இலக்கியத்தில் அரசியல்

மலேசிய சோசியலிஸ கட்சியுடன் இணைந்து வல்லினம் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. ஈப்போவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம், ஆதவன் தீட்சண்யா, வ.கீதா ஆகியோர் ‘இலக்கியத்தில் அரசியல்’ என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பி.எஸ்.எம் கட்சியைச் சேர்ந்த தோழர் நாகேந்திரன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கட்சியின் துணைத்தலைவர் மு.சரஸ்வதி…

வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள்

எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். ம.நவீன் எழுதியுள்ள ‘மண்டை ஓடி’ சிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு…

விவாதங்கள் தொடர வேண்டும்

தமிழ்மொழியில் வெளியாகும் படைப்புகள் இன்று பல தேசங்களில் வாழும் தமிழர்கள் படிக்க ஏதுவாய் வினியோகிக்கப்படுகின்றன. இணையம் மூலமாகவும் பலரை சென்றடைகின்றன. இந்தஒரு சூழ்நிலையில், படைப்பு என்பதன் தன்மையும் அடையாளமும் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளன. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான உறவும் வெளியும் மாறியமைந்துள்ளன. குறிப்பிட்ட படைப்பானது, அது உருவான சமூக, பண்பாட்டு வெளிக்கு அப்பாற்பட்ட வாசகர்களை அடைகிற…

வகுப்பறையின் கடைசி நாற்காலி

‘வல்லினம்’ இணைய இதழின் ஆசிரியர், ‘பறை’ எனும் ஆய்விதழின் ஆசிரியர், ‘யாழ்’ எனும் மாணவர் இதழின் ஆசிரியர், கவிஞர்,சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர்,திறனாய்வாளர், சினிமா வசனகர்த்தா, பதிப்பாளர் என பன்முகம் கொண்ட மலேசியத் தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் நவீன், தனது பள்ளி மற்றும் வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிற…

ஓநாயிடம் மாட்டிக்கொள்ளும் ஆட்டுக்குட்டிகள்

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ எனும் நண்பர் நவீன் அவர்களின் ஆசிரியப் பணி அநுபவப் பதிவுகளை வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள, கீழ்க்காணும் குறிப்புகளை உங்கள் முன் வைக்கிறேன். இந்தப் பதிவுகள் பல அடிப்படையான நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. அதனைச் சுருக்கமாக தொகுத்துச் கொள்ள முயல்கிறேன். தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்நிலையும்…

அவர்களின் பேனாவில் இருந்து கொஞ்சம் மை

இன்றைய அறிவியல் காலத்தில், உலகின் ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு நவீனத் தொழில்நுட்பம் உடனே உலகம் முழுவதும் பரவிப் புகழ்பெற்று மக்கள் மனதில் நிலைபெறுகிறது. அடுத்த கட்டமாக, உலகநாடுகள் போட்டியிட்டுக் கொண்டு அதே தொழில்நுட்பத்தை மென்மேலும் ஆய்வு செய்யவும் செம்மைப்படுத்தவும் முனைகின்றன. அதோடு, மேலும் பல சிறப்பம்சங்களை இணைத்து அதிநவீன தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.…

வாசனைபூசிய வாழ்வு

இந்தக் கட்டுரைத்தொகுப்பில் என்னை மட்டுமன்றி எவரையும் முதலில் ஈர்க்கக் கூடியது அதன் பாசாங்கற்ற குரல்தான். வலிந்து சொற்களைத் தேடி அலங்காரமாக எந்த விஷயத்தையும் சொல்வதில்லை. தனக்கு நடந்த சம்பவங்களை, தனக்குள் எழுந்த கேள்விகளை, நிகழ்ந்த புரிதல்களை அதிகம் மெனக்கெடாமல் செய்தபதிவு இக்கட்டுரைகள். குறிப்பாக, ‘ஊர்க்காரர்கள்’, ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’, ‘பொம்மைகளின் வன்முறை’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.…

கலை வகுப்புகள் மாணவ மாணவியரின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த உதவும்.

It is frequently a misfortune to have very brilliant men in charge of affairs. They expect too much of ordinary men.” ― Thucydides பொதுவாக ஒரு பள்ளி ஆசிரியரின், பள்ளி,கல்வியமைப்பு,மாணவர்கள் பற்றிய கட்டுரைகள்-அதிலும் தன்னைப் பின் தங்கிய ஆசிரியனென்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கட்டுரைகள்- அவ்வளவு சுவாரஸ்ய மிக்கவையாக…

பின்தங்கிய மாணவர்கள் என்று யாரும் இல்லை

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நான் சமீபத்தில் படித்த முக்கியமான நூல்களுள் ஒன்று. அளவில் சிறியது, ஆனால், நம் சிந்தனையைக் கிளறுவது. பள்ளிக் கல்வியாயினும், பல்கலைக்கழகக் கல்வியாயினும் அது மாணவர் மையக் கல்வியாக இருக்கவேண்டும் என்பதையே கல்விச் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், நடைமுறையில் நமது கல்வி பரீட்சை மையக் கல்வியாகவே இருக்கின்றது. இதன் விபரீதங்களை இந்நூலாசிரியர் நவீன்…

சீ. முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்

மலேசிய தமிழ் புனைவுலகில் தனி அடையாளத்தோடு மிக நிதானமாக இயங்குபவர் கெடா மாநில எழுத்தாளர் சீ.முத்துசாமி (சீ.மு). நீண்ட காலமாக படைப்பாளராகச் செயல்படும் இவரின் ‘மண்புழுக்கள்’ நாவல் இவரை நன்கு அடையாளம் காட்டியது. அதோடு மலேசிய எழுத்துலகில் தனித்துவம் பெற்ற நாவலாகவும் அது விளங்குகிறது . சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீ.முவின் குறுநாவல் தொகுப்பு…

மேகங்களுக்கு அப்பால் நீல வானம்

ஹரி பார்த்திக்கு சொன்னது : “இன்று காலை தில்லியிலிருந்து கிளம்பிய போது சுசிதாவும் அதே விமானத்தில் வருகிறாள் என்று எனக்கு தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரே தொழிற் கண்காட்சிக்கு செல்கிறோம் என்றாலும் சுசிதா என்னுடன் பயணம் செய்ய மாட்டாள் என்று தெரியும். நானும் என் பயண விவரங்களை அவளுக்கு தெரிவிக்கவில்லை. கண்காட்சித் திடலுக்கு வந்த பின்னர்…

கேள்விகளிலிருந்து பதிலுக்கு

என் முதல் புத்தகம் இது. ஐந்தாண்டுகள் வல்லினத்தில் நான் எழுதிய பத்திகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக்கப்பட்டுள்ளது. பெயருக்குத்தான் பல ஆண்டுகள் எழுதியதாகச் சொல்லிக்கொண்டாலும் அந்தந்த காலக்கட்டத்தோடு சில படைப்புகள் காலாவதியாகிவிடுவதை இந்த நூலுக்காகக் கட்டுரைகளைத் தொகுக்கும் போது உணர்ந்தேன். இது எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. எழுத்தென்பது கருத்து ரீதியில் முரண்பட்டாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் காலம் கடந்தும் நிற்கவேண்டும். அப்படியான…

துணைக்கால் தன்மை கொண்ட கட்டுரைகள்

தமிழ் எழுத்துகளில் துணைக்காலுக்கென தனித்த மரியாதை இருப்பதில்லை. அவ்வெழுத்து இன்னொரு எழுத்தைச் சார்ந்தது. ஆனால் அது இல்லாமல் போகுமானால் மொழியைக் குறில் நெடிலுடன் எழுதுவது சாத்தியமே இல்லாமல் தவிக்கும். ஒருவகையில் நான் எழுதியுள்ள கட்டுரைகள் அணைத்தும் துணைக்கால் தன்மை கொண்டவைதான். இத்தலைப்புகளைக் குறித்து அறிமுகமும் புரிதலும் இல்லாமல் அது தொடர்பான அனைத்து துறைகளும் இயங்கும். ஆனால்…

வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்தும் எழுத்துகள்

இலக்கியம் வாசகனைப் புதிய அனுபவங்களை நோக்கி நகர்த்துகிறது. உயிரோட்டமும் அனுபவ எதார்த்தமும் கொண்ட எழுத்துகள், வாசகனின் உள்ளத்தை விசாலப்படுத்துகின்றன. உலகமொழி இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் இருக்கும் பொதுக் குணம் இது. அதேசமயம் ஒரு மொழியின் இலக்கியமானது, அந்த மொழிசார்ந்த இனத்தின் பண்பாடுகளின் அடையாளமாகவும், அரசியல் பதிவாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும் அமைந்துவிடுகிறது. சங்க இலக்கியங்கள் தமிழினத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும்…

சொற்களைச் சேமிப்பதும் செதுக்குவதும் கலை

ஆத்தா சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். ஆத்தா அம்மாவின் அம்மா. அவர் கதைகள் சொல்லும் விதம் நூதனமானது. கதைகளில் வரும் கொடூர விலங்காக அவ்வப்போது அவரே மாறிவிடுவார். திடீரென முட்டிபோட்டு நடந்து பயங்காட்டுவார். ஆத்தா சொல்லும் கதைகளை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும். என் உணர்வு நிலைக்கு ஏற்ப ஆத்தா கதைகளின் முடிவையும்…

அம்ரிதா

  1 மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அகன்ற நெற்றியில் சிவப்பு நிற குங்குமம். நெற்றி வகிட்டிலும் சிறிதளவு குங்குமம். அழகாய்தான் தெரிந்தாள். நாற்பது வயது ஆகிவிட்ட உடல் தன் அகவையைப் புறத்தோலின் மூலம் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அவளது கண்கள் கண்ணாடியில் தெரியும் குங்குமத்தின் மீதே இருந்தது. பார்த்தது போதும் என…

லீனா மணிமேகலை கவிதைகள்

உலர்ந்தவை, உலராதவை  1. எனக்குப் பிறகு உன்னைக் காதலிக்கப் போகிறவளைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன் பாவமாய் இருக்கிறது நான் நொறுக்கிப்போட்டிருக்கும் உன்னை எதைக்கொண்டு அள்ளி முடிவாள் நீ மறக்க முடியாமல்  அவ்வப்போது உச்சரிக்கப் போகும் என் பெயர் இரும்புத்துகள்காய் அவள் கண்களை அரிக்கும் உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கழுத்தை, தோள்களை, உதடுகளை, காதுகளை, தேமல்களை,…

மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும்

மைஸ்கீல்ஸ் அறவாரியம் மற்றும் வல்லினம் இலக்கியக் குழு  ஏற்பாட்டில்  மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும் இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலும்பூர்  திகதி: 11.10.2015 (ஞாயிறு) நேரம்: மாலை 3.30 – 5.30 வரை சிறப்புரை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை பேராசிரியர் வீ.அரசு, தமிழ்நாடு ம.நவீன் நூல் வெளியீடு தற்காலக் கல்வி முறை குறித்த…

யார் அந்தப் பண்டிதன்?

அங்கியை அணிந்துகொண்டு மாபெரும் மாணவர்கள் கூட்டத்திற்கும் அவர்களை உள்ளே வரவேற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்கும் இடையில் விரிவுரையாளர்களின் அணிவகுப்பில் நின்றுக்கொண்டிருந்தேன். துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் பகுதி. புலங்களின் தலைவர்கள் பிரத்யேக அங்கிகளை அணிந்துகொண்டு விரிவுரையாளர்களுக்கு நேரெதிரில் அணிவகுத்து நின்றுக்கொண்டிருந்தனர். விழாவின் தொடக்கத்திற்கான அறிவிப்பைத் தொடர்ந்து பின்னணி இசை முழங்கியது. மாணவர்களும் பெற்றோர்களும் எழுந்து…