அவநம்பிக்கையும் அறிவியல் கூறும் – 4

கடந்த தொடரில் பெண்ணும் அவநம்பிக்கையும் எப்படி ஒன்றோடு ஒன்று செர்த்து பிணைக்கப்படிருக்கின்றன என்பதை பற்றி பார்த்தோம். இத்தொடரும் பெண்ணைப் பற்றியதுதான். ஆனால் பெண்ணுக்கு மட்டுமே ஏற்படும் இயற்கை உபாதை எப்படி சில நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளது என்பதை பார்ப்போம். உலகை ஒரு பெண் தாய்மை அடைய வேண்டுமாயின் அவளுக்கு மாதவிடாய் கண்டிப்பாக எற்பட்டிருக்க வேண்டும். தாய்மையுடைய முதல்…

Turnitin: மிரட்டலும் மீட்பும்

கட்டற்ற தகவல் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத இணைப்புகளாக அறிவுத்திருட்டு (plagiarism) மற்றும் முறையான மேற்கோள் (proper citation) ஆகியவை திகழ்கின்றன. இவை இரண்டையும் முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும், கைவரப்பெறவும் உருவாக்கப்பட்ட மென்பொருளே Turnitin. ஆனால் ஆய்வாளர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக ஆய்வு மாணவர்களின் மத்தியில் Turnitin வெறுக்கத்தக்கதாக இருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு…

காக்கா முட்டை: கலையும் அரசியலும்

மிக அண்மையில் தமிழகம் சென்றிருந்தபோது ‘காக்கா முட்டை’ திரைப்படம் எடுத்தப் பகுதிக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டிருந்தேன். அழைத்துச்சென்றனர். ஒருவகையில் இந்தப்பயணம் எனக்கு முக்கியமானது. ஒரு கலைப்படைப்பு எதை மக்களுக்குக் காட்ட விளைகிறது என்பதும் அதன் தேர்வு எதுவாக இருக்கிறது என்பதும் இந்தப்பயணம் சன்னஞ்சன்னமாக உணர்த்தியது. கலை என்ற பெயரில் அதன் உன்னதங்களை…

ஆய்வுகள்

மனித இனத்தின் பண்பாடுகளும் நாகரீகங்களும் இதர அனைத்தும்கூட மனிதனுடைய தேடல் வெட்கையிலிருந்தே உருவாகியிருக்கின்றன. புதியதாக ஒன்றை உருவாக்குவதாயினும் அல்லது ஒன்றின் மெய்த்தன்மையை கண்டடைவதாயினும்; அறியாத ஒன்றிலிருந்து அறிந்த ஒன்றை நோக்கி நகர்த்துவதே அறிவின் தேடலாக அறியப்படுகின்றது. இதன் பரிணாம வளர்ச்சியாக ‘ஆய்வு’ எனும் சொல்லை கொள்ளலாம். அறிவைத் தேடுதலே ஆய்வாகின்றது. ஒன்றை அறிய அறிய அறியாமையின்…

இளம் பருவத்துத் தோழி – முகமது பஷீர்

பல காதல் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால், வைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்துத் தோழி (பால்ய கால சகி) நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை வேறு எந்த நாவலும் ஏற்படுத்தவில்லை. நாவலில், காதல், அன்பு, ஏக்கம், கவலை, வறுமை என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆனால் நெஞ்சைப் பிழியும் வலியும், துயரமும், வறுமையும் கதை முழுவதும் இருக்கிறது. மஜித்,…

இரை

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது இவன் அப்படித்தான் கிடக்கிறான். ஆனால் இவனைப் பார்த்தால் அந்த பரவசம் தோன்றவில்லை எனக்கு. சவரம் செய்யப்படாத தாடிமீசைகள்…

அலிசா

தண்ணீருக்கு அடியிலிருந்த மண்ணை இப்போது அலிசாவால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்த மண்ணுக்குள் மாட்டிக்கொண்டிருந்த பல வடிவங்களிலான கருங் கற்களையும்; ஓடுகள் – சிற்பிகளையும் அவற்றை மறைத்து வளர்ந்திருந்த தாவரங்களையும் அலிசா மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக் குளத்துத் தண்ணீரைப் போலவே தாத்தாவும் அசைவற்று இருந்தார். இடது முழங்காலில் முட்டுக் கொடுத்து வைத்திருந்த இடது கையும்…

அண்மைக்காலச் சிறுகதைகள்

மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும்.…

பேனாவை முறிக்கும் அதிகார கரங்கள்

படைப்புலகம் கலை நயமும் அழகியலும் சார்ந்தது என்றாலும் அது விட்டுச் செல்லும் தாக்கமானது அதிகார வர்க்கத்திற்கு எப்போதும் அச்சுறுத்தல் தருவதாகவே இருக்கிறது. தீவிர நிகழ்த்துக் கலைகளாக இருந்தாலும் இலக்கியப் படைப்பாக இருந்தாலும் அது அதிகார வர்க்கத்தின் பொதுபுத்தி சார்ந்த போக்குகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் சவால் விடுவதாகவும் மாற்றுச் சிந்தனைகளை முன்னெடுப்பதாகவும் இருப்பதால்தான் அரசுகள் படைப்பாளர்கள் மேல் அவ்வப்போது…

சாதி மயிர்

“ஆசிரியருக்கும் முடிவெட்டறவருக்கும் என்ன வித்தியாசம்..?” “ஆசிரியர் பிழை திருத்துவார் முடிவெட்டறவர் முடி திருத்துவார்..” சமீபத்தில் சில மாணவர்களைக் கடக்கும் போது அவர்கள் பேசியது எனக்கு சிரிப்பை வரவைத்தது . இதனை கவனித்த இரண்டு மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இடத்தைவிட்டு மெல்ல மறைந்தார்கள். தற்போது பணி நிமித்தம் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.…

இல்லாத திசைகள் 5 – முதல் முழு சம்பளம்

பாடாவதி ஓவியரிடமிருந்து தப்பித்து வார இதழ் ஆசிரியரின் தம்பி நடத்திவந்த நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தேன். மறக்க முடியாத வருடங்கள் அவை. அங்கு வேலைக்குச் சேர்ந்து முதல் மாத சம்பளத்தை வாங்கிய நாள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. ஒரு வெள்ளைக் கவரில் சம்பள பணத்தைப் போட்டு கொடுத்தார்கள். கவரின் மேல் என் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கவரைக்…

ஓர் மௌன அழைப்பு

மூன்றாவது மாடியிலிருக்கும் என் பணிமனையின் அகண்ட சாளரக்கண்ணாடி  வழியாகத் தென்படும் ஒரு மரத்தின் முகடு உச்சி முகரும் உயரத்தில் தலைகாட்டி நின்றிருக்கும் வாஞ்சையோடு அரூபக் கரங்கள் அந்தரங்கமாயத்  தீண்ட நிரவமாய் அது குலுங்கிச் சிரிக்கும் விஸ்தாரமாய்க் கவைத்த கொம்புகள் அந்தரத்தில் எம்பிக் குதிக்கையில் பதின்மக் கிளைகளில் ஊஞ்சலாடும் பால்ய நினைவுகள் சின்னஞ்சிறு இலைகள்மீது ஒருதுளி வெயில் ஒளிரும் மாய விரல்கள்…

பிறப்பற்ற பிறப்பு

சுகத்திற்கு மட்டுமே கட்டில்கள் ஒதுக்கப்பட்ட பிறகு தூங்கம் தூக்கு கயிறுகளில் தொங்கிக்கொண்டிருக்கின்றன வயிற்றை நிறைத்துக் கொண்டது போல் மனத்தை  நிறைத்துக் கொள்ள வழியில்லை அன்பு ததும்பிய நான்கறையும் துருபிடிக்கத் தொடங்கிவிட்டன இப்போதுதான் துடிக்கிறது என்னுள் இன்னொரு இருதயம் . கண்ணீரை நிரப்பிக் கொண்டு சிரித்து மழுப்புகிறேன் சிரிப்பொலியின் சீற்றத்தில் நானே சாகிறேன் அசைவுகளில் நான் அசைவற்று…