எனவே அந்தப் புத்தகத்தைத் தடை செய்வீர்

நீங்கள் என் வாயை மூடலாம் என் மனதையல்ல  நீங்கள் என் கண்களை வெட்டி எறியலாம் ஆனால் நான் குருடனாக மறுக்கிறேன்  நீங்கள் என் உடலைக் கொல்லலாம் என் ஆற்றல் உங்கள் முடிவற்ற பொய்களுள் ஊடுருவி உங்களைப் பேயாய் துரத்தும் (மொழிபெயர்ப்பு கவிதை) ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் கலைவடிவத்தையும் மனிதன் தனது அனுபவம், கல்வி, சிந்தனை, சமூக மதிப்பீடுகளின்…

கங்காணிமார் பாடல்கள்

(Awak Cantik Macam Bunga Raya) தமிழ்த் திரைப்படங்களில் 1970ஆம் ஆண்டுகளில் நடந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்று, வெளி நாடுகளுக்குச் சென்று படபிடிப்பை நடத்துவதாகும். பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் வெளிநாட்டுக் காட்சி என்று சொல்லப்படுவது அந்நாட்டின் புறக்காட்சிகளை மட்டும்தான். அந்த நாடு ஓர் அரங்கு போன்றே பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆகவே அந்த நாட்டின் இடங்களும் மனிதர்களும்…

அக்கினி வளையங்கள்: புதைந்துபோன ஒரு கனவின் பாதை

1. மலேசிய மூத்த தமிழ்ப் படைப்பாளிகளில் சை.பீர்முகமதுவிற்குத் தனித்த இடம் உண்டு. ‘வேரும் விழுதுகளும்’ பெருந்தொகுப்பிற்காக அவர் ஆற்றியிருக்கும் பணி மதிக்கத்தக்கது. அவரது சிறுகதைகளில் சில உயர்தரத்தை எட்டியிருக்கின்றன. இப்போது ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் மூலம் தனது இலக்கியக் கடமையையும் வரலாற்றுக் கடமையையும் ஒருசேர நிகழ்த்தியிருக்கிறார். இந்நாவலை எழுதியதின் வழியாகத் தரமான படைப்பிலக்கியவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக்…

‘அழகான மெளனம்’ : பதுக்கப்பட்ட உண்மைகள்

மலேசிய இலக்கியத்தில் நீங்கா இடம்பிடித்தக் களம் என்றால் அது தோட்ட புறம்தான். தோட்ட புற வாழ்க்கையை எத்தனை பக்கங்களுக்கு எழுதினாலும், எத்தனை பேர் வந்து எழுதினாலும் அது நிறைவடையாமல் நீண்டு கொண்டே செல்லக் கூடியதாக மலேசிய எழுத்தாளர்கள் மனதில் பதிந்து போய் கிடக்கின்றது. தோட்ட புறவாழ்வென்பது இரு வேறு காலகட்டங்களைக் கொண்டதாக வகுத்துக் கொள்ளலாம். முதலாவது…

மூன்று நாவல்களும் முழுமையின் கலைவடிவும்

காலங்களில் படர்ந்து கிடக்கும் வாழ்வின் அவதானிப்பையும், நிலங்களின் குறிப்பையும், வாழ்வின் ஓசையையும் அதன் நிசப்தத்தையும் விரிந்த தளத்தில் பேசக்கூடிய இலக்கிய வடிவம் நாவலாகும். மொழியால், மீட்டெடுக்கப்படும் உணர்வுபூர்வமான வரலாறுகள் அவை. மலேசியாவைப் பொறுத்தவரை சிறுபான்மை இனமாக இருப்பதாலேயே தமிழ் நாவல்களில் வரலாற்றுக் குறிப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகம். யாருடைய வரலாறு அழியும் பலவீனத்தைக் கொண்டுள்ளதோ அவை மறுபடி…

வளையங்களைத் தாண்டும் சுயநலம்

தான் கடந்து வந்தவர்கள் யாவரும் சுயநலமிக்கவர்களே, தானும் அப்படி இருப்பதில் தவறில்லை என்று சொந்த தராசில் சண்முகம்பிள்ளை எனும் கதாபாத்திரம் தன்னை நிறுத்தி நியாயப்படுத்தும் வகையில் இந்நாவல் முடிகிறது, அவர் பார்வையில் எல்லாருமே அக்கினி வளையத்தில் சாகசம் செய்யும் சுயநலமிக்க புலிகளாக நினைத்துக்கொள்கிறார். தானும் புலிதான் என அவர் எண்ணிக்கொள்ளும் நிலையில் ஒரு வாசகனாக அவ்வரியைக்…

வரலாறும் தனிமனிதனும்

‘எதிலும் சந்தேகப்படு‘ – கார்ல் மார்க்ஸின் இந்த‌ வாசகம்தான் ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் பரப்பை ஒரு நிலைப்படுத்தும் சூத்திரமாக அமைக்கிறது. இந்நாவலை ஆசிரியர் சை.பீர்முகம்மது அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை மையமாக்கி அதனூடே மானுட கீழ்மைகளையும் ஊடாட விட்டுள்ளார். 23.02.1950   புக்கிட் கெப்போங்கில் (ஜொகூர்)   போலிஸ்நிலையத்தில் கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய தாக்குதல் வழி அக்கினி வளையங்கள் உக்கிரமாக எரியத் …

பேய்ச்சி: தமிழர் மானுடவியல் ஓர் அலசல்

யானைகளைக் குண்டலமாய், மலைப்பாம்பை முலைவடமாய் அணிந்த உக்கிரமான பேச்சியம்மனை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘படுகை’ சிறுகதையில் வாசித்திருக்கலாம்.  அது ஆச்சரியமான தோற்றம்தான். வழக்கத்தில் இல்லாத தோற்றம். ஆனால் பேச்சியம்மன் அவ்வாறான தோற்றத்தில்தான் குமரி நிலத்தில் காட்சியளிப்பதாக ஜெயமோகன் ஓர் உரையில் கூறுகிறார். நாட்டார் தெய்வங்கள் அவ்வாறான தோற்றம் எடுக்கக்கூடியவைதான். இதே பேச்சியம்மன்தான் மதுரை சிம்மக்கல்லில் வேறொரு தோற்றத்தில்…

பேய்ச்சி: பேருரு அன்னையுள் பேயுரு

என் பால்ய வயதிலிருந்தே என் வீட்டில் முருகன்தான் பிரதான சாமியாக இருந்தார். அவர் பக்கத்தில் விநாயகர், ராமர், கருமாரிஅம்மன். பட்டணத்திற்கு குடிபெயர்ந்த பிறகுதான் பேச்சியம்மன் அறிமுகமானாள். கையில் குழந்தையுடன் இருந்தவளைப் பேச்சிய்யம்மன் என்றார்கள். இன்னொரு கோயிலில் மடியில் ஒரு பெண்ணைக் கிடத்தி வயிற்றைக் கிழித்த கோலத்தில் இருந்தது. அதுவும் பேச்சியம்மன் என்றார்கள். கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக்…

நுண்வெளி கிரகணங்கள்: சாதாரணங்களின் தரிசனம்

எழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துள்ளல்களே நினைவுக்கு வரும். மேடையில் உரையாற்றும்போதோ தனிப்பட்ட முறையில் உரையாடும்போது சன்னமாக எழுந்து நிலைகொள்ளும் அந்தத் துள்ளல் வசீகரமானது. அது காளையின் ஜல்லிக்கட்டு துள்ளலை ஒத்தது. தனது திமிலைப் பிடிக்கவிடாமல் நாலாபுறமும் சுற்றும் காளையின் அசைவுகள் இயல்பாய் ஒரு நடனத்தை உருவாக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவு பெரிய உருவம் தனது…

புல்லின் விதைகள்

ஒருதுளி ஈரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் காற்றில் பறந்து வருகின்ற புல்லின் விதைகள் ஈரத்தைக் கவ்விப் பிடித்துத் துளிர்த்து விடுகிறது. அப்படிக் காற்றில் அலைந்து வரும் விதைகள் சிமிண்டு பாவிய தரையின் உடைவிடுக்கில் கூட பற்றிக்கொள்வதைக் கண்டிருக்கின்றேன். வரலாற்றுத் தருணங்களும் அவ்வாறானதுதான். அதன் கதையாடல்களுக்கு நடுவில் உயிர்ப்புள்ள நுண்மையான பகுதிகள் புனைவுக்கான சாரமாக எழுத்தாளர்களால் விதைக்கப்படுகிறது.…

‘ரிங்கிட்’ – மதிப்பு வீழாத நாணயம்

மரணத் தருவாயில் இருக்கும் ஒருவருடைய மரணம் நிகழ போவது அவருக்கு மட்டுமே தெரியும். அது எப்படி இருக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது. வேண்டுமென்றால் செத்து மீண்டும் பிழைத்து வந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அப்படியொரு நிகழ்வு நடக்கப்போவது இல்லை. பிறகு எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நல்ல எழுத்தாளனால் மட்டுமே சொல்ல…

ரிங்கிட் நாவல் விமர்சனம்: நிகழ்த்திக் காட்டும் வரலாறு

வரலாற்றுநாவல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் இப்படிக் கூறுகிறார். ”வரலாற்றுநாவல் என்பது திருப்பிச்சொல்லப்பட்ட வரலாறேதான். அந்தத் திருப்பிச்சொல்லும் முறையில் நிகழ்ச்சிகளைத் தொடுக்கும் ஒழுங்கு, நிகழ்ச்சிகளைக் குறியீடுகளாக ஆக்கும் நுட்பம் போன்றவற்றினூடாக ஆசிரியன் உருவாக்கும் மையநோக்குதான் அதைக் கலைப்படைப்பாக ஆக்குகிறது”. இப்படியான ஒரு முயற்சியிலிருந்து சற்று விலகிப் போயிருக்கிறது ஆசிரியர் அ.பாண்டியனின் ‘ரிங்கிட்’ நாவல். வல்லினம் நடத்திய குறுநாவல்…

மிச்சமிருப்பவர்கள் : ஒடுக்கப்பட்டக் கூடுகளின் ஓங்கல்

ஒரு சமுதாயம் குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் எதிர்க்கொண்ட நிகழ்வுகளின் விவரிப்பாகத்தான் பெரும்பான்மையான மலேசியத் தமிழ் நாவல்கள் எழுதப்படுகின்றன. சுதந்திரத்திற்குப்பின், வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு வெளிகளில் வெவ்வேறு சமூக அடுக்குகளில் உள்ள இந்தியர்களால் எதிர்கொள்ளப்பட்ட உயிர் உருக்கும் சம்பவங்களை ஒரு புறநகரின் பின்னணியில் தொகுத்து கிட்டத்தட்ட 50 கால அவல நிலையை மிகத்துல்லியமாய் காட்சிப்படுத்திச் செல்வதே மிச்சமிருப்பவர்கள்…

மிஞ்சியிருப்பவர்களின் கதை

எழுத்தாளர் செல்வன் காசிலிங்கம் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. அவர் எழுதிய படைப்புகள் எதையும் வாசித்ததில்லை. அவரின் புனைவில் முதன் முதலாய் படித்த எழுத்துப்படிமம் இந்த ‘மிச்சமிருப்பவர்கள்’ நாவல் மட்டுமே. என்னுடைய முதல் அனுமானம், இவ்வளவு சிறிய நாவல், கண்டிப்பாக அவ்வளவு சுவாரசியமாக இருக்காது என்பதுதான். ஆனால் இந்நாவல் இண்ட்ராப் (HINDRAF) பற்றியது என முகவுரையில் வாசித்ததும்…

மலைக்காடு: இழப்பும் நிராகரிப்பும் இணைந்த வாழ்க்கை

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், சஞ்சிக்கூலிகளாக மலேசியாவிற்கு வந்திறங்கிய இந்தியர்களின் வாழ்வியலையும் உளவியலையும் அலசும் இந்நாவல் அதனூடே பல்வேறு அரசியலையும் பேசுகிறது. தர்மபுரி பக்கத்தில் இருக்கும் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. பஞ்சத்தில் வாடிய கிராமத்திலிருந்து தன் 15 வயது மகன் உண்ணாமலையுடன் மலாயா புறப்படுகிறார். வளமான வாழ்வாதாரத்திற்காக அயலகம் புறப்படும் மாரிமுத்துவின் வாழ்க்கை என்னவானது? மூன்று…

மலைக்காடு: மலைமேட்டு முனியின் கனவுகாடு

இரு நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு  குமுகாயத்தின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் பறித்துக் கொண்டு கொத்தடிமைகளாய், வாய்ப்பொத்திக் கைக்கட்டி ஏவிய வேலைகளைச் செய்ய உலகம் முழுதும் தேடித் திரிந்து வெள்ளையர்கள் அள்ளிக் கொண்டு வந்த பேரினம்தான் தென்னிந்தியத் தமிழர்கள். கப்பல்களில் அடித்தட்டு மக்கள் பயணிக்கக் கூடிய அந்தப் பகுதியில், மனித மலமும் மூத்திரமும் ஒருங்கே காய்ந்து நாறும்…