Category: கட்டுரை

நீலகண்டம் : பிரியத்தின் திரிபு

இந்திய நவீன மனதில் இன விருத்தி என்பதற்கான இடம் தொல் மரபிலிருந்து அதிகம் விலகிச் செல்லவில்லை. மனதளவில் அதற்கான இறுக்கம் அதே மரபான தன்மையுடன் இருக்கிறது. சந்ததி விருத்தியின் ஒரு கண்ணி அறுந்துவிடும்போது ஏற்படும் சங்கடமானது, வாழ்கையின் பொருளியல், பாதுகாப்பு என்பவற்றோடு நிறைவான வாழ்க்கை உணர்வு எல்லாவற்றையும் நெருக்கடி கொள்ளச் செய்கிறது. நவீன வாழ்க்கையில் குழந்தைப்…

வாழ்க வாழ்க: கோஷமிடுபவர்களின் கதை

மௌனி 1938ல் மணிக்கொடியில் ‘மாறாட்டம்’ என்றொரு கதை எழுதி இருக்கிறார். மௌனியின் பல கதைகளில் வருவதுபோல ஒரு ‘அவன்’ தான் இக்கதையிலும் நாயகன். ஒரு மதியத் தூக்கத்துக்கு பின் நகரில் உலாத்திவரக் கிளம்புகிறான். அவனை ஒரு கிராமத்து ஆள் பின் தொடர்கிறான். அந்த ஆளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இவன் எங்கெல்லாமோ சுற்றுகிறான். அந்த ஆள் விடுவதாக…

உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்

(1) சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில்  சமூகம், அரசியல்  மற்றும் சித்தாந்தம் என பலதரப்பட்ட வகையில் மாறுதல்களைக் கண்டவற்றில் தமிழகம் மிகவும் முக்கியமான மாநிலம்தான். மாறி  மாறி வரும் தமிழ் சமூக சூழலில் இன்னும் ஒரு யதார்த்த நாவலுக்கான களம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  தான் பாடுபட்டு ஒன்றை உருவாக்கி தன் தலைமுறைக்கு வைத்துச் செல்வோம்,…

மரயானை: எஞ்சும் படிமம்

இலக்கியத்தில் நிலைபெற்றிருக்கும் சில படிமங்கள் காலாதீதமான கனவுகளை விதைக்கச் செய்கின்றன. அத்தகைய கனவுகளை விரியச் செய்யும் படிமம்தான் ‘மரத்தில் மறைந்தது மாமத யானை’ எனும் திருமந்திர வரி. மரத்தில் ஒளிந்துகொண்டது மாபெரும் யானை எனும் பொருள் தரும் திருமந்திர வரி படைப்பாளர்களுக்குள் இருக்கும் படைப்பு மனத்தைத் தூண்டும் மகத்தான வரி. மரம் நிலைகொள்ளுதலின் குறியீடு. வேரை…

கங்காபுரம்: வரலாற்றின் கலை

வரலாற்றை நாவலாகப் புனைவதில் ஒரு வசதியுள்ளது போலவே சிக்கலுமுள்ளது. இதில் வசதியென குறிப்பிடுவது நாவலுக்கான தகவல்கள். வரலாறு நமக்கு தகவல்களை நம் முன் அறுதியிட்டு தருகிறது. திரண்டு கிடக்கும் அந்த தகவல்களை நம் புனைவு யுக்தியின் மூலம் கேள்விகளை எழுப்பி மேல் சென்றால் போதுமானது. அந்த தகவல்களைப் புனைவாக்கும் தருணங்கள்தான் அதில் ஆசிரியன் எதிர்க்கொள்ளக்கூடிய சிக்கல்.…

விலங்குகள் திரியும் கதைகள்

சமகால மலேசிய புனைவிலக்கிய வெளியில் ம.நவீனின் எழுத்துகள், எண்ணிக்கையாலும் அது அடைந்திருக்கும் வாசகப் பரப்பாலும் கவனம் கொள்ள வைக்கின்றன. ஆழமற்ற நேர்கோட்டுக்கதைகளை அதிகம் வாசித்துப் பழக்கியிருக்கும் மலேசிய வாசக சூழலில் ம.நவீனின் புனைவுகள் மாறுபட்ட வாசிப்பனுபவத்தைத் தருபவை. வாசகனின் உழைப்பைக் கோருபவை. காலத்தால் நிகழக்கூடிய அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கியே இலக்கியம் பரிணமிக்கிறது. மொழி, சொல் முறை,…

பறவைகளின் வலசை

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘விசும்பு’ சிறுகதையை வாசித்தபோது பறவைகளின் வேடந்தாங்கல் குறித்த ஆச்சரியம் விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. மலேசியாவில் வேடந்தாங்கலுக்கான சரணாலயங்கள் பல உள்ளன. ஃபிரேசர் மலை அதில் ஒன்றாக இருப்பது பலரும் அறிந்த தகவல்தான். பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத் தொடரில் அமைந்திருக்கும் பிரேசர் மலை (Fraser’s Hill) 1950ஆம் ஆண்டு தொடங்கியே பறவைகள் சரணாலயமாக அடையாளப்…

அபிராமி கணேசனின் கட்டுரைகளும் வல்லினம் இளம் எழுத்தாளர் விருதும்

வல்லினம் ஆசிரியர் ம.நவீன் என்னை சில மாதங்களுக்கு முன் அழைத்திருந்தார். இவ்வருடம் வல்லினம் இளம் எழுத்தாளர் விருது என்ற பெயரில் புதிய விருது  வழங்கும் திட்டத்தைப் பற்றி பேசினார்.   ஏற்கனவே வல்லினம் விருது என்ற பெயரில் தகுதியான மூத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அ.ரெங்கசாமி, சை.பீர்முகம்மது போன்ற இலக்கிய ஆளுமைகள் வல்லினம் விருதைப் பெற்றுள்ளனர். ஆனால்…

மலேசியாவில் செம்பனை பயிரிடலும் அதன் விளைவுகளும்

விவசாயம் உலகம் முழுதும் இருக்கும் மனிதனின் உணவு தேவைக்கும் பிழைப்புக்கும் வழி செய்கிறது. இருப்பினும், கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளுக்கு அப்பால் விவசாயத்தினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. விவசாயத்தின் துலக்கத்தினால் விரும்பிய முன்னேற்றத்தை நாம் உண்மையிலேயே அடைந்துள்ளோமா என சமீப காலங்களில் பல மானுடவியலாளர்களும் வரலாற்றாசிரியர்களும் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக 2015ஆம் ஆண்டு வரலாற்றாசிரியரான ‘யுவல்…

மலேசிய நவீன கவிஞர்கள் (1) : ந.பச்சைபாலன் கவிதைகள்

ஒரு கவிதையை விளக்கிக் கூறமுடிந்தால் அது கவிதையே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. மொழியால் சொல்லித் தீராத ஒன்றை மொழியில் முன்வைக்க முயலும் வடிவம் என்றும் கவிதையைச் சொல்வது உண்டு. எனவே கவிதை என்பது ஒரு செயற்கரிய செயல் எனக் கொள்ளலாம். எது சொல்ல இயலாதது? ஒரு செய்தியைச் சொல்லிவிடலாம், கருத்தைத் தெரிவிக்கலாம், ஆனால் அனுபவத்தின் சாரத்தை,…

கே.பாலமுருகனின் நாவல்கள்: ஒரு விமர்சனப்பார்வை

மலேசிய இலக்கியத்தில் கே.பாலமுருகனின் நுழைவு பலவகையிலும் முக்கியமானது. நகர நெருக்கடிகளிலும் புறநகரத் தனிமையிலும் அடையாளம் தொலைத்த விளிம்புநிலை மனிதர்கள் அதிகமும் நடமாடியது இரண்டாயிரத்துக்குப் பின் எழுதப்பட்ட பாலமுருகனின் சிறுகதைகளில்தான். இளம் படைப்பாளியாக எழுதத் தொடங்கியபோதே உலகத் தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் தன் புனைவுகளை எடுத்துச்செல்ல தனக்கான வலைத்தளத்தைத் தொடங்கிய (2008) முன்னோடிகளில் ஒருவர். அதுபோல,…

தமிழ் எங்கள் உயிர் (பாகம் 2)

‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்குச் சிறுகச் சிறுக பணம் சேரத் தொடங்கியது. இந்நிதிக்கு மேலும் அதிக அளவில் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றெண்ணி தமிழ் முரசு பத்திரிகையில் இது தொடர்பாகப் பல வகையில் விளம்பரங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. “உலகோர் போற்றும் உயர் தமிழ் சீரிளமை மாறாத செந்தமிழ் தமிழர்க்கு உயிர் தாய்மொழி தமிழ்…

வெண்முரசு முன் ஒலிக்கும் மூன்று கேள்விகள்

வெண்முரசு படைப்பு குறித்த உரையாடலின்போது நண்பர் ஒருவர் இக்கேள்வியை முன்வைத்தார் – இன்றைய காலத்தில் இப்படைப்பின் அவசியம் என்ன? நான் இந்தக் கேள்வியை அப்படைப்பு உருவான நாள்முதல் வெவ்வேறு விதங்களில் சந்தித்து வருகிறேன். ஆகவே இம்முறை நண்பரிடம் நிதானத்துடன் அணுக முயன்றேன். “சரி, இந்தப் படைப்பு இன்றைய காலத்திற்குப்  பொருந்தாது எனில் எந்தக்காலத்திற்குப் பொருந்தும் என…

வரலாற்றுடன் உரையாடுதல்

(1) இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததைச் சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜயகதையைச் சொல்கிறேன் என்று வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி (சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது.  அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது…

வெண்முரசு: ஒரு தன்னுரை

2013 இறுதி. ஒருநாள் ஆசிரியர் ஜெயமோகன் அழைத்திருந்தார். வியாச பாரதத்தை, அந்தக் களத்தைத் தனது தேடல் வெளியாகக் கொண்டு, வெண்முரசு எனும் தலைப்பில் பெரும்புனைவாக எழுதப் போவதாகக் கூறினார். எனக்கு அது ஆச்சரியம் அளிக்கும் விஷயம் இல்லை. காரணம் வெளியே அறிவிக்கும் முன்பே வேறொரு நிகழ்வின் பொருட்டு அவர் மகாபாரதத்தை எழுதத் துவங்கிவிட்டார். துரியோதனன் பிறப்பு…