அந்தக் கோயில்

நாங்கள் தத்தளிப்பு மிகுந்த பரவசத்திலிருந்தோம். தேனிலவுடன் வரும் எதிர்ப்பார்ப்பு, விடலைக்காதல், மென்மை, வெம்மை ஆகியவற்றுடன் நெகிழ்ந்திருந்தோம். அரை மாதமே விடுமுறை என்றாலும் வங்வங்கும் நானும் பயணத்தைப் பலமுறை திட்டமிட்டிருந்தோம்; பத்து நாட்கள் திருமண விடுப்பு,மேலும் ஒரு வார கூடுதல் வேலை விடுப்பு. திருமணம் என்பது வாழ்வின் மிக முக்கிய நிகழ்வு. எங்களுக்கு அதைவிடவும் வேறெதுவும் அத்தனை…

வாட்ஜ்டாவும் பச்சை நிற சைக்கிளும்

பல நூற்றாண்டுகளாக, பெண் உரிமைக்கும் அவர்களுக்கான சுதந்திர வெளிக்கும் முக்கியத்துவம் கொடுக்காத சவூதி அரேபியா இன்று பல மாற்றங்களை கண்டு வருவதாக ஊடகங்கள் சொல்கின்றன. சவூதி மன்னன் சல்மான் தலைமையில் நடக்கும் மாற்றத்தின் வேகமும் அவை  மேற்கத்திய செய்தி ஊடகங்களில் முதல் பக்கச் செய்திகளாகக் காட்டப்படுவதும் எத்தனை நாள் நீடிக்கும் என்ற சந்தேகங்களை பல அரசியல்…

கொல்லப்படும் குறிகள்

3000 வருடங்களுக்கு முன், எகிப்து மன்னராட்சியின் போது, பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு, பண்டைக்கால பாபிருஸ் ஏட்டில் (Papyrus Salt 124) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக டெய்லிமெய்ல் இணையத்தள செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.  Deir el Medina-வில் தங்கியிருந்த பானெப் எனும்  சிறந்த  கட்டிடக்கலை கைவினைஞர் (Paneb) மேல்…

“மனைவியின் தாலியை அடகுவைத்து புராதனப் பொருட்கள் சேகரித்தேன்” பிரகாஷ்

பினாங்கு இந்திய மரபியல் அருங்காட்சியகத்தின்  நிர்வாகி பிரகாஷ்,  ஜெகதீசன் – ராஜகுமாரி தம்பதியரின் இரண்டாவது மகன் . இவர் பிறந்து வளர்ந்தது பேராக் மாநிலத்தில் உள்ள பாரிட் புந்தார் நகரில். தந்தையார் முடித்திருத்தும் கடைகள் வைத்துள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்த இவர் தன் சொந்த முயற்சியில் பினாங்கு தீவில் இந்திய மரபியல் அருங்காட்சியகம்…

“தற்காலிக மன விலகல்கள் வரலாற்றுக்கு அவசியமற்றது.” – மா.செ.மாயதேவன்

1950களில் மலேசியாவில் ஏற்பட்ட புதிய இலக்கிய அலையில் உருவானவர் மா.செ.மாயதேவன். இரு நாராயணன்களும் நடத்திய கதை வகுப்பு, கு.அழகிரிசாமி உருவாக்கிய ‘இலக்கிய வட்டம்’, கோ.சாரங்கபாணியின் தமிழர் திருநாள் என பல்வேறு கலை இலக்கிய முன்னெடுப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு, சிறிது சிறிதாகத் தன்னைச் செதுக்கிக்கொண்டவர். 85 வயதான அவரை நேர்காணலுக்காக தைப்பிங் நகரில் சந்தித்தோம். பலவற்றை அவர்…

“எழுத்தாளனை உருவாக்க முடியாது” – மா.இராமையா

‘இலக்கிய குரிசில்’ முனைவர் மா.இராமையா, 1946ஆம் ஆண்டு ‘காதல் பரிசு’ என்ற முதல் கதையை எழுதியதன் வழி மலேசியத் தமிழ்ச் சிறுகதை உலகின் அடியெடுத்து வைத்தவர். இதுவரை 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 1000திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் 50க்கும் மேற்பட்ட கவிதைகளும் 12 நாவல்களும் எழுதியுள்ளார். இவர்பெற்ற பரிசுகளின் பட்டியல் மிக நீண்டது. ‘மலேசிய இலக்கிய வரலாறு’…

எல்லாமும் சரிதான்

பொட்டுப்பொட்டாகப் பனித்துளிபோல் நெற்றியில் வியர்வை துளிகள் பூத்திருந்தன. “காய்ச்ச… இப்பதான் அடங்கி வேர்க்குது டாக்டர்…” மடியில் கிடந்த குழந்தையை மார்பில் அணைத்தபடி பதற்றம் கலந்த கவலையை டிரேகன் ராஜாவின் முகத்தில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சாதாரண சளிக்காய்ச்சலுக்கெல்லாம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிவரும் டிரேகனைப் பார்க்கும்போதெல்லாம் இவன் ஏன் இங்கே வர்றான் என்றுதான் நினைப்பார் டத்தோ…

மாயமான் – கே.எஸ்.மணியம்

சில வருடங்களுக்கு முன்,  பாசீர் பஞ்சாங்கின் புறநகர்ப்பகுதியில், தாமான் பஹாகியா புதிய வீடமைப்பு திட்டம் உருவானபின் அதுவரையிலும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழிடங்களைப் பெயர்த்தெடுக்க வேண்டியதாகியது. அத்திட்டத்தில் உருவான நவீன, தனித்த, ஆடம்பர இரட்டைமாடி வீட்டு வரிசைகளின் குடியிருப்பைக் கடந்து, காடும் அதை ஒட்டிய மலை முகடுகளுக்கும் நெருக்கமான, ஓர் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அவர்கள்…

பொதுத்தேர்தலின் முடிவும் எழுத்தாளர் சங்கத்தின் வாக்குறுதியும்.

2017இல் எழுத்தாளர் சங்க தேர்தலுக்குப் பிறகு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன். ஒரு சுரண்டலுக்குக் கல்வித்துறையின் வழி அவர் சம்பாதித்த நற்பெயரை ஆயுதமாக வழங்கியிருந்ததை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட மடல் அது. எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் ஒவ்வொரு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பயம் நெருக்கும் போது புதிதாகச் சில திட்டங்களை ஆண்டுக்கூட்டத்தில் கூறுவார்.…

எங்கெங்கு காணினும் எண்களடா: ‘கணிதத்தின் கதை’ நூல் நோட்டம்

கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கிடங்கில் நுழைந்ததும் எந்த நோக்கமும் இல்லாமல் கண்ணில் பட்ட நூல்களை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். வாசகர்களின் தேடலுக்கு வசதியாக எழுத்தாளர்கள் அடிப்படையிலும் இலக்கிய வகைகள் அடிப்படையிலும் நூல்கள் அடுக்கப்பட்டு இருந்தன. பிரபலமான நூல்களில் இருந்து சற்று விலகி மேல் மாடிக்குச் செல்லும் வழியில் மாணவர் பள்ளி நூல்கள் இருந்தன. இலங்கை தமிழ்ப்பள்ளிகளில்…

சு.வேணுகோபால் பதில்கள்

உங்களின் தமிழ்ச்சிறுகதை பெருவெளி நூலுக்கு கே.என் செந்திலின் விமர்சனம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?  பூவேந்தன் அன்புடன் பூவேந்தனுக்கு, அறத்திற்குப் புறம்பான திட்டமிட்ட வக்கிற நாடகங்களை காலம் பொசுக்கி விடும். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை தங்களின் ஆன்மிகம் என்ன? மத நம்பிக்கை உண்டா உங்களுக்கு?…