Category: புத்தகப்பார்வை

துணைக்கால் : ஒரு பார்வை

தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தில் துணைக்கால் என்று சொல்லப்படும் துணையெழுத்து பிற எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும் இயல்பு கொண்டதாயினும் சொற்களின் பொருள் வேறுபாட்டுக்கும், பொருள் புலப்பாட்டுக்கும் மிகவும் இன்றியமையாதது. தன்னடக்கத்தின் காரணமாகத் தன் கட்டுரைகள் துணைக்கால் தன்மை கொண்டவை என நூலாசிரியர் விஜயலட்சுமி கூறினாலும் இந்நூல் மலேசியச் சூழலில் மட்டுமின்றித் தமிழ் புழங்கும் எழுத்துச் சூழலில் விழிப்புணர்வை…

துணைக்கால்: படைப்பாளிகளுக்குத் துணைநூல்

இந்நூலைப் பல கோணங்களில் படைப்பாளிகளுக்குத் தேவையான தகவல்களைச் சொல்லும் கையடக்க விதிமுறை நூலாக நான் பார்க்கிறேன். ஒரு நூல் எழுதத் தொடங்கும் முதல் எழுத்திலிருந்து அந்நூலால் கிடைக்கப்பெறும் வருமானம் வரை ஒவ்வொரு படைப்பாளரும் கட்டாயம் கருத்தில் வைத்திருக்கவேண்டிய செய்திகளை எளிமையாகவும் தேவைக்கு ஏற்ப ஆங்கிலக் குறியீடுகள் மூலமாகவும் வழங்கியுள்ளார் நூலாசிரியர். இந்நூலிலிருக்கும் நூறு பக்கங்கள் இனி…

அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை : வாசிப்பனுபவம்

“ஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன்வழி, அம்மொழியில் புழங்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாட்டு அறிவுத்தளத்தையும் அறியமுடியும் என்பதால் மலாய் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் குறித்து அறிந்திருக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இதுவே ‘அவர்கள் பேனாவில் இருந்து கொஞ்சம் மை’ எழுதப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.” முன்னுரையில் அ.பாண்டியன்

பத்தி எழுத்துகள்

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை இந்தப்பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும், உங்களோடு எழுத்து குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மகிழ்ச்சி. வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர் தயாஜி அவர்கள் எழுதிய ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ – கவித்துவமான தலைப்பு – வல்லினம் இணைய இதழில் அவர் தொடர்ந்து எழுதிவந்த பத்திகளில் சிறந்தவற்றைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள்.…

மசியின் நிறங்கள்

பல்லினங்கள் வாழக்கூடிய ஒரு சமூகத்தில் ஒவ்வொரு இனமும் தன்னுடைய தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்கொள்கிறது. அதேவேளையில் அது தனக்குப் புறத்தே இருக்கிற பிற இனங்களின் பண்பாட்டிலிருந்து தேவையானதை தன்வயமாக்கிக்கொள்வதோடு தன்னிடமிருப்பதை பகிர்ந்தும்கொள்கிறது. நாம்- நாங்கள், அவர்கள் – மற்றவர்கள் என்கிற பாகுபாடுகளைக் கடந்து இடையறாது நிகழ்ந்தவாறே இருக்கும் இந்தப் பரிமாற்றம் பண்பாட்டுப் பொதுமைகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு…

வாழ்க்கையிலிருந்து வந்த கதைகள்

எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகளுக்குத்தான் இலக்கணம் வகுக்க முடியும். எழுதப்படாத படைப்புகளுக்கு இலக்கியக் கோட்பாடு, வரையறையை முன்கூட்டியே எழுத முடியாது. காரணம் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே தனக்கான புதிய இலக்கணத்தை, வரையறையை, அழகியலை, வடிவத்தை, மொழியை தானே உருவாக்கிக்கொள்ளும். அவ்வாறு உருவாக்கிக்கொள்ளும் எழுத்துக்களையே கலைப்படைப்பு என்று கூறமுடியும். ம.நவீன் எழுதியுள்ள ‘மண்டை ஓடி’ சிறுகதை தொகுப்பு கலைப்படைப்பு…

விவாதங்கள் தொடர வேண்டும்

தமிழ்மொழியில் வெளியாகும் படைப்புகள் இன்று பல தேசங்களில் வாழும் தமிழர்கள் படிக்க ஏதுவாய் வினியோகிக்கப்படுகின்றன. இணையம் மூலமாகவும் பலரை சென்றடைகின்றன. இந்தஒரு சூழ்நிலையில், படைப்பு என்பதன் தன்மையும் அடையாளமும் புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளன. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையிலான உறவும் வெளியும் மாறியமைந்துள்ளன. குறிப்பிட்ட படைப்பானது, அது உருவான சமூக, பண்பாட்டு வெளிக்கு அப்பாற்பட்ட வாசகர்களை அடைகிற…

கலை வகுப்புகள் மாணவ மாணவியரின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்த உதவும்.

It is frequently a misfortune to have very brilliant men in charge of affairs. They expect too much of ordinary men.” ― Thucydides பொதுவாக ஒரு பள்ளி ஆசிரியரின், பள்ளி,கல்வியமைப்பு,மாணவர்கள் பற்றிய கட்டுரைகள்-அதிலும் தன்னைப் பின் தங்கிய ஆசிரியனென்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கட்டுரைகள்- அவ்வளவு சுவாரஸ்ய மிக்கவையாக…

பின்தங்கிய மாணவர்கள் என்று யாரும் இல்லை

‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நான் சமீபத்தில் படித்த முக்கியமான நூல்களுள் ஒன்று. அளவில் சிறியது, ஆனால், நம் சிந்தனையைக் கிளறுவது. பள்ளிக் கல்வியாயினும், பல்கலைக்கழகக் கல்வியாயினும் அது மாணவர் மையக் கல்வியாக இருக்கவேண்டும் என்பதையே கல்விச் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், நடைமுறையில் நமது கல்வி பரீட்சை மையக் கல்வியாகவே இருக்கின்றது. இதன் விபரீதங்களை இந்நூலாசிரியர் நவீன்…

சீ. முத்துசாமியின் ‘இருளுள் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்

மலேசிய தமிழ் புனைவுலகில் தனி அடையாளத்தோடு மிக நிதானமாக இயங்குபவர் கெடா மாநில எழுத்தாளர் சீ.முத்துசாமி (சீ.மு). நீண்ட காலமாக படைப்பாளராகச் செயல்படும் இவரின் ‘மண்புழுக்கள்’ நாவல் இவரை நன்கு அடையாளம் காட்டியது. அதோடு மலேசிய எழுத்துலகில் தனித்துவம் பெற்ற நாவலாகவும் அது விளங்குகிறது . சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீ.முவின் குறுநாவல் தொகுப்பு…

பட்டு: புரிந்து கொள்ளாத அன்பு நிரந்தரமாகிறது

காதலுக்கு ரசாயன மாற்றங்களைக் காரணமாக சொன்னாலும், அத்தகைய ரசாயன மாற்றம் ஏற்படும் நேரம் காலமெல்லாம் நம் கைவசம் இருப்பதில்லை. ‘இருபது வயதில் காதல் வராவிட்டாலும் தப்பு; அறுபது வயதில் காதல் வந்தாலும் தப்பு’ என்று சில பேச்சாளர்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். அந்த வசனங்களுக்கு கைதட்டல்களின் சத்தம்தான் இருக்குமே தவிர வாழ்வின் உண்மையை அவை நெருங்குவதே இல்லை.…

தமிழ் நாவலுலகில் நிகழ்ந்த அதிசயம் – ‘எங் கதெ’

அபூர்வமாகத்தான் நம்மை ஒரு படைப்பு நிலைகுலையவைக்கும். அப்படி அண்மையில் என்னை ஆட்டிப்படைத்த ஒரு படைப்பு இமையம் எழுதிய – ‘எங் கதெ’ நாவல். அது ஓயாமல் என்னை துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான  “கமலா” என்கிற 28 வயது கணவனை இழந்தப் பெண்ணுக்கும் படித்துவிட்டு வேலை தேடும்  விநாயகம் என்பவருக்குமிடையே ஏற்படும் அன்பு, அதனால் இருவருக்குமிடையே…

எனது பார்வையில் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம்

அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவல் வாசிக்க நேர்ந்தது. பொதுவாகவே எழுத்தாளர்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை  இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது…

தூக்கம் பறித்த ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்

சிறிய தோட்டா ‘கடைசி மாவில் ஒரு குட்டி தோசை குழந்தைக்கென தைத்த மிஞ்சிய சிறு துணியின் குட்டி கீழாடை அவளுக்கு உள்நாட்டுப் போரின் போது அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில் மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா குழந்தையின் உடலுக்கென..’ கவிஞர் நரன் எனக்கு அறிமுகமானது இந்தக் கவிதையின் வழிதான். போரில் எது வேண்டுமானாலும்…

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு – ம. நவீன்

தமிழில் விமர்சனம் என்பது அரிதாகிவிட்டது. விமர்சனம் இருக்கிறது என்று சொன்னால் அது முதுகு சொறிந்து கொடுப்பதாக, நட்பு சார்ந்ததாக, ஆதாயம், அரசியல், எதிர்ப்பார்ப்பு நிறைந்ததாக இருக்கிறது. ஒரு படைப்பை அதன் பலம் சார்ந்து, தரம் சார்ந்து விமர்சிக்கின்ற பண்பு அருகிவிட்டது. இப்போக்கு இலக்கியப் படைப்பிற்கு மட்டுமல்ல மொழிக்கும் இழப்பு. பொய் உரைகளையே நாம் இலக்கிய விமர்சனம்…