
களைவெட்டி மூன்று நாள் வாடப் போட்டிருந்த வெண்டைச் செடிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கோபால்சாமி, “ஈரத்தில் வெளையாடாத கபிலா, சேத்துப்புண் வரும் தடத்துக்குப் போ, எத்தனவாட்டி சொல்றது” என்றார். நீர்வற்றி சொதசொதவென்று இருந்த வாமடை மண்ணைப் பிசைந்து குதிரை செய்துகொண்டிருந்த கபிலன், “நீயும்தானே சேத்தில நிக்கிற தாத்தா. உனக்கு வரலையன்னா எனக்கு எப்படி வரும்?” என்றான்.…