செயல்படுவதின் கொண்டாட்டம்

2006ஆம் ஆண்டில் பெரும் கனவுகளைச் சுமந்துகொண்டு, மலேசிய இலக்கிய உலகில் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல நான் சுற்றிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது என் வயது 24. அப்போதைய என் தோற்றத்தை எண்ணிப்பார்க்கிறேன். பெரும்பாலும் உடலைவிடப் பெரிய அளவு கொண்ட உடை, பரட்டைத்தலை, ஒட்டிய உடல், நேர்த்தியற்ற தோற்றம், கண்ணில் மட்டும் களங்கமற்ற கனவுகள். அப்போதும்…

“மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்று!” சாமிநாதன் முனிசாமி

சாமிநாதன் முனிசாமி ஒரு வரலாற்று ஆய்வாளர்; செயற்பாட்டாளர். விடுதலைக்கு முந்தைய மலேசியாவின் தொழிலாளர் மற்றும் விடுதலை போராட்டம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு தொடங்கி தன்னுடைய வலைதளத்தில் அகில மலாயா தொழிற்சங்கத் தலைவராகச் செயல்பட்ட மலாயா கணபதியைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துத் தொகுத்து வருகிறார். ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட சயாம்-பர்மா இரயில்வே…

முட்டைக் கண்ணன்

பள்ளி முடிந்து கோவில் வழியாக நானும் முட்டைக் கண்ணனும் வீடு திரும்பினோம். அவனை முட்டைக் கண்ணன் என்று அழைத்தால் தாக்கச் செல்வான். என்னிடம் மட்டும் கோபிக்க மாட்டான். என் மேல் அவனுக்குத் தனி அன்பிருந்தது. கோவிலுக்குப் பக்கத்தில் தகரத்தால் செய்யப்பட்டிருந்த கொட்டகை ஒன்றில் எங்கள் தோட்டத்து தேரைப் பூட்டி வைத்திருந்தார்கள். நானும் முட்டைக் கண்ணனும் தேர்…

பொன்னார் மேனியன்

தீவிரமாக செய்யப்படும் எந்த ஒரு செயலும் ஆன்மீக அனுபவத்திற்கு மிக அணுக்கமான ஒன்றாகவே இருக்க முடியும். இதில் முதன்மையானது பயணம் அல்லது ஆன்மீக நோக்கம் கொண்ட யாத்திரைகளைக் குறிப்பிடலாம்.  இவ்வகை யாத்திரைகளின் நோக்கம் ஒன்றே. அது ‘சுத்திகரிப்பு’ எனும் ஆழமான செயல்.   உடலாலோ  உள்ளத்தாலோ அல்ல, மேலும் உள்ளே சென்று நிகழும் ‘சித்த சுத்தி’ என்கிறது…

சாயை

வீட்டில் எவரும் இல்லை. மாசற்ற தனிமையை உணர வேண்டும் என்று உள்மனம் கோரியதால் மனைவியைக் குழந்தையுடன் கோவிலுக்குப் போகச் சொல்லியிருந்தேன். வாடகை ஆட்டோ ஒன்றில் அவர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்து மல்லாந்தபோதுதான் இவை அனைத்தும் அந்த நிழலின் திட்டமோ என்கிற சந்தேகம் மூண்டது. ஆனால் ஏனோ நான் அஞ்சவில்லை. பதற்றப்படவுமில்லை. பாயின் விளிம்பில் என் உடம்பை…

அப்சரா: முதல் எழுத்து; முதல் நூல்; முதல் அடையாளம்.

மே 24-ஆம் தேதி அன்று, வல்லினம் இணைய இலக்கியக் குழு ஏற்பாடு செய்திருந்த, ‘முதல் எழுத்து’ நிகழ்ச்சியில் என்னுடைய முதல் நூலான ‘அப்சரா’ வெளியீடு கண்டது. ‘முதல்’ என்ற சொல்லுக்கே ஒரு தனி மந்திரம் இருக்கிறது. முதல் அடியில் இருக்கும் பதற்றம், முதல் வெற்றியில் இருக்கும் பரவசம், முதல் அனுபவத்தில் இருக்கும் ஆச்சரியம் என இவை…

பின் தொடர்ந்த யட்சி

இது என் நான்காவது நாவல். நான் முதலில் வெளியிட்டிருக்க வேண்டிய நாவல் இதுதான். 2000இல் மன்னன் மாத இதழில் ‘பருவகாலப் பறவைகள்’ எனும் தொடரை எழுதியபோது மலேசிய இலக்கியச் சூழலில் சலசலப்பு ஏற்பட்டது.இடைநிலைப்பள்ளி மாணவர்களின் வாழ்வை அப்பட்டமாகச் சொன்ன தொடர்கதை அது. எனவே அவர்களின் மொழி அதில் வெளிபட்டது. அக்கினி சுகுமார் உள்ளிட்ட நான் மதிக்கும்…

தன்பாலினத்தவர்களின் அகச் சிக்கல்கள்

சமீபத்தில் என் உடல்நலப் பரிசோதனைக்கு என் நண்பர் டாக்டர் கேசவனைப் பார்க்கப்போயிருந்தேன். என் கையில் வைத்திருந்த ‘மோகனசாமி’ சிறுகதை நூலை வாங்கிப் பார்த்தவர் இது எதைப் பற்றி பேசுகிறது, என்று ஆர்வத்தோடு கேட்டார். அவர் ஒரு நல்ல வாசகர், மேடைப் பேச்சாளர். “ஓரினப்புணர்ச்சியாளர்கள் வாழ்வில் எதிர்நோக்கும் சிக்கலைப் புனைவுமொழியில் ஆழ அகலத்தோடு ஆராய்கிறது,” என்று சொன்னேன்.…

பாலையும் வாழையும்: வெங்கட் சாமிநாதனின் நீண்ட உரையாடல்

ஒரு புத்தகத்தை வாசித்து முடித்த பிறகும் அதன் கருத்துக்கள் நம்முள் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருந்தால், அந்த நூல் வெறும் வாசிப்பு அனுபவமாக இல்லாமல் ஒரு சிந்தனை அனுபவமாக மாறிவிடுகிறது. வெங்கட் சாமிநாதனின் ‘பாலையும் வாழையும்’ அப்படிப்பட்ட ஒரு நூல். முதலில் இது ஒரு கட்டுரைத் தொகுப்பு என்று தோன்றலாம். ஆனால் வாசிப்பு முன்னேற முன்னேற,…

சிறு தருணங்களில் பெருவாழ்வு: கந்தர்வனின் புனைவுலகம்

தமிழாசியா முன்னெடுத்து வரும் மாதாந்திரச் சிறுகதை கலந்துரையாடலின் ஜூன் மாத அமர்வில், எழுத்தாளர் கந்தர்வனின் நான்கு சிறுகதைகள் வாசிப்புக்கும் விரிவான கலந்துரையாடலுக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டன. ‘பத்தினி ஓலம்’, ‘தண்ணீர்’ ஆகிய இரு கதைகளின் வாயிலாக கந்தர்வனின் புனைவுலகம் குறித்த அறிமுகத்தை நவீன் முன்வைத்தார். ‘பத்தினி ஓலம்’ குடும்பமும் சமூகமும் ஒரு பெண்ணின் துயரத்தை எவ்வாறு மௌனமான உள்ளக்…

குழந்தைகள் உருவாக்கும் சொர்க்கம்

திரையிடலுடன் கூடிய சந்திப்பான ‘பேசும் படம்’ இரண்டாவது கலந்துரையாடல் ஏப்ரல் 11ஆம் திகதி நடந்தேறியது. இம்முறை இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளிவந்த ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) திரைப்படம் திரையிடப்பட்டது. 1997ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் 1999ஆம் ஆண்டு சிறந்த அயல் மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஈரானியத்…

நிதானம் 

ராமகிருஷ்ணன் நிம்மதியாகத் தூங்கி இன்றோடு ஐந்து வருடங்கள் இருநூற்று பன்னிரண்டு நாட்கள் ஆயிற்று. படுக்கையில் நீட்டி உருண்டு கொள்ளக் கூட அவனால்  முடிந்ததில்லை. ஒரு விரிசல் விழுந்த சுவர் போல இவன் அம்மாவின் உயிர் உடலோடு ஒட்டியும் ஒட்டாமலும் போன நாளிலிருந்து அப்படித்தான். இவன் சாயும் இடம், அம்மா உயிர் விடைபெறக்காத்திருக்கும்  அந்தக் கட்டிலின் அருகே…

மலேசியப் பாட்டிகள் சொன்ன கதைகள் – தொடர் – 2

க்ரூக் க்ரூக் மணிப்புறா ஓர் ஊரில் புறா வளர்ப்பதில் ஆர்வம் உள்ள ஒருவன் இருந்தான். அவன் பெயர் குமார். அவன் இரண்டு நாள் உண்ணாமல் மணிப்புறா வேண்டும் என அப்பாவிடம் அடம்பிடித்தான். வாங்கி தருகிறேன் என அப்பா வாக்குக் கொடுத்தார். ஆனால் சாமியின் பேச்சைக் கேட்டதும் மனம் மாறிவிட்டார். சாமி என்பவர் பகுதி நேரமாக பலகையில்…