
தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தில் துணைக்கால் என்று சொல்லப்படும் துணையெழுத்து பிற எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும் இயல்பு கொண்டதாயினும் சொற்களின் பொருள் வேறுபாட்டுக்கும், பொருள் புலப்பாட்டுக்கும் மிகவும் இன்றியமையாதது. தன்னடக்கத்தின் காரணமாகத் தன் கட்டுரைகள் துணைக்கால் தன்மை கொண்டவை என நூலாசிரியர் விஜயலட்சுமி கூறினாலும் இந்நூல் மலேசியச் சூழலில் மட்டுமின்றித் தமிழ் புழங்கும் எழுத்துச் சூழலில் விழிப்புணர்வை…