
சண்முகப்பிரியா குறித்து நான் இதுவரை எனது எந்தச் சிறுகதையிலும் நாவலிலும் குறிப்பிட்டதில்லை. அவ்வளவு ஏன்… அனுபவங்கள் குறித்து மாங்கு மாங்கென்று எழுதிய எந்தக் கட்டுரையிலும் கூட அவள் தொலைதூரமாய் நிற்கும் மங்கிய பாத்திரமாகக் கூட வெளிபட்டதில்லை. சண்முகப்பிரியாவை நான் எப்படி அவ்வளவு எளிதாக மறந்தேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது. என் மூன்று வயது மகளை…