
(ஆங்கில மொழிப்பெயர்ப்புக்குத் தேர்வு பெற்ற சிறுகதை) அந்தக் கும்மிருட்டில் உயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி நடந்தான் சந்தனசாமி. மழை சிறுசிறு தூறல்களாகக் கருமேகத்திலிருந்து வழிந்து மண்ணை நசநசக்கச் செய்துகொண்டிருந்தது. அவன் நடந்த பாதை – அதைப் பாதை என்று சொல்ல முடியாது – அவனாக உண்டாக்கிக்கொண்ட வழியில் சேறும் சகதியும் களிமண்ணுமாகச் சேர்ந்து…