
“என்ன டே, புது கெராமவாசி பொறச்சேரி பக்கமா வந்து நிக்க,” என்றார் மருத்துவரான முதுக்கடசர். அவர் பேச்சில் சிறிது ஏளனமும், காட்டமும் தெரிந்தது. அதையும் மீறி அவர் உடைந்து அழுது விடுவார் என்பதை அவர் உடல் மொழி உணர்த்தியது. மாரனின் கழு உறுதியானதால், புதுக்கிராம தெருவினுள் நுழைய எத்தனித்தபோது மருத்துவருக்கு நூறு சவுக்கடிகளே பரிசாகக் கிடைத்தது.…














