இருப்பது

காலையிலிருந்தே மோடம் போட்டுக்கொண்டிருந்தது. மழை வரப்போகிறது. வரலாம் என்று இரண்டு மூன்று நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தார். வெயில் அதிகமாகி உயிர்கள் வாடும்போது தானாக மழைபொழிந்துவிடும் இயற்கையின் சமநிலையை எண்ணி வியப்பாக இருந்தது. தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு குறைவாகத் தண்ணீர் ஊற்றினார். எப்படியும் மழை பெய்யப்போகிறது. ஊற்றுகிற தண்ணீரைவிட மழைதானே அவற்றுக்கும் பிரியமானது என்று நினைத்துக்கொண்டார். வாசலில்…

உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்.

தத்துவ நூல்கள் எனக்கு போதை தரக்கூடியவை. தத்துவக் கருத்துகள் மிக எளிமையாக புரிவது போல் ஆரம்பித்து  சற்றைக்கெல்லாம் எதுவுமே புரியாத நிலையில் என்னை விட்டுவிடக்கூடியவை. இருப்பவை இல்லாதவைகளாகி விடும்; இல்லாதவை இருப்பவைகளாகிவிடும். ஆயினும் அந்தப் புரிதலும் புரியாமையும் கலவையாகி ஒரு போதையாக மனதில் வியாபித்து நிற்கும். மாலை நேரத்து வெயிலில் மினுமினுக்கும் மழைத்துளி போல அவை…

மண்ட்டோ : இருளை வரைந்த ஓவியன்

மண்ட்டோவை நான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மூலமே அறிந்தேன். ‘பாகிஸ்தான் சிறுகதைகள்’ என்ற தொகுப்பில் அவரது ‘திற’ எனும் சிறுகதை இடம்பெற்றிருந்தது. ஆதவன் தீட்சண்யா நல்ல கதைசொல்லி. அத்தொகுப்பில் முதல் சிறுகதையான ‘திற’ சிறுகதையை ஒரு கார் பயணத்தில் அவர் கூறியபோது முதலில் ஓர் மெல்லிய அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுவாக இதுபோன்ற அதிர்ச்சி தரக்கூடிய சிறுகதைகளை…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 7

கடைசியாய் காதலைப் பிரிப்பதற்காக பெண்ணை வீட்டில் அடைத்து வைக்கும் காட்சியுள்ள சினிமாவை எப்போது பார்த்தீர்கள்? காதலை எதிர்ப்பது போல? ஜாதிப் பிரச்சினை மட்டும் இல்லையென்றால், ஏகத்துக்கு காதல் திருமணங்களாய்த்தான் இருக்குமென்று நினைக்கிறேன். இருந்தாலும் படத்துக்கு நடுவில் திருமணம் ஆவதுபோல் காட்சி வந்தாலே, சரி யாரோ வந்து நிறுத்தப்போகிறார்கள் என்று தெரிந்து விடுகிறது. பெற்றோர்கள் மாறிவிட்டார்களா? காதல்…

வே.நி.சூர்யா கவிதைகள்

நடந்தேறுகிறது எதிர்பாராத இவையெல்லாம் ஒரு கோடு கடல் ஆகுமென நினைத்திருக்கவில்லை ஓர் இசை வாழ்க்கை ஆகுமென நினைத்திருக்கவில்லை ஒரு குண்டூசி இரவு ஆகுமென என்று கூட நினைத்திருக்கவில்லை இன்னும் எத்தனையோ நினைத்திருக்கவில்லைகள் இவையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை குண்டூசி துளையிடும் இசை நீள்கிறது காகிதத்தில் நீளும் பெருங்கோடென பழமொழிகளுக்கு எதிராக மொழியை கோர்க்காதவர்கள் தோன்றிக்கொண்டே செல்கின்றனர் வீட்டின் கூரைகளை தாண்டிப்…

நீயின்றி அமையாது உலகு 8

கடந்த இதழின் தொடர்ச்சி அதன் பின் சந்திக்கும்போதெல்லாம் அந்த அக்காவிற்கு நன்றி சொல்ல ஆரம்பித்தேன். எல்லோரிடத்திலும் சிடுசிடுவென இருக்கும் அவர் என்னிடம் சிரமமின்றிப் பழக ஆரம்பித்தார். தொழிற்சாலையில் வேலை செய்யும் மற்றவர்க்கு அது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது. அது நிர்வாகத்தினர் வரை சென்றது. அன்று பணியாளர்களும் மேனேஜரும் சந்திக்கும் நாள். முதல் நாள்தான் எங்களுக்கு தெரியும்.…

ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்

1980-களின் இறுதியில் என்று நினைக்கிறேன். பினாங்கு அறிவியல்  பல்கலைக்கழகத்தின் ஏதோ ஒரு விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்கே சில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ நாவலும் இருந்தது. ரெ.கா பெயரைப் பார்த்தவுடன் அந்நாவலை வாங்கிக்கொண்டேன். விலை மூன்று ரிங்கிட். அதனை இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம்…

கரகம்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில்…

வாள்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) அந்தக் கும்மிருட்டில் உயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்தான் சந்தனசாமி. மழை சிறுசிறு தூறல்களாகக் கருமேகத்திலிருந்து வழிந்து மண்ணை நசநசக்கச் செய்துகொண்டிருந்தது. அவன் நடந்த பாதை – அதைப் பாதை என்று சொல்ல முடியாது – அவனாக உண்டாக்கிக்கொண்ட வழியில் சேறும் சகதியும் களிமண்ணுமாகச் சேர்ந்து…

புள்ளிகள்

(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) “டேய்… அறிவுகெட்ட முண்டம். எடுடா கல்ல!.’’ வெளியிலே இடி இடித்தது. ”அல்லூர் தண்ணி ஓடாம, கல்லப் போட்டுத் தடுக்கிறியே. நாத்தம் கொடலைப் புடுங்குது. எத்தன வாட்டி சொல்றது, எடுக்கப் போறயா? ரெண்டு சாத்தட்டுமா?” இடிகள் திசைகளில் எதிரொலித்தன. இந்த இரைச்சலில், அருகே இருந்த வேப்பமரத்திலிருந்த காக்கைகள் அச்சம் கொண்டு…

ஜெயமோகன், மாலன் மற்றும் மலேசிய – சிங்கை இலக்கியம்

வாசிக்கும் முன்பு:  இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் என்னை ஜெயமோகனின் அடிவருடி என்றும் அவருக்கு ‘ஜால்ரா’ அடிக்கும் நபர் என்றும் மிக எளிதாகக் கிண்டல் அடித்துச் செல்லப்போவதை முன்னமே அனுமானித்துக்கொள்கிறேன். நான் முன்வைக்கும் கருத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழைகளுக்கும் சோம்பேறிகளுக்கும் அது மட்டுமே கையில் கிடைத்திருக்கும் இறுதி ஆயுதம். எனவே அவர்களை அடையாளம் காண அந்த…

“இலக்கியம் சொல்வதல்ல காட்டுவது” – ஜெயமோகன் பட்டறை அனுபவம்.

கடந்த 11.9.2016 – ஞாயிற்றுக்கிழமை வல்லினம் நடத்திய சிறுகதைக் கருத்தரங்கில் கலந்துகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட சிலரே இதில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டபோது, என்னையும் வருமாறு அழைத்து பங்குகொள்ளச் செய்தார்கள். இதில் கலந்துகொள்ள வல்லினம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பங்கெடுத்திருப்பது முக்கியத் தகுதி.  முதலில் ஒரு புலனக்குழுவை உருவாக்கி, போட்டியில் பங்குகொண்டவர்கள் இணைக்கப்பட்டனர். தொடர்ந்து அதில்…

நெருங்கப்பூத்த மோமதி மலர்களை முத்தமிட்டதுண்டு

மனப் பிணியாளர்களுக்கு காதில் மருந்திடும் சிகிச்சையை மேற்கொள்ளும் குடும்பத்தில் தனியாகப் பிறந்தேன் மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இப்போது அந்த ஊர் இல்லையென எனக்குத் தெரியும் ஆரம்பக் கல்விச்சாலையில் உடனிருந்தவளோடு சேர்ந்து திருட்டைப் பழகினேன் பதிமூன்று வயதில் புகைப்படங்களுக்கு சட்டகமிடும் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டேன் விளையாட்டு மைதானத்தின் கண்களுக்கு நானொரு முடவன் வேலைகேட்டு அதற்கான கட்டடங்களின்முன் நின்றதில்லை இளம் அவயங்களின்…

பாவைக் கூத்து

அம்ம வாழிய தோழி, யார் அவன் என்று வினாக்குறியானாய் அறிந்திலையோடி?   வீட்டுக் காவல் மறந்து சந்து பொந்து மரங்களில் எல்லாம் காலைத் தூக்கி நின்றாடி பெட்டை நாய்களுக்கு மூத்திரக் குறுஞ்சேதி எழுதி அலையுமே அந்தச் சீமை நாயின் பேர் இல்லத்து வம்பனடி அவன். போயும் போயும் அவனையா கேட்டாய்?   பொம்மலாட்டப் பாவையைப்போல் ஒருவர்…