Category: சிறுகதை

கல்முகன்

“உங்கள் இறுகிய முகம் அழகானது!” என்றேன் நான். “கல்முகன்! அப்படித்தான் எல்லோரும் என்னை அழைக்க விரும்புகின்றனர்” என்றார் பஸ்டர் கீட்டன். “அதுதான் உங்கள் பிரியமான புனைப்பெயர் என நீங்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள்” என்றேன். “உண்மை!” என ஆங்கிலத்தில் சொல்லி அருகே மேஜையிலிருந்த தொப்பியை தட்டி எடுத்து தலையில் பொருத்தி அப்பெயரை விரும்பியவர் போல் தொப்பியை…

பசுமை இல்லம்

இந்தச் சிறிய நிறுவனத்தின் மேல் தளத்தில், இடமோ வலமோ சன்னல்கள் இல்லாத சுவரை ஒட்டி வளைந்து செல்லும் பதினைந்து படிகளில் ஏறிச் சென்றால் சாம்பல் நிற கதவின் முன் சென்று நிறுத்தும்.  அந்தக் கதவைத் திறந்து சென்றால், சட்டென நிறுவனத்தின் பரபரப்புகளிலிருந்தும், பெருநகரின் கூச்சல் குழப்பங்களிலிருந்தும் வெகுதூரம் விளகியிருக்கும்   அகண்ட மொட்டை மாடி, எங்களை இன்னொரு…

படகு

சில நாட்களாகவே நான் மிகாலை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அறை சுவரில் மாட்டியுள்ள சீன லூனார் நாள்காட்டி தாள்களை ஒவ்வொரு முறையும் நான் கிழித்ததை வைத்துப் பார்த்தால் ஏறக்குறைய 2 மாதங்களாக என்னுடைய பார்வை முழுவதும் மிகால் மேல்தான் பதிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நாள்காட்டி தாள்களின் எண்ணிக்கை குறைய குறைய நான் மிகாலை நேருக்கு நேர்…

அவனை எனக்குத் தெரியும்

தண்டவாளங்களுக்கு இடையில் அமைந்த சிட்னி நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கான அடுத்த ரயிலுக்கு 18 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று நேரத்திரை காண்பித்தது. இரும்புகளில் வழுக்கிவரும் ரயில்களின் ஓசை, விட்டு விட்டு ஒலித்தது. அடுத்தடுத்த ரயில்களின் வருகையை அறிவிப்பவரின் குரல் சுருதி பிசகாத மந்திரமாய் கேட்டது. நான் அருகிலிருந்த நீண்ட இரும்புக் கதிரையில்…

மண்கதை

கனத்த மூச்சுடன், அம்மா இனி இல்லை என்பதைத் தம்பி என்னிடம் சொன்னான்.1 நானும் தம்பியும் தாத்தாவின் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் குடிசையின் நிழல் நீளமாக விழும் மாலை நேரம் வரை எங்களை மறந்து மண்ணில்2 ஆர்வமாக விளையாடிய நாட்கள் இன்றும் நினைவிருக்கிறது.  நானும் தம்பியும் உள்ளே படுத்திருந்த தாத்தாவை முற்றிலும் கவனிக்கவில்லை. தாத்தாவுக்கு அடிக்கடி…

சாதகம்

கட்டிலில் பாதி அளவே இருந்தாள். சுருக்கங்களை நீவி விட்டால் நீண்டு விடுவாளோ என்று தோன்றியது. ”நல்லாக்றீங்களா?” என்றதற்கு, எங்கோ பார்த்து ”ஆங் நல்லத்தான இருக்குறேன் போ” என்று சிரித்தாள். பொன்னாத்தா கிழவிக்கு வயது தொன்னூற்று ஒன்று. நடமாடிக்கொண்டுதான் இருக்கிறாள். அம்மா என்னிடம் கூறிய கணக்குப் படி பார்த்தால் எந்தத் தடையமும் தெரியவில்லை. நான் ஊருக்கு வந்து…

கூத்தன் மலை

1 மலைச்சரிவில் ஒரு மின்மினி பேருவகையும் பெருமழையும் அருகிவிட்டிருந்த அந்த வறண்ட நிலம் அன்று விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒருவார காலமாய் களைகட்டிய கட்டுங்கடங்காத கொண்டாட்டங்களும் கொந்தளிப்புகளும் உச்சம் ஒன்றை எட்டிவிடும் மும்முரத்தில் இருந்தது. ஏழாம் நாளான அன்றைய இரவில் நடக்கவிருந்தது மிக முக்கியமான இணைவு. ஊரின் முதன்மை வீரன் என அறிவிக்கப்பட்டு, ஒரு வருடகாலமாய் போற்றப்பட்டு…

நான்காவது கொலை

‘உங்களுடைய பொருளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அன்பான அழைப்பில் ஒரு கடிதம் சுங்கப் பகுதியிலிருந்து வந்திருந்தது. இலங்கையின் சுங்கப் பகுதியிலிருந்து இப்படி ஒரு அன்பான கடிதம், தமிழ் எழுத்தாளருக்கு வருவதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் எடையை நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாது. தலையிலும் மனதிலும் சட்டென அந்தப் பாரம் ஏறி விடும். ‘அப்படியென்ன பெரிய…

செங்குன்னியார் பூசை

மாலையில் ஊர்க்கூட்டம் என்று தெரிந்ததும் பிரகாசு மௌனமாகி விட்டான். அதிகம் பேசாதவன் என்றாலும் வழக்கமாகப் போடும் ‘ம்’ கூட அவனிடமிருந்து வரவில்லை. அதைப் பார்க்கச் சரசம்மாவுக்கு மனதில் கருக்கென்றது. வலியப் பேசினாலும் பதில் இல்லை. கைவேலைகளை ஏனோ தானோவென்று செய்தபடி அவனையே கவனித்துக் கொண்டிருந்தார். தன் பார்வையில் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல. ஆனால்…

விருப்பம்

“பாக்கறதுக்கு இது கலவை மாதிரியே தெரியலையே மேஸ்திரி. மாரியாத்த கோயில்ல ஊத்தறதுக்கு கூழு கரைச்சி வச்ச மாதிரி இருக்குது. இதை வச்சி எப்படி பூச்சுவேலை செய்வீங்க? சிமெண்ட் வேணாமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் ஜெயலட்சுமி. அவள் தன் கையில் வைத்திருந்த குச்சியை பக்கத்தில் ஒரு சிறிய தொட்டிக்குள் விட்டுத் துழாவினாள்.  தொட்டியில் வேப்பம்பட்டை, ஈச்சம்பட்டை, கற்றாழை,…

தழலின் தீண்டல்

“நீங்க அவன மண்ணுளி பாம்புன்னு நினைச்சீங்க. நான் அப்பவே சொன்னேன். அவன நம்பாதீங்க, அவன் பெருமாள் கோவில் கருப்பன்னு. நீங்கதான் கேக்கல. இதோ உங்ககிட்டயே சீறிட்டுப் போறான் இப்ப,” என்று மாமாவிடம் சொல்லிவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்த கிரிதரனிடம் நான் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் சிரிப்பிலேயே நிலைத்திருந்த முகத்தில் அவனின் சிறிய…

மத்த யானையின் ஈருரி

“விதண்டாவாதமாகப் பேசுவதை நிறுத்து. இப்படிப் பேசிப் பேசித்தான் எல்லாமே சிக்கலாகிறது. என்னை மடக்கி மடக்கிப் பேசி ‘கிரிட்டிக்கலாக’ அனலைஸ் செய்யாதே,” லலிதா கோபமாகச் சொன்னாள். “என்ன விதண்டாவாதம்? அரை மணிக்கு மேல் கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்கிறேன்!” “உனக்குத்தான் நான் பேசினால் காது கேட்பதில்லை!” கோபமாக பரந்தபன் கத்தினான். அவள் ஒரு துளி காப்பியை அருந்தினாள்.…

அந்த மாவட்டத்தின் டாக்டர்

இலையுதிர் காலத்தில் ஒருநாள் நான் ஓர் உட்புறப் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்தபோது எனக்குத் திடீரென்று சளிபிடித்து  உடல் காய்ச்சல் கண்டது. நல்ல வேளையாக அப்போது நான் அவ்வூரின் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன். ஒரு டாக்டரை வரச் சொல்லியிருந்தேன். சொல்லி அரை மணி நேரத்துக்குள் அவர் வந்துவிட்டிருந்தார். ஒல்லியான தேகம், கருமையான தலைமுடி, சராசரி உயரம்…

அப்பாவுக்குச் சென்னை பிடிக்கவில்லை

அலுவலகம் முடிந்த பின் எல்டாம்ஸ் ரோட்டிலும் நுங்கம்பாக்கம் ஹைவே டிராஃபிக்கிலும் முக்கால் மணிநேரம் லோல்பட்டு, இதற்கு நடுவில் ஒன்வேயில் மேலே ஏறிவந்த ஒரு பைக்காரனைத் திட்டிவிட்டு ஒருவழியாக அண்ணாநகர் வந்துசேரும்போது ஏற்கெனவே ஆறு முப்பது ஆகியிருந்தது. குறுகலான மாடிப்படியில் ஏறினால் குளிரூட்டப்பட்ட ஹால். சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வுக்கான கோச்சிங் வகுப்பில் சேர்ந்திருந்தேன். வரலாறு வகுப்பு.…

நாற்றம்

வெலிங்டன் விடுதியின் காப்பாளர் பங்களாவுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் பனைமரங்கள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. அடர்ந்த பனைமரத் தூர்களின் அடியில் முற்றி உதிர்ந்த நுங்குகள் கிடக்கின்றன. வெட்டி இறக்கப்படாத நுங்கு குலையாகத் தெரித்து மட்டைகளின் இடையில் தொங்குகின்றன. பாதையில் சிதறிக்கிடக்கும் இரண்டு பெரிய நுங்குகளில் பளபளப்பு மங்கி மஞ்சள் நிறக்கோடுகள் விழுந்திருக்கின்றன. டேனியல் விஜயகுமாரின் அம்மா…