்தியங்களை மலேசிய இலக்கியச் சூழலில் உருவாக்க முயன்றுவருகிறது. அவ்வகையில் கடந்த சில மாதங்களாக எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான ஶ்ரீதர் ரங்கராஜ் அவர்கள் வல்லினம் இதழை வழிநடத்தினார். அவரது மேற்பார்வையில் வல்லினத்தில் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்களும் தமிழகத்தில் புதிய தலைமுறையினரின் படைப்புகளும் சங்க இலக்கிய அறிமுகங்களும் அதிகம் இடம்பெற்றன. இது வல்லினம் இதழுக்குப் புதிய முகத்தைக்…

இறுதிச்சுற்றுக்கான படைப்புகள்

வல்லினம் இவ்வாண்டு தொடங்கியப் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஏப்ரல் 2017 இறுதியுடன் நிறைவடைந்தது. இம்மாதம் (மே மாதம்) தொடங்கி அனுப்பப்பட்டப் படைப்புகளில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றவை மட்டும் வல்லினத்தில் பிரசுரமாகும். அவ்வகையில் இம்மாதம் ஒரு கட்டுரை, ஒரு பத்தி இரு சிறுகதைகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு பெறுகின்றன. தொடர்ந்து செப்டம்பர் வரை இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் படைப்புகள் வல்லினத்தில் பிரசுரமாகும்.…

அசோகமித்திரன் : எளிமையின் நடை

1993, கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது என்று ஞாபகம். அப்போதைய வாசிப்பு சற்றே இலக்கில்லாமல் இருந்தது. நானாகத் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். ராஜேஷ் குமார், சுபா, பிகேபி கதைகளைத் தாண்டி சுஜாதாவுக்கு வந்து பாலகுமாரனில் நிலைகொண்டிருந்த காலகட்டம். தீவிர இலக்கிய வாசிப்பு என்பது அவ்வளவாக இல்லை. யாரைப் படிக்க வேண்டுமென்பதே தெரியாது. அப்போது மதுரைக்கல்லூரியின்…

அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’- கலைக்கு நேரும் ஒரு சாபக்கேடு கோ.புண்ணியவான்

முதல் முறை குடும்பத்தோடு தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சில்  இனமறியா பதற்றம் ஏறியிருந்தது. அந்நிய நாட்டுப் பயணம் என்பதால் புது இடத்தை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தப் பதற்றம் அது. சென்னையில் யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தபோது தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வந்த…