ஊர்த்துவ தாண்டவம்

“சிவனோட அடிமுடியும்ம்ம்…அடிமுடியும்…” இராமசுப்பு பாட்டாவின் குரல் தனித்த சுருதியில் மேல் எழுந்தது. ஒரு மூலையில் சிறிய தும்மல் போல் எழுந்து மெல்ல மெல்ல காட்டை நிரப்பிச் செல்லும் சிம்மத்தின் குரல் அவை. என் அளவாச்சியை 1 அதற்கேற்றார் போல் இசைத்து பக்கப்பாட்டு பாட சிரமமாக இருந்தது. பின் பாட்டை நிறுத்திவிட்டு, அளவாச்சியை அவர் சுருதியோடு இணைக்க…

அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல: வாசிப்பனுபவம்

தமிழில் உரைநடை இலக்கியத்தின் தொடக்கம் முதலே நீதிகளை உணர்த்துவதற்காக அளவில் சிறிதாக எழுதப்படும் கதைகளான நீதிகதைகள், ஈசாப் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகியவை இருந்து வருகின்றன. அதைப் போன்று, சமூக ஊடகத்தளங்களான முகநூல், டுவிட்டர் போன்றவற்றில் சிறிய பதிவுகளாகப் பதிவிடப்படும் அனுபவப்பதிவுகள், கதைகளும் அளவில் சிறியவையே. இந்த இரண்டுமே, தற்போது எழுதப்பட்டுவரும் குறுங்கதைகளில் அதிகமான…

கடைசி நாற்காலிகளும் வகுப்பறைகளும்

சிறுவர், சிறுமியர்களின் மனம் தணிக்கைகள், தடைகள் என எதுவுமின்றி புறச்சூழலை முற்றிலுமாக உள்ளிழுக்கும் திறன் கொண்டது  என்கிறார் மரியா மாண்டிசோர்ரி. விளையாட்டு, கற்பனை மற்றும் அடுக்கடுக்கான கேள்விகள் என்பவைகள்தான் இந்த இளம்பருவத்தின் முக்கியமான மூன்று வெளிப்பாடுகள். பெற்றோரும், ஆசிரியரும் சிறுவர், சிறுமிகளின் இந்த வெளிப்பாடுகளை கவனமாக கண்காணித்து அந்த குட்டி முதலாளிகளுக்கு சேவை செய்யும் தொழிலாளிகளாக…

சாயம்

“இவ்வளவு கடை ஏறி இறங்கியாச்சு, இதுகள் ஒண்டிலையும் இல்லாததையோ இனிப் போற கடையில பாக்கப் போறம்…?”  உமாராணி அலுத்துப் போய்ச் சொன்னாள். “அது அப்பிடித்தான். வாழ்க்கையில ஒரே ஒருக்கா எனக்கு நடக்கப்போற கொன்வேகேஷனுக்கு என்ரை அம்மாவுக்கு நான் அப்பிடித்தான் உடுப்பு எடுத்துத் தருவன்”   “அப்ப, இதோட உம்மட படிப்பு முடிஞ்சுதாமோ…? வேறை படிப்பும் கொன்வேகேஷனும் இல்லையாமோ…?”…

சிருஷ்டியுலகம்

மெல்லிய பூஞ்சை வெயில் படர்ந்திருந்த முறாவோடையின் நீர்ப்பரப்பிலிருந்து பொட்டுப் பூச்சிகள் தாவித் தாவி ஓடும் நீரதிர்வுகளை, வண்டுகளின் இறக்கை பட்டு இலை மூடிய தொட்டாச்சுருங்கி பூக்களை, மாடு முறித்த எருக்கிலைச் செடியிலிருந்து சொட்டும் பாலை ஆயிஷா பார்த்தபடி இருந்தாள். இருளாகும் சமிக்ஞை போல அலங்கார தெருவிளக்கின் கண்ணாடி மூடிச்சிமிழிலிருந்து மூஞ்சூறு போல வெளிச்சங்கள் இடைவெளி விட்டு…

“மின்னூல்கள் என்ற பெயரில் ஏராளமான குப்பைகளும் குவிந்துகொண்டிருக்கின்றன!” – ஶ்ரீநிவாச கோபாலன்

2021க்கான ‘முகம்’ விருது ஶ்ரீநிவாச கோபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பின் மூலம் வழங்கப்படும் இவ்விருது, தமிழில் அச்சில் இல்லாத பல அரிய நூல்களை, தொழில்நுட்பத்தின் உதவியால் மின்-நூல்களாக இணையத்தில் தரவேற்றிப் பதிப்பிக்கும் ஶ்ரீநிவாச கோபாலனின் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. ஶ்ரீநிவாச கோபாலன், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் எனும் கிராமத்தில் பிறந்தவர்.…

அரவின்  குமாரின் சிறுகதைகள்: சில குறிப்புகள்

அனைவரிடமும் சொல்வதற்குக் குறைந்தது பத்துக் கதைகளாவது இருக்கும் என்பார்கள். இருந்தாலும் அதைச் சொல்லத் தெரிந்தவர்கள் மிகக் குறைவு, அப்படிச் சொல்ல முனைபவர்களுக்குத் தேவை மொழியறிவு. சொல் தெரிவு மற்றும் சொற்சேர்க்கை, வாக்கியத்தைச் சரியான முறையில் அமைக்கத் தெரிந்திருப்பது. ஒரு மொழியில் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதி இது எனலாம். இத்தகுதி இருந்தால் எழுதுபவன் தான் கருதுவதில் கணிசமான…

அனல் அவித்தல்

“கட்டத்தாத்தா எங்க போய்த்தொலைஞ்சாரு? தண்ணியமத்தலுக்கு நேரங்காணாதா?” அடர்நீலநிறக் கட்டங்கள் கொண்ட லுங்கியை ஏத்திக் கட்டியவாறு தன்ராஜ் கேட்டான். சட்டையணியாத அகல உடம்பின் ஓரத்தில் துண்டு தொங்கிக்கொண்டிருந்தது. அருகிலிருந்த பெஞ்சில் எதுவும் பேசாமல் பாஸ்கரண்ணாச்சி அமர்ந்திருந்தார். கருத்த எருமைத்தோல் போன்ற கைகள் இரண்டும் மரவிளிம்பைப் பிடித்திருந்தன. இடது கையில் வழக்கமாக அணியும்  தங்கப்பூச்சு கொண்ட கடிகாரமும் விரல்களில்…

இந்துஜா சிறுகதைகள்: தெப்பக்குளத்தில் தேங்கிய நீர்

இந்துஜா ஜெயராமன் மலேசிய தமிழ்ப் புனைவுலகத்தின் அண்மைய வரவு. மிகக் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நாவல் ஒன்றையும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுத் தனக்கென இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் என ஒரு சிலரால் புகழ் மாலைகள் சூட்டப்பட்டும் வருகிறார். இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஜெ.இந்துஜா ஜெயராமன் சிறுகதைத்…

இந்திய கலையின் நோக்கங்கள்

இன்றிருக்கும் இந்திய கலை இரண்டாயிரம் வருடத்திற்கு மேலான காலகட்டத்தை உள்ளடக்கியது. இக்காலகட்டத்தில் பல சிந்தனைகள் செழித்து வளர்ந்து சிதைந்துள்ளன. பல்வேறு இனங்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்துள்ளன, அவை இந்தியாவிற்குள் கலந்து  அதன் அறிவு செல்வத்திற்கு எண்ணற்ற வகையில் பங்களிப்பாற்றியுள்ளன. பல அரசவம்சங்கள் ஆட்சிசெய்து மறைந்துள்ளன. ஆகவே இந்திய கலையில் பல்வேறு மக்களின் சிந்தனைகள், எதிர்பார்ப்புகள்,…

மரணக்குழி

1 உறக்கத்தின் நடுவே போரோலத்தின் கதறல் கேட்டு விழிப்பு தட்டியது. இமைகள் இரண்டும் ஒட்டிக், கண்கள் திறக்க மறுத்தன. குழிக்குள் நான்கைந்து நாட்களாக உட்கார்ந்துக் கொண்டே தூங்கியதால் வந்த அயர்ச்சி. கண்களை நன்றாகத் திறந்தபோது மொத்த காடும் இருளால் சூழ்ந்திருந்தது. மூக்கின் முதல் சுவாச உணர்வு வந்ததும் மழை நீரில் பட்டு அழுகிய உணவின் வாடை…

ம்ருகமோக்ஷம்

1-காக தூதன்  முன்வினையின் காரணமாக பருந்தால் வேட்டையாடப்பட்டு பாதி உடலை இழந்த குருவியைக் காகம் ஒன்று பராமரித்துக்கொண்டிருந்தது. குருவியின் உயிர் விசை பாதி உடலிலும் பாதி வெளியிலும் கிடந்து அதிர்ந்துகொண்டிருந்தது துடியாக. காகம் உணவும் நீரும் குருவிக்கு அளித்து அதை நிழலில் கிடத்தி பார்த்துக்கொண்டது.  பிரக்ஞை மீண்ட குருவி காகத்தின் அருகாமையைக் கண்டு தன் இறுதிக்காலத்தை…

வெண்நாகம்

“டாக்டர்! நா திரும்ப அத பாத்தேன்… ரொம்ப கிட்டத்துல” அகிலின் கைகள் உதறின. வார்த்தைகளை வெளிவிடாதபடி ஏதோவொன்று தடுத்தது. அறையுள் நுழையும்போதே ஒருவித பதற்றத்தோடிருந்தான். ‘நான் உடனே தங்களைச் சந்தித்தாக வேண்டும்’ என்று அவன் குறுஞ்செய்தி அனுப்பியபோதே மருத்துவர் குணாவிற்கு ஏதோ அவனை உறுத்துவது விளங்கியது. அவனை நாற்காலியில் அமரச் செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தார்.…

கீரவாணி

காலையிலிருந்தே ஒரே காற்றும் மழையுமாக இருந்தது. சங்கீத வகுப்பு இருக்கும் நாளில் மழை பெய்தால் எனக்கு கொஞ்சம் சலிப்பு வரும். காரணம் சங்கீத ஆசிரியர் ஈப்போ மாநிலத்தைச் சேர்ந்தவர். குளிர் தாங்க மாட்டார். அதுவும் 1997-இல் கேமரன் மலை பசுமை மாறாமல் இருந்தக் காலம். “எப்படிதான் இந்தக் குளிருல இருக்கீங்களோ? அதுவும் குளிர் சட்டைக் கூட…

சிசில் ராஜேந்திரா: உள்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படும் கவிஞர்

முன்னோட்டம் மனிதனின் அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமான ஒன்று கருத்து சுதந்திரம். ஒருவர் தன் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த மற்றும் கற்பிக்க எவ்வித தணிக்கையும் தடையும் இல்லாமல்  செயல்பட முடியுமானால் அதுவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எனப்படுகிறது. மலேசியாவில் பெரும்பாலான நாடுகளைப் போலவே பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு வந்தாலும் அவை சில…

அணைத்தல்

கைப்பேசித் திரையில் முகத்தைப் பார்த்தபோது கண்ணிமைகள் தடித்துப் போயிருப்பது தெரிந்தது. இரண்டு மாதமாகவே சரியான தூக்கமில்லாமல் அலைகிறேன். சுகுமாறன் அங்கிள் மறுபடியும் வேலையில் சேர அழைத்ததற்கும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். இன்று அம்மாவுக்கு எப்படியும் குணமாகிவிடும் என எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கண்களைக் கசக்கி விட்டு அமர்ந்தேன். காலையிலேயே தூக்கம் குறித்த பயம்…

ஒப்புரவு

பாலம் ஏறிய சிறிது  தூரத்தில், இடது கை கட்டை விரலைக் கவிழ்த்து சைகை காட்டியபடி இருவர் நின்றிருந்தார்கள். தலைகவிழ்ந்த சாலை வெள்ளை விளக்கின் வெளிச்சத்தில் ஒரு இளைஞனும், ஒரு நடுத்தர வயது பெண்ணும்  தனித் தனியாக உதவி கேட்டது தெரிந்தது.  அவன் கையைக் காட்டிய விதமா அல்லது அவன் உடலில் தெரிந்த நிலைகொள்ளாத தன்மையா எனப்…