ஆடும் தேவி

துணுக்குற்று கண் விழித்த பொழுது, உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு. மிக உயரமான கட்டடத்திலிருந்து விழுந்ததால் அவ்வுணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். கனவுதான். ஆனால், உணர்ச்சி நிஜமானது. ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டது முதல் இப்படியான கனவுகள்தான் மூன்று மாதங்களாக வருகின்றன. ஆனால், மதிய நேரத்தின் இடைவெளி உறக்கத்திலும் இப்படியான கனவு வருவது வியப்புதான். உதட்டின் ஓரத்தில்…

நெடிய பயணம்

இன்றைய தினம் சீக்கிரம் முடிவடைந்தால் போதும் என்று இருந்தது. அப்பா முன் தினமே நன்றாக குடித்திருந்தார். அவர் அருகே அதன் நெடி காலையிலும் வீசியது. வழக்கத்துக்கு மாறாக காலையிலேயே குளித்து நெற்றி நிறைய திருநீறு பூசி இருந்தார். எப்போதும் இல்லாத அவருடைய இன்முகம் எனக்கும் அக்காவுக்கும் எரிச்சல் ஊட்டியது. தாங்கவே முடியாத இன்றைய தினத்துடன் மல்லுக்கட்ட…

பிரபஞ்ச நடனம்

கூகிள் மேப் செயலியில் மீண்டும் ஒரு முறை சோதனை செய்தேன். நான் வந்திருப்பது சரியான இடம்தான் என அது சொல்லியது. ஆனால், என் முன்னே சாலை நிறைவடைந்து பாலையின் மணல் மேடுதான் இருந்தது. பார்வைக்குச் சாலை மணலினுள் புதைந்திருப்பது போல காட்சியளிக்கவே நான் காரிலிருந்து இறங்கி மணல் மேட்டின் மேலேறிப் பார்த்தேன். சுற்றிலும் இருள். கண்ணுக்கு…

“இந்த விருதினால் எனது வாழ்வில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை” ஹான் காங்

இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்று, உலக அரங்கில் கொரிய எழுத்தாளர்களின் வளமான கதைகளின் மீது கவனத்தை ஏற்படுத்தியுள்ளார் 54 வயது தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் (Han Kang). இலக்கிய உலகம் மிகப் பரந்தது. நோபல் விருது போன்ற அனைத்துலக அங்கீகாரங்கள் உலகின் எல்லா மூலைகளுக்கும் இலக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்துகின்றன.   இவ்வாண்டு…

கடலும் கலங்கரை விளக்கமும்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் சமூகத்தில் அரசியலில் தனிமனிதரில் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டமாகத் திகழ்கின்றது. உதாரணமாக, உ.வே.சா நம் பண்பாட்டின் வேர்களைத் தேடிச் சென்றார். நாட்டு விடுதலைக்காக காந்தி போன்ற தலைவர்கள் பின்னால் மக்கள் திரண்டார்கள். விவேகானந்தர், பாரதி போன்றவர்கள் மக்களிடம் பேசிக் கொண்டேயிருந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆர்.எஸ்.சுப்புலட்சுமி போன்றவர்கள் அமைப்புகளை…

வல்லினம் இலக்கிய முகாம் 30 நவம்பர் – 1 டிசம்பர்

வல்லினம் இலக்கியக் குழு இவ்வருடம் இலக்கிய முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த இலக்கிய முகாமை ஜா. ராஜகோபாலன் வழிநடத்துகிறார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் அறியப்பட்டவர். சங்கப்பாடல்கள், பக்திப்பாடல்கள், நவீன கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த இலக்கிய முகாமில் எவ்வாறு ஒரு படைப்பை வாசித்து ஆழமாக அறிவது…

மாயரஞ்சனும் கானரஞ்சனும் – சுரேஷ்குமார இந்திரஜித் நாவல்கள்

80களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர் சுரேஷ்குமார இந்திரஜித். 84 சிறுகதைகளை எழுதிய பிறகு, ஏறத்தாழ 40 வருடங்கள் வரை நாவலே எழுதாமலிருந்தவர், 2019ஆம் ஆண்டு அவரது முதல் நாவலான ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலை எழுதினார். அதற்குப் பின்பான இந்த நான்காண்டுகளில் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’, ‘நான் லலிதா பேசுகிறேன்’ மற்றும் ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’…

என் மெத்தையில் ஒரு நாகம்

இரும்பு வேலிக்குப் பின்னால் அடர்ந்து வளர்ந்திருக்கும் புதர்களுக்குள்ளிருந்தும், மரங்களில் ஊர்ந்தும் இந்தக் குடியிருப்புக்குள் ஏதும் வரக்கூடுமோ என்ற அச்சமூட்டும் பிரம்மையுடன் இந்த அமைதியான மலைப்பகுதியில் நான் உறங்கத் தொடங்கி சில இரவுகள் கடந்துவிட்டன. கூடவே, நான் வசிக்கும் இந்த வீட்டின் குடியிருப்பாளர் யார் என்ற என் சந்தேகம் என்னை மேலும் அயற்சியுற வைக்கிறது. இந்தச் சிறிய…

மாரிட்ஜானின் உடல்

அந்தியில் நாங்கள் கினரெஜோவுக்குச் சென்று சேர்ந்தபோது கிராமத்தின் பெரும்பாலான மக்கள் கீழே பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். செல்லும் வழியெங்கும் அடர்ந்த காட்டிற்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக மின்னித் துடித்துக் கொண்டிருந்தன. எங்கள் குழுவில் மூத்தவரான எண்பது வயது கடந்த ம்பாஹ் சுரக்ஸோ கூட தன் வாழ்நாளில் அதுவரை இத்தனை மின்மினிகளைப் பார்த்ததில்லை என்று வியந்தார். இருள்…

வருடல்

சிரம்பானில் ‘முருகம்மா’ என்ற பெயரில் ஒருவரைத் தேடுவதென்பது சிரமமான காரியமாக இருக்காது என்றுதான் நினைத்திருந்தேன். முருகம்மா என்ற பெயர் உள்ளவர்கள் நிச்சயம் மிகக் குறைவானவர்கள்தான். அதுவும், என் தலைமுறையிலோ அதற்கடுத்த தலைமுறைகளிலோ பிறந்தவர்களுக்கு நிச்சயமாக முருகம்மா எனப் பெயர் இடப்பட்டிருக்க வாய்ப்பிருக்காது என்பதால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், யாரிடம் சொல்லித் தேடுவது என்பதில் தொடங்கி எதையெல்லாம்…

தாரா: அனைத்து புத்தர்களின் தாய்

மனித வரலாற்றின் பரிணாமத்தில், பெண் தெய்வ வழிபாடு காலங்கள் கடந்தும் மாறாமல் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பெண் தெய்வ வழிபாடு மனித நாகரிகங்கள், கலாச்சாரங்கள் நம்பிக்கை போன்றவற்றைச் சார்ந்த அமைப்புகளை வடிவமைத்ததில் முக்கிய அம்சமாகவே இருந்துள்ளது. வெவ்வேறு பெயர்கள், முகங்கள் சின்னங்களால் அடையாளப்படுத்தப்பட்டாலும், இந்த மரியாதைக்குரிய போற்றுதல் அனைத்தும் பெண் புனிதமானவள் என்ற ஒரு புள்ளியிலே…

சுகர் டாடி

அம்மா இறந்து இதோடு நான்கு மாதங்கள் ஆகிறது. நான் இன்னும் அம்மாவுடைய கடைசி காதலன் வீட்டில் தான் இருக்கிறேன். அவர் மிகவும் நல்லவர். என்னை அவர் வீட்டில் இன்னமும் வசிக்க அனுமதிக்கிறார். எனக்கென்று ஒதுக்கப்பட்ட அறை இன்னும் எனக்கானதாகவேதான் இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து இம்மாதிரி பல வீடுகளின் அறைகளில் தங்கியிருக்கிறேன். அம்மா அவருடைய அப்போதைய…

கு. ப. ராஜகோபாலன் சிறுகதைகள்

தமிழ் நவீன சிறுகதை உலகின் முன்னோடிகளாகத் திகழும் புதுமைபித்தன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், கி.ராஜநாரயணன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, ல.ச.ரா, ஜி.நாகராஜன், யுவன் சந்திரசேகர் எனப் பலரின் சிறுகதைகள் தமிழாசியா ஏற்பாட்டில் நிகழும் கலந்துரையாடலில் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வந்திருகின்றன. அவ்வகையில் கடந்த ஜூன் 29 எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் 4 சிறுகதைகளைக் குறித்த…