இலைகளில் ஒளிந்துள்ள எழுத்து

‘2020-இல்  அபிராமி கணேசனுக்கான இளம் எழுத்தாளர் விருதை வல்லினம் அறிவித்தபோது அவரை என்னால்  ‘புருனோ மான்சர்- காட்டில் கரைந்த காந்தியம்’ என்ற கட்டுரையின் வழியேதான் மனதில் மீட்டெடுக்க முடிந்தது.  வல்லினத்தின் இந்த விருது அறிவிப்பு  சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரை போன்ற புனைவு சார்ந்த படைப்புகளுக்கு மத்தியில் ஆய்வுக்கட்டுரைகள் எவ்விதம் ஒரு எழுத்தைத் தனித்துக் காட்டிவிடும்…

யாருக்காகவும் பூக்காத பூ

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும் போதே ரூபன் “டேய், இந்த வாரம் கிளாஸ் இல்ல… நேத்தைக்குத்தான் தாஸ் அங்கிள் வந்து வீட்டுல சொல்லிட்டுப் போனாரு… சொல்ல மறந்துட்டேன்” என்றான்.  “அப்ப அந்த வெள்ளைக்காரன் வர்ரான்னு சொன்னாரு” எனக் கேட்டேன். “அவுனுங்க இன்னும் வரலை, அடுத்த வாரம்தான் வருவாங்களாம்” என மிதிவண்டியை உருட்டிக் கொண்டே…

பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

இந்தத் தொகுப்பில் பூனையைப் பற்றிய ஒரு கதையும் இல்லையே என்று  ஷீயிங் சொன்னபோது, எதிரே அமர்ந்திருந்த அவள் முகத்தில் எங்காவது சிரிப்பு ஒளிந்திருக்கிறதாக என்று  கூர்ந்து பார்த்தாள் அனா. வழக்கத்திற்கு மாறாக அதிகாரியின் தோரணைதான் தெரிந்தது. “குழந்தைப் பிறப்பு குறைவாக இருக்கும் நாட்டில் பூனைகள் அதிகமாக இருக்கும் என்று  ஓர் ஆய்வில் படித்த நினைவுள்ளது. நாய்களைவிட…

பெட்டகம்

மொத்தம் நான்கு லாக்கர்கள் அந்த வேனில் இருந்தன. அதில் இரண்டு லாக்கர்கள் ஐந்தரை அடி உயரத்தில் கம்பீரமாக இருந்தன. இளம் பச்சை நிறத்திலிருந்த  லாக்கர் நாலடி உயரம் இருந்தது.  சாயம்போன அலுமினிய நிறத்தில் இருந்த மற்றொன்று, மூன்று அடி உயரத்தில் மத்த பெட்டகங்களுக்கு மத்தியில் குட்டித் தம்பியாக பதுங்கி அமர்ந்திருந்தது. காணூர் பங்களாவின் இருட்டான அறைகளில்,…

இசையும் வரியும்

தியாகராஜ சுவாமிகள் இயற்றிய ‘கலிகியுண்டேகதா’ எனும் கீரவாணி ராகத்தில் அமைத்த ஒரு புகழ் பெற்ற தெலுங்கு கிருதியைச் சங்கீத ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். அன்றையச் சங்கீத வகுப்பு கீரவாணி ராகத்தால் சுவாரசியமாக இருந்தது. ஆனால் என் மனதில் நிறைய குழப்பம்; கோபம். சங்கீத வகுப்பு தொடங்கும் முன் அம்மா என்னைத் திட்டியிருந்தார். என்னைத் திட்டினால் கூட…

வீட்டு நாற்காலி

“மொதல்ல பாப்பாவ எங்க அம்மா வீட்ல இருந்து கூட்டிட்டு வந்துருறேன். இந்த வீட்ல என்கிட்ட பேச ஆளே இல்ல” என்று அவள் என்னைப் பார்க்காமல் என் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஜாடை பேசினாள்.  நான் முகத்தை இறுக வைத்துக்கொண்டு அலமாரியில் தேடிக்கொண்டிருந்தேன். “ஏங்க ஏதாவது பேசுவீங்களா இல்ல இனி இப்படித்தானா?” என்று கேட்டவளைத் தாண்டி ஏதும் சொல்லாமல்…

ராம மந்திரம்

“இல்லி ஆஞ்சநேயர் கோயில் சாரி தேவாலயா எல்லிட்டு” அந்த ஆட்டோக்காரரிடம் கேட்டபோது என்னுடைய கன்னடம் நிச்சயம் அவரை எரிச்சல் படுத்தியிருக்கலாம். “பரவால்ல தமில்லையே கேளு. ஆஞ்சநேயர் அதோ ஓரமா நிக்காரு பாரு. வேணும்னா போய் கும்பிட்டுக்கோ. அடுத்த வாட்டி நீ கேட்டா அவரும் இங்க இருக்க மாட்டாரு” பேசிக் கொண்டே வாயில் கொஞ்சம் புகையிலையைத் திணித்துக்…

தீர்வை

“தீர்வை கணக்க நாங்க இங்க தீர்மானிக்கிறதே வஸ்தாரி வரிசை வச்சி தான்” என்றார் ஊர்க்காடு ஜமீன் கோட்டியப்பத் தேவர். அவர் கைப்பிடிக் கொண்ட மர நாற்காலியில் பெருமிதத்துடன் அமர்ந்திருந்தார். அவரது இடது கை மீசையை நீவிக் கொண்டிருக்க, வலது கை ஜமீனுக்கான கோலை தாங்கி நின்றது.   அவர் சொல்லி முடித்ததும் தாமஸ் துரை பின்னால்…

ஈயச் சுவடுகளில் இரண்டு நாள்

மலேசிய இந்தியர்களின் சஞ்சிக்கூலி வாழ்க்கை பெரும்பாலும் ரப்பர் தோட்டங்களில் புதைந்திருப்பதுபோல சீனர்களின் வாழ்க்கையைத் தேட ஈய லம்பங்கள்தான் பொருத்தமானவை. மலேசியத் தமிழ் இலக்கியங்களில் ரப்பர் காடுகளும் அதில் நிகழ்ந்த வாழ்வியல் சிக்கல்களும் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு ஈய லம்பங்கள் குறித்தோ அதில் சீனர்களின் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்தோ எளிய அறிமுகங்கள் கூட இல்லை என்றே…

ஃபஷ்றி கவிதைகள்

நினைவில் தோன்றும் அடர் வனங்களின்கிளை ஒன்றில்,அலைந்து தனித்த பறவையான பொழுதுஅதிகாலை திறந்துவிடும் ஒற்றை ஜன்னலினூடு பாயும் குளிர் பட்டு சிலிர்க்கிறது அந்நினைவுநினைவில் உருகி வழிந்து பெருக்கெடுக்கிறேன்சருகுகளையும் கூழாங் கற்களையும்அள்ளிச் சுமந்தோடுகிறேன்சிறு மீன்கள் கொஞ்சம் தோன்றி மறைகின்றனஎதிர்ப்படும் பாறைகளில் முட்டிமோதிசொற்கள் வெடித்துச் சிதறுகின்றனசிதறிய சொற்கள்,கிளைகளாகி எட்டுத் திக்கும்எல்லா மொழிகளிலும் பெயர்ந்து கொண்டிருக்கின்றனஅதில் ஒரு துளி மட்டும் உங்களை…

5 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு

கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’ எனும் சிறுகதை, தமிழிலும் ஆங்கிலம், ஜப்பானிய, மலாய், சீனம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது. மலேசியா, கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து,…

“முதன்முதல்ல எழுதுறவனுக்கு கச்சாப்பொருள் அவன் புழங்கின வாழ்க்கைதான்”

கடந்த ஏப்ரல் மாதம் அருண்மொழிநங்கையின் ‘மரபிசையும் காவிரியும்‘ கட்டுரையை படித்தபோது அந்தக்கட்டுரை ஒரு பெரிய நாவலின் தொடக்கம்போல எனக்குத் தோன்றியது. அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அன்று முதல், ஒவ்வொரு வாரமும், அவர் தொடங்கிய வலைத்தளத்தில் (https://arunmozhinangaij.wordpress.com/blog/) கட்டுரைகள் எழுத எழுத, தொடர்ந்து அவருடன் உரையாடலில் இருந்திருக்கிறேன். குட்டி அருணாவும் ஆலத்தூரும் அதன் மனிதர்களும்…

புதிய படைப்பாளிகள் சிறப்பிதழ்: ஒரு பார்வை

வல்லினம் ஜூன் 2007 முதல் மலேசியாவிலிருந்து  வெளிவரும் ஒரு முக்கியமான இலக்கிய இதழ். தொடக்கத்தில் அச்சிதழாக வரத் தொடங்கி 2009 முதல் இணைய இதழாகியுள்ளது. இதுவரை 51 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உருவானதைக் குறித்த ஒரு சுவாரஸ்யமான கட்டுரை இணைய இதழின் முகப்பில் உள்ளது. ஒரு இலக்கிய இதழைத் திட்டமிட்டு நடத்துவதில் உள்ள ஆர்வம்,…

பொன்னூல் வலைகள்

அருண்மொழி அவர்களை முதலில் நான் சந்தித்தது ஊட்டி முகாமில்தான். சந்தித்தேன் எனச் சொல்வதைவிட அவரது ஆளுமையை தொலைவில் நின்றபடி வியந்து ரசித்துக்கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. தனது கருத்துகளை அவர் வலுவாகப் பதிவு செய்யும் விதம் ஆச்சரியமாக இருந்தது. அதற்குப் பின்னால் அவருக்கு இருக்கும் வாசிப்புப் பின்புலத்தை முகாம் முடிவதற்குள்ளாகவே அறிந்துகொண்டேன். தொடர்ந்து கெடாவில் நடந்த ‘பேய்ச்சி’…

1992

1 ஜீவானந்தம் பஸ்ஸை விட்டு இறங்கிய போது அவனை கடந்து சென்ற ரிக் வண்டி அவனுக்கு அப்பாவை ஞாபகப்படுத்தியது. வீடு சென்றால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கும்போதே கசந்தது. பையை தோளில் போட்டுக்கொண்டு நடக்கும் போது ஏதேதோ கலவையான எண்ணங்கள். தங்கை; அப்பா; பணம்; தோட்டம்; கல்யாணம் என்று உதிரிக் காட்சிகள். இன்னும் ஒரு…

அந்தம்

நிலவின் வெம்மையில் அசையாமல் குளிர்காயும் இருட்டு யானையைப்போல நின்றிருந்தது அக்குன்று. அதன் அடிவாரம் மெழுகுதிரி, எண்ணெய் மற்றும் லாந்தர் விளக்குகளின் வெளிச்சத்தில் மஞ்சள் கரைகட்டியிருந்தது. அக்குன்றுக்கு அருகிலிருந்த நிலத்தில்தான் மனித எலும்புகளைச் சமீபத்தில் தோண்டி எடுத்திருந்தார்கள். அக்குன்றினை நோக்கிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் சின்னஞ்சிறு கொடிகள் ஊன்றப்பட்டிருந்தன. பாதையைவிட்டு விலகியிருந்த மரங்கள் தமக்கு அடியில் லாந்தர்…

அசைவும் பெருக்கும்

தவறான இடத்தை வந்தடைத்திருக்கிறோமோ என்ற ஐயம் மனத்தை நெருட, வெளிப்படும் சொற்கள் அதைக்காட்டிவிடுமோ என்ற தயக்கத்தில் அமைதியாக நின்றிருந்தான் கௌதம். “எத்தனை நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய்?” என்றார் எதிரிலிருந்தவர். “இரண்டு ஆண்டுகளாக… ஆனால் பயிற்சியை விட்டுவிட்டுத்தான் செய்ய முடிந்தது. சில சமயம் மூன்று மாதங்கள்கூட இடைவெளி எடுத்ததுண்டு. ஆனால் எவ்வளவு தொடர்ந்து செய்தும் பலன் என்று…