கீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (சில குறிப்புகள்)

மதுரையிலிருந்து தென்கிழக்கில் 13 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது கீழடி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அவ்வூரானது வைகையாற்றின் தென்கரையிலிருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. கீழடியில் உள்ள  ‘பள்ளிச்சந்தை திடல்’ என்னும் பகுதியில் இந்தியத்தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவின் ஆறாவது கிளை 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக மேற்கொண்ட அகழாய்வானது வரலாற்று முக்கியத்துவம்…

ஆக்கத்தின் அசல்தன்மையும் அது தொடர்பான கட்டுக் கதைகளும் (Originality preference & myth)

இணையப் பயன்பாடு கடந்த பத்தாண்டுகளில் தகவல் மூலங்களைக் கண்டறியும் வழிகளையும், பயன்பாட்டையும் மாற்றிவிட்டிருக்கின்றது. தகவல்களை எளிதாக பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு செல்லுதல், எளிதாகக் கண்டடைந்து பயன்படுத்துதல் என, அடிப்படையில் இவ்விணையப் பயன்பாடு நன்மைகளைக் கொண்டு வருவதாக இருந்தாலும்கூட கற்றலைத் தாமதப்படுத்துதல், ஆய்வுகளில் நேர்மையற்ற தன்மையை உருவாக்குதல் என சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதையும் காண…

இன அரசியலும் மன முடக்கமும்

நேற்று என் அம்மாவை அரசாங்க மருத்துவமனைக்குக் கண் சிகிச்சை பெற அழைத்துச் சென்றேன். இது இரண்டாவது முறை மருத்துவச் சந்திப்பு. கூட்டம் முந்தியடித்துக் கொண்டு நின்றது. காலை 8-மணி சந்திப்புக்கு 6.30-மணியில் இருந்து மக்கள் வந்து காத்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். பெரும்பான்மை மருத்துவமனைகளில், அதிலும் அரசாங்க மருத்துவமனைகளில் இச்சூழல் இயல்புதான் என்பதால் அமைதியாக, தாதிகளின் அழைப்புக்குக் காத்திருந்தோம்.…

திறவுகோல் 7: திரிந்தலையும் திணைகள்

இந்தக் குறுநாவல் சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கரால் எழுதப்பட்டு, சந்தியா பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இந்நூலூக்காக நூலாசிரியர் கரிகாலன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்கள் பள்ளியில் ஒன்றாகப் படித்து, திருமணமான பிறகு வெவ்வேறு நாடுகளில் வாழ நேரிடும் இரண்டு பெண்களின் வாழ்க்கைப் போராட்டம்தான்…

காசி கவிதைகள்

அந்த இரவு இந்த இரவில் அவ்வளவு கறுமையில்லை எங்கிருந்தோ ஒரு மணியின் ஓசை கண்கள்வழி புகுந்து வெளிச்சம் கொடுக்கத்தொடங்கியது தோல்களை உரசிய காற்று இரவைக் கிழித்து காட்சிகளைப் படிமங்களாக்கியது இப்போதுதான் எரியத்தொடங்கிய பிணத்தின் சாம்பல்வாடை இரவுக்குள் கண்களை ஊர்ந்துசெல்ல வைக்கிறது நான் கங்கையைப் பருகியபோது கறுமை தனது ஆடைகளைக் களைந்து இந்த இரவை அத்தனை கருமை…

அற்புதம்

அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும். மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக…

பறத்தலின் நிமித்தம்

பறக்க எத்தனிக்கும் பறவை ஒன்றினை வரைகிறாள் மாயா. நீல நிற பறவை அது. கண்களில் கானகத்தைச் சுமந்தபடி சிறகுகளை விரித்துக் காத்திருக்கிறது. தானியங்களையும் தடாகம் ஒன்றினையும் மரங்களையும் வரைந்து முடித்த அவள் களைத்துப் போய் உறங்கி விட்டாள். தான் பறந்து திரிய ஒரேயொரு வானத்தை வரைந்து விடு என காதருகில் வந்து கெஞ்சி எழுப்புகிறது அந்நீல…

இனி நட்பாய் தொடரட்டும் : ஒரு வாசகப் பார்வை

என் வாசிப்பனுபவத்தில் படைப்பிலக்கியத்தை இரு கூறுகளாகப் பகுத்துப் பார்க்கிறேன். ஒன்று, படிப்பவர்கள் விரும்புவதைப் படைப்பது. மற்றது, படைப்பு படிப்பவர்களை விரும்ப வைப்பது. இவ்விரண்டில் முதலாவது எளிது; இரண்டாவது சற்றே கடினம். இனி ‘நட்பாய் தொடரட்டும்’ எனும் முதல் சிறுகதை நூலின்வழி தனது சிறுகதைகள் அனைத்தும் மிகவும் எளிய முறையில் வாசிப்பவர்களுக்கு எந்தவொரு சிக்கலுமின்றி புரிந்து கொள்ளும்…

உயிர்க்காடு -இறுதி பாகம்

திடுமென ஒலித்த ஒரு காரின் ஹார்ன் சத்தம் அவளை எழுப்பியது. ரோட்டைத் தாண்டி ஓடிய, ஒரு சிறுவிலங்கு அந்த வண்டியிலிருந்து தப்பி, அவள் இருக்கும் குகையை நோக்கிப்புகுந்து மறைந்தது. ‘இன்னும் ஏன் சில்வன் வரவில்லை என்று யோசனையுடன் ஆழ்ந்தாள் மெலிசா. இரவு பத்தரை மணி அளவில், அவளுடைய கைத்தொலைப்பேசிக்குச் செய்தி அனுப்பியிருந்தான் சில்வன். ‘இரவு 4…

படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம் 2017 – நாள் நீட்டிப்பு

வல்லினம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக சிறுகதைப் போட்டியை நடத்தி முடித்ததைத் தொடர்ந்து இவ்வருடமும் வல்லினத்தில் பிரசுரமாகும் படைப்புகளுக்கான பரிசுத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் வழி சிறுகதை, கட்டுரை, பத்தி ஆகிய மூன்று இலக்கிய வடிவங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்புக்கு மட்டும் RM 1000.00 ( ஆயிரம்  ரிங்கிட்) பரிசு வழங்க வல்லினம் முடிவெடுத்துள்ளது. சிறந்த சிறுகதை…

வை.கோவிந்தன் : மறக்கப்பட்ட ஆளுமை

தஞ்சாவூரில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனக் கிளை மேலாளர் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “சக்தி கோவிந்தனைத் தெரியுமா?” என்றார். “ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னேன். “புதுக்கோட்டை அருகில் உள்ள ராயவரம்தான் அவரது சொந்த ஊர்.   அங்கே நடக்கின்ற ஒரு விழாவிற்காக அவரது மனைவியும் மகனும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களாம். சந்திக்கிறீர்களா…” உச்சி வெயில். எதிர் அனல் காற்று.…

வல்லினம் குறுநாவல் பட்டறை & சிங்கப்பூர் இலக்கிய அறிமுகம்

வல்லினம் இவ்வாண்டு குறுநாவல் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குறுநாவல் பட்டறையைத் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோர் வழிநடத்துவர். இரண்டு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் மலேசிய சிங்கை எழுத்தாளர்கள் கலந்துகொள்ளலாம். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் குறுநாவல் இலக்கியம் வளர வல்லினம் சில செயல்திட்டங்களை வகுத்துள்ளது. அவ்வகையில் வல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டத்திற்காக இந்தப்…

சிங்கப்பூர் வாசகர் வட்ட விழா : ஓர் அனுபவம்

எம்.கே.குமார் தனது ‘5.12 PM’ சிறுகதை நூலுக்கு முன்னுரை கேட்டிருந்தார். அப்படியே அவசியம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு நூல் குறித்து பேச வேண்டும் என்றார். நான் முதலில் நூல் குறித்து எழுதிவிடுகிறேன்; பின்னர் வருவது குறித்து பேசுவோம் என்றேன். என்னால் சடங்கான முன்னுரை எழுத முடியாது என்பதை அறிவேன். மலேசியாவில் எனக்கு…