
வரலாறு எப்பொழுதுமே தன்னியல்பாக உருவாவதில்லை. கண்ணுக்குத் தெரிந்த அமைப்பு மாற்றங்கள், வரலாற்றுக் காரணங்கள், நிகழ்வுகள் தொடங்கி அறியப்படாத நுண்கண்ணிகளான மனித உணர்வுகள், உளவியல் எனப் பலவற்றுடன் தொடர்புடையதாகவே வரலாறு இருந்து வந்திருக்கின்றது. வரலாற்றாய்வாளர்கள் ஒருவகையில் வரலாற்றைத் தர்க்கப்படுத்திக் கொண்டிருக்கையில் புனைவாசிரியன் அதற்குள் அறியப்படாத வெளிகளை நோக்கிப் பயணிக்கிறான். அந்தப் பயணத்தை வெறும் தகவல்களின் துணைகொண்டு மட்டும்…














