முஸ்தாங்: விடுதலையின் கலகக்குரல்

துருக்கியில் வாழும் பெண்கள் தங்களுக்கு உரிமைவேண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர்.  பெண்களின் மேல் செலுத்தப்படும் ஆதிக்கமும் வன்முறையும் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலுறவுக் கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கான குரல் மறுக்கப்படுகிறது.  2012 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் துருக்கியில் மட்டும் 90,483 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, சிறுவயதுப் பெண்களிடம் பாலியல்…

பத்தினிக் கோட்டம் (சில தடங்களும் தொன்மங்களும்)

பள்ளிப் பருவத்தினின்றே தமிழ்ப்பாடம் என்றால் அலாதிப் பிரியம்தான் எனக்கு. அதிலும் சிலப்பதிகாரம் குறித்த ஆர்வம் எனக்குள் அதிகரித்தது கல்லூரிப்பருவத்தில் தான். அதற்குக் காரணம், சிலப்பதிகாரக் காப்பியத்திற்கும் எங்கள் பகுதிக்கும் உள்ள தொடர்பைக் கேள்விப்பட்டதுதான்.  மேலும், பேராசிரியர் சி.கோவிந்தராசனார்  எழுதிய ‘கண்ணகி அடிச்சுவட்டில்’ என்ற நூலும், கண்ணகிக்கோட்டம் கண்டறியப்பட்டபோது அங்கு மண்டிக்கிடந்த புதர்களை அகற்றும் குழுவில் வேலைக்குச்…

அன்புவேந்தன் கவிதைகள்

அன்பின் வழி அது   நமது அன்பின் பெரும்பொழுது எல்லையற்று விரியும் இப்பெருநிலத்தின் உயிர்க்கூட்டங்களின் மேல் பிரபைகளைப் பொழிந்தபடி நட்சத்திரங்களில் சிமிட்டிக்கொண்டிருக்க நாம் அப்போதுதான் ஒரு முத்தம் பகிரத் தொடங்கியிருந்தோம்.   தடங்களைத் தளர்த்தியபடி நெகிழ்ந்த புலன்கள் பாவி சிகரங்களையும் சமவெளிகளையும் பள்ளத்தாக்குகளையும் சுழித்துத் திளைக்கும் நமது அன்பின் நீர்மத்தில் மிதந்தபடி ஒரு புணர்தலைத் தொடங்கியிருந்தோம்…

நீயின்றி அமையாது உலகு – 7

உதடுகள் இரண்டும் ஒட்டிக்கொண்டன. கண்களைத் திறக்கத் தேவையான விசை எதுவென பிடிபடவில்லை. புருவங்கள் துடித்தன. கண்கள் மூடியபடியே இருந்தன. அந்த நொடி வாழ்வின் எல்லையில் நின்று எல்லையற்ற எதையோ பார்ப்பதாகப் பட்டது. கருமேகங்களின் மேல் நான் மிதப்பதாகவும், நானே மழையாகப் பொழிவது போலவும். நானே கடலாக, நானே நீராவியாக, அருவமானதாக, நானே அண்டம் முழுதும் நிறைந்துவிட்ட…

நிர்வாணம்

ஏழு வருஷப் பழக்கம். ஒத்த நூல் பிரிஞ்சி கெட்டித் துணி பரபரன்னு கிழிஞ்சமாறி சட்ன்னு அறுந்து போச்சு. வருஷக் கடைசியில கலியாணம். மண்டபம் புக் பண்ணி, துணி எடுத்து, மால, சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்து…. எல்லாமே செஞ்சாச்சு. பத்திரிகதான் இன்னும் கொடுக்கத் தொடங்கல. தொண்டைக்குழிக்குள்ள இறுகி மூச்சை, பேச்சை எல்லாத்தையும் அடைச்சிகிட்டு தண்ணிகூட இறங்கல. அப்பதான்…

விமர்சனங்களை விமர்சித்தல்

இலக்கிய விமர்சனம் என்று ஆரம்பித்தாலே அது சர்ச்சையிலும் சண்டையிலும் மனக்கசப்பிலும்தான் சென்று முடிகிறது. தேசம், மொழி போன்ற எல்லைகளைக் கடந்து இந்தநிலை கலை இலக்கியச் சூழலில் பொதுவானதாகவே இருக்கிறது. ஆனாலும் விமர்சனம் இல்லாத கலையும் இலக்கியமும் உயிர்ப்பற்றதாகிவிடும் என்பதனால் தொடர்ந்து விமர்சனங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விமர்சனம் என்பது என்ன? அதை யார் செய்யவேண்டும்?…

என் பார்வையில் ‘தங்க ஒரு . . . ’

வல்லினம் குழுவின் சிறுகதை கலந்துரையாடல் என்ற புலனக்குழுவில்    பகிரப்பட்ட கதைகளில் என் மனத்தை வெகுவாய் கவர்ந்த கதையாய் அமைந்தது ‘கிருஷ்ணன் நம்பி’ எனும் எழுத்தாளர் எழுதிய ‘தங்க ஒரு’ எனும் கதை. மாய எதார்த்த வடிவில் இக்கதை எழுதப்பட்டுள்ளது. கதைசொல்லி தன் மனைவிக்கு எழுதும் கடிதம் மூலம் தொடங்குகிறது. நகரத்தில் தங்குவதற்கு ஒரு நல்லவீடு தேடி…

புதிய முயற்சி : புலனக்குழு இலக்கிய உரையாடல் – 1

‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனும் கருப்பொருளின்கீழ் இவ்வாண்டு நடைபெறவுள்ள வல்லினம் கலை இலக்கிய விழா 7, மூத்த படைப்பாளர்களை ஆவணப்படுத்துதல்; இளம் படைப்பாளர்களை அடையாளம் காணுதல் எனும் இரு முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படுகின்றது. அதையொட்டி வல்லினம் சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்புகள் ஜூன்மாதம் தொடங்கி அச்சு, மின் ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்தது அனைவரும் அறிந்ததே. வெறும் போட்டிகள்…

கிணற்றிலிருந்து மீண்டவள்

“அதுக்கு உங்களை மாதிரி சீதேவியப் பெத்திருக்கணும்மா. எனக்கு அதுக்கெல்லாம் கொடுப்பின இல்ல.” தங்கம் என்னைப் பார்த்துக்கொண்டே உம்மாவிடம் சொன்னபோது எனது முகத்தில் என்ன உணர்ச்சியைக் கொண்டு வருவதென்று எனக்குத் தெரியவில்லை. அவள் சொன்னது ஒரு மெல்லிய புகையைப்போல, அந்த இடமெங்கிலும் பரவியது. அந்தச் சமையலறையை அடைத்துக்கொண்டு வெளியேற முடியாமல் தவிப்பதைப் போலத்தோன்றியது. சில்லறைக்காசைச் சுரண்டுவது போல…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 6

தங்கர்பச்சானின் சொல்ல மறந்த கதை திரைப்படம் தலைகீழ் விகிதங்கள் நாவலின் தழுவல். மிக அழகாக, நுணுக்கமாக எடுத்திருப்பார். மாமனார் வீட்டோடு இருப்பது அசிங்கம், நெருங்கிய நண்பனுக்கு ஒருவேளை சோறுபோடக்கூடத் தான் வக்கற்று இருப்பதை, பணம் என்ற கண்ணுக்குத் தெரியாத கயிறால் அவன் முடக்கப்பட்டிருப்பதை நுட்பமாகச் சித்தரித்திருப்பார். சிவதாணுவின் மனைவி கடைசிவரை அவனைப் புரிந்துகொள்ளவில்லை. இவ்வளவு பணம்…

சிகப்புப் புள்ளி

பஸ் ஸ்டாப்பிலிருந்து பஸ் கிளம்பும்போதுதான் சிவகுமரனுக்கு சட்டென்று நினைவு வந்தது. அது புக்கித் மேரா டவுன் சென்ட்டர். அங்கு இறங்க வேண்டும். ஆனால் சிகப்புப் பொத்தானை அழுத்துவதற்குள், பஸ் கிளம்பிவிட்டது. தன்னையே ஒருமுறை திட்டிக்கொண்டார். அடுத்த ஸ்டாப் சிறிதுதூரம். வெயிலில் திரும்பி நடந்துவர வேண்டும். “சர்ர்ரியான வேஸ்ட்டு மாமா நீ!” குணா சொன்னது மீண்டும் காதில்…

கலை இலக்கிய விழா 8

வல்லினம் இலக்கியக் குழு வருடம்தோறும் நடத்தும் கலை இலக்கிய விழா இவ்வருடமும் மிக உற்சாகமாக ஏற்பாடாகி வருகிறது. ‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ எனத் தலைப்பின் கீழ் மா.சண்முகசிவா, சை.பீர்முகம்மது, அரு.சு.ஜீவானந்தன், கோ.புண்ணியவான் ஆகியோரின் ஆவணப்படங்களை வெளியிடுவதோடு அவர்களின் தேர்ந்தெடுத்த இரு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து உலக இலக்கிய ஆர்வளர்களின் பார்வைக்கும் எடுத்துச்செல்லும் திட்டமும் இவ்வருட கலை இலக்கிய…

வழக்கறிஞர் பசுபதியும் பத்திரிகை அறமும்!

கடந்த சில தினங்களாக நண்பர்களிடம் இருந்து வந்த அழைப்புகள் குறுந்தகவல்கள் என பலவும் வழக்கறிஞர் பசுபதி குறித்து மலேசிய நண்பன் நாளிதழ் செய்த அவதூறுகள் தொடர்பாகவே இருந்தன. எந்த நண்பர்கள் சபையிலும் நான் பசுபதியின் பெயரை உச்சரிக்காமல் இருந்ததில்லை. நான் பெரும்பாலான சமயங்களில் செயலூக்கம் அடைவது அவரைப் பார்த்துதான். சண்முகசிவா தந்தை போன்றவர் என்றால் பசுபதி…

“கலை என்பது அதுசார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருத்தல் வேண்டும்” ஷாலினி சார்ல்ஸ்

ஈழத்தின் வடபுலத்தில் உள்ள சாவகச்சேரியைப் பிறப்பிடமாக கொண்டு யாழ்நகரில் வசித்துவரும் ஷாலினி சார்ல்ஸ், வளர்ந்துவருகின்ற இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பன்முக ஆளுமையுடையவராக எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்டவர். திரைப்பட நெறியாட்கை, குறும்படத்தயாரிப்பு, சமூக சேவை, யாழ் என்ரர்ரெயிமென்ற், மற்றும் யாழ் அறக்கட்டளை ஸ்தாபகர்  என்று பலதுறைகளில் தனி முத்திரை பதித்து இருக்கின்றார் இவரே ஈழத்தின் முதல்…

கவிஞர் கலாப்ரியா பதில்கள் (2)

கவிதை எழுத அடிப்படை பயிற்சியாக எதைச் சொல்வீர்கள்? சுகுமாறன் , மலேசியா இருப்பதிலிருந்துதான் எடுக்கிறோம். எனவே அவசியமான அடிப்படைப் பயிற்சி என்பது ஏற்கெனவே உள்ள எழுத்துகளை வாசிப்பது என்பதுதான். நாம் வாசித்த வார்த்தைகள், வரிகள் அவை உருவாக்கிய படிமங்கள்,  எல்லாம்  நம் மனக்கிணற்றில் தொலைந்துபோன பொருட்கள்போல ஆழ்ந்து முழுகிக்கிடக்கும். நம் மனதில் உதித்த ஒரு பொறியைக்…