Category: வல்லினம்

இலக்கியத்தில் சிக்கலான தன்மை ஏன் உருவாகிறது?

தீவிர இலக்கியத்தின் தொடக்கநிலை வாசகர்கள் உணரும் சிக்கல்தன்மை என்பது எழுத்தாளர் வேண்டுமென்றே முனைந்து உருவாக்குவதல்ல. எளிமையான அணுகலை முன்னுரிமைப்படுத்தும் நேரடிக் கதைகூறலைப் போலன்றி தீவிர இலக்கியத்தின் இயல்புகளான, ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள், நுணுக்கமான சித்திரங்கள், திறந்த முடிவுகள் ஆகியவற்றினால் தொடக்கநிலை வாசகர் அதைச் சிக்கலாக உணர்கிறார். ஆழமான தத்துவ விசாரணைகள், வழக்கத்திற்கு மாறான கதைகூறல், மொழியியல்…

ஒலிப்புதையல்

“சூரியன ரசிச்சது போதும் மாமா!” பானுதான் சொன்னாள். சட்டென திரும்பலாமா வேண்டாமா என நிதானித்தேன். இப்படி நிதானமாக அமர்ந்து காலை நேரச் சூரியனைப் பார்த்து பல நாட்களாகிவிட்டதென தோன்றியது. சரியாகச் சொல்வதென்றால் மூன்று வருடங்கள்.  ”சாப்பாடு ஆரிடப்போவுது… சீக்கிரம் வாங்க மாமா,” குரலில் அன்பிருந்ததால் சிரித்தபடியே மனைவியைப் பின் தொடர்ந்தேன். தமிழகத்துப் பெண். கிராமத்துக்காரி. சொந்தம்…

தமிழில் எஸ்.எம். ஷாகீர்

அறிவியக்கத்தின் ஆணிவேராக இருப்பது மொழிபெயர்ப்பு. அறிவும் கலையும் இலக்கியமும் உலகம் முழுக்க சென்று சேர மொழிபெயர்ப்புகள் துணைபுரிகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு பெரியது. ரஷ்ய இலக்கியம், வங்க இலக்கியம், தென் அமெரிக்க இலக்கியம்,  ஐரோப்பிய இலக்கியம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் உலக இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தைச் செறிவாக்கியுள்ளன. மலேசியாவின் தேசிய மொழி…

மலாய் மொழியில் தமிழின் பத்து சிறுகதைகள்

மலேசியத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை 1930 முதல் 1978 வரை ந. பாலபாஸ்கரன் ஆறு காலக்கட்டமாகப் பிரித்திருந்துள்ளார். மலேசிய சிங்கப்பூர் ஆய்வுலகின் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படும் அவரது வரையறையே இன்றும் இலக்கிய ஆய்வுகளில் பிரதானமானது. ந. பாலபாஸ்கரன் கருத்துப்படி 1930களில் மலேசிய சிறுகதை இலக்கிய வரலாறு தொடங்குகிறது. 1941 வரை மலேசியாவில் வெளிவந்த பல தமிழ்…

மாஹுவா இலக்கியம்

மலேசிய உருவாக்கத்திலும் பண்பாட்டுப் பரிணாமத்திலும் சீன சமூகத்தின் பங்கு மிக ஆழமானது. சீனர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே மலாய் தீவுகளுடன் வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மலாய் சுல்தான்களும் சீனாவுடன் நட்புறவு கொண்டே அரசு செய்தனர்.  சுல்தான் மன்சூர் ஷா ஆட்சிக் காலத்தில் அவர் ஹங் லி போ எனும் சீன இளவரசியை மணந்ததுடன் இளவரசியுடன் மலாக்காவில்…

இறந்தவனின் வழித்தடம்

மைக்கல் ஒபியின் எதிர்பார்ப்புகள் அவர் நினைத்ததைவிடவும் சீக்கிரமாகவே நிறைவேறியது. அவர் இண்டுமே இடைநிலைப் பள்ளியில் 1949ல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பள்ளி எந்த விதத்திலும் முன்னேற்றம் காட்டாத பள்ளியாக இருந்தமையால் கல்வி இலகா தூரநோக்கு கொண்ட ஓர் இளம்  ஆசிரியர் ஒருவரை அங்கு அனுப்ப வேண்டியிருந்தது. மிகுந்த பொறுப்புணர்ச்சியோடும் ஆர்வத்தோடும் ஒபி அந்தப் பதவியை ஏற்றுக்…

உப்பிலி

1 மேனேஜரிடம் முறையிட்டு நான்கைந்து நாட்களாகிவிட்டது. ஒன்றும் பதில் இல்லை. ஒருவேளை என் விருப்பத்திற்கு எதிராக அவர் முடிவு எடுப்பாரெனில் இங்கிருப்பதில் பயனில்லை. பேப்பர் போட்டுவிட்டு வேறிடம் பார்க்கலாம். ஒரு மணி நேரத்தில் அடுத்த வேலையை வாங்கிவிடலாம். ஆனால் இங்கே இருக்கும் வசதிகளாலும் பழகிய முகங்களாலும் அவ்வளவு எளிதில் விட்டுக் கிளம்பிட மனம் ஒப்பவில்லை. பதினைந்து…

அற்புதம்

அப்பாவின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வருகிறது. ஒரு மாதமாக டெல்லியிலிருக்கும் உறவினர் வீட்டிலிருந்து அதற்கான வேலைகளைச் செய்தோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பா மனு போட்டார். ஒரு அரசாங்கத்திற்கு எதிராக தனி மனிதர் போராடுவது கடினம். அதோடு வெற்றி பெறுவதென்பது அரிது என பல்வேறுவிதமாக சொல்லியபோதும்…

சிலுவை மரம்

“மக்கா, உனக்க அப்பன கடலுக்கு கூட்டிட்டு போனவனும் நான் தான், இப்ப என்னனா உன்னையும் கூட்டிட்டு போக சொல்லுதா உன் அம்ம” என்றவாறே வலையின் கிழிந்த பகுதிகளைத் தைத்துக் கொண்டிருந்தார். நெடுக்காக பாதி உடைத்த பிளேடை உதட்டால் கவ்வி கொண்டே அவர் பேசுவதை அவன் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். “நீயோ சின்ன பயலா இருக்க, உன்…

நூல்களின் முன்பதிவும் நிதி சேகரிப்புத் திட்டமும்

வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் மொழிபெயர்ப்புக்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. மலாய் சீன சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்ப்பதோடு மலேசிய தமிழ் சிறுகதைகளை மலாய் மொழிக்கு மொழியாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் மூன்று நூல்களை ஒரே நேரத்தில் பதிப்பிப்பதுடன் அவற்றை ஒட்டிய கலந்துரையாடல்களை உருவாக்கும் திட்டத்தையும் வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தில் ‘தமிழாசியா’ பதிப்பகமும் இணை…

அ. ரெங்கசாமியும் மூன்று கதைகளும்

எழுத்தாளர் அ.ரெங்கசாமி காலமாகியச் செய்தியை எழுத்தாளர் ம.நவீன் புலனத்தில் இட்டிருந்த அறிவிப்பின் வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன். அன்றிரவே அவருக்கு அஞ்சலி செலுத்த அவருடைய வீட்டுக்கு நானும் சண்முகாவும் சென்றோம். சவப்பேழையில் கன்னமெல்லாம் ஒடுங்கிப் போய் ரெங்கசாமி கிடத்தப்பட்டிருந்தார். கைக்கூப்பி வணங்கிவிட்டு வெளியில் வந்தேன். பொதுவாகவே, எழுத்தாளர்களையோ ஆளுமைகளையோ நேரில் சந்திப்பதில் எனக்குச் கூச்சம் அதிகம். அப்படி…

கண்ணாடியை நிகர்த்தது அந்த  ஏரி

அவளுடைய மகிழுந்து கிட்டத்தட்ட கவிழ்ந்திருக்கும் அல்லது ஏரியில் சரிந்திருக்கும் விசித்திரமான அந்த அந்தி நேரத்தில், மான் ஒன்று  திடீரென்று மிக வேகமாக ஆனால் சத்தமின்றி சாலையில் தோன்றியது. அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. உடனே அங்கிருந்து ஓடி புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுவிட வேண்டும் என்ற தவிப்பு எழுந்தது.  அண்மைய காலமாக, தனது மாணவர்கள் தாடையை மேசை மேல்…

நகரில் ஒரு மூன்றடுக்கு மாளிகை

மூன்றடுக்கு மாளிகை என்பது அந்தத் தனித்துவமான கட்டிடத்துக்கு இந்நகர மக்கள் சூட்டியிருக்கும் சிறப்பு பெயர். அந்தப் பெயருக்கு ஏற்றது போல மூன்று மாடிகளைக் கொண்டது அக்கட்டடம். அந்த மூன்றடுக்கு மாளிகை எந்த யுகத்தில் கட்டப்பட்டது? அது உருவான வரலாற்றை எப்படிக் கூறுவது? இதன்  தலபுராணம் மலாயாவைப்  பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்திலிருந்து  தொடங்குகிறது.  அக்காலகட்டத்தில் அந்நியர்களைத்…

நிசப்தப் பொழுது

ஒரு மெல்லிய ஒலியிலிருந்தே அனைத்தும் தொடங்கியது. நள்ளிரவில் அந்த ஒலியை அவன் கேட்டான். எண்ணெய் குமிழ்கள் மெல்ல மெல்ல நீரின் மேற்பரப்பில் தோன்றி பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வண்ணமயமான கோளங்களாக அழகாக நீரில் பரவுவது போல் அமைந்திருந்தது அந்த ஒலி. கர முர கர முர ஒலி… தலை முடியைக் கோதிக் கொண்டு சோபாவிலிருந்து…

கோதுமை மணி

முட்டம் கிராமத்தில் இன்று மக்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. வழக்கத்திற்கும் மாறாக கடல் அலையின் உயரம் இன்று அதிகமாகவே இருந்தது. ஓயாதக் கடல் அலையும் கட்டித் தழுவும் அதன் உப்புக் காற்றும்தான் இம்மக்களுக்கு முதல் உறவு. அனைவரும் கடல் அலையைப் பார்த்தபடி கடற்கரை மணலில் அமர்ந்து சீமோனுக்காகக் காத்திருக்கிறார்கள். “சீமோன் மாமா வந்தாச்சா?” என்று…