Category: சிறுகதை

வலசைப்பறவைக்குத் திசைகள் கிடையாது

செந்நிறமாக எங்களைச்சுற்றி ஒளி விழுந்துக்கொண்டிருந்தது. செந்நிறமான மண். வானெங்கும் கோடுகோடாக செந்தீற்றல்கள். கடல் தீயாக அலைகொண்டிருந்தது. ஆலிஸின் கண்ணை என் மீது உணர்ந்தேன். அவள் முகமும் தீக்கொண்டதுபோல் சிவந்திருந்தது. கன்னங்கள் பழுத்திருந்தன. தோளில் பருக்கள் நட்சத்திரக்கோவையாக நடனமிட்டன. அவள் என் பக்கமாக திரும்பிப் புன்னகைத்தாள். “மின், இந்த ஒளியில் ஒரு நொடிக்கு, நீ உன் அப்பாவைப்போலவே…

அடித்தூர்

மேற்பற்கள் விழுந்திருந்ததால் மீசைப்பகுதி சற்றே உட்புறம் வளைந்து அடிப்பற்கள் மட்டுமே வாயைத் துருத்தியிருக்க ஆவேசமாய் முனகிக் கொண்டிருந்தார் தாத்தா. இந்த மூன்று நாட்களில் மொத்தமாக சேர்த்துவைத்தால் நான்கு வரி பேசியிருப்பார். அவ்வப்போது ஆள்காட்டி விரலையும் மோதிரவிரலையும் வாயில் அழுத்தி வைத்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தார். புகையிலைப் போடுவதை நிறுத்தியப்பின்னும் அவரது கடைவாயில் எச்சில் ஊறிக் கொண்டே…

கர்ப்பப்பை

“இது என்ன?” அமலா சுட்டிய திசையில் மிருதுவான உடலைக் கொண்ட சிலிக்கன் பொம்மை கிடையாக வீழ்ந்திருந்தது. செயற்கையான பிளாஸ்டிக் கேசம் அலையாக கலைந்து அதன் முகத்தை மறைத்தது. அமலாவை நோக்க இயலாமல் என் கண்கள் வளைந்து சரிந்தன. எனக்குள் அவமானத்தை மீறி பயமும் கிளர்ந்ததை உணர்ந்து துணுக்குற்றேன். “இது செக்ஸ் டோல் தானே?” என் நாடியைத்…

கறை நதி

படிப்பதற்கு அமைதியான சூழலுடன் இனிமையான அயலவர்களும் கொண்ட தங்குமிடமொன்று அமையவேண்டும் என்று தேடித்திரிந்தபோது மெல்பேர்ன் நகரிலிருந்து நாற்பத்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த வீட்டு உரிமையாளர்களின் அறிமுகம் கிடைத்தது. நன்கு உயர்ந்து படர்ந்து வளர்ந்த யூக்கலிப்டஸ் மரங்கள் தெருவெங்கும் மொய்த்து கிடக்கும் ரம்யமான பிரதேசத்தில் நான்கு அறைகள்கொண்ட அந்த இத்தாலிய முதியவர்களின் வீடு அமைந்திருந்தது. பிள்ளைகள்…

வெம்மை

1 ரத்தம் வழியும் அவனது பெரிய உடலை குந்தி இறுக்கமாகப் பற்றி இருந்தாள். கர்ணன் இறப்பதற்கு இன்னும் நேரமிருந்தது. கைகளை விரித்து வான்நோக்கிக் கிடந்தான். மெல்லிய மழைத்துளிகள் அவன் முகத்தை நனைத்தன. கைகளை உயர்த்த முடியாததால் மழைத்துளிகள் விழும் போதெல்லாம் கண்களை சிமிட்டிக் கொண்டான். அவ்வப்போது தாகத்துக்காக நாக்கை நீட்டினான். அவன் மார்பில் ஒரு சிறிய…

கழுகு

“மொதல்ல அத நுப்பாட்டு!” நான் அமிர்தலிங்க ஐயாவை வியப்புடன் பார்த்தேன். ஆள்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்து ‘நிறுத்து’ என்பதை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணிற புருவங்கள் முறுக்கி முறைத்தன. நான் குசினிக்குச் சென்றிருந்த காயத்திரியைத் தேடினேன். “அங்க என்னா தேடுற… நுப்பாட்டுனு சொன்னா நுப்பாட்டு” என அழுத்தமாகக் கூறவும் படப்பிடிப்புக்குப் பொருத்தப்பட்ட விளக்கை முதலில் அணைத்தேன்.…

தெரியாதவை (சிங்கள மொழிப்பெயர்ப்புச் சிறுகதை)

சித்தாண்டி I “நாங்க திலீபவுக்கு சித்தாண்டியில கல்யாணம் முடிச்சுக் கொடுப்பமே.” “ஏனது?” “இஞ்ச பார்.  உன்னப் போலில்ல… சித்தாண்டிலதான் நல்ல வடிவான பொம்பளப்புள்ளகளக் கண்டிருக்குறன் நான்.” “அம்மா… இங்க பாருங்க… அப்பா சொல்றது கேட்குதா? சித்தாண்டித் திருவிழாக்களுக்கு மட்டும் அப்பாவை அனுப்பிட வேணாம்.” அப்பா திண்ணையில் அமர்ந்திருந்து வெற்றிலை பாக்கு இடிக்கும்போதுதான் இவ்வாறு என்னைக் கிண்டல்…

எம். பி. குடு குடு (மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதை )

எம். பி. குடுகுடு மூன்று தடவை கொட்டாவி விட்டுக் கொண்டே ஆக்ரோஷமாக நெளிந்தார். அவரது முரட்டு கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி கொட்டாவி விட்டபோது, காற்றில் மெதுவாக அசைந்த தொலைபேசி கம்பிகளில் உல்லாசமாக குதித்துக்கொண்டிருந்த சில சிட்டுக்குருவிகள் பயந்தன. அந்தப் பறவைகள், அப்பாராளுமன்ற உறுப்பினர்  தங்கியிருந்த விடுதிக்கு எதிரில் உள்ள விடுதியின் கூரைக்கு விருட்டென பறப்பதைப்…

கடவுளின் மலம்

அப்பா வரும் நேரம் ஆயிற்று. அவர் வரும்போது படிப்பதுபோல பாவனை செய்தே ஆகவேண்டும். எனக்குத் தெரிந்த கலைகளில் முக்கியமானது படிப்பதுபோல பாவனை செய்வதுதான். ஈர வேட்டி சரசரவென தொடைகளில் உரச தோளில் துண்டும் இரு கைகளையும் மறைக்கும் விதமாக கை முழுக்க ஒற்றைச் செம்பருத்திப் பூக்களை முத்தாப்பிள்ளை தோட்டத்தில் பறித்துக்கொண்டு நடந்து வரும் நேரம் இது. நாள்…

சிறகு

யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. குளிர்காற்று பரவி இருந்த அறையில் மல்லிகை மணத்துடன் ஒருவித திரவியத்தின் வாசமும் நிரம்பி இருந்தது. குமட்டியது. மல்லிகையை வெளியே வீசிவிட்டு வரலாமா என யோசித்தாள். உள்ளே நுழைந்தபோது இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் இல்லாமல் கால் வழுவிழந்திருந்தது. யாராவது பார்த்துவிட்டால்? இந்த எண்ணம்…

ரப்பியா கயிறு

யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. வாளியில் தண்ணீர் மொண்டு ஒரு தடவை ஊற்றிவிட்டு, விளக்கமாறைக் கடைசியாய் இரண்டு தடவை தரையில் அடித்து நீரை வழித்து விட்டு செல்வி நிமிரவும், அவர்கள் வரவும் சரியாயிருந்தது. “சுடுகாட்டுக்குப் போனவங்க வந்துட்டாங்க”, தெண்டிற்குக் கீழ் அமர்ந்திருந்த சுப்பையாதான் சட்டென எழுந்து தகவல் சொன்னார்.…

பதில்

காற்றே சற்று கனத்துடனும் கொஞ்சம் சோம்பலாகவும் இருக்கும் அகாலமான நேரத்தில் எழுந்திருப்பதும் இங்கு நிற்பதும் பழகிப் போய் சில வருடங்கள் ஆகிவிட்டன.  வாய் பிளந்து காத்துக் கொண்டிருந்த சுரங்கக் குழியின் தலை இந்த நிறுத்தத்தில்தான் இருக்கிறது. சட்டென்று திறந்த கதவுகளில் பலர் முண்டியடித்து ஏறி உட்கார்ந்தனர். உள்ளிருந்து சிலர் வெகு அவசரமாக நடந்தனர். சிலர் இடமில்லாமல் …

அழகியும் அப்பா சொன்ன கதையும்

யாழ் பதிப்பகம் ஆசிரியர்களுக்காக நடத்திய சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று அப்பா சொல்லிக் கொண்டிருந்த கதைக்கு ‘ஊங்’ கொட்டியவாறே கீழே சிதறிக் கிடந்த விளையாட்டுப் பொருள்களுக்கு உயிர் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள் அழகி. அவளின் கைகால்கள் தன்னைச் சுற்றி இருந்த விளையாட்டுப் பொருள்களில் பரபரத்துக் கொண்டிருந்தாலும் அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் கதையைக் காதுகள் மட்டும்…

வைகாசி

வைகாசி பாட்டி என்னமோ  சாதிப் பார்ப்பவள்தான். ஆயினும் எல்லோரிடமும் சகசமாய் பழகும் குணம் அவளுக்கு இருந்தது. யார் வீட்டுக்குப்  போனாலும் சாப்பிடவோ குடிக்கவோ அவளுக்கு மனத்தடை இருந்ததில்லை. அவளைப் பொருத்தவரை திருமணத்திற்கு மட்டும்தான்  சாதிப் பார்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடிருந்தாள். தான் என்ன சாதி என்று தெரிந்த அவளுக்கு  ‘சாதி’ என்றால் என்னவென்று தெரியாது.…

புரியவில்லை என்பதுதான் புரிந்தது

மகிழுந்தில் அமர்ந்தவாறு பள்ளி மாணவர்கள் நுழைவாயிலில் நுழைவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். தினமும் பார்ப்பதுதான். எப்போதும் பள்ளிக்கு வருகின்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை வகுப்பறை வாசல் வரை கொண்டு வந்து விட்டுச் செல்பவர்களும் உண்டு. பள்ளிக்குத் தனித்து வருகின்ற மாணவர்களும் உண்டு. தன் தோழன் அவன் தாய் தந்தையோடு வருவதைப் பார்க்கும்போது அவன் பார்வையில் ஓர் ஏக்கம்…