
கவிதை என்பது… கவிதை என்பது தற்கொலைக்கு முன்பான ஓர் அந்தரங்கக் கடிதம் கவிதை என்பது யாருக்கும் புரியாத கண்ணியமான கண்ணீர் கவிதை என்பது தோல்விகளை மூடிமறைக்கும் தற்காலிக மேகமூட்டம் கவிதை என்பது ரத்தம் வடியாதிருக்க தோலில் இட்டுக்கொள்ளும் ரணமான தையல் கவிதை என்பது மௌனம்…
















