நீலகண்டம் : பிரியத்தின் திரிபு

இந்திய நவீன மனதில் இன விருத்தி என்பதற்கான இடம் தொல் மரபிலிருந்து அதிகம் விலகிச் செல்லவில்லை. மனதளவில் அதற்கான இறுக்கம் அதே மரபான தன்மையுடன் இருக்கிறது. சந்ததி விருத்தியின் ஒரு கண்ணி அறுந்துவிடும்போது ஏற்படும் சங்கடமானது, வாழ்கையின் பொருளியல், பாதுகாப்பு என்பவற்றோடு நிறைவான வாழ்க்கை உணர்வு எல்லாவற்றையும் நெருக்கடி கொள்ளச் செய்கிறது. நவீன வாழ்க்கையில் குழந்தைப்…

வாழ்க வாழ்க: கோஷமிடுபவர்களின் கதை

மௌனி 1938ல் மணிக்கொடியில் ‘மாறாட்டம்’ என்றொரு கதை எழுதி இருக்கிறார். மௌனியின் பல கதைகளில் வருவதுபோல ஒரு ‘அவன்’ தான் இக்கதையிலும் நாயகன். ஒரு மதியத் தூக்கத்துக்கு பின் நகரில் உலாத்திவரக் கிளம்புகிறான். அவனை ஒரு கிராமத்து ஆள் பின் தொடர்கிறான். அந்த ஆளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவன் எங்கெல்லாமோ சுற்றுகிறான். அந்த ஆள் விடுவதாக…

உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்

(1) சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில்  சமூகம், அரசியல்  மற்றும் சித்தாந்தம் என பலதரப்பட்ட வகையில் மாறுதல்களைக் கண்டவற்றில் தமிழகம் மிகவும் முக்கியமான மாநிலம்தான். மாறி  மாறி வரும் தமிழ் சமூக சூழலில் இன்னும் ஒரு யதார்த்த நாவலுக்கான களம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  தான் பாடுபட்டு ஒன்றை உருவாக்கி தன் தலைமுறைக்கு வைத்துச் செல்வோம்,…

மரயானை: எஞ்சும் படிமம்

இலக்கியத்தில் நிலைபெற்றிருக்கும் சில படிமங்கள் காலாதீதமான கனவுகளை விதைக்கச் செய்கின்றன. அத்தகைய கனவுகளை விரியச் செய்யும் படிமம்தான் ‘மரத்தில் மறைந்தது மாமத யானை’ எனும் திருமந்திர வரி. மரத்தில் ஒளிந்துகொண்டது மாபெரும் யானை எனும் பொருள் தரும் திருமந்திர வரி படைப்பாளர்களுக்குள் இருக்கும் படைப்பு மனத்தைத் தூண்டும் மகத்தான வரி. மரம் நிலைகொள்ளுதலின் குறியீடு. வேரை…

கங்காபுரம்: வரலாற்றின் கலை

வரலாற்றை நாவலாகப் புனைவதில் ஒரு வசதியுள்ளது போலவே சிக்கலுமுள்ளது. இதில் வசதியென குறிப்பிடுவது நாவலுக்கான தகவல்கள். வரலாறு நமக்கு தகவல்களை நம் முன் அறுதியிட்டு தருகிறது. திரண்டு கிடக்கும் அந்த தகவல்களை நம் புனைவு யுக்தியின் மூலம் கேள்விகளை எழுப்பி மேல் சென்றால் போதுமானது. அந்த தகவல்களைப் புனைவாக்கும் தருணங்கள்தான் அதில் ஆசிரியன் எதிர்க்கொள்ளக்கூடிய சிக்கல்.…

மண்புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்

கண்களைப் பாதி மூடியபடிதான் வண்டியை ஓட்டினேன். காற்றில் மாலைநேரத்திற்குண்டான ஏதோ ஒலியிருந்தது. இசைக்கருவியின் மென்னொலி போல ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது காற்று. முன்னால் அமர்ந்திருந்த முகிலனின் வலது கையில் பேட். அதை கால்களுக்கு இடையே வைத்துப் பிடித்திருந்தான். இடது கையில் புதிய ஸ்மைலி பந்து இருந்தது. அதை அவன் பிடித்திருந்தவிதம் அழகிய கண்ணாடி பொருளைப் பத்திரமாகப் பிடித்திருந்தது…

கூத்து

“சரி…. இறங்கு” என்றான் சேகர். நான் அவசரமாக இறங்கி நின்றேன். தலைக்கவசத்தைக் கலற்றியபோது ‘டும் டும்டும் டும் டும்டும்’  என கதி மாறாமல் முரசு அதிரும் சத்தம் கேட்டது. ஒலிபெருக்கியில் சீனத்தில் ஆண் குரல் எதிரொலிகளோடு கேட்டது. அவன் மோட்டர் சைக்கிளை பர்கர் வண்டிக்குப் பின்னால் சாய்வாக நிறுத்தி விட்டு சாவியை உருவிக் கொண்டு வந்தான்.…

திருமுகம்

யாருமே இல்லாத அறையில் தன்னை யாரோ அழைத்தது போல் இருந்தது, அவனுக்கு. க்வாரண்டைனால் முடங்கிப் போய்விட்ட அருங்காட்சியகம் என்பதால் அந்நியக் குரல் ஒன்று ஒலிப்பது சாத்தியமே இல்லை. “குஞ்ஞூ” என்று அதே சப்தம் மீண்டும் ஒருமுறை ஒலிக்க, பிடரி மயிரிலிருந்து கணுக்கால் வரை சிலிர்த்தது. கையில் இருந்த பிரஷை அப்படியே போட்டுவிட்டு, கதவைத் திறந்து வெளியே…

விலங்குகள் திரியும் கதைகள்

சமகால மலேசிய புனைவிலக்கிய வெளியில் ம.நவீனின் எழுத்துகள், எண்ணிக்கையாலும் அது அடைந்திருக்கும் வாசகப் பரப்பாலும் கவனம் கொள்ள வைக்கின்றன. ஆழமற்ற நேர்கோட்டுக்கதைகளை அதிகம் வாசித்துப் பழக்கியிருக்கும் மலேசிய வாசக சூழலில் ம.நவீனின் புனைவுகள் மாறுபட்ட வாசிப்பனுபவத்தைத் தருபவை. வாசகனின் உழைப்பைக் கோருபவை. காலத்தால் நிகழக்கூடிய அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கியே இலக்கியம் பரிணமிக்கிறது. மொழி, சொல் முறை,…

மலேசிய நாவல்களும் ரசனை விமர்சனமும்

எனது இலக்கிய வாசிப்பை 2006க்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். என் பதினேழாவது வயதில் நான் பணியாற்றிய வீரா புத்தகக் கடை வழியாக சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, சிவசங்கரி, தமிழ்வாணன், ராஜேஷ்குமார், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் என ஒரு ஜனரஞ்சக வாசிப்புப் பின்புலம் உருவாகியது. பௌத்தத்தில் ஆர்வம் ஏற்பட்ட காலகட்டத்தில் வாசிப்பு ஓஷோவை…

பறவைகளின் வலசை

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘விசும்பு’ சிறுகதையை வாசித்தபோது பறவைகளின் வேடந்தாங்கல் குறித்த ஆச்சரியம் விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. மலேசியாவில் வேடந்தாங்கலுக்கான சரணாலயங்கள் பல உள்ளன. ஃபிரேசர் மலை அதில் ஒன்றாக இருப்பது பலரும் அறிந்த தகவல்தான். பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்திருக்கும் பிரேசர் மலை (Fraser’s Hill) 1950ஆம் ஆண்டு தொடங்கியே பறவைகள் சரணாலயமாக அடையாளப்…