
இன்றைய தினம் சீக்கிரம் முடிவடைந்தால் போதும் என்று இருந்தது. அப்பா முன் தினமே நன்றாக குடித்திருந்தார். அவர் அருகே அதன் நெடி காலையிலும் வீசியது. வழக்கத்துக்கு மாறாக காலையிலேயே குளித்து நெற்றி நிறைய திருநீறு பூசி இருந்தார். எப்போதும் இல்லாத அவருடைய இன்முகம் எனக்கும் அக்காவுக்கும் எரிச்சல் ஊட்டியது. தாங்கவே முடியாத இன்றைய தினத்துடன் மல்லுக்கட்ட…