
B. Jeyamohan (b. 1962), based in Nagercoil, the southernmost city of the Indian peninsula, is a pre-eminent writer in modern Tamil literature. He is one of the most prolific writers in India today, as evidenced by both the volume and…
இவ்வாண்டு சிங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் ஃபாலின் ஃபானிடமிருந்து ஒரு புலனச்செய்தி வந்தது. இவ்வருடம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் இரு தமிழ் அமர்வுகள் இணைக்கப்பட போவதாகவும் அதற்கு நான் பொறுப்பேற்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். இரு அமர்வுகளையும் தமிழிலேயே நடத்தலாம் என்ற அவர் குறிப்பு உடனடியாக என்னைச் சம்மதிக்க வைத்தது. பி. கிருஷ்ணனின் வருகை அந்த…
இவ்வாண்டு ஜனவரி 13, ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழ் விக்கி குறித்த தனது எண்ணங்களைச் சொல்லி அதில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார். அது சுருக்கமான கடிதம்தான். எப்போதுமே ஆசிரியர்கள் தம் மாணவர்களை நோக்கி குறைவாகவே பேசக்கூடியவர்களாக உள்ளனர். குறைந்த சொற்களின் ஊடே தன் மாணவன் தமது உள்ளக்கிடக்கை புரிந்துகொள்வான் என ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.…
(தமிழ் மாறன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை ) மெய்யான கற்றல் என்பது அது வரையில் கற்று வந்த தடத்தைக் கேள்வியெழுப்பச் செய்து, அதை மறுத்தும் விவாதித்தும் வந்தடையும் ஒரு புள்ளி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதலாண்டில் விரிவுரைஞர் தமிழ்மாறனின் வகுப்புகளில் அத்தகைய…
(கோ. சாமிநாதன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) கற்றலென்பது கற்றலால் மட்டுமே நிரம்பும் தருணம் அல்ல. கற்றலுக்கு அப்பால் அகம் சார்ந்த, உணர்வு சார்ந்த சூழலைக் கட்டியெழுப்பி அதனுடன் இயைந்து நீள்வது கற்றலின் ஆயுள் நீளம் என சாமிநாதன் அவர்களின் வகுப்புகளின் வழி…
(முனைவர் முனீஸ்வரன் குமார் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) 2011-ஆம் ஆண்டுத் தொடங்கி சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரிந்து வரும் முனைவர் முனீஸ்வரன் குமார் 1984-ஆம் ஆண்டில் கிள்ளான் நகரத்தில் பிறந்து, பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில்…
(முனைவர் கிங்ஸ்டன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) வாழ்க்கையில் சிலரை நாம் சந்திக்கும் தருணங்கள் நொடிப்பொழுதில் நடந்துவிடக்கூடியவை. எதிர்பாராமல் நடக்கும் சந்திப்புகள் நமது வாழ்க்கைக்குச் செறிவான பாதை அமைக்குமென்றால் அவற்றைத் தரிசனங்கள் என்றே குறிப்பிடுதல் தகும். மலேசியத் தமிழ் நாட்டுப்புறவியல் ஆராயும் நோக்கத்தோடு…
இயற்கையைச் சார்ந்து மட்டுமே வாழ்வை அமைத்துக் கொள்வதென்பது மாதிரியான கருத்துருவாக்கங்களைச் சமூக ஊடகத் தளத்தில் அதிகமாகக் காண முடிகிறது. விலங்கு ஊன்களைத் தவிர்ப்பது, தாவரங்களிலிருந்து பெறப்பட்ட உணவுகள், உடைகளை மட்டுமே பயன்படுத்துதல், தனிப்பயணம் மேற்கொள்ளுதல் என இயற்கையுடன் ஒன்றித்து வாழ முற்படும் வகையிலான முயற்சிகளை வாழ்க்கை முறையாகவே முன்வைக்கும் பதிவுகளுக்குப் பெருமளவிலான ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. அந்த…
கடந்த ஆண்டு மலேசியாவில் நடக்கும் அனைத்துலக இலக்கிய சங்கமமான ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் (George Town Literary Festival) கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பினாங்கில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுடைமைப் பகுதியான ஜார்ஜ் டவுனில், ஆண்டுதோறும் நவம்பர் வார இறுதியில் நடத்தப்படும் இவ்விழா குறித்துத் தமிழ்ச் சூழலில் அறிமுகம் குறைவுதான். அதற்குத் தமிழ்ச்…
நூற்றாண்டு வரலாறு கொண்ட நவீனத்தமிழிலக்கிய வரலாற்றில் எண்ணிக்கையாலும் தரத்தாலும் மேம்பட்ட பல படைப்புகளின் வாயிலாக மறுக்கமுடியாத இடத்தைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். எழுத்தாளர் ஜெயமோகனின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாக அவரின் புனைவுலகம், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இந்திய ஞான மரபு கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள் ஆகியவற்றுடன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் வாயிலாக முன்னெடுத்து வரும் இலக்கிய,…
மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த…
நடைமுறையில் இருக்கும் ஒன்றின் மீது பொதுவாகப் பலருக்கும் விமர்சனங்கள், குறைகள் மாற்று கருத்துகள் இருப்பது மிக இயல்பானது. அரசியல் முதல் சமூக அமைப்பின் பல்வேறு செயல்பாடுகள் மீதும் இதே நிலைதான் உள்ளது. ஆனால் பெருவாரியாகக் குறை காண்பவர் அல்லது விமர்சனம் வைப்பவர் அந்தச் சூழலை மாற்றும் திட்டங்களில் இறங்குவதில்லை. அப்படி இறங்கி போராடி மொத்த அமைப்பையும்…
விஸ்வநாதன் என்ற பெயர் கலையுலகில் அறியப்பட்டது மிகக்குறைவுதான். எழுத்துலகில் அதனிலும் அரிது. மேடையிலும் தொலைக்காட்சியிலும் ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளவர். மேடை நாடகங்களில் இயக்குனராகவும் துணை இயக்குனராகவும் பங்காற்றியவர். ஆனால் எதிலும் எப்போதும் ஒதுங்கி நிற்பவர். தன்னை முனைப்புடன் முன்வைக்கத் தெரியாதவர். முன்வைப்பதை ஒட்டிய அரசியலையும் அறியாதவர் எனலாம். விஸ்வநாதனை முதலில் ஓர் ஆசிரியராகவே அறிவேன். இவருடன்…
சிங்கப்பூரில் கலை, இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அரசாங்கம் அளிக்கும் ஆதரவை மிகச் சரியான முறையில் பயன்படுத்தி, பெருங்காரியங்களைச் செய்துவருபவர் பேராசிரியர் அருண் மகிழ்நன். வளங்கள் எங்கும் இருக்கலாம். அதனை நிறைவாக ஒழுங்கமைக்க அறிவாற்றல் அவசியமாக உள்ளது. அவ்வகையில், தமிழ் இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகளில் தனியாத ஆர்வம் கொண்ட இவரின் திட்டங்கள், சிங்கப்பூர் தமிழ்ச்சூழலில் நீண்ட காலம்…