
நீரின் மேற்பரப்பு ஓயாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது, நீரின் கீழ்தளத்தில் மேற்பரப்பின் அலைகழிதல்களால் வேறொரு பெளதிக மாற்றம் மெல்ல நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படியாகத் தன்னுள் இருந்த படைப்பு மனத்தை அலைகழித்த, சமூகம், ஆளுமைகள், இலக்கியங்கள் சார்ந்த நினைவடுக்குகளை ‘திசைகள் நோக்கிய பயணம்’ எனும் பத்தித்தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார் சை.பீர்முகம்மது. சை.பீரின் படைப்பு மனத்தின் செல்திசையையும் இலக்கியச்…