“என்னுடைய உள்ளுணர்வும் அதை வெளிக்கொணரும் கோணங்களும்தான் ஒரு காட்சியைக் கலையாக மாற்றுகின்றன.”  தினேஷ் புஸ்பராணி

தினேஷ் புஸ்பராணி ஒரு நிழற்படக் கலைஞர். ‘ஃபிரி மலேசியா டுடே’ இணையச் செய்தி ஊடகத்தில் நிழற்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் கோலாலம்பூர் பெருநகரத் தெருவோர மனிதர்களைச் சித்திரிக்கும் நிழற்படங்களை எடுத்திருக்கிறார். நிழற்படத்துறையில் இருக்கும் தொடர் ஆர்வத்தால் மலேசியா முழுதும் இருக்கும் நாட்டார் கோவில்களுக்குச் சென்று எடுத்த நிழற்படங்களைக் கொண்டு ‘அறம்’ எனும் தலைப்பில் கண்காட்சியொன்றை…

பெருங்கனவில் பங்கெடுத்தல்

2022 ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகன் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க மலேசியாவுக்கு வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியை ஒட்டி கூலிம் பிரம்ம வித்யாரண்யத்தில் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியர் காவிய நூல்களின் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போதுதான், ஜெயமோகனிடம் எழுத்தாளர் ம. நவீன் ‘தமிழினி…

சங்கிலி

கால் முட்டிகள் இரண்டும் வலிக்கத் துவங்கியது. வலது முட்டியால் உடலைத் தாங்கிக் கொண்டு, இடதுகால் முட்டியைத் தளரச் செய்தேன். பின்னர் அந்தச் சலுகையை வலதுகால் முட்டிக்கும் கொடுத்தேன். மீண்டும் வலதுகாலைத் தரையில் ஊன்றி இடதுகாலைத் தூக்கும் பொழுது சற்றுத் தடுமாற என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் சந்துரு. “கைய மேல தூக்கி வச்சி ஒழுங்கா முட்டி…

மீன் வால்

நனைந்த துணியைப் போலத்தான் மாலதியின் உடல் படுக்கையில் கிடந்தது. உடலில் எந்த அசைவும் இல்லை. கண்கள் மட்டும் மேற்கூரையைச் சுற்றிக் கொண்டிருந்தது. வாயில் சீறல் போன்ற மூச்சொலி எழுந்த வண்ணமிருந்தது. எவ்வளவு கெஞ்சியும் முடியாதென மட்டும் தலையை மெல்லிதாக அசைத்துக் கொண்டிருந்தார். அவருடைய உடலை மூடியிருந்த மூன்று அடுக்கு உடைகளைச் சங்கரி கழற்றவும் நான் வேறு…

பேய்ச்சி: மலேசியத் தோட்டக்காட்டுத் தமிழர்களின் பெருமூச்சு

மலேசியாவில் தமிழர்கள் வேர்கொண்ட வாழ்வைப் பல்வேறு படைப்பாளிகள் தங்கள் புனைகதைகள் வழி வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு தோட்ட வாழ்விலும் பெரும் வாழ்க்கைப் போராட்டம் இருந்திருக்கிறது. எழுதப்படாதுபோன மக்கள் வரலாறு எத்தனையோ. அந்நிய பூமியில் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடியைத் தோட்ட வாழ்வின் சிதையை ஒரு நூற்றாண்டு பின்புலத்தில் வைத்து ‘பேய்ச்சி’ நாவல் பேசுகிறது. மற்ற நாவல்களின் கதை சொல்…

மலேசியப் பாட்டிகள் சொன்ன கதைகள் – ஜி.எஸ்.தேவகுமார்

மஞ்சள் நீர் ராமுவும் அவர் மனைவி ராணியும் காட்டை ஒட்டிய ஊரில் வசித்து வந்தனர். எழை குடும்பம். காட்டுக் கோழி, முயல்கள், காட்டுப் பன்றிகள் போன்றவையே அவர்களின் அன்றாட உணவு வகைகள். அதற்காக ராமு காலையிலேயே காட்டுக்குள் கத்தி, கோடரியோடு சேர்த்து குடிக்க தண்ணீரும் கொண்டு செல்வார். வீடு வர எவ்வளவு நேரமாகும் என அவருக்கே…

தோட்டத்து வேலை

கிணற்றடிக்கு அருகே தாறுமாறாக வளர்ந்திருந்த தோட்டத்துக்குள் எப்படியாவது ஓடி ஒளித்திட வேண்டும் என்ற பரபரப்பில் பாம்பு வளைந்து, நெளிந்து ஓடியது. மறையும் பாம்பைத் துரத்திக் கொண்டு வேகமாக ஓடி வந்த சிறுவன் புதைந்திருந்த எலும்பில் இடறித் தடக்கினான். அவனுக்கு வந்த முதல் நினைப்பு ‘அக்காட்டச் சொல்ல வேணும்,’ என்பதுதான். அக்காவுக்கு எல்லா விடயமும் அவனை விட…

666

கோயில்பிள்ளை எசாயாவிற்குத் திண்டுக்கல்லில் இருந்து ஆயர் கிளம்பிவிட்டதாக தகவல் வந்தது முதல் இருப்பு கொள்ளவில்லை. அவர்கள் சிற்றூருக்கு ஆறு வருடங்கள் கழித்து, புதுநன்மை மற்றும் உறுதிபூசுதல் சடங்குகளுக்காக ஆயர் வருகிறாரென்பதால், எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டுமென ஒன்றுக்கு மூன்று இல்லையில்லை, நான்கு முறை சரிபார்த்து சுற்றியிருந்தவர்களை எரிச்சல்படுத்திக் கொண்டிருந்தார். கோயில் உள்ளே ஐம்பத்தி மூன்று மணி…

காச்சர் கோச்சர்: நுட்பக்கலையின் உச்சம்

தற்கால கன்னட எழுத்தாளர்களில் விவேக் ஷன்பாக் குறிப்பிடத் தக்கவர். அவர் சிறுகதைகளை வாசித்த பின்னர் அவருடைய பிற நூல்களை வாசிக்க வேண்டுமென்ற உந்துதல் தன்னிச்சையாக எழுந்தது. அவற்றுள் ‘காச்சர் கோச்சர்’ என்ற குறுநாவலை மூன்று காரணங்களுக்காகத் தேடினேன். விவேக் ஷான்பாக் ஒரு மகத்தான கதைச் சொல்லி என்பதுதான் முதற் காரணம். வாசகனைச் சலிப்படையச் செய்யாத மந்திரப்…

சுஜாதா சிறுகதைகள்: தமிழாசியா சந்திப்பு

மார்ச் மாத தமிழாசியாவின் சந்திப்பு அமர்வில் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதைகள் குறித்து பேசப்பட்டது. பொதுவாக, அவர் வணிக எழுத்தாளர், அவரது எழுத்துக்களில் எவ்விதமான ஆழமோ அடர்த்தியோ இருக்காது என்ற விமர்சனங்கள் நம் செவி கேட்டிருக்கும். நவீன எழுத்தாளர்களின் ஒட்டு மொத்த எண்ணம் அதுவாக இருக்கலாம். ஆம் அவர் வணிக எழுத்தாளர்தான். ஆனால், சில கதைகளில்…

பேசும் படம்: சந்திப்பு 1

20 ஆம் நூற்றாண்டின் புகழ்ப்பெற்ற கலை, திரைப்படம். காட்சிகளைக் குறியீடுகளாக்கி மனித உணர்வுகளையும் உளவியலையும் திரையில் காட்டும் திரைக்கலை என்பது முழுக்க நவீனத் தொழிற்நுட்பம் உருவாக்கிய கலைவடிவம் எனலாம். பொதுவாகவே கலை வடிவங்களில் இருக்கும் வெகுஜன கலை மற்றும் தீவிரக்கலை எனும் பாகுபாடு திரைப்படங்களில் வலுவாகவே இருக்கிறது. புல்லிவட்டம் தொடங்கி மென்மையான இதழின் வண்ண வேறுபாடுகளையும்…