வல்லினத்தின் ஆவணப்படங்கள்

எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாக வல்லினம் குறித்து எனக்கு தெரியும். எதையும் தொடங்குவது சுலபமானது ஆனால் அதனை தொடர்ந்து செய்வது சவாலான காரியம், அதற்கான ஆற்றல் மற்றும் ஆர்வம் இருந்தாலின்றி அதனை செய்ய முடியாது. வல்லினம் பழைய எழுத்தாளர்களைத் தேடிக் கண்டறிந்து மீண்டும் எழுத வைத்து அதற்கான அங்கிகாரம் கொடுத்து வருகின்றார்கள். மிகவும் முக்கியமான செயல்பாடாக…

வல்லினத்தின் தொடர் பயணம்

வல்லினத்தின் நூறாவது இதழ் வருவதில் மகிழ்ச்சி. இச்சமயத்தில் வல்லினத்தின் ஆசிரியர் ம.நவீன் குறித்து நினைத்துப் பார்க்கின்றேன். 2004 என நினைக்கிறேன். அப்போது நவீன் நயனம் அலுவலகம் வந்திருந்தார். இதழின் வடிவமைப்பையும் அதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் செய்துக் கொடுக்க முடியுமா என கேட்டார். அப்போது அதற்கான சாதனங்கள் எங்களிடம் இருந்தன. அதனை செய்வதற்கான ஆட்களும் இருந்தார்கள். நானும்…

கலை இலக்கிய விழா 9

வல்லினத்தின் கலை இலக்கிய விழா இவ்வருடம் செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் ‘வல்லினம் 100’ எனும் 400 பக்க இதழ் வெளியீடு காண்கிறது. வல்லினம் மாத இதழாகத் தொடங்கப்பட்டு 100-வது இதழை எட்டுகிறது. எனவே கடந்த மாதங்களில் இணைய இதழில் பிரசுரமான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் ஆகியவற்றோடு புதிதாக இவ்விதழுக்கென்று எழுதப்பட்ட…

வல்லினம் போட்டி படைப்பு முடிவுகள்

வாசகர்களும் எழுத்தாளர்களும் வழக்கமாக வல்லினத்துக்கு அனுப்பும் படைப்புகளையே ஒரு போட்டியாக நடத்தி, அதன் வழி சிறந்த படைப்புகளை வெளிக்கொணரலாம் என்ற திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கம்பாரில், நண்பரும் வல்லினம் குழு எழுத்தாளருமான கங்காதுரையின் வீட்டில் நடந்த சந்திப்பில் முடிவானது. வல்லினம் போட்டி படைப்புகள் குறித்த அறிவிப்பு வந்தது முதலே வாசகர்களிடம் நல்ல வரவேற்பு…

மலேசியாவில் நடந்தது என்ன? – அ.மார்க்ஸ்

கோலாலம்பூரில் ‘உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு’ 24-25.06.2017 ஆகிய இரு தினங்கள் நடைப்பெற்றது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் உரையாற்றவும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவும் தமிழக திராவிட கழக பேச்சாளர்களும், திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களும் திரளாக வந்திருந்தனர். மாநாடு முடிந்த பிறகு மாநாட்டிற்கு வருகை…

சீ.முத்துசாமி சிறுகதைகள் : மற்றவர்களால் உருவான நரகம்!

 மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் தனக்கான ஓர் அடையாளத்தைத் தேடி பயணித்தத் தொடக்கப்புள்ளியாக ‘இலக்கிய வட்டம்'(1970) முயற்சியையே என்னால் சுட்ட முடிகிறது. ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் சிற்றிதழ் வெளியிடப்பட்டதும், அதில் உள்ள படைப்புகள் விவாதிக்கப்பட்டதும், அவ்விவாவதங்களை மீண்டும் ‘இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மூலமாகவே பதிவு செய்ததும் அக்குழுவினர்…

பலி

செல்வி வெளியில் வராமலிருந்தது நளினிக்கு ஆச்சரியத்தைத் தந்தது. வழக்கமாக தூரத்தில் கார் வரும் சத்தம் கேட்டதுமே பரபரக்க வெளியில் வந்துவிடுவாள். காரிலிந்து வெடுக்கென கைப்பையை இழுத்து, அனைவரையும் முந்திக்கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைவது ஒரு வழிகாட்டியின் தோரணையை ஒத்திருக்கும். செல்விக்கு பதிலாக இன்று பணிப்பெண் அவசரகதியில் வெளிபட்டு நின்றாள், முகத்தில் கவலை ஊசலாடியது.  “என்னாச்சி? ஏதும்…

அறிவியல் கூடத்தில் சடங்கு எலிகள்

வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி விட்டது. மாதத் தவணையில் பணம் கட்டி வாங்கிய பொருள் என்பதால் தூக்கிப் போட மனம் வராமல் அதை பழுது பார்த்து பயன்படுத்த முடியுமா என்று நண்பரிடம் கேட்டேன். நண்பர் ஒரு தொலைப்பேசி எண்ணைக் கொடுத்து தொடர்புகொண்டு கேட்கச் சொன்னார். பிறகு பேச்சின் ஊடே, குடிநீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து…

நாரின் மணம் 3: களவெனும் கலை

திருடர்கள் என்றலே எனக்கு மிகவும் பயம். அப்போதெல்லாம் எண்ணெய் மனிதன் (Orang Minyak) குறித்தப் பேச்சு எங்கள் ஊரில் அதிகம் இருந்தது. கம்பத்தில் வசித்தபோது நள்ளிரவுகளைத் தாண்டியும் பேய் பயமெல்லாம் இல்லாமல் சுற்றியுள்ளேன். கம்பத்து வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பகலில்கூட திருடர்கள் பயம் கௌவிக்கொள்ளும். குறிப்பாக எண்ணெய் மனிதன் என் பொழுதுகளை அச்சமடைய வைத்தான். எங்கள் வீடு…

திறவுகோல்8: சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை

இந்த தன்வரலாறு நூல் மலேசிய எழுத்தாளர்அ.ரெங்கசாமி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வல்லினம் விருது அ.ரெங்கசாமி அவர்களுக்கு கொடுக்கப்பட்டதை முன்னிட்டு இந்நூல் வல்லினம் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி குறிச்சி என்ற கிராமத்திற்கு அருகே உள்ள உலகியூருணிப்பட்டி என்ற சிற்றூரிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிழைப்புத் தேடி…

சிட்னியின் மீதான காதல்

எனக்கு ஆங்கில நாவல்கள் மேல் ஒரு  காதல் உண்டு. பல நாள்கள் கண் விழித்து படிக்கிற நிலையிலான ஒரு காதல். அந்தக் காதல் ஏன் வந்தது என பலமுறை யோசித்திருக்கிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காதல் அது என சரியாகக் கணக்கிடலாம். மிக முக்கியமாக அதை சிட்னியின் மீதான காதலாக நான் கருதுகிறேன். யார்…

பிணை

ஞாயித்துக்கெழம முடிஞ்சி திங்கக்கெழம ஆச்சுன்னா எதாச்சும் ஒரு ஏழறையோடதான் ஆரம்பிக்குது என் பொழப்பு. ஊர்லருந்து வந்தமா ஒழுக்கமா வேல செஞ்சி பொழப்பமான்னு இல்லாம ஒனக்கு என்னா குடி வேண்டி கெடக்குது? வாரம் முழுக்க வேல செய்றேல்ல, ஒழுங்கா மூடிகிட்டு தூங்க வேண்டியதுதான, ஊர்ல ஆத்தா, அப்பன் கஸ்டபடறாங்க, தங்கச்சி, தம்பிகள கரையேத்தனும்னு சொல்லிதான வந்த? அதுக்குதான…