Category: சிறுகதை

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்

ஃபோன் பேசிவிட்டு ஜஸ்டின் கொஞ்சம் பதற்றத்துடன் திரும்பி வருவதைக் கசாயம் கவனித்தான். “என்ன மக்கா? மாமாவா?” “ஆமா வர சொல்லுகாரு. என்னவொ பெரிய சோலியாம். வண்டி எடுல” கசாயத்துக்கு அவன் சொல்லும் தொனியிலேயே சங்கதி ஓரளவு புரிந்தது. பள்ளி நாட்களிலிருந்தே அவனுடன் இருப்பவன் கசாயம். ஜஸ்டினின் அப்பா மோகன் ராஜ் அவன் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு…

லஜ்ஜா

I மாமாவிடம் இருந்து போன் கால் வந்தது.“சேகரு, ஆபிஸிற்கு வா.” என்று சொல்லிவிட்டு என் பதிலைக் கேட்குமுன் அழைப்பைத் துண்டித்துவிட்டார். அவர் எப்போதும் அப்படித்தான். பைக்கை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பினேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மாமாவிடம் வேலைக்குச் சேர்ந்தேன். என்ன வேலை என்று கேட்டால் என்னால் சரியாகப் பதில் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. நான்…

மந்திர மெத்தை

தூக்கம் ஏமாற்றிக் கொண்டிருந்த நள்ளிரவில் அறைக்குள் ரகசியமாக நுழைந்து உள்ளே சுற்ற ஆரம்பித்தது ஏதோ ஒரு பாட்டிசை. கைப்பேசி எடுத்து மணி பார்த்தேன், மூன்று. எழுந்து வெளியே வந்தேன். அப்பாவும் அம்மாவும் உறங்காமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். “ஏதாவது வேணுமா” என்றாள் அம்மா. தலையசைத்துத் தண்ணீர் குடிக்கச் செல்வது போல சமையலறைக்குள் சென்று…

தூசி

”அண்ணே பீமநகரி பஸ் எப்ப வரும்னு சொல்ல முடியுமா” என டீக்கடைக்காரரிடம் வெளியூர்க்காரர்களுக்கேயுரிய ஒரு அந்நியத்தன்மையையும் ஐயத்தையும் ஒருங்கே திரட்டி மெல்லக் கேட்டேன். அதைக் காதில் வாங்காத பாவனையில் டீயை ஆற்றிக் கொண்டே “அதெல்லாம் நேரக்கணக்கு கிடயாது. நில்லும். அதுவா வரும்போது வரும்” என்றார். அங்கிருந்த பொன்மஞ்சள் நிறத்திலான பஜ்ஜியைப் பார்த்தபோது பசி அடிவயிற்றைக் கிள்ளியது.…

ஆசான்

“வீட்டுக்கு வந்து ரெண்டு மணிக்கூட ஆகல, அதுக்குள்ள எங்கல போற? ஒனக்கு பிடிக்குமேன்னு ரசவட செஞ்சு வச்சா, ஒரு வாயி திங்கல. போக்கு சரியில்ல கேட்டியாடே…” நான் சட்டையை மாற்றும் போது, கூடவே அம்மையின் அர்ச்சனையும் ஆரம்பித்தது. “வெளிய போறதுலாம் சரி, வேற ஏதாவது பண்ணிட்டு வந்த, வீட்டு நடைல ஏறக் கூடாது. அப்பனுக்க எல்லா…

இக்கிமஸ்

[1] பனிக்குள்ளிருந்து தோண்டி எடுக்கப்பட்டதைப்போல தோற்றமளிக்கும் அந்த நான்குசக்கர வாகனம் சாலையை விட்டு விலகி, இடப்பக்கமாக திரும்பி குறுகலான காட்டுப்பாதையில் நுழைந்தது. வேகம் குறைந்து ஊர்ந்தபடிதான் சென்றது. என்றாலும் இரண்டு அடி உயரத்திற்கு கொட்டிக்கிடந்து குளிரில் கண்ணாடியைப்போல இறுகிவிட்ட பனி, சக்கரங்களுக்கு கீழே ஓசையுடன் உடைந்து நொறுங்கியது. முழங்கால் உயரத்திற்கு பாறைகளை சுவராக அடுக்கி உருவாக்கப்பட்ட…

உடன் இருத்தல்

1 வடக்கு வேல்ஸிலிருந்து லண்டன் வரையிலான ரயில் பயணத்தில் அவரைச் சந்தித்தேன். பர்மிங்ஹாமில் ஏறினார். என் வலதுபக்க இருக்கையில் வந்து அமர்ந்தார்.  இடப்புற  ஜன்னல்வழி, எதிர்ப்புறம் விரையும் வெட்டவெளியில் லயிக்க முயன்றேன். ரயிலேறிய நிமிடத்திலிருந்து இதே முயற்சிதான். முடியவில்லை. காட்சிகளும் ஒலிகளும் வாசகங்களும் எனக்குள்  அலைபாய்ந்துகொண்டிருந்த விதம் அப்படி. அடம் பிடிக்கும் குழந்தைபோல, புறக் காட்சியுடன்…

மேலங்கி

மலைகளின் சிங்கம் என்று அறியப்பட்ட மூத்த சிற்பியான லியோனிடாஸ் அல்லோரி ராஜதுரோக குற்றச்சாட்டின் பெயரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அவருடைய மாணவர்கள் கலங்கிப்போய் அழுது ஓலமிட்டார்கள். அவர்களுக்கு அவர் ஞானத்தந்தை. தேவதூதர். காலத்தை வென்ற அமரத்துவர். ஊருக்கு வெளியே பியெரினோவின் விடுதியில் சிலரும் கலைக்கூடங்களில் சிலரும் வீட்டுப்பரன்களில் சிலரும் என்று மறைவான இடங்களாக பார்த்து…

தைலம்

ஹசான் வந்த சில வாரத்தில் “அடுத்த ஆளுக்குத் தயாராயிட்டா போலிருக்கு… இவன வச்சு இங்கயே ஐ.சி எடுக்கலாம்னு நெனக்குறா… இவுங்களுக்கெல்லாம் ரொம்பத்தான் எடம் கொடுத்துட்டோம்…’’ என ஜேக் இரண்டு மூன்று கடைக்காரப் பையன்களிடம் பேசத் தொடங்கியிருந்தார். “அது அவளோட ரெசெக்கி பாக்சிக்… அவளுக்குன்னு இருந்தா நிச்சயம் கெடக்கும். நமக்கு நம்மோட” என ஜேக்கின் அருகில் வியாபாரம்…

இசக்கி

1 “சார் உங்களுக்காச்சும் காசு வெட்டி போடுறதுல எல்லாம் நம்பிக்க இருக்கா?” என்று என் எதிரில் விசாரணைக் கைதியாக அமர்ந்திருந்த மெல்லிய உடல் இளைஞன் கேட்டான். அவன் பேசும் போதே குரலில் பரிதவிப்பு தென்பட்டது. நான் ”உண்டு” எனச் சொல்ல வேண்டும் என்பது போல் அவன் கண்கள் காத்திருந்தன. நான் எஸ்.ஐ. ராஜரத்தினத்தை திரும்பிப் பார்த்தேன்.…

மெக்தலீன்

மெக்தலீன் சீடராகச் சேர்ந்த அன்றிலிருந்தே ஜானுக்கு அசூயையாக இருந்தது. நேரடியாகத் தன் குருவிடம் சொல்லவும் தயக்கம்தான். முன்பனிக்காலத்தின் ஓரு மாலை வேளையில் குளிர் கூடத் தொடங்கியிருந்தது. பருத்தியாலான வெள்ளை அங்கியின் மேல் இளநீல சால்வையைப் போர்த்தியவாறு தன் நீண்ட கூந்தல் முன் தரையில் படிந்திருக்க மெக்தலீன் யாழ் வாசித்துக் கொண்டிருந்தாள். அவளின் அந்த அடர் பச்சை…

தொடர்பவைகளின் கூற்று

குழுவாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு செய்தவர் மனநல மருத்துவரான சுனில் தான். இதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அவரிடம் மருத்துவம் பார்ப்பவர்களே என்கிற தகவல் பயணத்திற்காகக் காத்திருந்த பேருந்தில் ஏறும்போது தான்  தெரிந்தது . யாருக்கும் யாரும் இதற்கு முன் அறிமுகம் இல்லாதவர்களே. சுனில் இது மாதிரியான பயணத்தை எப்போதும் மேற்கொள்வதாக…

பந்தல்

கிணற்றடியிலிருந்து துலா ஏறி ஏறி இறங்கும் வாளிச்சத்தம் தூரத்திலும் கேட்கும் படி அன்றைக்கு பாக்குமரங்கள் சலசலப்பின்றி திமிறி நின்றன. பழைய துலா மரத்தண்டின் மேல் சுற்றி நிற்கும் பெரிய வெற்றிலைகளை குளித்துத் தெறித்த தண்ணீர் துளிகள் ஒட்டி ஒட்டி தளும்பும் இலைகளின் ஆட்டம் ஆவர்த்தனமாயிருக்கும். எனது இறந்த சைக்கிள்களை அளவில் சிறியதிலிருந்து வரிசையாக உள் சுவரில்…

பொந்து

1 “அந்த ஊமச்சி இன்னைக்காச்சும் வரட்டும் கேட்டுப்புடுகேன். இவனுக்க புடுக்குதான் வேணுமான்னு. எனக்க தாலியறுக்கல்லா நிலையழிஞ்சு நிக்கா. என்ன மந்திரம் போட்டாளோ, அவளுக்க பொறத்தாலையே போயிட்டான்… பலவட்டற சண்டாளி. நாசாம போவா, கட்டழிஞ்சு போவா. அவ  சீரழிவா. புழுத்துதான் சாவா… வீடு மூணு நாளா பூட்டிக் கெடக்கு… எங்க போனாங்களோ?” ராசம் ஆட்டோ ஸ்டாண்ட் இறக்கத்திலிருந்த…

வேதாளம்

“வேதாளச் சனியன வேற தூக்கவேண்டியிருக்கு” என்று சடாட்சரம் சொன்னார். இன்ஸ்பெக்டர் கோப்பில் இருந்து தலை தூக்காமலேயே “பின்ன வெறுங்கையோடையா போகப்போறீரு? சட்டம்னு ஒண்ணு இருக்குல்லா வே?” என்றார் “அது இருக்கு…” என்றார் சடாட்சரம் “எங்கிட்டு இருக்குன்னுதான் தெரியல்ல. இருந்து தாலியறுக்குது.” “இந்த நொரநாட்டியம்லாம் இங்க பேசப்பிடாது. மனுசன் இங்க தாடியிலே தீப்பிடிச்ச மாதிரி நின்னுட்டிருக்க நேரம்…போவும்…