Category: சிறுகதை

திருமுகம்

யாருமே இல்லாத அறையில் தன்னை யாரோ அழைத்தது போல் இருந்தது, அவனுக்கு. க்வாரண்டைனால் முடங்கிப் போய்விட்ட அருங்காட்சியகம் என்பதால் அந்நியக் குரல் ஒன்று ஒலிப்பது சாத்தியமே இல்லை. “குஞ்ஞூ” என்று அதே சப்தம் மீண்டும் ஒருமுறை ஒலிக்க, பிடரி மயிரிலிருந்து கணுக்கால் வரை சிலிர்த்தது. கையில் இருந்த பிரஷை அப்படியே போட்டுவிட்டு, கதவைத் திறந்து வெளியே…

சிலந்தி

தாவங்கட்டையில் ஊறிய மொசுடை அழுத்தித் தேய்த்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தேன். நசுங்கிய மொசுடு பரப்பிய நெடி மூக்கில் ராவியது. இரவு முழுவதும் விழித்திருந்ததால் எரிந்த கண்களை இடுக்கிக் கொண்டு தோளுக்கு மிக அருகில் மினுங்கும் வெள்ளிக் கோடுகளைப் பார்த்தேன். இழுத்துக் கட்டிய வாழைநார் போன்ற அந்தக் கோடுகள் சூரிய ஒளிபட்டு வானவில்லின் நிறங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. கூர்ந்து…

பட்டுத்துணி

மணி அடித்தும் வீட்டுக்குப் போகும் அவசரமோ வழக்கம்போல் பேருந்து வரும்வரை பையன்களுடன் ‘தூஜோ காசுட்’ விளையாடும் எண்ணமோ வரவில்லை. ஒரு பட்டுத்துணி வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அம்முவின் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது. கடைசி ஆளாக வகுப்பிலிருந்து வெளியில் வந்தாள். தோளில் புத்தகப் பை. காலையில் அம்மா கொதிக்கவைத்து ஊற்றிய தண்ணீர் கொக்கோகோலா நெகிலி புட்டியில்…

தீக்குருதி

1 1565 “மண்ணையும், பெண்ணையும் காக்காமல் போன நாட்டிற்கு, அவை இரண்டும் உதவாமல் போக. இனி எந்த மண்ணிலும் இப்பேரரசு நிலையாய் நிற்கப் போவதில்லை. இம்மண்ணில் இனி ஒரு சொல்லும், பொருளும் விழையாது, இவ்வரசின் எந்தப் பெண்ணும் மகவை ஈனப்போவதில்லை. அவ்வாறு நடந்தாலும் அதனைப் பேணும் பேறு அவளுக்கு வாய்க்காது. இக்கையறுநிலைக்குக் காரணமான ஒவ்வொரு உதிரத்தின்…

புறப்பாடு

அபத்தக் கனவுகளின் மாய உலகிலிருந்து தப்பி விழிப்புத் தட்டிய போது டிஜிட்டல் சுவர் கடிகாரத்தில் காலை 11.15 என்று காட்டியது. கண்ணாடி அணியாத கண்களினூடே அதையே சற்று நேரம் மங்கலான காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் எப்போதும் அவனைத் தாக்கும் அபாரமான உத்வேகம் அன்றும் தாக்கியது. படுத்துக் கொண்டே பல எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான்.…

வெள்ளிக் காசு

மூன்று பேர் மட்டுமே வந்திருப்பது எரிச்சலாக்கியது. இது எப்போதும் நடப்பதுதான் என்றாலும் என்னால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. என் வழக்கமான மாலை நேர குட்டித் தூக்கம் கெட்டிருப்பதால் லேசாகத் தலைவலியும் இருந்தது. கூடவே ராபியாவின் தொல்லை வேறு. அவள் வீட்டுக்கே செல்லவில்லை என காலையில் அணிந்த விளையாட்டு உடையும் அவள் சுமந்து வந்த புத்தக மூட்டையும்…

அனுபவ பாத்தியம்

டாக்ஸி, மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிளம்பி, பத்துகிலோ மீட்டர் தூரம் தஞ்சாவூர் ரோட்டில் போனதும், புகளூர் கோயில் கோபுரம் தெரிந்தது. அருண் ஆவலுடன் கண்ணாடியை இறக்கிவிட்டு எட்டிப் பார்த்தான். “நம்ம கோயில் கோபுரம்தானே?” என்று கேட்டான். முன்பக்கம் உட்கார்ந்திருந்த அருணின் தந்தை ராஜகோபால் “ஆமாம்” என்றார். இன்னும் ஐந்துகிலோ மீட்டர் ஓடி, இடதுபுறம் பாலத்தடியில் திரும்பி,…

ஆதியோசை

என்னை நிரப்ப முயன்ற இருளுக்குள் மங்கலாக ஊடுருவியிருந்தது சிறிது வெளிச்சம். வடிவற்ற தேங்கிய குட்டையின் முகப்பில் ஊடுருவிய அந்த வெளிச்சம் இருளின் ஒரு கோணத்திலிருந்து மட்டும் என்னை மீட்டெடுத்துக் கொண்டிருந்தது. நான் குட்டையின் அடியாழத்தில் இருந்தேன் என்பதையன்றி வேறெந்த நினைவும் இல்லை; நான் நீந்தவுமில்லை மிதக்கவுமில்லை; திணறிக்கொண்டு மேலே வரும் முனைப்பேதும் என்னிடம் இருக்கவுமில்லை. அது…

துண்டு நிலம்

01 தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள்  நடமாட முடிகிறது.  அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிட்டதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக…

மண் அகல்

“முதல் கொட்டுக்கு ஆள் வந்துடுவாங்க. இப்பயே எழுந்தா தானே கல்லுக்கு பொங்கல் படைக்க ரெடி பண்ண முடியும், இன்னும் தூங்கிட்டு இருந்தா எப்படி வசந்தி? எந்திரி.” அப்போதுதான் அசந்தது போலிருந்தது வசந்திக்கு. அம்மாவின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள். அம்மாவின் குரலா கேட்டது? உடல் சிலிர்த்தது வசந்திக்கு. ஜோதிமயி பாயிலிருந்து உருண்டு தரையில் கோணல் மாணலாக…

சியர்ஸ்

“புதுசா ஜாய்ன் பண்ணுன மூர்த்தி புரோவுக்காக” என முதல் சியர்ஸில் ஷாம் சொன்னபோதுதான் அவர் முகத்தைத் தெளிவாக கவனித்தேன். மந்தமான மஞ்சள் ஒளியில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். மனதுக்கு நெருக்கமாகாத அந்நியத்தன்மையில் முகவெட்டு. சடங்காகப் புன்னகைத்தேன். வாயில் வைக்கச் சென்ற கிளாஸை நிறுத்தி, அவர் பதிலுக்குச் சிரிப்பதற்குள் பார்வையை விலக்கிக்கொண்டேன். ‘மங்கி ஷோல்டரில்’ ஆரஞ்சு பழச்சாற்றைக்…

சர்வ ஃபூதேஷு

எல்லா ஆன்ஸெலை அவள் அறைக்குள் கொண்டுசென்று படுக்கவைத்துவிட்டு நான் திண்ணைக்கு வந்தபோது கொச்சு மாத்தன் அங்கே நின்றிருந்தான். எண்ணெய்பூச்சில் அவனுடைய பெரிய சிவந்த உடல் பளபளத்துக்கொண்டிருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்து “நடக்கக் கூடாது. பெஞ்சில் உட்கார்ந்திருக்கவேண்டும்” என்றேன். அவன் ‘ஆம், ஆனால் அந்த அறையில் எண்ணெய் மணம், என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்றான். “ஆவிக்குடுவையில்…

விலகிச் செல்லும் பாதை

கோயிலுக்கு வந்த கந்தசாமி பெரிய தகரக்கூண்டால் மூடப்பட்டிருக்கும் தேர் அருகில் நின்றார்.  மதிய உணவு உண்ண மனசில்லாமல் வந்துவிட்டார். வந்த பின் கோயிலுக்குள் செல்ல மனம் வரவில்லை. மூன்றுமுறை வந்துவேண்டியும் ஜோதியின் வாயசைவில் ‘சரி’ என்று ஒரு வார்த்தையை வரவழைக்க முடியவில்லை. கோயிலுக்குள் போனாலும் அவளைத் திருத்தமுடியும் என்று தோன்றவில்லை. பழனிச்சாமி ஐயாவைப் பார்த்தும் ஐந்து…

இயல்வாகை

கருக்கிருட்டில் தெருவிளக்குகள் எரிந்துக்கொண்டிருக்கும் விடிகாலையில் கல்லூரி சாலையைக் காண சத்தியனுக்குப் பிடிக்கும். அடர் கருமையிலிருந்து சாம்பல் மலரும் புலரிப் பொழுது அவருக்கு அணுக்கமானது. பல்கலைக்கழக தபால் அலுவலகத்தின் அருகே அவருடைய வெண்ணிற ஸ்விப்ட் காரை நிறுத்திவிட்டு காலை நடைக்கு தயாரானார். காலை நடையின்போது கைப்பேசியை அணைத்து விடுவார். அதற்காகப் பையிலிருந்து எடுத்தபோதுதான் ஓசையணைத்துக் கிடந்த கைபேசியில்…

துவந்த யுத்தம்

கர்த்தரின் எல்லையிலா கருணைக்கு வாழ்வின் முழுமையையும் அளித்த டயசிஸ் தலைவர் அளப்பரிய அன்புக்குரிய பாதிரி அல்பர்டோ க்ளோடன் அவர்களுக்கு, சுதந்திரம் சமத்துவம் சகோதரதத்துவம் ஆகியவற்றை உலகுக்குப் போதிக்க அமைந்த பிரெஞ்சு தேசத்துக்கு சேவகம் செய்ய பாத்தியாக்கப்பட்ட மேஜர் ழீன் சிரம் தாழ்த்தி எழுதும் கடிதம்:- நமது பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் அல்ஜீரியா காலனியிலிருந்து விருப்ப ஓய்வில்…