Category: புத்தகப்பார்வை

ஆகூழ்: வரலாற்றுக்குள் சிக்கிக்கொண்ட கலை

வரலாறு எப்பொழுதுமே தன்னியல்பாக உருவாவதில்லை. கண்ணுக்குத் தெரிந்த அமைப்பு மாற்றங்கள், வரலாற்றுக் காரணங்கள், நிகழ்வுகள் தொடங்கி அறியப்படாத நுண்கண்ணிகளான மனித உணர்வுகள், உளவியல் எனப் பலவற்றுடன் தொடர்புடையதாகவே வரலாறு இருந்து வந்திருக்கின்றது. வரலாற்றாய்வாளர்கள் ஒருவகையில் வரலாற்றைத் தர்க்கப்படுத்திக் கொண்டிருக்கையில் புனைவாசிரியன் அதற்குள் அறியப்படாத வெளிகளை நோக்கிப் பயணிக்கிறான். அந்தப் பயணத்தை வெறும் தகவல்களின் துணைகொண்டு மட்டும்…

பல கடல்கள் கடந்து:  உலகப் பெண் படைப்பாளர்களின் பெண்ணிய நோக்கு

‘பல கடல்கள் கடந்து’ என்ற மொழிபெயர்ப்பு நூல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமகாலப் பெண் எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட நூலாகும். நரேன் தேர்ந்தெடுத்த இக்கதைகள் எனக்கு அபாரமான வாசிப்புச் சுவையைக் கொடுத்தது. பல கதைகளை வாசித்த பின்னரே, இந்த எட்டு கதைகள், தமிழுக்குப் புதியது என்று முடிவெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் இந்த மெனக்கெடல் வாசகனுக்கு வாசிப்பின்பத்தையும்,…

லீகாட்: பருவக் கோளாறின் கொந்தளிப்பு

ஒரு முழுமையான வாழ்க்கையைச் சொல்வதுதான் நாவல் என்கிறார்கள் சான்றோர்கள். ஆனால் சிதறிக் கிடக்கும் வாழ்க்கையிலிருந்து நாவலை உருவாக்குவது எளிதானதல்ல. அது கைதேர்ந்தவர்களின் திறன்களால் மட்டுமே கூடிவருவது. தரையில் கொட்டிய தானியங்களைப்போல  விரவிக்கிடக்கிறது வாழ்க்கை. அதனைப் பொறுமையாகப் பிரித்து எடுத்து உணவாகச் சமைப்பதற்கு ஒப்பானதுதான் நாவல். அதுவே ஒரு கட்டமைப்புக்குள் அடங்கும்போதுதான் கலையாகிறது. அந்த ஒருங்கமைவுக்குள் கூடிவராமல்…

சாம்பசிவம் – ஞானாமிர்தம்: மலேசிய, இலங்கைத்தமிழ்ச் சமூகத்தின்வரலாற்றுப்பதிவு

மலேசியாவில் நூறாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த நாவல், ‘சாம்பசிவ ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் ஓர் இனிய கற்பனா சரிதம்’. கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1927ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல், மலேசிய தமிழ் இலக்கியத்தின் முன்னோடி இலக்கியங்களில் ஒன்று. நூலாசிரியரின் அருணாசலம் நாகலிங்கத்தின் (1901-1979) 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகள் நா.…

கதைக்குள் பிணைந்த கட்டுக்கதைகள்

எழுத்தாளர் ம. நவீன் எழுதிய ‘வேப்டியான்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் மாறுபட்ட உலகத்தின் விளிம்பில் கால்பதிக்கச் செய்து அதன் ஆழத்தை எட்டிப்பிடிக்கத் தூண்டுகிறது. ஒவ்வொரு கதையையும் ஒருமுறைக்கு இருமுறை வாசித்திட்ட பிறகே சில முக்கிய இடங்களை அடையாளம் கண்டும் கதை நகர்த்தலின் மையத்தைத் தொட்டும் புதிய அனுபவங்களை உருவாக்கி அதனூடே பயணிக்க முடிந்தது.…

தன்பாலினத்தவர்களின் அகச் சிக்கல்கள்

சமீபத்தில் என் உடல்நலப் பரிசோதனைக்கு என் நண்பர் டாக்டர் கேசவனைப் பார்க்கப்போயிருந்தேன். என் கையில் வைத்திருந்த ‘மோகனசாமி’ சிறுகதை நூலை வாங்கிப் பார்த்தவர் இது எதைப் பற்றி பேசுகிறது, என்று ஆர்வத்தோடு கேட்டார். அவர் ஒரு நல்ல வாசகர், மேடைப் பேச்சாளர். “ஓரினப்புணர்ச்சியாளர்கள் வாழ்வில் எதிர்நோக்கும் சிக்கலைப் புனைவுமொழியில் ஆழ அகலத்தோடு ஆராய்கிறது,” என்று சொன்னேன்.…

நாடு விட்டு நாடு: தனிமனிதக் கதையில் சமூக ஆவணம்

20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்ட பொருளாதாரம், பெருமளவில் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பைச் சார்ந்திருந்தது. பிரித்தானிய காலனிய ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மலாயாவிற்கு இடம்பெயர்ந்ததற்கான சமூக-பொருளாதாரக் காரணங்கள், ரப்பர் தோட்டங்களில் அவர்கள் செய்த வேலை, உழைப்பின் தன்மை, கூலி, வாழ்வாதாரம், அச்சூழலின் நீண்டகாலச் சமூக விளைவுகள் தொழிலாளர்களை எவ்வாறு பொருளாதார மற்றும் சமூக…

மேன்மகன் மூர்த்தி

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று நடைபெற்ற ‘வல்லினம் விருது’ வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன்.  ஆசிரியராக இருந்து பின்னர் தேர்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிப் பாடத்திலும் தேர்வுமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு நவீன இலக்கிய விழிப்பைக் கல்விக்குள் உண்டாக்கிய பி. எம். மூர்த்தி அவர்கள் இவ்வாண்டு விருதுக்குரியவர்.…

நிலத்தைச் சுமந்தலைபவரின் கதைகள்

‘எம் நிலத்துக்கான, எம் வளத்துக்கான, எம் ஆநிரைகளுக்குத் தேவையான அரசியலில் இருந்து என் எழுத்துத் தொடங்குகிறது,’ என்று வெற்றிச்செல்வன் இராசேந்திரன் குறிப்பிட்டாலும், அவர் எழுத்துகள் அரசியல் சீற்றமற்றவை. கழிவிரக்கம் கொள்ளாதவை. காடு மேடுகளையும் வெய்யில் மழையையும் இலகுவாகக் கடந்து செல்லும் இடையர்களின் வாழ்க்கைபோலவே அவரது எழுத்தும் இலகுவானது. காட்டாற்றின் போக்கிலே ஓடிக்கொண்டிருந்தாலும் கரையொதுங்கும் தருணத்திற்காக அலட்டிக்கொள்ளாது…

ஆலவாயன் – அர்த்தநாரி: இரு நாவல்களில் ஒரு பார்வை

குடியானவர்களின் வாழ்க்கை முறையை ஆங்கிலேயர் ஆட்சி காலப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள கதை ‘ஆலவாயன்’. காளி, பொன்னா, வல்லாயி, சிராயி, முத்து, வெங்காயி, நல்லையன் என ஒவ்வொருவரும் சேர்ந்து கதையை நகர்த்தியுள்ளார்கள். நாவலின் தொடக்கத்தில் காளியின் தற்கொலை மிரட்டும் தொனியில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டது போலவே நாவலின் பல பகுதிகளில் சித்தரிப்புகள் ஒரு விதப் பதற்றத்தைக் கொடுக்கக்கூடியவை. காளியின்…

தற்காலிக நிழல்

நவீன தமிழர் வாழ்வில் மிகப் பெரிய தக்கத்தை ஏற்படுத்திய ஊடகமாக திரைப்படத்துறை விளங்குகின்றது. மேடை நடகம், தெருக்கூத்து போன்ற கலைகளை அடிப்படையாக கொண்டு தமிழ் திரைப்படத்துறை உருவானாலும், அது தன் கவர்ச்சிகரமான ஈர்ப்பால் அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கையும் விரைவில் பெற்று தமிழர் சிந்தனை, பண்பாடு, அரசியல் என பலவற்றிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கி…

நாய், பூனை மற்றும் மனிதன்

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் ‘வேல்’ சிறுகதைத் தொகுப்பு 2024-இல் வெளியிடப்பட்ட நூலாகும். இத்தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன. தொகுப்பில் உள்ள கதைகள் இதற்கு முன்னறே இதழ்களில் வெளியாகி அதன்பின் காலச்சுவடு பதிப்பகத்தின் வழி நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகள் ஒரு பொருள் (பாடுபொருள், பாத்திரங்கள், கதை சொல்லும்…

போண்டு – சமூக விலங்குகளின் உளவியல் தொகுப்பு

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதனின் விலங்கியல் இயல்புகளைச் செல்லப்பிராணிகளைக் கொண்டு விவரிக்க இயலும் முயற்சிதான் ‘போண்டு’ சிறுகதை தொகுப்பு. பெருமாள் முருகனின் ‘வேல்’ எனும் சிறுகதை தொகுப்பைத் தொடர்ந்து,  ‘போண்டு’  பதினொன்று சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளியாகி உள்ளது. வளர்ப்பு பிராணிகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தாலும் அதை வளர்க்கும் மனித விலங்கினைப் பற்றிய கதைகளாகவே என்னால் இக்கதைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனிதன் என்பவன்…

காலமாற்றங்களின் கதை

கொரோனா காலகட்டத்தைப் பின்புலமாக கொண்ட ‘நெடுநேரம்’ நாவலை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். முந்தைய தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை எனும் இரு வேறு காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் காதலையும் அதன் மாற்றங்களையும், வாழ்வின் யதார்த்தத்தையும் பேசுவதோடு மட்டுமில்லாமல் எல்லா காலகட்டத்திலும் கருப்பு, வெள்ளை என இரண்டும் இணைந்த சாம்பல் நிற அகம் பொருந்திய மனிதர்களை…

அலையாட்டங்களின் விசித்திரங்கள்

செந்தில்குமார் நடராஜன் இலக்கிய ஆர்வலர். தேர்ந்த வாசகர். கும்பகோணத்தைச் சேர்ந்த செந்தில்குமார் பல ஆண்டுகளாக சிங்கப்பூர்வாசி. சிங்கப்பூரின் தங்கமுனை சிறுகதைப் போட்டியில் 2019ஆம் ஆண்டு முதல் பரிசும், 2017ஆம் ஆண்டு மூன்றாம் பரிசும் வென்றவர். ‘நீர்முள்’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஸீரோ டிகிரி, எழுத்து பதிப்பக வெளியீடு. பத்துச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.…