
“மொதல்ல பாப்பாவ எங்க அம்மா வீட்ல இருந்து கூட்டிட்டு வந்துருறேன். இந்த வீட்ல என்கிட்ட பேச ஆளே இல்ல” என்று அவள் என்னைப் பார்க்காமல் என் நாற்காலியில் அமர்ந்துகொண்டு ஜாடை பேசினாள். நான் முகத்தை இறுக வைத்துக்கொண்டு அலமாரியில் தேடிக்கொண்டிருந்தேன். “ஏங்க ஏதாவது பேசுவீங்களா இல்ல இனி இப்படித்தானா?” என்று கேட்டவளைத் தாண்டி ஏதும் சொல்லாமல்…














