எஸ். எம். ஷாகீர் ஓர் அறிமுகம்

மலேசியாவில் நவீன மலாய் இலக்கியச் சூழலைத் தொடக்கி வைத்தவர்கள் அசாஸ் 50 எழுத்தாளர்கள். அவர்களைத் தொடர்ந்து 60ஆம், 70ஆம், 80ஆம் ஆண்டு படைப்பாளர்கள் தங்களின் பங்கினையாற்றி வந்தனர். நவீன மலாய் இலக்கியச் சூழலில் யதார்த்தவியலை மையமாகக் கொண்ட எழுத்துப் படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிய காலக்கட்டத்தில் யதார்த்தவியலோடு புராணங்களையும் வரலாற்றையும் தொடர்புப்படுத்தி புனைவுலகில் புதிய முயற்சியில்…

பெருந்தேவியின் குறுங்கதைகள்: தமிழ்ப் புனைவின் புதிய நகர்வு

குறுங்கதை எனும் வடிவம் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பரவலாக எழுதப்பட்டபோது அது குறித்து தங்கள் புரிதலுக்குள் கட்டமைக்க பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. அவை குமுதம், விகடன் போன்ற இதழ்களின் ஒரு பக்கக் கதைகளின் வடிவம் என்றும், ஒரு வரிக் கதைகள், படக்கதைகள், துணுக்குகள் போன்றவற்றின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட பாவனை என்றும் சமூக ஊடகங்களுக்கென்றே எளிமையாக்கப்பட்ட கலை வடிவம்…

ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை

2009 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நிகழ்ந்த உச்சக்கட்டப் போர் காட்சிகளை நாள்தோறும் காலையில் ஒளிப்பரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதை போல, செய்தித்தாள்களிலும் போர் குறித்த செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பேன். இனம்புரியாத சோகமும், பீறிட்டு வரும் சினமும் எனக் கொஞ்ச நேரத்துக்கு மாறி வரும் உணர்வலைகளிலிருந்து மீண்டிருக்கிறேன். அந்த நேரத்து…

சிந்திப் பரவி தெருவின் அமளியிலேறும் நீலம்

“இரு கொட்டகைக்கிடையில் எப்போதும் போல தேங்கி நிற்கும் பாசியேறிய நீரில் தவளைக்கண்கள் முளைத்திருக்கும். அவை தலைப்பிரட்டைகளாய் அவ்வப்போது வெள்ள மிகுதியில் கொட்டைகையோரம் மண் திட்டாய் உயர்த்தப்பட்ட கரையோரம் உலவித் திரியும் போது பார்த்திருக்கிறேன். இப்போது பெரிய மழை பெய்து நாளானதில் மடுவுக்குள் சுருங்கிக் கொண்ட நீண்ட கால்களைக் கொண்டு பறக்கும் தவளைகளைக் கொஞ்சமாக உற்றுப் பார்த்தபடி…

குவான் யின்: பேரன்பும் பெண்ணான தெய்வமும்

உருவ வழிபாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களின் பிரதிபலிப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு தாக்கத்தால் உருவ வழிபாடு பலதரப்பட்ட வடிவங்களை எடுத்து, தற்போது 21-ஆம் நூற்றாண்டிலும் மக்களால் தீவிரமான மத வழிபாடாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பல கடவுள் கொள்கை (polytheistic) கொண்ட நாகரிகங்களான மெசொப்பொதாமியா (Mesopotamia),…

பேரருளாளனின் கருணை எனும் கிஸா

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முன் நானும், எழுத்தாளர் அஜிதனும் மத்திய ஆந்திரா நிலத்தில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டோம். அப்போது எங்கள் பயணத்தை முடித்து பேருந்துக்காகக் காத்திருந்த இரண்டு மணி நேரத்தில் எத்தேச்சையாகக் கடப்பா அமீன் பீர் தர்காவிற்கு சென்றோம். அன்று அஜிதனின் அடைந்த மனநிலை ஒரு புனைவு எழுச்சிக்கானது. அன்று என்னிடம் சூஃபி மெய்…

அசோகமித்திரனை அறிதல்

கலை என்பது குறியீடுகளின்வழி உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புப்படுத்தும் முறை என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். ஒலிக் குறியீடுகள் இசைக் கலை ஆகின்றன, உடல் அசைவின் குறியீடுகள் கூத்துக் கலையாகின்றன, காட்சிகளின் குறியீடுகள் ஓவியக் கலையாகின்றன. அதுபோலவே சொற்களின்/ மொழியின் குறியீடுகள் இலக்கியக் கலையாகின்றன. இப்படிச் சொற்கள் உணர்த்தும் குறியீடுகளைப் புரிந்து கொள்ளும்போது இலக்கியம் நம் வசப்படுகிறது. இலக்கியக்…

புதுமைப்பித்தனின் மூன்று சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

சிறுகதை என்பது ஒரு கலை வடிவம். அதன் எளிமையும் வாசிக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் பலரையும் அதன்பால் ஈர்க்கிறது. இச்சூழலில் மொழியால் ஆன அக்கலை வடிவத்தை முழுமையாகச் சென்றடைகிறோமா என்பது புதிய வாசகர்களிடம் எப்போதும் உள்ள பிரதானமான கேள்வி.  சிறுகதை வாசிப்பு என்பது அதனுள் பூடகமாகச் சொல்லப்படும் கருத்தை உருவி எடுத்து ஒப்புவிப்பதாகவே மலேசியாவில் பழக்கமாகிவிட்ட சூழலில்…

கு. அழகிரிசாமியை வாசிக்கும் முறை

‘தமிழாசியா’ மாதம் ஓர் எழுத்தாளரை அறிமுகம் செய்துவைக்கும் வண்ணம் தொடர்ச்சியாகச் சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெவ்வேறு நிலையிலான இலக்கிய வாசிப்புப் பயிற்சி கொண்ட எட்டுப் பேர் பங்குகொண்டு வருகிறோம். ஆகஸ்ட் 19ஆம் திகதி நான்காவது சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், இருவர்…

‘கரிப்புத் துளிகள்’ நாவலில் ஒரு பகுதி

(மிக விரைவில் வெளியீடு காணப்போகும் எழுத்தாளர் அ. பாண்டியன் எழுதிய கரிப்புத் துளிகள் நாவலின் ஒரு பகுதி) ஐயாவுவிடம் மறுபடியும் மறுபடியும் தேவதைகள் பற்றிக் கேட்பது சிறு பிள்ளைபோல இருக்கும் என்று தயங்கினான். ஆனாலும் மோதிச் சிதறும் அலையோசையும், நிலவொளி படிந்த கடற்கரையும், பெரு நிலவும், எங்கிருந்தோ கரையேறி வந்துகொண்டிருக்கும் கடலாமைகளும் அவனுக்கு மயக்கத்தைக் கொடுத்தன.…

இருள் நிரப்பி மிரட்டும் புனைவு

ம.நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவலில் ஒரு பகுதி அதிகம் என்னை ஈர்த்தது. அந்நாவலின் நாயகன் தீபன் அவசரத்தில் இன்னும் தயாராகாத கரிபாப்பை கடையிலிருந்து எடுத்து ருசித்துக் கொண்டே செல்கிறான். அதே நாளில் கரி மீ , நாசி ஆயாம், சென்டோல் என்று வயிற்று பசிக்கேற்பத் தின்றுக் கொண்டே மனதில் திட்டம் ஒன்றை சுமந்து நடக்கிறான். யோசித்துப்…