
மெழுகுடல் எம்.டி.சி பேருந்தின் அத்தனை அத்தனை கண்களும் என்னைத்தான் பார்க்கின்றன, துருவேறி தோலைக் கீறிட கரந்து காத்திருக்கும் சிறு கம்பி நுனிகளைப் போல. சிறு வயதில் அப்பா ஒரு முறை சொல்லியிருக்கிறார் “சிறு துரு உடலில் ஏறினால் கூட அது நீரி நீரி உயிரை எடுத்துவிடும்.” இப்போது நான் நூறு மடங்கு மென்மை கொண்டது போல…












