Category: சிறுகதை

எண்ணும்பொழுது

“தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான். அவள் கூந்தலைத் தூக்கிச் சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப் பளபளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது.

யானைக் கதை

மொழியியல் பேராசிரியர் கியோம் வேர்னோ ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு, கேரளாவுக்கே சென்று ஆசான் வைக்கம் முகமது பஷீரை நேரில் தரிசித்து, பிரஞ்சு மொழியில் ஒரு நீள்கட்டுரை எழுதி வெளியிட்டவர். அநேகமாக பஷீர் சந்தித்த கடைசி வெள்ளைக்காரன் இவராகத்தான் இருப்பார். அந்தப் பேராசிரியரும் நானும் ஒரே இரயில் பெட்டியில், அதுவும் அருகருகாக…

ஆறுதல்

களைவெட்டி மூன்று நாள் வாடப் போட்டிருந்த வெண்டைச் செடிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கோபால்சாமி, “ஈரத்தில் வெளையாடாத கபிலா, சேத்துப்புண் வரும் தடத்துக்குப் போ, எத்தனவாட்டி சொல்றது” என்றார். நீர்வற்றி சொதசொதவென்று இருந்த வாமடை மண்ணைப் பிசைந்து குதிரை செய்துகொண்டிருந்த கபிலன், “நீயும்தானே சேத்தில நிக்கிற தாத்தா. உனக்கு வரலையன்னா எனக்கு எப்படி வரும்?” என்றான்.…

நிசப்தத்தின் அருகில்

“அவள் ஒரு மோகினி!” என்று மெழுகு தாளில் மை தொட்டு எழுதியிருந்த கையெழுத்துப் பிரதியின் முதல் வரியைப் படித்த பின்னர்தான் ராவ் மனதுள் துணுக்குறல் பிறந்தது. அந்த பங்களாவின் மேல் தளத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஹென்றியின் அறையிலுள்ள தனிப்பட்ட நூலகத்தில் அந்த கையெழுத்துப் பிரதியினை அவர் தேடிக் கண்டடைந்திருந்தார். நீளமான தாள்களை இரண்டாக வெட்டி எழுதி,…

தூமகேது

சுந்தரம் சைக்கிளை வேகமாக மிதித்தான்.  நான் பின்னால்,  ஒரே பக்கமாக இரண்டு கால்களையும் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். வலது  கையால் சுந்தரத்தின் தோளை இறுகப்பிடித்துக் கொண்டேன்.  மருத்துவமனை மேடு தெரிந்ததுமே தலையைச் சாய்த்து ஜப்பான் கல்லில்  சுருட்டுத்தாத்தா உட்கார்ந்திருக்கிறாரா என்று பார்த்தேன்.  அவர் எப்போதும் போல அங்கேதான் உட்கார்ந்திருந்தார். வாயில் துண்டு சுருட்டு நெருப்பு  இல்லாமல் துருத்திக்கொண்டிருந்தது.…

தேக்காவில் ஒரு பாலம் இருந்தது

இந்தப் பொழுதில் இங்கே தனியாகநிற்கிறோம். உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து நரம்புகள் வெலவெலத்தன. உய்யென்று காற்று சத்தத்ததோடு கடந்து செல்லவும் பயந்து கண்களை மூடிக்கொண்டேன். அக்காவும் நானும் நான்கு நாட்களுக்கு முன்னர்தான் கேம்பிலிருந்து தப்பித்து வந்திருந்தோம். எங்களைப் பார்த்த இடத்தில் ஐஎன்ஏகாரர்கள் சுட்டுவிடலாம். ஜப்பான்காரன் கழுத்தை வெட்டி இந்த தேக்கா பாலத்தில் கண்காட்சி வைப்பான். “ஐஞ்சாம் படைக்கு…

ஓர் அழகியின் கதை

பெயர்: ஜூலி முகவரி: 16, ஜாலான் மலாக்கா அ.அட்டை எண்: (கிறுக்கலான எழுத்தை வாசிக்க முடியவில்லை.)  வயது: 35 திகதி : மார்ச் 25 அறையின் உள்ளே நுழைந்து என் எதிரில் உள்ள நாற்காலியில் அமரும் முன் ஒரு கணம் என்னை ஏற இறங்கப் பார்த்தாள். என்னை கணிப்பது போல் இருந்தது அவளது பார்வை. மெல்லிய…

முடிவின்மையின் வடிவம்

நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். வெளியே என்றால் ரொம்பவும் வெளியே. நான் நிற்கும் இடத்தில் இருந்து மகிழ்ச்சியின் மையக்கூடத்திற்குச் செல்வதற்கு இறுகி நெருங்கி நின்றிருக்கும் எண்ணற்ற மனிதர்களைக் கடக்க வேண்டியிருக்கும். ஒரு நாளோ ஒரு வருடமோ ஒரு யுகமோ கூட ஆகலாம். ஆனால் இப்போது நான் நிற்கும் இடத்தில் அவ்வளவு நெருக்கடி இல்லை. இடர்பாடுகள் இல்லை.

பசித்திரு தனித்திரு விழித்திரு

1  வெள்ளைச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்த மாரிமுத்து நாற்காலியில் அமர்ந்து வாசல்கதவையே பார்த்திருந்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மூன்று இருபது. “இந்தா வந்துருவார்… உக்காருங்க” எனச் சொல்லி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இருப்பு கொள்ளவில்லை. அவன் முன் இருந்த முக்காலியில் வைக்கப்பட்டிருந்த பில்டர் காபி சூடிறங்கி ஆடை கட்டியிருந்தது.  எதிர் சுவற்றில் மூன்றுக்கு இரண்டடி அளவிலான பெரிய…

சிண்டாய்

“நான்கைந்து நாட்களாக இருள் மூண்டிருந்த பெங்கூலு வீட்டு வளைவைக் கடக்கும்போதுதான் கருப்பு நிற மேகம் போன்ற திரள் ஒன்றைப் பார்த்தோம். அப்போது சஹாக் சித்தி நூர்ஹாலிசாவின் சிண்டாய்லா பாடலைப் பாடிக் கொண்டிருந்தான். ‘என் தலையணை தங்கத்தாலானது, ரத்தின உறை கொண்டது,  கைமுட்டியைத் தலையணைத்து உறங்குகிறேன்’ என்ற வரிகளை அவன் பாடும் போது  எனக்கு ஒருவித எரிச்சலாக…

நான்னா

இன்று எங்கள் நான்னாவிற்கு சாமி கும்பிட்டோம். என் மனைவி உயிரோடு இருந்தவரை, ‘உகாதிக்கு’ முதல் நாள் கொண்டாடப்படும் ‘நூக்கால்தல்லி’ திருநாளுக்கு வருஷம் தவறாமல் எனது பெற்றோருக்கு படையல் வைத்து சாமி கும்பிட்டாள். இவ்வளவுக்கும் அவள், என் பெற்றோரை பார்த்ததுகூட கிடையாது. ஆயினும், ஒரு நல்ல மருமகளாய் வருஷந்தவறாமல் அவர்களை வணங்கி வேண்டினாள். “ஒரு படம் கெடைச்சா…

ஞமலி

மோப்பம் பிடித்தபடி கண் முன்னே திரிந்து கொண்டிருந்தவன், எதிர்வீட்டு வாயிற் கதவோரம் எப்போது காலைத் தூக்கினான் என்றே தெரியவில்லை. காலணி ஒன்று பறந்து வந்து இரும்புக் கதவில் மோதி எழுப்பிய சத்தத்தில்  சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்டு ஓரடி பின் வாங்கி குரைத்தான். பின்னர் முன் கால்களை படுக்கவைத்து பிட்டத்தை தூக்கியபடி காலணியைப் பார்த்து வாலை ஆட்டத்தொடங்கினான்.…

கோணல் பிரார்த்தனை

சபா சித்தப்பாவிடம் கடிதத்தைக் கொடுத்தபோது, அவர் திடீரென, என் கண் முன்னே முதியவராக மாறி விட்டதைப் போலத் தோன்றினார். அவரது முகம் முழுமையாக மாறிப் போனதோடு, எனது தலைக்கு மேலாக தொலைவில் பார்த்துக் கொண்டிருந்தார்.

மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்

கண்களைப் பாதி மூடியபடிதான் வண்டியை ஓட்டினேன். காற்றில் மாலைநேரத்திற்குண்டான ஏதோ ஒலியிருந்தது. இசைக்கருவியின் மென்னொலி போல ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது காற்று. முன்னால் அமர்ந்திருந்த முகிலனின் வலது கையில் பேட். அதை கால்களுக்கு இடையே வைத்துப் பிடித்திருந்தான். இடது கையில் புதிய ஸ்மைலி பந்து இருந்தது. அதை அவன் பிடித்திருந்தவிதம் அழகிய கண்ணாடி பொருளைப் பத்திரமாகப் பிடித்திருந்தது…

கூத்து

“சரி…. இறங்கு” என்றான் சேகர். நான் அவசரமாக இறங்கி நின்றேன். தலைக்கவசத்தைக் கலற்றியபோது ‘டும் டும்டும் டும் டும்டும்’  என கதி மாறாமல் முரசு அதிரும் சத்தம் கேட்டது. ஒலிபெருக்கியில் சீனத்தில் ஆண் குரல் எதிரொலிகளோடு கேட்டது. அவன் மோட்டர் சைக்கிளை பர்கர் வண்டிக்குப் பின்னால் சாய்வாக நிறுத்தி விட்டு சாவியை உருவிக் கொண்டு வந்தான்.…