
காலையிலிருந்தே மோடம் போட்டுக்கொண்டிருந்தது. மழை வரப்போகிறது. வரலாம் என்று இரண்டு மூன்று நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தார். வெயில் அதிகமாகி உயிர்கள் வாடும்போது தானாக மழைபொழிந்துவிடும் இயற்கையின் சமநிலையை எண்ணி வியப்பாக இருந்தது. தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு குறைவாகத் தண்ணீர் ஊற்றினார். எப்படியும் மழை பெய்யப்போகிறது. ஊற்றுகிற தண்ணீரைவிட மழைதானே அவற்றுக்கும் பிரியமானது என்று நினைத்துக்கொண்டார். வாசலில்…