Category: கட்டுரை

இப்போது உயிரோடிருக்கிறேன்: மரணம் துரத்தும் வாழ்க்கையின் வலி

வாழ்வது என்பது என்ன என்று யோசித்தால், அது சாவில் இருந்து தப்பிக்கும் கலை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. சாவு என்பது மூப்பின் காரணமாக மட்டுமே வருவதில்லை. அது வாழ்வின் ரகசியம் போல மறைந்திருந்து ஒரு நாள் வெளிப்படுகின்றது.  மூப்பில் மரணம் என்பது வாழ்க்கையின் பிடி தளர்ந்து,  ஒரு விடைபெருதல் போல நிகழ்கின்றது. மனம் அதை ஏற்றுக்…

வௌவால் தேசம்: வீழ்ச்சியின் வரைவியல்

1 நம் வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட்டது /எழுதப்பட்டது 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. ஜெ.ஹெக்.நெல்சனின் மதுரை கண்ட்ரி மானுவல் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் ஒரு தொடக்க சாதனை. ஜெ.ஹெக். நெல்சனில் இருந்து ஒரு வரலாற்று எழுத்து நிரை எழுந்தது. ராபர்ட் கால்டுவெல், டபிள்யூ. ப்ரான்சிஸ், ஹெக்.ஆர். பேட் என ஜெ.ஹெக். நெல்சன் வழி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பின்…

திரிபுகளின் இருள்வழியே – சிகண்டி

நவீன இலக்கியத்தின் செயல்முறையை இப்படியும் வரையறுக்கலாம். எது ‘வெளியே’ சொல்லப்படாததோ, எது ‘வெளியே’ சொல்லக்கூடாததோ, எது ‘வெளியே’ சொல்ல முடியாததோ அதைச் சொல்ல வந்ததே நவீன இலக்கியம்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ராமாயண மகாபாரத காலம் துவங்கி பக்தி காலம் வரை, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரம் தொட்டு கம்ப ராமாயணம், பக்தி காலம் தொடர்ந்து…

நட்சத்திரவாசிகள்: நுண் அதிகார மையங்கள்

வரலாறு முழுவதும் மனிதர்கள் தங்கள் இயல்பைக் கல்வி, தொழில், அரசியல் போன்ற அமைப்புகளின் ஒழுங்குக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்து வந்திருக்கின்றது. அவ்வாறு குறிப்பிட்ட ஒழுங்கு முறைக்குள் பழகும்போது மனித இயல்புகள் அடையும் மாற்றங்களை இலக்கியங்கள் நிகர் வாழ்க்கையனுபவமாகப் பதிவு செய்து வந்திருக்கின்றன. கார்த்திக் பாலசுப்ரமணியனின் நட்சத்திரவாசிகள் நாவலும் ஒருவகையில் தொழில் சார்ந்த அமைப்பின்…

அல் கொஸாமா: அறியாத நிலப்பயணம்

மனித குலத்தின் தோற்றம் குறித்த பல அபுனைவுக் கட்டுரைகள் உண்டு. ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வது தொடங்கி அவ்வழி இனக்குழு மனப்பான்மை உருவாகிறது. பின் அது எவ்வாறு தற்காலத்தில் பெரிய பிரிவினைகளாக வளர்ந்து விட்டது என்பதும் மறுபக்கம் சிறு சிறு குழுக்கள் எவ்வாறு இணைந்து பெரு மதங்களாக ஆகின்றன என்பதும் தொடர்ச்சியாக விளக்கப்பட்டும் ஆராயப்பட்டும் வருகிறது.…

குமரித்துறைவி: மகளாகிய அம்மையும் அப்பனாகிய மகனும் 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘குமரித்துறைவி’ குறுநாவல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி, அவரது ஐம்பத்தொன்பதாவது பிறந்தநாள் அன்று அவரது இணையதளத்தில் வெளியானது. கிட்டத்தட்ட நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட இக்குறுநாவலை வெளியான அன்றே வாசித்து முடித்தேன். வாசிக்கையில் மறைந்த என் அப்பாவின் நினைவும் எனது திருமணக்காட்சிகளும் வந்து, வந்து போயின. வாசிப்பின் சில…

சுண்ணாம்பு அரிசி: பெருமதியாகாத தகவல்களின் கலை

பிரிதோர் காலத்தின் பதிவுகளாக, ஒரு சமூகத்தின் ஆழ்மன ரணங்களாக துயரோலங்களின் எச்சங்களாக இப்படி பல்வேறு படிமங்களால் படைப்பிலக்கியத்தின் தளம் ஆழம் செல்கிறது. காலம் விழுங்கிவிட்ட பெறும் வரலாற்றை, பெறும் சம்பவங்களை, பண்டைய வாழ்வை, விழுமியங்களைப் புனைவுகள் மீட்டெடுக்கின்றன. நமக்கு மீண்டும் நினைவுப்படுத்துகின்றன. எனவே புனவுகளைக் காலத்தின் பிரதிகள் என வகைப்படுத்தலாம். ஒரு வாழ்வைத் தரிசிக்க முடிகின்ற…

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்: ஒரு சாவுக்குப் பின்பான கதை

‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ மயிலன் ஜி சின்னப்பனின் முதல் நாவல். மருத்துவ துறையை பின்புலமாக கொண்ட நாவல். ஆசிரியரும் மருத்துவ துறையை சேர்ந்ததால் அதன் நம்பகத்தன்மைக்காக (Authenticity) கூடுதல் கவனம் பெறுகிறது. இது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு 200 பக்கங்களில் எழுதப்பட்ட சிறிய நாவல். இதன் வடிவம் ஒரு டைரி குறிப்பு போல உள்ளது. ஒரு குறிப்பிட்ட…

சு. கமலா சிறுகதைகள்: விதைகளை மட்டுமே உற்பத்திச் செய்யும் பூ மரங்கள்

மலேசியச் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து விமர்சனக் கட்டுரைகள் எழுதும் முன், அக்கதைகள் குறித்த அபிப்பிராயங்கள் எதன் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன என்பதை விளக்க வேண்டியுள்ளது. இங்கு ரசனை விமர்சனத்திற்கான மரபு என ஒன்று வலுவாக உருவாகாத சூழலில் இவ்வகை விளக்கங்கள் அவசியமாகின்றன. மலேசியாவைப் பொறுத்தவரை கல்வியாளர்களின் விமர்சனங்கள் வழியாகவே இலக்கியத்தின் தரம் நெடுங்காலமாக அளவிடப்படுகிறது. நவீன இலக்கிய…

இலைகளில் ஒளிந்துள்ள எழுத்து

அபிராமி கணேசனுக்கு  இளம் எழுத்தாளருக்கான வல்லினம் விருது கிடைத்துள்ளது. என்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத நிலையில்   ‘புருனோ மான்சர்- காட்டில் கரைந்த காந்தியம்’ என்ற கட்டுரையின் வழியேதான் அவரை மனதில் மீட்டெடுக்க முடிந்தது.  இளம் எழுத்தாளர் விருதை வழங்க அபிராமி கணேசனைத் தேர்வு செய்ததன் காரணத்தையும் அதன் வழி அந்த விருதின் தரத்தையும் அறியும்…

சரவாக் பழங்குடியின மக்கள் (பகுதி 2)

சரவாக் பழங்குடிகள் பல்வேறு குறுங்குழுக்களாக வாழ்கிறார்கள். அவர்களிடையே பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அதிகமாக உள்ளதைக் காண முடிகிறது. இருப்பினும், சரவாக் பழங்குடியின் சிறுபான்மை குழு மக்களின் முக்கியமாக  கவனிக்கப்பட வேண்டிய வரலாறு, பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்ற தகவல்கள் மிகவும் அரிதாகவே ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. வாய்மொழி பதிவுகளாகவும் செவிவழிச் செய்திகளாகவும் கிடைக்கும் சில தகவல்களையும் அடிப்படையாகக்…

மலேசிய எழுத்தாளருக்கு எபிகிராம் புனைவு நூல்களின் விருது

விருதுகள் இலக்கியவாதிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்குவிப்பு. குறிப்பாக ஒரு புத்தகத்திற்கு விருது கிடைக்கும்போது அந்தப் புத்தகம் பரவலான வாசிப்புக்குச் செல்கிறது. எல்லா விருதுகளும் அத்தகைய முக்கியத்துவம் கொண்டிருப்பதில்லை. ஒரு விருது தனக்கான முக்கியத்துவத்தைத் தனது தொடர் தேர்வுகளின் மூலமே பெற்றுவிடுகிறது. அவ்வகையில் எபிகிராம் புனைவு நூலுக்கான பரிசும்(Epigram Books Fiction Prize),  தென்கிழக்காசியாவில் வழங்கப்படும் மிக…

நாவல் முகாம்: புதிய பங்கேற்பாளர்களின் அனுபவம்

கடந்த 26/2/2022-ஆம் திகதி தொடங்கி 27/2/2022-ஆம் திகதி வரை வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட நாவல் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இதுவே நான் பங்கேற்கும் முதல் நாவல் முகாமாகும். அதிகம் சிறுகதைகள், கவிதைகளைச் சார்ந்த பட்டறைகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்த எனக்கு, நாவலைக் குறித்து நடத்தப்பட்ட இந்த முகாம் முற்றிலும் பல புதிய அனுபவத்தையே தந்தது. ‘நாவல்…

வல்லினம் நாவல் முகாம்: இரு வாசகர்களின் பகிர்வுகள்

வல்லினம் குழுவினரால் நாவல் முகாம் 26 முதல் 27 வரை பிப்ரவரி மாதத்தில் இரண்டு நாள்கள் தைப்பிங் ‘கிரேண்ட் பெரொன்’ தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி பல தடைகளைத் தாண்டி, பாதுகாப்பு அம்சங்களுடன் இவ்வாண்டு குறிப்பிட்ட திகதிலும் நேரத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாவல் முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே ஐந்து நாவல்களைப் படித்து வர…

மா. ஜானகிராமன்: வரலாற்றை தேக்கி நிற்கும் சாமானியனின் அகம்

மலேசியத் தமிழர்களும் வரலாறும் தமிழர்கள் சிறுபான்மை மக்களாக வாழும் மலேசியா போன்ற நாடுகளில் இனத்தின் வரலாறு எப்போதும் புத்துணர்ச்சிமிக்க பேசுபொருளாக இருக்கிறது. இந்நாட்டின் மண்ணோடும் அரசியலோடும் தங்களைப் பிணைத்துக் கொள்ள வரலாற்றுச் சுவடுகளை நோக்கிய தேடலை பலர் முன்னெடுக்கின்றனர். தேசிய வரலாற்று வரையறைக்குள் வராத பல முக்கிய குறிப்புகளையும் உண்மைகளையும் தொகுத்துக் கொள்வதன் வழி தங்களின்…