‘வல்லினம்’ நாவல் முகாமின் இரண்டாவது நாள்

பிப்ரவரி 26-27 என இரு நாள்கள் நடந்த வல்லினம் நாவல் முகாமில் நானும் கலந்து கொண்டேன். நாவல் முகாம் குறித்த இரண்டாவது நாள் அனுபவங்களைப் பதிவு செய்யும்படி வல்லினம் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பதிவினை எழுதுகிறேன். பிப்ரவரி 27, காலை சிற்றூண்டிக்குப் பின் சரியாக 8.00 மணிக்கு முகாம் தொடக்கம் கண்டது. புதிய படைப்பாளர்கள் படைப்புலகத்தில்…

வல்லினம் நாவல் முகாம்: இரு வாசகர்களின் பகிர்வுகள்

வல்லினம் குழுவினரால் நாவல் முகாம் 26 முதல் 27 வரை பிப்ரவரி மாதத்தில் இரண்டு நாள்கள் தைப்பிங் ‘கிரேண்ட் பெரொன்’ தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி பல தடைகளைத் தாண்டி, பாதுகாப்பு அம்சங்களுடன் இவ்வாண்டு குறிப்பிட்ட திகதிலும் நேரத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாவல் முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதாகவே ஐந்து நாவல்களைப் படித்து வர…

நாவல் முகாம்: புதிய பங்கேற்பாளர்களின் அனுபவம்

கடந்த 26/2/2022-ஆம் திகதி தொடங்கி 27/2/2022-ஆம் திகதி வரை வல்லினம் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட நாவல் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இதுவே நான் பங்கேற்கும் முதல் நாவல் முகாமாகும். அதிகம் சிறுகதைகள், கவிதைகளைச் சார்ந்த பட்டறைகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்த எனக்கு, நாவலைக் குறித்து நடத்தப்பட்ட இந்த முகாம் முற்றிலும் பல புதிய அனுபவத்தையே தந்தது. ‘நாவல்…

மா.ஜானகிராமன் அவர்களுக்கு வல்லினம் விருது

‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் நினைவு கோப்பையும் இந்த விருதுவிழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும் 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2022க்கான வல்லினம் விருதை எழுத்தாளர் மா.ஜானகிராமன் அவர்களுக்கு வழங்க வல்லினம் குழு முடிவெடுத்துள்ளது. மா.ஜானகிராமன் கள…

“பசியென்பது இனம், மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று” – மா.ஜானகிராமன்

2021ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருதும் வரலாற்றுத் தொகுப்பாளரான ஜானகிராமன் மாணிக்கம் அவர்களுக்கு வழங்குவதில் வல்லினம் பெருமைகொள்கிறது. மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணப்படுத்தலில் திரு ஜானகிராமன் பங்களிப்பு முதன்மையானது. தோட்டப் பின்னணியில் வறுமைச் சூழலில் வளர்ந்த இவர், மலேசிய இந்தியர்களின் வரலாற்றை ஒட்டிப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். மலேசியாவில் இந்தியர்களின் வரலாறு ரீதியான மாற்றங்களை ‘மலேசிய…

மா. ஜானகிராமன்: வரலாற்றை தேக்கி நிற்கும் சாமானியனின் அகம்

மலேசியத் தமிழர்களும் வரலாறும் தமிழர்கள் சிறுபான்மை மக்களாக வாழும் மலேசியா போன்ற நாடுகளில் இனத்தின் வரலாறு எப்போதும் புத்துணர்ச்சிமிக்க பேசுபொருளாக இருக்கிறது. இந்நாட்டின் மண்ணோடும் அரசியலோடும் தங்களைப் பிணைத்துக் கொள்ள வரலாற்றுச் சுவடுகளை நோக்கிய தேடலை பலர் முன்னெடுக்கின்றனர். தேசிய வரலாற்று வரையறைக்குள் வராத பல முக்கிய குறிப்புகளையும் உண்மைகளையும் தொகுத்துக் கொள்வதன் வழி தங்களின்…

வேதாளம்

“வேதாளச் சனியன வேற தூக்கவேண்டியிருக்கு” என்று சடாட்சரம் சொன்னார். இன்ஸ்பெக்டர் கோப்பில் இருந்து தலை தூக்காமலேயே “பின்ன வெறுங்கையோடையா போகப்போறீரு? சட்டம்னு ஒண்ணு இருக்குல்லா வே?” என்றார் “அது இருக்கு…” என்றார் சடாட்சரம் “எங்கிட்டு இருக்குன்னுதான் தெரியல்ல. இருந்து தாலியறுக்குது.” “இந்த நொரநாட்டியம்லாம் இங்க பேசப்பிடாது. மனுசன் இங்க தாடியிலே தீப்பிடிச்ச மாதிரி நின்னுட்டிருக்க நேரம்…போவும்…

வருகை

கொல்லைக்கதவின் நாதாங்கி கொக்கியை எடுத்து ஆணியில் தொங்கவிடும்போது விசாலாட்சியின் கைவிரல்கள் லேசாக உதறல் எடுத்தன. முகம் கைகால்களை கழுவிக்கொண்டு போய்விடலாமா என்ற எண்ணம் தோன்றியது. கதவை இழுத்து மூடும்போது இதென்ன இப்படிப்படுத்துகிறது என்ற அச்சத்தையும் கொடுத்தது. களவைக்காணும் ஆர்வம் பின்னின்று தள்ளுவதை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. தானும் ஒரு கள்ளத்தனத்தில் இறங்குவதுபோல தோன்ற செண்பகச் செடிபக்கம்…

திரும்புதலற்ற பாதை

காளைப் பாண்டியன் நைட் ஷிப்டுக்கு புறப்படுவதற்காக வண்டியைக் கிளப்பிய அதே நேரத்தில்தான் ஹாஸ்டலுக்குப் போகும் பாதையில் காதில் ஹெட்போனுடன் வந்துகொண்டிருந்த காசிநாத்தை ஆத்திரத்துடன் வழிமறித்தான் அமித். கௌசியிடம் முகம் பார்த்துச் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பியது காளைப்பாண்டியனுக்கு லேசான சங்கடத்தைக் கொடுத்திருந்தது. 1 நம்பியூரிலிருந்து மில்லுக்குப் போக அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள்தான். ஆனால், காளை அரைமணி நேரத்துக்கு முன்பாகவே…

சரவாக் பழங்குடியின மக்கள்

(பகுதி 1) மனித உரிமை மீதான பார்வை சமீப காலக்கட்டத்தில் அதிகரித்து உள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் மக்களுக்கு மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வுகள் பல வழிகளில் போதிக்கப்பட்டு வருகின்றது. மக்களுக்கான மனித உரிமை பாதுக்காக்கப்பட வேண்டி இங்கு நிறைய விவாதங்களும் பேச்சுகளும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. ஆனால், இங்கு முக்கியமாக…

இலைகளில் ஒளிந்துள்ள எழுத்து

‘2020-இல்  அபிராமி கணேசனுக்கான இளம் எழுத்தாளர் விருதை வல்லினம் அறிவித்தபோது அவரை என்னால்  ‘புருனோ மான்சர்- காட்டில் கரைந்த காந்தியம்’ என்ற கட்டுரையின் வழியேதான் மனதில் மீட்டெடுக்க முடிந்தது.  வல்லினத்தின் இந்த விருது அறிவிப்பு  சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரை போன்ற புனைவு சார்ந்த படைப்புகளுக்கு மத்தியில் ஆய்வுக்கட்டுரைகள் எவ்விதம் ஒரு எழுத்தைத் தனித்துக் காட்டிவிடும்…

யாருக்காகவும் பூக்காத பூ

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும் போதே ரூபன் “டேய், இந்த வாரம் கிளாஸ் இல்ல… நேத்தைக்குத்தான் தாஸ் அங்கிள் வந்து வீட்டுல சொல்லிட்டுப் போனாரு… சொல்ல மறந்துட்டேன்” என்றான்.  “அப்ப அந்த வெள்ளைக்காரன் வர்ரான்னு சொன்னாரு” எனக் கேட்டேன். “அவுனுங்க இன்னும் வரலை, அடுத்த வாரம்தான் வருவாங்களாம்” என மிதிவண்டியை உருட்டிக் கொண்டே…

பச்சைக் கண்களுடன் ஒரு கறுப்புப் பூனை

இந்தத் தொகுப்பில் பூனையைப் பற்றிய ஒரு கதையும் இல்லையே என்று  ஷீயிங் சொன்னபோது, எதிரே அமர்ந்திருந்த அவள் முகத்தில் எங்காவது சிரிப்பு ஒளிந்திருக்கிறதாக என்று  கூர்ந்து பார்த்தாள் அனா. வழக்கத்திற்கு மாறாக அதிகாரியின் தோரணைதான் தெரிந்தது. “குழந்தைப் பிறப்பு குறைவாக இருக்கும் நாட்டில் பூனைகள் அதிகமாக இருக்கும் என்று  ஓர் ஆய்வில் படித்த நினைவுள்ளது. நாய்களைவிட…