Category: கட்டுரை

கடந்து வந்த பாதை – தி சிராங்கூன் டைம்ஸ்

சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்து, அரைநூற்றாண்டு கடந்து, தன் பொன்விழா தேசிய தினத்தை 9 ஆகஸ்ட் 2015இல் கொண்டாடியது. அந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழும் தன்னம்பிக்கையுடன் ‘சிங்கைத் தமிழரின் சிறப்பு’ என்ற முழக்கவரியுடன் 32 பக்க அச்சிதழாகத் தன் முதலடியை எடுத்து வைத்தது. நான், எம்.கே. குமார், பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர்…

நிகழ்காலத்தில் இருப்பவர்களும் நித்தியத்துவமானவர்களும்

சிங்கப்பூர் இயக்குனர் கே.ராஜகோபால் அவர்கள் இயக்கி 2016 ஆம் ஆண்டில் வெளியான ‘A Yellow Bird’ திரைப்படத்தைப் பார்த்தபோது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. பதினைந்து வருடங்களாக வாழ்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூரின் எந்தச் சுவடுகளும் இல்லாமல் முற்றிலும் வேறொரு சிங்கப்பூரை எனக்கு அறிமுகம் செய்த படம் அது.

ஒளியாலான கதைகள்

சித்துராஜ் பொன்ராஜ் என்ற எழுத்தாளரை நான் அறிந்துகொண்டது 2016இல். சிங்கப்பூர் இலக்கியங்கள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய தொடர் விமர்சனக் கட்டுரைகளின் வழி சித்துராஜின் ‘மாறிலிகள்’ தொகுப்பு கவனம் பெற்றது. ஜெயமோகன் எழுதிய அக்கட்டுரை முக்கியமானது. தொகுப்பில் இருந்த சிறுகதைகளை ஒட்டிய ரசனை விமர்சனம் அன்றி, சித்துராஜ் என்கிற எழுத்தாளரின் வருகை சிங்கப்பூர் இலக்கியத்தில் எவ்வகையில்…

ஒரு நீளமான மரணமும் சிக்கலான விளம்பரமும்

புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற தொடக்க நிலை வாசகர்களுக்கு, இலக்கியப்பிரதியில் ஆசிரியர் உத்தேசித்த பொருளைப் புரிந்து கொள்வதென்பது புதிரொன்றின் முடிச்சை அவிழ்ப்பதாகவே இருக்கிறது. மற்ற வாசகர்களின் பார்வை அல்லது ஆசிரியரின் பார்வையுடனே மாறுபாடு ஏற்படுகின்றபோது தன் வாசிப்பின் மீதே சந்தேகம் எழுகிறது. அப்படியாகத் தமிழ் புனைவு வாசிப்புக்குள் உள்நுழைகின்ற வாசகன் மெல்ல வந்து சேரும் கோட்பாடுகளில் ஒன்று…

பாடிக் கொண்டே இருக்கும் பறவைகள்

நீ பாடுவதை நிறுத்துவதில்லைவலியைத் துளைத்து வெளியேறும்சிவப்புநிற நாகம்நீ பாடி முடிக்கையில்சூரியனில் இருக்கும் அனார் கவிதை ஒரு பறவை. அது இழப்பு ஏற்பு, வலி, பிரிவு, துக்கம், மரணம், பிறப்பு, மலர்தல், மொக்குதல், மடிதல்  இன்னும் பலவற்றையும் பல வகைகளிலும் பாடிக்கொண்டே இருக்கும். இந்த நொடியும் உலகின் ஏதேனும் ஒரு இடத்தில் பாடல் ஒலிக்கும்.  இவ்வுலகம் ஓய்ந்து…

உலக நிலக்காட்சியின் ஊடே அ.முத்துலிங்கத்தின் கதைகள்

1 அ.முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்கும்போது பறவைகளின் ஞாபகம் வருகிறது. வலசைபோகும் பறவைகளில் அந்தந்தத் தேசத்து நீர்த்தேக்கங்களில் அமர்ந்து காதல் வாழ்வைத் தொடங்குகின்றன. அந்த நிலத்து சிறு குச்சிகளை, பட்டைகளை எடுத்துக் கூடு பின்னி, அந்த நிலத்துத் தானியங்களை உண்டு, அந்த நிலத்து வெய்யிலையும் குளிரையும் நீரையும் குடித்து, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து அருகிருந்து மிக விழிப்புடன்…

மலேசிய நவீன கவிஞர்கள் (4) : பூங்குழலி வீரன் கவிதைகள்

எங்கோ படித்த யூதக்கதை ஒன்று: மாணவன் ஒருவன் யூதகுருமாரான ரபி ஒருவரிடம் வந்து ‘பழைய காலங்களில் எல்லாம் மனிதர்கள் கடவுளைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் கதைகளில் படிக்கிறோம். இப்போது ஏன் கடவுள் யாருக்கும் தெரிவதில்லை,யாருடனும் பேசுவதில்லை’ என்றான். அதற்கவர் ‘ஏனென்றால் இப்போது யாராலும் அவ்வளவு தாழ குனிய முடிவதில்லை. அதனால் தான்’ என்று பதிலளித்தார். கடவுளைக் காணமுடியுமோ…

பறவையின் உமிழ்நீரில் நனைந்த பணம்

இயற்கை எழில் நிறைந்த மலேசியாவில் சூழலியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமானது. சூழலியல் சார்ந்து இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகளின் தேடல்கள் அதனால் மனிதனுக்கான நன்மை, தீமைகள், அல்லது நாட்டின் பொருளாதரத்திற்கு அதன் பங்கு என்ற நிலையிலேயே இருக்கும். இயற்கைக்கும் அது சார்ந்த உயிரினங்களுக்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் அவற்றைக் கலைவதற்கான வழிகள் குறித்தும்…

கதைத் திருவிழா சிறுகதைகள்

முடிவற்றுச் சுரந்து கொண்டே இருக்கும் புனைவு மனத்தில் இருந்து மீள முடியாமல் திளைத்திருக்கும்  ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் வெகு சிலரே. தங்களின் வாழ்வு கொடுக்கும் ஆழ் மனப்பதிவுகளாலும் புற உலக வாழ்வை அவதானிப்பதாலும் வாழ்ந்து பார்ப்பவர்கள் அவர்கள். எனவே, தங்களுக்கான தன்னிறைவைக் கலையின் வழியே அடைகிறார்கள். வெண்முரசு நிறைவுற்றபோது  பிறப்பு முழுமையடைந்த மனநிலையை அவரிடம் பார்க்கமுடிந்தது.…

மலேசிய கவிஞர்கள் வரிசை – 3 : கோ.புண்ணியவான்

‘உங்கள் கையில் இருக்கும் ஒரே கருவி சுத்தியல் என்றால், எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவே கண்ணில் படும்’ என்று உளவியலில் ஒரு கூற்று உண்டு. உங்கள் கையில் சுத்தியும் அரிவாளும் மட்டுமே இருக்குமென்றால் எல்லா பிரச்சனைகளும் உங்களுக்கு ஆணியாகவும் தலைகளாகவும் தென்படும் என்று அதை நகைச்சுவையாகவும் சொல்வார்கள். சமூகத்தின் பிரச்சனைகளைக் கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கைகளில்…

குரோசாவாவின் கண்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு கால் அறுவை சிகிச்சை செய்து, மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தபோது உலகின் சிறந்த திரைப்படங்களை எடுத்து வந்தார் நண்பர் காளிதாஸ். அவரிடம் உலகத் திரைப்படங்கள் குறுவட்டுகளாகச் சேமிப்பில் இருந்தன. நகர முடியாமல் கிடந்த அந்த மூன்று மாதங்களில் உலகின் மிகச்சிறந்த சில திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வலியால் வாசிப்பில்…

போரின் கதைகள் : தாசெக் ஷாஹ்டு

‘தாசெக் ஷாஹ்டு மற்றும் வேறு சில கதைகள்’ (Tasik Syahdu dan cerita-cerita lain) தேசிய இலக்கியவாதியும் மூத்தபடைப்பாளியுமான சமாட் சாய்ட் எழுதிய சிறுகதை தொகுப்பு. 2003 -இல்  பிரசுரிக்கப்பட்ட இத்தொகுப்பின் 22 கதைகளும் அவரே தேர்ந்தெடுத்து பிரசுரித்தவை. இத்தொகுப்பில் ‘ரிம்பா செனி செவோராங் செனிமான்’ அதாவது ஒரு கலைஞனின் கலை வனம் என்ற தலைப்பிலான …

வல்லினம் சிறுகதை சிறப்பிதழ்

தமிழில் சிறுகதைகள் ஆரம்பத்தில் இருந்தே உலகத்தரத்தை ஒட்டிப் பயணிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கில நாவல்களைப் பார்த்து எழும் பிரமிப்பு, சிறுகதைகளைப் பார்த்து எழாததன் காரணம் நாம் தமிழில் அதற்கு இணையான பலவற்றைப் படித்ததன் காரணமாக இருக்கக்கூடும். இணைய இதழ்களில் சிறுகதைச் சிறப்பிதழ்கள், தமிழ் சிறுகதைகளுக்கு மேலும் ஒரு வலுவான நடைமேடையும், அதிக வாசகர்களை அவர்கள் இருக்கும்…

‘மஹ் மேரி’ (Mah Meri) பழங்குடி மக்கள்

பழங்குடியினரின் சிறப்பு அம்சமாக திகழ்வது அவர்கள் வாழும் சுற்றுச் சுழலே ஆகும். அவர்கள் வாழும் இடமானது எப்பொழுதும் பல்லுயிரியம் மிகுந்த வளமான ஒரு பகுதியாக இருக்கும். ஆனால், தற்காலத்தில் அவ்வாறான இடங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து கொண்டே வருகின்றன. பழங்குடி மக்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய வாழ்க்கை அமைப்புக்கு முற்றிலும் விரோதமான ஒரு சுற்றுச்சூழலை எதிர்…

மலேசிய நவீன கவிஞர்கள் (2) : ஏ.தேவராஜன் கவிதைகள்

[1] கவிதை கவிதை பற்றிய வரையறைகள் நூற்றாண்டுகளாக விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன. கவிதையின் பயன்பாடு சார்ந்து மட்டுமில்லை; கவிதை என்றால் என்ன என்பதுகூட துல்லியமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இருக்கிறது. அல்லது அதன் எல்லா பதில்களிலும் எப்படியோ ஒரு விடுபடல் வந்துவிடுகிறது. பொதுவாக இலக்கியத்திற்கே அந்தக் குணம் உண்டு எனும்போதும் பிற எந்த…