Category: புத்தகப்பார்வை

ஆலவாயன் – அர்த்தநாரி: இரு நாவல்களில் ஒரு பார்வை

குடியானவர்களின் வாழ்க்கை முறையை ஆங்கிலேயர் ஆட்சி காலப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள கதை ‘ஆலவாயன்’. காளி, பொன்னா, வல்லாயி, சிராயி, முத்து, வெங்காயி, நல்லையன் என ஒவ்வொருவரும் சேர்ந்து கதையை நகர்த்தியுள்ளார்கள். நாவலின் தொடக்கத்தில் காளியின் தற்கொலை மிரட்டும் தொனியில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டது போலவே நாவலின் பல பகுதிகளில் சித்தரிப்புகள் ஒரு விதப் பதற்றத்தைக் கொடுக்கக்கூடியவை. காளியின்…

தற்காலிக நிழல்

நவீன தமிழர் வாழ்வில் மிகப் பெரிய தக்கத்தை ஏற்படுத்திய ஊடகமாக திரைப்படத்துறை விளங்குகின்றது. மேடை நடகம், தெருக்கூத்து போன்ற கலைகளை அடிப்படையாக கொண்டு தமிழ் திரைப்படத்துறை உருவானாலும், அது தன் கவர்ச்சிகரமான ஈர்ப்பால் அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கையும் விரைவில் பெற்று தமிழர் சிந்தனை, பண்பாடு, அரசியல் என பலவற்றிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கி…

நாய், பூனை மற்றும் மனிதன்

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் ‘வேல்’ சிறுகதைத் தொகுப்பு 2024-இல் வெளியிடப்பட்ட நூலாகும். இத்தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன. தொகுப்பில் உள்ள கதைகள் இதற்கு முன்னறே இதழ்களில் வெளியாகி அதன்பின் காலச்சுவடு பதிப்பகத்தின் வழி நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகள் ஒரு பொருள் (பாடுபொருள், பாத்திரங்கள், கதை சொல்லும்…

போண்டு – சமூக விலங்குகளின் உளவியல் தொகுப்பு

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதனின் விலங்கியல் இயல்புகளைச் செல்லப்பிராணிகளைக் கொண்டு விவரிக்க இயலும் முயற்சிதான் ‘போண்டு’ சிறுகதை தொகுப்பு. பெருமாள் முருகனின் ‘வேல்’ எனும் சிறுகதை தொகுப்பைத் தொடர்ந்து,  ‘போண்டு’  பதினொன்று சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளியாகி உள்ளது. வளர்ப்பு பிராணிகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தாலும் அதை வளர்க்கும் மனித விலங்கினைப் பற்றிய கதைகளாகவே என்னால் இக்கதைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனிதன் என்பவன்…

காலமாற்றங்களின் கதை

கொரோனா காலகட்டத்தைப் பின்புலமாக கொண்ட ‘நெடுநேரம்’ நாவலை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். முந்தைய தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை எனும் இரு வேறு காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் காதலையும் அதன் மாற்றங்களையும், வாழ்வின் யதார்த்தத்தையும் பேசுவதோடு மட்டுமில்லாமல் எல்லா காலகட்டத்திலும் கருப்பு, வெள்ளை என இரண்டும் இணைந்த சாம்பல் நிற அகம் பொருந்திய மனிதர்களை…

அலையாட்டங்களின் விசித்திரங்கள்

செந்தில்குமார் நடராஜன் இலக்கிய ஆர்வலர். தேர்ந்த வாசகர். கும்பகோணத்தைச் சேர்ந்த செந்தில்குமார் பல ஆண்டுகளாக சிங்கப்பூர்வாசி. சிங்கப்பூரின் தங்கமுனை சிறுகதைப் போட்டியில் 2019ஆம் ஆண்டு முதல் பரிசும், 2017ஆம் ஆண்டு மூன்றாம் பரிசும் வென்றவர். ‘நீர்முள்’ இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஸீரோ டிகிரி, எழுத்து பதிப்பக வெளியீடு. பத்துச் சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது.…

உணர்வு இடைவெளிகளில் உறைந்துள்ள பாதை

மலேசிய சீன, மலாய், தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆழமான அறிதலையும் இந்த இலக்கியங்களுக்கிடையே அணுக்கமான உறவையும் வளர்க்கும் விதமாக தற்போது முழு வேகத்துடன் வல்லினம் செயல்படுகிறது. வல்லினம் தொடங்கப்பட்ட 2009 முதலே, மலேசியாவி்ன் மலாய், சீனம், ஆங்கில இலக்கியங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்துள்ளது பன்மொழி இலக்கியங்கள் குறித்த கட்டுரைகள், இலக்கிய மொழிபெயர்ப்புகள், மற்ற மொழி எழுத்தாளர்களின்…

விண்ணிலிருந்து வீழாதவர்களின் கதைகள்

அண்மையில் வெளியீடு கண்ட ‘விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்’ என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பின் தலைப்பை வல்லினத்தின் பெரு முயற்சிக்கான உருவகமாகவே காண்கிறேன். மலேசிய இலக்கிய வரலாற்றில் இந்த அரிய முயற்சியானது தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் புதியதொரு பாதையைத் திறந்து வைத்துள்ளது. மலேசிய நவீன தமிழ் இலக்கிய அறிவுத்துறை வளர்ச்சிக்கும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.…

புதிய எல்லையை நோக்கி

தமிழ்ச்சிறுகதையின் வடிவமும் கதைக்களமும் காலந்தோறும் மாறிக்கொண்டே வருகின்றன. வ.வெ.சு.ஐயர், பாரதியார், அ.மாதவையா போன்ற மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய அல்லது கண்டடைந்த சிறுகதையின் வடிவத்தை ஒரு தொடக்கநிலை என வைத்துக்கொள்ளலாம். புதுமைப்பித்தன், மெளனி, ந.பிச்சமூர்த்தி போன்ற இரண்டாம் தலைமுறைப் படைப்பாளிகள் உருவாக்கிய சிறுகதையின் வடிவம் முற்றிலும் வேறுவகையாக இருந்தது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் போன்ற…

என்றுமுள்ள உண்மையும் தொடரும் வாழ்வும்

‘மண்ணும் மனிதரும்’ நாவலை வாசித்து முடித்த பின்னர் தமிழ்விக்கி தளத்துக்குச் சென்று எழுத்தாளர் சிவராம் காரந்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவை வாசித்தேன். கலைக்களஞ்சியத் தொகுப்புகள், சூழியல் செயற்பாடுகள், யக்ஷ கான கலை மீட்டுருவாக்கம் எனப் பிரமிக்கத்தக்க அறிவு பங்களிப்பைக் கன்னட அறிவுலகத்துக்கு விட்டுச் சென்றிருக்கிறார். கட்டுரையின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருந்த சுட்டியைச் சொடுக்கி காரந்த் யக்ஷ கானக்…

நிலமும் துயரமும் மனிதர்களும் – அரவின் குமாரின் கதைகள்

புதியவர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும்போது நாமறிந்த, வாசித்த புனைவுலகில் சில புதிய அனுபவங்களும் தருணங்களும் சேர்ந்துகொள்கின்றன என்பதால் புதிய எழுத்தாளர்களை வாசிப்பதில் ஆர்வமுண்டு. அந்த எழுத்தாளர் யார் என்ற எந்த அறிமுகமுமின்றி நேரடியாக கதைகளை அணுகி வாசிக்கும் வாய்ப்பை இணைய இதழ்கள் அளிக்கின்றன. புதிய பல இளம் எழுத்தாளர்களை இணைய இதழ்களின் வழியாகத்தான் அறிய முடிகிறது.…

சிண்டாய்: நிலத்தை மென்று வளர்ந்த தளிர்

மலேசியாவில் வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளில் முதன்மையானவர் என்று அரவின் குமாரைச் சொல்லலாம். இவ்வாண்டின் வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது அவருக்கு வழங்கப்படுவது அதற்கான அங்கீகாரம்.  இவ்விருதை ஒட்டி வெளிவரும் ‘சிண்டாய்’ எனும் சிறுகதை தொகுப்பின் வழியாக அவரை மீள் வாசிப்பு செய்தபோது அரவின் குமாரின் புனைவுலகை மேலும் நெருங்கிச் செல்ல முடிந்தது.    தோட்டப்புற…

கோர்க்கப்பட்ட பட்டயங்கள்

‘கொடை மடம்’ தமிழில் கவிதை, சிறுகதை எழுதுபவர்களில் ஒருவரான எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களின் முதல் நாவல். வித்தியாசமான வடிவம் கொண்ட நாவல் இது. அத்தியாயங்கள், உபகதைகள் என இரு சரடாக இந்நாவல் பகுக்கப்பட்டுள்ளது. அத்தியாயங்களாக உள்ளவை முகுந்தன் மற்றும் ஜென்னி இருவருக்குமான காதலைக் கூறுவதாகவும் உபகதைகள் பல்வேறு அமைப்புகளாகச் சிதறுண்ட மார்க்சிய லெனிய (மா.லெ) அமைப்புகளில்…

மாற்றமற்ற மாற்றங்களைப் பேசும் ‘மாறுதல்கள்’ நாவல்.

இலங்கையில் ஆங்கிலேயரால் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட சுதேசி மக்கள் ஆர்வம் காட்டாததன் பின்னணியில் ஆள்கட்டிகள் என்று சொல்லப்படுகின்ற பெரியகங்காணிகளினால் கூலிகளாக தென்னிந்தியாவில் இருந்து கொத்து கொத்தாக கொண்டுவரப்பட்ட தமிழர்களை மலையகமெங்கும் குடியமர்த்தி இருநூறு வருடங்களை தொட்டிருக்கிறது. அதன் ஞாபகார்த்தமாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புக்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் தனிமனித…

யாத்வஷேம்: மானுட வதையின் உச்சம்

நான் ரப்பர் தோட்டத்தில் வாழ்ந்தபோது, என் அக்காள் வேலை செய்யும் ரப்பர் ஆலைக்குப் போவது வழக்கமாக இருந்தது. அக்காள் அங்கு ரப்பர் பாலை உறைய வைக்கும் பகுதியில் பணியில் இருப்பாள். ரப்பர் பாலில் போர்மிக் திராவகம் கலந்தால்தான் அது பதமாக உறையும். என் பால்ய வயதில் நான் தெரிந்துகொண்ட முதல் ரசாயனப் பொருள் போர்மிக் அமிலம்தான்.…