அன்னம்

கிளப்புகள் சில கூடி நடத்தும் மயானம் அது. ஊருக்கு மையத்தில் பழைய பேருந்து நிலையம் பின்புறத்திலேயே அந்த மின்தகனமயானம் அமைந்திருக்கும் என்பதை நான் யூகித்திருக்கவில்லை. உள்ளே என்ன இருக்கிறது என்பது முதல் பார்வையில் தெரியா வண்ணம், எட்டு அடி உயர மென் நீல வண்ண  காம்புண்டு சுவர். உள்ளே அதை ஒட்டி வளர்க்கப்பட்ட பொன் கொன்றை…

உய்வழி

‘மெய் இன்று கண்டேனடா,  முகமன்று போலின்றி நிறமாறிப் போனதை கண்டேனடா. சொல்லெல்லாம் எரிக்க எரிக்க உளமெல்லாம் கசக்க கசக்க நுதல் சுருங்கும் தருணமெல்லாம் கண்டேனடா! மா தவம் நீங்கிட வந்தேனடா! அயோத்தி வந்தேனடா!ஐயம் என்மேனி கண்டாயோடா! கொடுந்தீ சொல்லும் கேளடா’உச்சஸ்தாயில் சீதையின் குரல். சிவந்த கனலின் நிழல் போலசெந்துணிச்சுருளைகள் முன்னே படர, காந்தள் மலரின் இதழ்…

சந்தூரியின் மீட்டலும் முரண் பயணமும்

வாழும்நெறி, தத்துவம், உளவியல், எனப் பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கும் குறுங்குறிப்புகள் தினமும் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் அவற்றின் ஆக்கிரமிப்பு அதிகம். சில நிமிட காணொளிகளாகவும் குரல் பதிவுகளாகவும் அவை நம் கைக்குள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரே நேரத்தில் வாழ்க்கை பற்றிய அறிவுரைகளாகவும், நமது அன்றாட வாழ்வை விமர்சித்து அதிலிருந்து கடந்துவிட…

மூவிலைத் தளிர்

பாடியநல்லூர் குமரப்பாவுக்கு நீரிழிவு நோயால் வலது கால் மூட்டுக்கு கீழ் அகற்றப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போய் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எப்போதோ வலது காலில் பின் பகுதியில் எதுவோ குத்தி காயம் ஏற்பட்டிருக்கிறது. அது மூன்று மாதம் ஆகியும் ஆறவில்லை. அந்த முதல் புண்ணைச் சுற்றி மேலும் சில இடங்களிலும் புண்கள் வந்திருந்தன. அவையும்…

வல்லினம் 150 

வல்லினம் கடந்த காலங்களில் இலக்கியம், பண்பாடு, வரலாறு, ஆய்வு, நேர்காணல் போன்றவற்றை உள்ளடக்கிய களஞ்சியங்களை வெளியிட்டுள்ளது. 2010இல் ‘மலேசிய சிங்கப்பூர் 2010’ என்ற தொகுப்பும் 2017இல் ‘வல்லினம் 100’ என்ற தொகுப்பும் வல்லினம் வெளியீட்டில் வெளிவந்தன.  இதனைத் தொடர்ந்து ‘வல்லினம் 150’ எனும் பெருந்தொகுப்பு வல்லினம் தயாரிப்பில் வெளிவர உள்ளது. இந்தத் தொகுப்பில் மலேசியா மற்றும்…

வல்லினம் & GTLF: மூன்று நாள் இலக்கியப் பெருவிழா

நான் கடைசி நேரத்து பணிக்குவியல்களை விரும்பாதவன். அரக்கபரக்க பூர்த்தியாகும் செயல்பாடுகள், நேர்த்தியற்ற விளைபயன்களையே கொடுக்கும் என உறுதியாக நம்புபவன். இவ்வருட இலக்கிய விழா, பிரம்மாண்டமானது என்றும் அதை ஒட்டிய பணிகள் வலுவானவை என்பதையும் நான் அப்பேச்சு தொடங்கப்பட்ட காலத்திலேயே அறிவேன். எனவே, மே மாதமே அதன் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கத் தொடங்கியிருந்தோம். என்னளவில் விழா என்பது…

பெருங்கை

கேசவன் எப்போது வேண்டுமானாலும் ராத்திரியைக் கொண்டுவரக்கூடியவன். சிறிய அறைக்கு வடக்குப்பக்கமாகத் திறக்கும் ஒரே ஒரு ஜன்னல் தான். அதை மூடவும் முடியாது. இரு ஜன்னல் கதவுகளும் எப்போதோ விழுந்துவிட்டன. அதற்கு அப்பால் கேசவனின் கரிய விலாப்பக்கம் வந்து முழுமையாக மூடிவிட்டதென்றால் படுத்திருக்கும் இடத்திலிருந்து அவன் பார்க்கும்போது வெளியே கூரிருட்டு நிறைந்திருக்கும். பெரும்பாலும் அவனுக்குக் கேசவனுடன் இரவில்தான்…

வர்ணகலா

இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே…

நெருப்பில் வளர்பவை

ததும்பத்ததும்ப மக்காச்சோளத்தட்டைகளுடன் பள்ளத்திற்குள் இறங்கி ஏறித் திணறியபடி தாடிக்கொம்பு விலக்கில் வளைந்து கொண்டிருந்தது வேன். நான் ஓடிப்போய் அதன் முதுகில் கொட்டிக்கிடந்த சோளத்தட்டையில் ஒன்றை வலுப்போட்டு ஒடிக்க முயன்றேன், முடியவில்லை. சாலையோர மரத்திற்குக்கீழே சாயங்கால இருளுக்குள் தனது பள்ளிச்சீருடையுடனும் முகம் கழுவிய வெளிச்சத்துடனும் நின்று கொண்டிருந்த தான்யா வேண்டாமென்பதைப்போல கையை ஆட்டினாள். வேன் நகர்ந்து கொண்டேயிருந்தது.…

ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்

ஃபோன் பேசிவிட்டு ஜஸ்டின் கொஞ்சம் பதற்றத்துடன் திரும்பி வருவதைக் கசாயம் கவனித்தான். “என்ன மக்கா? மாமாவா?” “ஆமா வர சொல்லுகாரு. என்னவொ பெரிய சோலியாம். வண்டி எடுல” கசாயத்துக்கு அவன் சொல்லும் தொனியிலேயே சங்கதி ஓரளவு புரிந்தது. பள்ளி நாட்களிலிருந்தே அவனுடன் இருப்பவன் கசாயம். ஜஸ்டினின் அப்பா மோகன் ராஜ் அவன் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு…

புதுமைதாசன் : சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்

மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ  சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த…

காலப் பதிவுகளாகும் நாடகங்கள்: பி.கிருஷ்ணனின் நகைச்சுவை நாடகங்களை முன்வைத்து

சிங்கப்பூர் வரலாற்றில் 1960களும் 1970களும் மிக முக்கியமான காலக்கட்டமாகும். மலேசியாவிலிருந்து பிரிந்து நிச்சயமின்மைகளோடு நாடு தள்ளாடிக்கொண்டிருந்த காலம் முதல் தசாப்தம். அதிக மக்கள் தொகை, வர்த்தகத் தேக்கம், வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை, இனங்களுக்கிடையேயான பதற்றம் எனப் பலவித பிரச்சினைகளை நாடு எதிர்கொண்ட காலக்கட்டமிது. இரண்டாவது தசாப்தத்தை அரசியல் நெருக்கடிகள், பொருளாதாரச் சவால்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை…

பி. கிருஷ்ணன்: எல்லையைக் கடக்கும் கடல் பறவை

1 தமிழகத்தில் நாடகம் என்பது நவீன கலை மட்டுமல்ல. இங்கே குறைந்தது இருபது நாடக வகைகளுக்கு மேல் உள்ளன அல்லது நாடகத்தை போல் அமைப்புக் கொண்ட நிகழ்த்துக் கலைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களும் அதற்கான தனி நாடக வகைமை/அமைப்புக் கொண்டிருப்பதைக் கரகாட்டத்தின் துணைக்கலைகள் வழி காணலாம். கரகாட்டத்தின் உட்பிரிவுகளான ராஜா ராணி ஆட்டம், கப்பல் பாட்டு,…

பி. கிருஷ்ணனின் நாடக வெளியில் உலக இலக்கியம்

அறிமுகம் எழுத்தாளர் பி. கிருஷ்ணனின் ‘சருகு’ நாடகத் தொகுப்பின் முன்னுரையில் சிங்கப்பூர் வானொலி கடந்து வந்திருக்கும் மாற்றங்களையும் கால அடிப்படையில்  இந்தியப்பகுதியில் பணியாற்றிய அறிவிப்பாளர்களையும் தலைவர்களையும் குறிப்பிட்டு மிக நீண்ட விரிவான வரலாற்றுக் குறிப்பொன்றை அளிக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்பு அளிக்கும் சில அவதானிப்புகள் மிக முக்கியமானவை. தொடக்கக்காலத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் வானொலியின் இடமென்பது…

பி. கிருஷ்ணன் சிறுகதைகள்: புதுமையின் ஊற்றுமுகம்

எழுத்தாளர் பி. கிருஷ்ணன் நாடகம், கட்டுரை, கதைகள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை எழுதிய முன்னோடி படைப்பாளர். புதுமைப்பித்தனின் நேசனான அவர் தன் பெயரைப் புதுமைதாசன் என வைத்துக் கொண்டார். அந்தப் புனைப்பெயரிலேயே அவர் இன்றும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இன்று அவர் சிங்கப்பூர் வாசியாக அறியப்பட்டாலும், பூர்வீகமாக ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும், சிங்கப்பூர்…

ரத்தம், கண்ணீர், சொற்கள் – பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரின் மூன்று நாடகங்கள்

2016ஆம் வருடம் நாங்கள் லண்டனுக்கு அருகில் ஏவன்  நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ட்ராட்போர்ட் என்ற ஊரில், ஷேக்ஸ்பியரின் இல்லத்தைப் பார்க்கப் போயிருந்தோம். அக்காலத்தைய கணக்கில் அது ஒரு நடுத்தர வர்க்க வீடு. இப்போதைய அளவுகோலில் சற்று வசதியான இல்லம்தான். அவ்வீட்டில் அவரது தந்தை கையால், பாதி தைக்கப்பட்ட தோல் செருப்பைப் பார்வைக்கு வைத்திருந்தனர். அது எனக்கு அப்போது…

அள்ளிய கைகள்: புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பை முன்வைத்து

சிங்கை இலக்கியச் சூழலில் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏதாவது ஓர் இலக்கிய அமைப்பில் அல்லது நண்பர் கூடுகையில், மொழிபெயர்ப்புப் படைப்புகளைக் குறித்த உரையாடல் நடைபெறுவது வழக்கம். படைப்புகளைப் பற்றிய உரையாடலில் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்பின் தரம் அல்லது மொழிபெயர்ப்பாளரின் வெற்றி, தோல்வி குறித்த விவாதம் நடைபெறும். அவ்வகை உரையாடல்களில் பங்குப் பெறும்போதெல்லாம் இரு வகையான உவமைகள் என்…