கடுவெளி காந்தள்

“ஆன்மிகம் என்பது ஆதி தெய்வம் அல்லவோ, அது கோருவது மானுட பலி. ஒரு வண்டி நிறைய புல் கட்டுகளைத் தின்று, ஒரு செம்பு பால் மட்டும் கறக்கும் பசு போன்றது அது. இங்கே அறிவதை விட, அறிந்ததை விடுவதே அதிகம்.” சுவாமி பிரம்மானந்தரின் வரிகள். ‘வந்தவழி’ எனும் நூலில், முன்னுரையாக எழுதியது. அதை வாசித்த காலங்களில்…

புதையல்

1 அரியது எனத் தோன்றும் பொருட்களையெல்லாம் சேர்த்து வைக்கும் பழக்கம் எந்தப் பிராயத்தில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது என சரியாகச் சொல்ல முடியவில்லை. என் ஊரிலேயே நன்கு பம்பரம் விடத் தெரிந்தவரான பாண்டி அண்ணன் அழகான கோலிக்குண்டுகளைச் சேர்ப்பவராக இருந்தார். என்னுடனேயே சுற்றித் திரியும் ஓவு என்ற சின்னப்பையன் எதிர்க்காற்றில் வேகமாகச் சுற்றுவதற்கு இசைவான ஓலைகளைச்…

உணர்வு இடைவெளிகளில் உறைந்துள்ள பாதை

மலேசிய சீன, மலாய், தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆழமான அறிதலையும் இந்த இலக்கியங்களுக்கிடையே அணுக்கமான உறவையும் வளர்க்கும் விதமாக தற்போது முழு வேகத்துடன் வல்லினம் செயல்படுகிறது. வல்லினம் தொடங்கப்பட்ட 2009 முதலே, மலேசியாவி்ன் மலாய், சீனம், ஆங்கில இலக்கியங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்துள்ளது பன்மொழி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள், இலக்கிய மொழிபெயர்ப்புகள், மற்ற மொழி எழுத்தாளர்களின்…

அனல் மடி

சிலாவாடீ கடற்கரை ரிசார்ட்டிலிருந்து பார்க்கையில், ஒட்டு மொத்த தாய்லாந்து கடலும்  விழிகளுக்குள் அடங்கி விடுவதாகவே எண்ணிக் கொண்டேன். நோக்கு மறையும் தொலைவிற்கு வெறும் நீல திரை போன்ற நீர்தான். ‘என் ஊரிலும் இதே நீர்தான் இருக்கின்றது. ஏன் அங்குப் பார்த்த கடலை விட, இங்குப் பார்க்கும் கடல் வேறொரு உணர்வைத் தருகிறது’ என யோசித்தேன். அப்பொழுதுதான்…

விண்ணிலிருந்து வீழாதவர்களின் கதைகள்

அண்மையில் வெளியீடு கண்ட ‘விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்’ என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பின் தலைப்பை வல்லினத்தின் பெரு முயற்சிக்கான உருவகமாகவே காண்கிறேன். மலேசிய இலக்கிய வரலாற்றில் இந்த அரிய முயற்சியானது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் புதியதொரு பாதையைத் திறந்து வைத்துள்ளது. மலேசிய நவீன தமிழ் இலக்கிய அறிவுத்துறை வளர்ச்சிக்கும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.…

தாளம் தவறிய நாள் – ஜாகிர் ஹுசைன்

19.12.2024, சான் பிரான்சிஸ்கோவில் நுரையீரல் சிக்கலால் (Idiopathic Pulmonary Fibrosis) பாதிக்கப்பட்டிருந்த உஸ்தாத் ஜாகிர் ஹுசைன், தனது 73வது வயதில் இறந்தார் என்ற செய்தியை இணையத்தில் படித்ததும், மனம் கனத்தது. யாரிடமாவது இந்தக் கடும் செய்தியைப் பகிர்ந்தால், கண்களில் வரும் கண்ணீரை வார்த்தைகளாக மாற்றிவிடலாம். தொலைப்பேசியை எடுத்து, திரையில் விரலைத் தேய்த்தபோதுதான் தெரிந்தது அதிகாலை மணி…

ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை?  

பகுதி 1 ஒரு கிராமத்தில் வசிக்கும் தன் இளைய சகோதரியைப் பார்க்க வந்திருந்தாள் அவளின் மூத்த சகோதரி. மூத்தவள் நகரில் வசிக்கும் ஒரு வணிகனை மணமுடித்திருந்தாள், இளையவளோ கிராமத்தில் ஒரு விவசாயிக்கு  மனைவியாக இருந்தாள். மாலை தேநீர் வேளையில் மூத்தவள் பட்டணத்தின் தன் வசதியான வாழ்க்கையைப் பற்றி தற்பெறுமையோடு பேசிக்கொண்டிருந்தாள். நகர்ப்புறத்தில் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கையைப்…

முக்கோண கதைகள்/ Triangle of Tales

அறிவிப்பு காணொளி வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன. இந்த விழாவுக்கு வழக்கறிஞர் பசுபதி அவர்கள் தலைமை தாங்குகிறார். மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் தோற்றுனரான அவர் வல்லினம் உள்ளிட்ட…

செல்சி நீலம்

”Do you know Chelsea Blue?”அப்பா இறுதி மூச்சை விடுவதற்கு முன் என்னிடம் கடைசியாகக் கேட்டது அதுதான். அப்போது அப்பாவின் குரல் ஓர் உரோமம் கீழே உதிர்வது போல எடையற்று ஒலித்தது. “செல்சி நீலம்” நான் பலமுறை சொல்லிப்பார்த்தேன். அது முதலில் ஏதோ அதிகாலையில் இரகசியமாகச் சந்திக்கும் காதலர்களுக்கிடையே எழும் ஏக்கப் பெருமூச்சுபோல ஒலித்தது. அதன்…

தூறல் மழை

திடீரென நின்றது இரயில். இருண்ட கனவுலகிலிருந்து அவர் திடுக்கிட்டு விழித்தார். கண்ணீர் அவர் முகத்தை நனைத்திருந்தது. லக்கன் வகை டாக்பில் தொப்பியணிந்த ஆண்மகன் அவர். மழை கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் நின்றிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் நீர்த்துளிகளின்  அலங்கரிப்பு இன்னும் இருந்தது. கனவில், அவர் இன்றைய வாழ்க்கைக்கு முற்றிலும் வேறான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். சாதாரண கம்பத்தில் வாழ்ந்த…

இறைவனிடம் திரும்புதல்

ஹெபேயின் காங்ஜோவில் உள்ள அம்மாவின் சொந்த ஊரான சியான்சுவாங் கிராமத்திற்கு அவருடன் முதன்முறையாகச் சென்ற பழைய நினைவுகளை அசைபோட்டேன். அங்கே ஐந்து நாட்களுக்கு ஒரு முறை கூடும் சந்தைக்குத் தற்செயலாகச் செல்ல நேர்ந்ததும் நினைவுக்கு வந்தது. கிராம மக்கள் பலரை அங்கே பார்த்தேன், ஆண்கள் வெள்ளை குல்லா அணிந்திருந்தனர். சில பெண்கள் ‘ஹிஜாப்’ அணிந்திருந்தனர். ஒவ்வொரு…

இலக்கியத்தில் சிக்கலான தன்மை ஏன் உருவாகிறது?

தீவிர இலக்கியத்தின் தொடக்கநிலை வாசகர்கள் உணரும் சிக்கல்தன்மை என்பது எழுத்தாளர் வேண்டுமென்றே முனைந்து உருவாக்குவதல்ல. எளிமையான அணுகலை முன்னுரிமைப்படுத்தும் நேரடிக் கதைகூறலைப் போலன்றி தீவிர இலக்கியத்தின் இயல்புகளான, ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள், நுணுக்கமான சித்திரங்கள், திறந்த முடிவுகள் ஆகியவற்றினால் தொடக்கநிலை வாசகர் அதைச் சிக்கலாக உணர்கிறார். ஆழமான தத்துவ விசாரணைகள், வழக்கத்திற்கு மாறான கதைகூறல், மொழியியல்…

ஒலிப்புதையல்

“சூரியன ரசிச்சது போதும் மாமா!” பானுதான் சொன்னாள். சட்டென திரும்பலாமா வேண்டாமா என நிதானித்தேன். இப்படி நிதானமாக அமர்ந்து காலை நேரச் சூரியனைப் பார்த்து பல நாட்களாகிவிட்டதென தோன்றியது. சரியாகச் சொல்வதென்றால் மூன்று வருடங்கள்.  ”சாப்பாடு ஆரிடப்போவுது… சீக்கிரம் வாங்க மாமா,” குரலில் அன்பிருந்ததால் சிரித்தபடியே மனைவியைப் பின் தொடர்ந்தேன். தமிழகத்துப் பெண். கிராமத்துக்காரி. சொந்தம்…

தமிழில் எஸ்.எம். ஷாகீர்

அறிவியக்கத்தின் ஆணிவேராக இருப்பது மொழிபெயர்ப்பு. அறிவும் கலையும் இலக்கியமும் உலகம் முழுக்க சென்று சேர மொழிபெயர்ப்புகள் துணைபுரிகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்கு பெரியது. ரஷ்ய இலக்கியம், வங்க இலக்கியம், தென் அமெரிக்க இலக்கியம்,  ஐரோப்பிய இலக்கியம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் உலக இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தைச் செறிவாக்கியுள்ளன. மலேசியாவின் தேசிய மொழி…

மலாய் மொழியில் தமிழின் பத்து சிறுகதைகள்

மலேசியத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை 1930 முதல் 1978 வரை ந. பாலபாஸ்கரன் ஆறு காலக்கட்டமாகப் பிரித்திருந்துள்ளார். மலேசிய சிங்கப்பூர் ஆய்வுலகின் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படும் அவரது வரையறையே இன்றும் இலக்கிய ஆய்வுகளில் பிரதானமானது. ந. பாலபாஸ்கரன் கருத்துப்படி 1930களில் மலேசிய சிறுகதை இலக்கிய வரலாறு தொடங்குகிறது. 1941 வரை மலேசியாவில் வெளிவந்த பல தமிழ்…

மாஹுவா இலக்கியம்

மலேசிய உருவாக்கத்திலும் பண்பாட்டுப் பரிணாமத்திலும் சீன சமூகத்தின் பங்கு மிக ஆழமானது. சீனர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே மலாய் தீவுகளுடன் வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மலாய் சுல்தான்களும் சீனாவுடன் நட்புறவு கொண்டே அரசு செய்தனர்.  சுல்தான் மன்சூர் ஷா ஆட்சிக் காலத்தில் அவர் ஹங் லி போ எனும் சீன இளவரசியை மணந்ததுடன் இளவரசியுடன் மலாக்காவில்…

இறந்தவனின் வழித்தடம்

மைக்கல் ஒபியின் எதிர்பார்ப்புகள் அவர் நினைத்ததைவிடவும் சீக்கிரமாகவே நிறைவேறியது. அவர் இண்டுமே இடைநிலைப் பள்ளியில் 1949ல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பள்ளி எந்த விதத்திலும் முன்னேற்றம் காட்டாத பள்ளியாக இருந்தமையால் கல்வி இலகா தூரநோக்கு கொண்ட ஓர் இளம்  ஆசிரியர் ஒருவரை அங்கு அனுப்ப வேண்டியிருந்தது. மிகுந்த பொறுப்புணர்ச்சியோடும் ஆர்வத்தோடும் ஒபி அந்தப் பதவியை ஏற்றுக்…

உப்பிலி

1 மேனேஜரிடம் முறையிட்டு நான்கைந்து நாட்களாகிவிட்டது. ஒன்றும் பதில் இல்லை. ஒருவேளை என் விருப்பத்திற்கு எதிராக அவர் முடிவு எடுப்பாரெனில் இங்கிருப்பதில் பயனில்லை. பேப்பர் போட்டுவிட்டு வேறிடம் பார்க்கலாம். ஒரு மணி நேரத்தில் அடுத்த வேலையை வாங்கிவிடலாம். ஆனால் இங்கே இருக்கும் வசதிகளாலும் பழகிய முகங்களாலும் அவ்வளவு எளிதில் விட்டுக் கிளம்பிட மனம் ஒப்பவில்லை. பதினைந்து…

அற்புதம்

அப்பாவின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வருகிறது. ஒரு மாதமாக டெல்லியிலிருக்கும் உறவினர் வீட்டிலிருந்து அதற்கான வேலைகளைச் செய்தோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பா மனு போட்டார். ஒரு அரசாங்கத்திற்கு எதிராக தனி மனிதர் போராடுவது கடினம். அதோடு வெற்றி பெறுவதென்பது அரிது என பல்வேறுவிதமாக சொல்லியபோதும்…