கடவுளும் கலையும்

குளியலை முடிப்பதற்குள் சனிரா பஜ்ராச்சார்யாவிடமிருந்து (chanira bajracharya) இரண்டு முறை அழைப்புகள் வந்திருந்தன. விரைவாகக் குளியலை முடித்து, மிகுந்த உற்சாகத்துடன் அவளுக்கு மீண்டும் அழைத்தேன். அவளின் குரலை முதன் முறையாகக் கேட்கப் போகிறேன்; எந்த இடையூறும் இருக்கக் கூடாது என உறுதி செய்து கொண்டே தொலைப்பேசியைக் காதில் ஒத்திக் கொண்டேன். இரு முறையும் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.…

தி. ஜானகிராமனின் சிறுகதைகள்

‘ஒரு எழுத்தாளனின் முக்கியத்துவம், மற்றவர்களுக்கு விவரிக்க நேரமில்லாத விடையங்களை விவரிப்பதே’ என்கிறார் ஜேம்ஸ் பால்டவின். ஆனால், மனிதர்களின் இயல்பையும் யாதர்த்தமான உள்ளுணர்வுகளையும் படம்பிடித்துக் காட்டுவது எளிதானது அல்ல. மனிதர்கள் மாற்றத்திற்கும் மறதிக்கும் பழக்கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொண்ட நமக்குத் தனது எழுத்துகளின் மூலம் அனுபவத்தை ஆறப்போட்டுச் சிந்திக்கத் தூண்டுகிறார் தி. ஜானகிராமன். அந்த எழுத்தாளுமை…

மரணம்: மூன்று குறுங்கதைகள்

மெழுகுடல் எம்.டி.சி பேருந்தின் அத்தனை அத்தனை கண்களும் என்னைத்தான் பார்க்கின்றன, துருவேறி தோலைக் கீறிட கரந்து காத்திருக்கும் சிறு கம்பி நுனிகளைப் போல. சிறு வயதில் அப்பா ஒரு முறை சொல்லியிருக்கிறார் “சிறு துரு உடலில் ஏறினால் கூட அது நீரி நீரி உயிரை எடுத்துவிடும்.” இப்போது நான் நூறு மடங்கு மென்மை கொண்டது போல…

இச்சை : இரண்டு குறுங்கதைகள்

உனக்கென்ன கேடு சொல்லு மிஸ்டர் குமார் பயந்துவிட்டார். இனி சமாளிக்கவே முடியாது. இவ்வளவு நாட்களாகப் காப்பாற்றி வந்தவை எல்லாம் காற்றோடு போகப்போகின்றது. ஏற்கனவே பாதி பறந்தாயிற்று. மிச்சமுள்ளவை எல்லாம் வீட்டிற்குப் போனதும் பறக்க தயாராக இருக்கின்றன. தன் மனைவிக்குத் துரோகம் செய்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாகத் தான் லீலாவைப் பார்த்திருக்கக் கூடாது எனலாம். முதல் நாள்…

கரிப்புத் துளிகள்: நகரமயமாதலில் பலியாகும் எலிகள்

முன்னாள் தமிழக முதல்வர் சி என் அண்ணாதுரை ஒருமுறை (1965ல்) மலேசியா வந்த போது ‘பிற நாட்டில் தமிழர்கள் வசிக்கிறார்கள், ஆனால் மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள்’ என்று சொன்னார். அப்போது மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ‘அண்ணாதுரை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் நல்லாத்தான் இருக்கோம்போல‘ என்ற எண்ணங்களை விதைத்துவிட்டுச் சென்றவை அவ்வரிகள். ஏனெனில் அதை…

தாராவின் அரசியல்

பொதுவாகவே எனக்கு தமிழ்நாட்டு நாவல்களை வாசிப்பதைக் காட்டிலும் மலேசிய நாவல்கள் வாசிப்பது மிகப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நாவல்களில் காட்டப்படுகின்ற வாழ்க்கைக்கு நெருக்கமான அல்லது பழகிவிட்ட மலேசியச் சூழல்கள், மலேசிய எழுத்தாளர்களின் எளிய வாசிப்புக்கு உகந்த எழுத்து நடை, பலத்தரப்படாத வாசிப்பு நிலை, வெகுஜன இரசனையை எதிர்பார்க்கும் வாசிப்பு மனம் என எதை…

கரிப்புத் துளிகள் : கட்டுமானங்களுக்கு அடியில் கொதிக்கும் உப்பு

பலமுறை பினாங்கு பாலத்தைக் கடந்திருக்கிறேன். அதன் கட்டுமானமும் அழகும் பெரிதும் வசீகரிக்கக்கூடியதுதான். ஆனால் இம்முறை ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவிற்குச் செல்கையில், பினாங்கு பாலத்தைக் கடக்கும்போது இனம்புரியாததொரு படபடப்பும் சேர்ந்து கொண்டது. கடலலையில் கிருஷ்ணன், துரைசாமியின் நினைவுகளும் டானு விழுந்த ஐம்பத்தாறாவது தூணும் துரத்திக் கொண்டிருந்தன. ஓரிரு தினங்களுக்கு முன் படித்து முடித்த அ. பாண்டியனின்…

தாரா: ஓர் அறச்சீற்றம்

ம.நவீனுடைய ‘தாரா’ நாவலை வாசித்து முடித்தபின் எனக்கு முதலில் தோன்றியது இந்த உணர்வுதான். ‘தாரா ஓர் அறச்சீற்றம்’ நாவலில் வரும் பழங்குடிகளின் தலைவனின் கூற்றான,“தலைவனிடம் அறம் இல்லாததில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஒரு குலத்தில் உள்ள பெண்களிடம் அறம் பிறழும்போது அதுவே அக்குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என்பதை மறவாதே. உன் குலப்…

கரிப்புத் துளிகள்: மானுட அகம்பாவமும் அகூபாராவும்

மனிதனுக்குத் தனிச்சொத்துகள் மீது ஆர்வம் எழுந்தபோது, அது பேராசையாக வளர்ந்து லாபத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் எதையும் செய்யலாம் எனும் நிலை எழுந்தது. இயற்கை வளங்கள் அப்படித்தான் தனி மனிதர்களின் உடமைகளாகப்பட்டு சுரண்டப்பட்டன. சுயத் தேவை, பேராசை, பொருளாதாரம், அதிகாரம் போன்றவற்றை நிலைநாட்டிக்கொள்ளவதற்காக அழிக்கப்பட்டு வருகின்ற இயற்கை வளங்களோடு எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நந்தைச் சுவடுகளாக தத்தம் தடயங்களை…

சுழி

வெளியே நல்ல வெயில். ரேஷன் கடையில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வைத்துவிட்டார்கள். சாமான்களைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தேன். வீட்டு வாசலில் இருந்து பார்த்தபோது வீட்டின் பிரதான கதவு திறந்தே கிடந்தது. ஸ்கேன் எடுக்கச் சென்றிருந்த தாயும் மகளும் வந்துவிட்டார்கள். வாசல் கதவை அப்படியே திறந்து போட்டுவிட்டு உள்ளே ஏதோ ஒரு…

மலேசியாவின் இரு சமகால நாவல்கள்: மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீன் & அ. பாண்டியன்

2023 இல் மலேசியாவில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இரண்டு நாவல்களான ‘தாரா’ & ‘கரிப்புத் துளிகள்’ குறித்த கலந்துரையாடல். மலேசிய எழுத்தாளர்கள் ம. நவீனையும், அ. பாண்டியனையும் நேரில் சந்திக்க வாருங்கள். எழுத்தாளர்கள் குறிப்பு: ம.நவீன் ம.நவீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கவிதை…