மண்டலா – 2

மண்டலா 1 படிவம் நான்கில் அறிவியல் துறையில் (Science Stream) படிக்க தகுதியிருந்தாலும், கலையியல் துறையைத் (art stream) தேர்ந்தெடுத்திருக்கும் என்னை அடையாளம் காண டீச்சர் கோர் (Khor) அன்று வகுப்பறைக்கு வந்தார். அவர் கலைக் கல்வி பாட ஆசிரியர். ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரின் சுவரோவியம் பள்ளி முழுதும் நிரம்பியிருக்கும். நான் கலையியல்…

வல்லினம் & GTLF விழா கடிதங்கள்

மலேசியத் தமிழ் விக்கி : சில தெளிவுகள் ‘கட்டுரை எழுதுவதால் கற்பனையாற்றல் மழுங்கி விடுமா? படைப்பூக்கம் மங்கிவிடுமா?’ தமிழ் விக்கிக்கு எழுதத் தொடங்கிய காலத்தில் பரவலாக பேசப்பட்ட விவாதங்களில் ஒன்று இது. இத்தகைய விவாதங்களுக்கு மத்தியில்தான் மலேசியாவிலும் தமிழ் விக்கி அறிமுகம் கண்டது. ஏறக்குறைய இருநூறு கட்டுரைகள் பதிவேற்றம் கண்டு அதை விரிவான தளத்துக்கு அறிமுகம்…

வல்லினம் & GTLF இலக்கிய விழா காணொளிகள்

தமிழ் விக்கி அறிமுக விழா காணொளிகள் வரவேற்புரை ம.நவீன்தலைமை உரை அருண் மகிழ்நன் தமிழ் விக்கி கலந்துரையாடல் எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புரை தமிழ் விக்கி பங்களிப்பாளர்களுக்கு நினைவு பரிசு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஹேம்லட் ரோமியோ ஜூலியட் ஒத்தெல்லோ வழக்கறிஞர் சி. பசுபதி உரை பி. கிருஷ்ணன் உரை நாடக இயக்குனர் விஸ்வநாதன் உரை பி. கிருஷ்ணன்…

GTLF & வல்லினம் இலக்கிய விழா நிரல்

25.11.2022 (வெள்ளிக்கிழமை) இடம் : பிரம்ம வித்யாரண்யம் (சுங்கை கோப், கெடா) மாலை மணி 4.00: தேனீர் உபசரிப்பு மாலை மணி 5.00: தமிழ் விக்கி அறிமுகவிழா இரவு மணி 7.00 : ஷேக்ஸ்பியரின் மூன்று நாடகப் பகுதிகள் அரங்கேற்றம் இரவு மணி 8.30 : இரவு உணவு 26.11.2022 (சனிக்கிழமை) இடம் : பிரம்ம…

வல்லினம் & GTLF இலக்கிய விழா சிறப்பு வருகையாளர்கள்

இவ்வாண்டு சிங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் ஃபாலின் ஃபானிடமிருந்து ஒரு புலனச்செய்தி வந்தது. இவ்வருடம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் இரு தமிழ் அமர்வுகள் இணைக்கப்பட போவதாகவும் அதற்கு நான் பொறுப்பேற்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். இரு அமர்வுகளையும் தமிழிலேயே நடத்தலாம் என்ற அவர் குறிப்பு உடனடியாக என்னைச் சம்மதிக்க வைத்தது. பி. கிருஷ்ணனின் வருகை அந்த…

தமிழ் விக்கி: எழுத்தாளனுக்குக் கொடுப்பதென்ன?

இவ்வாண்டு ஜனவரி 13, ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழ் விக்கி குறித்த தனது எண்ணங்களைச் சொல்லி அதில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார். அது சுருக்கமான கடிதம்தான். எப்போதுமே ஆசிரியர்கள் தம் மாணவர்களை நோக்கி குறைவாகவே பேசக்கூடியவர்களாக உள்ளனர். குறைந்த சொற்களின் ஊடே தன் மாணவன் தமது உள்ளக்கிடக்கை புரிந்துகொள்வான் என ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.…

தமிழ்மாறன்: ஆளுமைகளை உருவாக்கும் ஆசான்

(தமிழ் மாறன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை ) மெய்யான கற்றல் என்பது அது வரையில் கற்று வந்த தடத்தைக் கேள்வியெழுப்பச் செய்து, அதை மறுத்தும் விவாதித்தும் வந்தடையும் ஒரு புள்ளி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதலாண்டில் விரிவுரைஞர் தமிழ்மாறனின் வகுப்புகளில் அத்தகைய…

கோ. சாமிநாதன்: தந்தையாகும் குரு

(கோ. சாமிநாதன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) கற்றலென்பது கற்றலால் மட்டுமே நிரம்பும் தருணம் அல்ல. கற்றலுக்கு அப்பால் அகம் சார்ந்த, உணர்வு சார்ந்த சூழலைக் கட்டியெழுப்பி அதனுடன் இயைந்து நீள்வது கற்றலின் ஆயுள் நீளம் என சாமிநாதன் அவர்களின் வகுப்புகளின் வழி…

முனைவர் முனீஸ்வரன் குமார்: மொழியியலை முன்னெடுக்கும் ஆளுமை

(முனைவர் முனீஸ்வரன் குமார் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) 2011-ஆம் ஆண்டுத் தொடங்கி சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரிந்து வரும் முனைவர் முனீஸ்வரன் குமார் 1984-ஆம் ஆண்டில் கிள்ளான் நகரத்தில் பிறந்து, பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில்…

முனைவர் கிங்ஸ்டன்: நாட்டுப்புற கலை, பண்பாட்டு அடையாளங்களைச் சேகரிக்கும் கல்வியாளர்

(முனைவர் கிங்ஸ்டன் அவர்கள் தமிழ் விக்கி உரையாடலில் கலந்துகொள்ளும் கல்வியாளர்களில் ஒருவர். அவரை அறிமுகம் செய்து வைக்க எழுதப்பட்டக் கட்டுரை) வாழ்க்கையில் சிலரை நாம் சந்திக்கும் தருணங்கள் நொடிப்பொழுதில் நடந்துவிடக்கூடியவை. எதிர்பாராமல் நடக்கும் சந்திப்புகள் நமது வாழ்க்கைக்குச் செறிவான பாதை அமைக்குமென்றால் அவற்றைத் தரிசனங்கள் என்றே குறிப்பிடுதல் தகும். மலேசியத் தமிழ் நாட்டுப்புறவியல் ஆராயும் நோக்கத்தோடு…

லஜ்ஜா

I மாமாவிடம் இருந்து போன் கால் வந்தது.“சேகரு, ஆபிஸிற்கு வா.” என்று சொல்லிவிட்டு என் பதிலைக் கேட்குமுன் அழைப்பைத் துண்டித்துவிட்டார். அவர் எப்போதும் அப்படித்தான். பைக்கை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பினேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மாமாவிடம் வேலைக்குச் சேர்ந்தேன். என்ன வேலை என்று கேட்டால் என்னால் சரியாகப் பதில் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. நான்…

மந்திர மெத்தை

தூக்கம் ஏமாற்றிக் கொண்டிருந்த நள்ளிரவில் அறைக்குள் ரகசியமாக நுழைந்து உள்ளே சுற்ற ஆரம்பித்தது ஏதோ ஒரு பாட்டிசை. கைப்பேசி எடுத்து மணி பார்த்தேன், மூன்று. எழுந்து வெளியே வந்தேன். அப்பாவும் அம்மாவும் உறங்காமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். “ஏதாவது வேணுமா” என்றாள் அம்மா. தலையசைத்துத் தண்ணீர் குடிக்கச் செல்வது போல சமையலறைக்குள் சென்று…

தூசி

”அண்ணே பீமநகரி பஸ் எப்ப வரும்னு சொல்ல முடியுமா” என டீக்கடைக்காரரிடம் வெளியூர்க்காரர்களுக்கேயுரிய ஒரு அந்நியத்தன்மையையும் ஐயத்தையும் ஒருங்கே திரட்டி மெல்லக் கேட்டேன். அதைக் காதில் வாங்காத பாவனையில் டீயை ஆற்றிக் கொண்டே “அதெல்லாம் நேரக்கணக்கு கிடயாது. நில்லும். அதுவா வரும்போது வரும்” என்றார். அங்கிருந்த பொன்மஞ்சள் நிறத்திலான பஜ்ஜியைப் பார்த்தபோது பசி அடிவயிற்றைக் கிள்ளியது.…

ஆசான்

“வீட்டுக்கு வந்து ரெண்டு மணிக்கூட ஆகல, அதுக்குள்ள எங்கல போற? ஒனக்கு பிடிக்குமேன்னு ரசவட செஞ்சு வச்சா, ஒரு வாயி திங்கல. போக்கு சரியில்ல கேட்டியாடே…” நான் சட்டையை மாற்றும் போது, கூடவே அம்மையின் அர்ச்சனையும் ஆரம்பித்தது. “வெளிய போறதுலாம் சரி, வேற ஏதாவது பண்ணிட்டு வந்த, வீட்டு நடைல ஏறக் கூடாது. அப்பனுக்க எல்லா…

தாவாய்: இயற்கையுடனான ஒத்திசைவு

இயற்கையைச் சார்ந்து மட்டுமே வாழ்வை அமைத்துக் கொள்வதென்பது மாதிரியான கருத்துருவாக்கங்களைச் சமூக ஊடகத் தளத்தில் அதிகமாகக் காண முடிகிறது. விலங்கு ஊன்களைத் தவிர்ப்பது, தாவரங்களிலிருந்து பெறப்பட்ட உணவுகள், உடைகளை மட்டுமே பயன்படுத்துதல், தனிப்பயணம் மேற்கொள்ளுதல் என இயற்கையுடன் ஒன்றித்து வாழ முற்படும் வகையிலான முயற்சிகளை வாழ்க்கை முறையாகவே முன்வைக்கும் பதிவுகளுக்குப் பெருமளவிலான ஈர்ப்பு உருவாகியிருக்கிறது. அந்த…