ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை மற்றும் சில நினைவுகள்

26.5.2017 – வெள்ளி முதலில்  நாஞ்சில் நாடன்தான் வந்திறங்கினார். அவருக்குக் கொச்சினிலிருந்து விமானம். ஜெயமோகனுக்குத் திருச்சிலிருந்து. அருண்மொழி அவர்கள் கடைசி நேரத்தில் வரமுடியாத சூழல். கண்களில் கிருமித்தொற்று.  நிச்சயம் மலேசிய விமான நிலையத்தில் தடுக்கப்பட்டுவிடுவார். ஜெயமோகன் வந்து சேரும் இடைவெளியில் நாஞ்சில் நாடனுக்கு ‘மீ கறி’ வாங்கிக்கொடுத்தேன். எனக்குப் பிடித்த சீன உணவு. அசலான சுவையில்…

இன்னொரு கிளை முளைக்கிறது

அது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவே தெரியும். அந்த மரம் எப்போதும் தனித்தே தெரியும். அதன் தடிமனாகட்டும், இலைகளாகட்டும், அதில் தொங்கும் பிணங்களாகட்டும். முதன் முதலாக தூக்கில் தொங்கியது ஒரு…

அறை

“பத்மா க்கா… நாந்தான் பேசறேன். எனக்கு ஒரு உதவி வேணும். நான் இப்ப அவசரமா வெளிய போக வேண்டிய சூழல். தங்கச்சிக்கு ஏதோ பிரச்சினைபோல.” “ஏம்மா? என்ன பிரச்சினை? ஏன் இங்கிருந்துகிட்டே ரகசியமா போன் செய்யற?” “உங்ககிட்ட நேரில் பேசிட்டு வெளியாவதை யாரும் பார்த்தா உங்களுத்தான் சிக்கல். மற்றதை வந்து சொல்றேன். எப்படியும் 2 மணி…

நீ ஏன் மற்ற விலங்குகளைச் செதுக்கக் கூடாது? (ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பு சிறுகதை)

ஆப்பிரிக்கர்களுக்கு மட்டுமான அந்த மருத்துவமனை நுலைவாயிலின் நேர் எதிர் அமர்ந்து அவன் மர சிற்பங்களை செதுக்கிக் கொண்டிருக்கிறான். வேலைபாடுகள் முடிந்த ஒரு சில சிற்பங்கள் மட்டும் அவனைச் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவன் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த ஓவியன் ஒருவனின் முழுமைப்பெற்ற ஓவியங்கள் மருத்துவமனை வேலிகள் நெடுக சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. அடர்த்தியான அச்சிறுநகரத்தில் கார்களின் பேரிரைச்சல்,…

எதைக் காவு கொடுப்பேன்

இலக்கியம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் மலேசிய நவீன இலக்கியம் ஐம்பது ஆண்டுகள் கடந்தும் தீவிரத்தன்மையை அடையாமல் இருப்பது எதனால் என்கிற கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு கோணத்தில் இக்கேள்வி அணுகப்படுவது வழக்கம். வாசகர் இல்லாமை, பொருளாதாரம், கல்வித் தகுதி, அரசியல் கெடுபிடிகள், வெகுஜன இலக்கியங்களின் ஆதிக்கம், போலி இலக்கியவாதிகளின் அபத்தங்கள், அரசாங்க இன…

வல்லினம் குறுநாவல் பட்டறை : என் அனுபவம்

நவீன இலக்கிய படைப்பாளிகளில் என்னைப் பிரமிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் திரு.ஜெயமோகன். அவரின் ‘மாடன் மோட்சம்’ சிறுகதையைப் படித்தபோது அவரது அசாத்திய கற்பனையைக் கண்டு வியந்தேன். அவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடனோடு சேர்ந்து இருநாள் பட்டறை நடத்தப்போகிறார் என அறிந்ததும் விரைந்து பதிந்து கொண்டேன். ஏற்கனவே கடந்த ஆண்டு வெறும் மூன்று மணி நேர சந்திப்பிலேயே…

நாரின் மணம் 1: காக்க காக்க கதிர்வேல் காக்க

ஏதோ ஒரு காரணத்தினால் என்னை பாலர் பள்ளியில் இணைக்கவில்லை.  வறுமை ஒரு காரணமாக இருக்கலாம். சித்திதான் (அம்மாவின் தங்கை) எனக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பார். இரவானால் அம்மா சாமி அறையில் என்னையும் அக்காவையும் அமரவைத்து தேவாரம், திருவாசகம் பாடுவார். ஏழு வயதிலெல்லாம் கந்தர் சஷ்டி கவசமும் சிவபுராணமும் எனக்கு நன்கு மனனம். கந்தர் சஷ்டி கவசம் என்னை…

புதிதாக ஒன்று

அம்மா மட்டுமல்ல, அம்மாவுடன் சென்ற நானும் அண்ணியும் பரிசோதனை முடிவு என்னவாக இருக்கும் என்பதில் நெஞ்சம் படபடக்க அந்தத் தனி அறையில் மருத்துவரின் முகத்தையே பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் அண்ணன் மகள் ரூபா முடிவு எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணித்திருந்தாலும், அப்படி ஒரு துரதிஷ்டமான நிலைமை தன் அப்பம்மாவுக்கு, வரக்…

ஆட்டம்

அது என் தலை தைப்பூசம். முதல் முறையாகச் சுங்கை பட்டாணியில் என் மனைவியின் குடும்பத்தோட தண்ணீர் பந்தலில் நின்றுக்கொண்டிருந்தேன். கல்யாணத்துக்கு முன் தைப்பூசம் வேறு மாதிரி இருக்கும். அப்போதெல்லாம் தைப்பூசம் என்றால் அது ஈப்போவில் தான். வருசா வருசம் தெரிந்த யாராவது ஒருவன் காவடியெடுப்பான். நானும் சிவாவும் முன் கூட்டியே ஒப்பந்தமாவோம். நாங்கள் இருவரும் பயங்கர…

பிரதி

அக்கா, ரமேஷ் அண்ணனோடு ஓடிப்போய் விட்டாள். நிரந்தரமான காலை ஷிப்ட் முடிந்து மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருப்பவள், ஆறரை மணிக்கு எஸ்டேட் ஜெனரேட்டர் ஸ்டார்ட் செய்யப்பட்டு கரண்டு வரும்வரை வீட்டுக்கு வராததை தம்பிதான் முதலில் கவனித்தான் போலிருக்கிறது . தீபாவளிக்கு அப்பாவுக்குக்கூட தெரியாமல் டவுன் முழுவதும் அலைந்து திரிந்து இறுதியாய் R. அப்பாராவ் சில்க் ஸ்டோரில்…

அடிவருடர்கள்

சிமெண்ட் மணல் நீர் கட்டிடத்தின் பிரகாசமான அலங்காரக் குவியல்களில் தாள்கள் சிலநூறு பரபரத்துக் கொண்டிருக்கின்றன இயந்திர விசிறிக் காற்றில் வரிகள் மாறாமல் சொற்கள் பிசகாமல் எழுத்துகள் தேயாமல் காயம்பட்ட நாரையின் அதிஅரூப வாதைமறந்த மகிழ் நொடிகளைப்போல் அவ்வப்போது அதனர்த்தங்கள் மாற்றப்பட்டதும் படுவதும் தற்காலிக ஏமாற்று தேவைக்கே பரபரத்திடா தாள்களும் ஒருசேர அடங்கிய அப்புத்தகங்களின் அட்டைப்பட தலைப்புகளூடாக…

சிங்கை ஆளுமைகள் பற்றிய ஆவணப்பட வெளியீடும் இலக்கியச் சொற்பொழிவும்

சிங்கப்பூரில் தமிழ்ச்சூழலில் இயங்கும் மூத்த எழுத்தாளர்கள் பி.கிருஷ்ணன், இராம கண்ணபிரான், மா.இளங்கண்ணன் ஆகியோரின் ஆவணப்படங்களைச் சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆதரவில் வல்லினம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படங்களின் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் நாஞ்சில் நாடன் சிறப்பு வருகை புரிகின்றனர். ஆவணப்பட வெளியீட்டுடன் பழந்தமிழ் மற்றும் நவீன இலக்கியச் சொற்பொழிவும் இடம்பெறும் இந்நிகழ்ச்சி…

டேபிள் டென்னிஸ்

கவிஞர் யூமா.வாசுகி மலேசியாவில் இருந்தபோது கோபி கிருஷ்ணா பற்றிய பேச்சு அடிப்பட்டது. அவரது முதலும் கடைசியுமான விரிவான நேர்காணல் ஒன்றை யூமா. வாசுகி முன்பு செய்திருந்தார். முக்கியமான நேர்காணல் அது. அதை வல்லினம் வாசகர்களுக்காக மீள் பிரசுரம் செய்வதில் மகிழ்கிறோம். – ஆர் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் ஏதோ மொழிபெயர்ப்பு வேலை தொடர்பாக சி.…

விருந்தினர் இலக்கியம்

மலேசியாவில் இலக்கியம் என்று சுட்டப்படுவது மரபு இலக்கியம், பக்தி இலக்கியம், கண்ணதாசன், வைரமுத்து, வாலி வரிசையில் பாடலாசிரியர்களை மையமாக கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள், நன்னெறி இலக்கியங்கள், நவீன இலக்கியம் போன்ற எல்லா தரப்பு இலக்கிய முயற்சிகளையும் சேர்த்ததுதான். வெகுஜன இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற அகவய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுபுறவயமாக இவை அனைத்துமே இலக்கியம் என்ற…

நடமாடும் பள்ளிக்கூடம்

13.5.2017- மலாயா பல்கலைக்கழகத்தில் வெளியீடுகாணும் ம.நவீனின் ‘மாணவர் சிறுகதை’ எனும் நூலுக்கு மேனாள் தேர்வு வாரிய அதிகாரி பி.எம்.மூர்த்தி அவர்கள் எழுதிய அணிந்துரை. யூ.பி.எஸ்.ஆர் பயிற்சிப்பட்டறையுடன் நடைபெறும் இந்த வெளியீட்டில் கலந்துகொள்ள மாணவர்களின் முன் பதிவு அவசியம். தொடர்புக்கு: தயாஜி 0164734794 / 0149005447 சிறுகதை என்கிற நவீன இலக்கியவடிவம் தமிழில் தோன்றிய நாள் முதலே…

குடியேறிகள்

நண்பர்களுடன் சீன டீயை குடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கடையை விட்டு வெளியேறினான். அவனது கால்கள் நிலைகொள்ளவில்லை. நடைபாதைகளில் கடந்து பழகிய கட்டடங்கள் அவனை நோக்கி சுழன்று வந்தன. அருகில், குப்பைக் குவியலை கிழறிக் கொண்டிருந்த காகமொன்று பேரிரைச்சலுடன் அதன் கூட்டை நோக்கி பறந்தது. அவன் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, கிருஷ்ணன் தனக்குள் பேசிக்கொண்டான். நாங்கள் ஒருவருக்கொருவர்…

மன்னர் மன்னனுக்கு ஒரு திறந்த மடல்.

மதிப்பிற்குறிய மன்னர் மன்னன் அவர்களுக்கு. தங்கள் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. தாங்கள் பல ஆசிரியர்களை உருவாக்கிய ஆசிரியர். அவ்வகையில் உங்களைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லனவற்றையே கூறியுள்ளனர். எனவே தாங்கள் சார்ந்த துறை மீதும் அதில் தாங்கள் காட்டிய நாட்டம் மீதும் எனக்கு மதிப்புண்டு. நீங்கள் ஒரு நல்லாசிரியர். அதேபோல தாங்கள் மலேசியத்தமிழ்…