இக்கிமஸ்

[1] பனிக்குள்ளிருந்து தோண்டி எடுக்கப்பட்டதைப்போல தோற்றமளிக்கும் அந்த நான்குசக்கர வாகனம் சாலையை விட்டு விலகி, இடப்பக்கமாக திரும்பி குறுகலான காட்டுப்பாதையில் நுழைந்தது. வேகம் குறைந்து ஊர்ந்தபடிதான் சென்றது. என்றாலும் இரண்டு அடி உயரத்திற்கு கொட்டிக்கிடந்து குளிரில் கண்ணாடியைப்போல இறுகிவிட்ட பனி, சக்கரங்களுக்கு கீழே ஓசையுடன் உடைந்து நொறுங்கியது. முழங்கால் உயரத்திற்கு பாறைகளை சுவராக அடுக்கி உருவாக்கப்பட்ட…

யுவன் சந்திரசேகர் வருகை – ஒரு பதிவு

ஜூன் 10 – 11 ஆகிய இரு நாட்கள் வல்லினம் ஏற்பாட்டில் நவீன கவிதை முகாம் நடைபெற்றது. இந்தப் பட்டறையை வழிநடத்த எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் சிறப்பு வருகை புரிந்தார்.  ஜூன் 10 காலை 9 மணிக்குப் பட்டறை தொடங்கியது. காலை உணவுக்குப்பின் பங்கேற்பாளர்கள் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டனர். மொத்தம் 25 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.  இந்தப்…

உடன் இருத்தல்

1 வடக்கு வேல்ஸிலிருந்து லண்டன் வரையிலான ரயில் பயணத்தில் அவரைச் சந்தித்தேன். பர்மிங்ஹாமில் ஏறினார். என் வலதுபக்க இருக்கையில் வந்து அமர்ந்தார்.  இடப்புற  ஜன்னல்வழி, எதிர்ப்புறம் விரையும் வெட்டவெளியில் லயிக்க முயன்றேன். ரயிலேறிய நிமிடத்திலிருந்து இதே முயற்சிதான். முடியவில்லை. காட்சிகளும் ஒலிகளும் வாசகங்களும் எனக்குள்  அலைபாய்ந்துகொண்டிருந்த விதம் அப்படி. அடம் பிடிக்கும் குழந்தைபோல, புறக் காட்சியுடன்…

‘மிளகு’ நாவல் : கனவுவெளியும் காலடி நிழலும்

[1] தல்ஸ்தோய் பற்றிய கூற்று ஒன்றுண்டு. ‘அவரின் படைப்புலகம் ஏன் அத்தனை யதார்த்தமாக இருக்கிறதென்றால் அது முழுவதும் அவரது கற்பனையால் கட்டமைக்கப்பட்டது.’ சிந்திக்க வைக்கும் வரி இது. ஒரு படைப்பை எப்போது நாம் நிஜ உலகிற்கு இணையாக நம்புகிறோம்? அதில் வரும் மனிதர்களை எந்தக் கணம் நாம் நெருங்கிக் கண்டவர்களாக உணர்கிறோம். உதாரணமாகப் போரும் அமைதியும்…

எண்கோண மனிதன்: மனமெனும் கலிடியோஸ்கோப்பின் சித்திரங்கள்

நவீனத்துவ தமிழ் இலக்கியத்தில் புனைவாக்கச் செயல்பாடு என்பது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. நவீனத்துவ புனைவுகள் நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதன்வழியே வாசகனுக்குப் புனைவின் நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளிக்கின்றன. சிறுகதைகள் குறைந்த அளவு சம்பவங்களைக் கொண்டு வாசகனுக்கு அவ்வனுபவத்தைச் சாத்தியப்படுத்த முயலுகையில், நாவல்களோ பல்வேறு சம்பவங்களை ஒன்றாகக் கோர்த்து உருவாக்கும் விரிவான…

கபடவேடதாரி: நீல நகரமும் நல்லா இருந்த நாடும்

கேட்பதற்குச் சற்று விசித்திரமாகக் கூடத் தோன்றலாம், ஆனால் இணை தேடும் நவீன செயலிகள் அத்தனையிலும் இந்திய நாட்டு பெண்கள் தங்கள் எதிர்பார்ப்பாகக் பொதுவாகக் குறிப்பிடுவது, தன் இணை ஒரு ‘சங்கி’யாக இருக்கக்கூடாது என்பது. இது அவ்வளவு பொருட்படுத்தத்தக்க ஒரு சமூகக் கவலையா என்ற கேள்வி எழலாம். ஆனால் இதற்குப் பின்னால் பிரதிபலிக்கும், கடந்த பத்தாண்டுகளில் உருவாகி…

கெம்பித்தாய்களின் சப்பாத்துகளுக்கு கீழே

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளிவந்த பல நூல்களில் பொன். சுந்தரராசுவின் சுண்ணாம்பு அரிசி, இந்திரஜித்தின் ரயில், ரமா சுரேஷின் அம்பரம் ஆகிய மூன்று நாவல்களும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைக் களமாகக்கொண்டவை. பல்வேறு காரணங்களுக்காகப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற இந்த மூன்று நாவல்களுமே நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் முதல் நாவல்கள். சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆதிக்க…

பீஷ்மரின் மகன் – ஹரிலால் நாவலை முன்வைத்து

1 காந்தி – கடந்த 125 ஆண்டுகளில் உலகை வெவ்வேறு விதங்களில் பாதித்த பெயர்களில் முக்கியமான பெயர். மிக அதிகமான எண்ணிக்கையில் நூல்கள் எழுதப்பட்ட பெயர்களில் முதன்மையான பெயர். ஒருவரது பெயர் ஒரு விழுமியத்தின், சிந்தனைமுறையின், லட்சியத்தின் சொற்பொருளாக மாறும் அதிசயத்தை உலகுக்கு இன்று வரை காட்டிக் கொண்டிருக்கும் பெயர். இந்தியா உட்பட உலகின் ஒவ்வொரு…

இப்போது உயிரோடிருக்கிறேன்: மரணம் துரத்தும் வாழ்க்கையின் வலி

வாழ்வது என்பது என்ன என்று யோசித்தால், அது சாவில் இருந்து தப்பிக்கும் கலை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. சாவு என்பது மூப்பின் காரணமாக மட்டுமே வருவதில்லை. அது வாழ்வின் ரகசியம் போல மறைந்திருந்து ஒரு நாள் வெளிப்படுகின்றது.  மூப்பில் மரணம் என்பது வாழ்க்கையின் பிடி தளர்ந்து,  ஒரு விடைபெருதல் போல நிகழ்கின்றது. மனம் அதை ஏற்றுக்…

வௌவால் தேசம்: வீழ்ச்சியின் வரைவியல்

1 நம் வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்பட்டது /எழுதப்பட்டது 18 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு. ஜெ.ஹெக்.நெல்சனின் மதுரை கண்ட்ரி மானுவல் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் ஒரு தொடக்க சாதனை. ஜெ.ஹெக். நெல்சனில் இருந்து ஒரு வரலாற்று எழுத்து நிரை எழுந்தது. ராபர்ட் கால்டுவெல், டபிள்யூ. ப்ரான்சிஸ், ஹெக்.ஆர். பேட் என ஜெ.ஹெக். நெல்சன் வழி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பின்…

திரிபுகளின் இருள்வழியே – சிகண்டி

நவீன இலக்கியத்தின் செயல்முறையை இப்படியும் வரையறுக்கலாம். எது ‘வெளியே’ சொல்லப்படாததோ, எது ‘வெளியே’ சொல்லக்கூடாததோ, எது ‘வெளியே’ சொல்ல முடியாததோ அதைச் சொல்ல வந்ததே நவீன இலக்கியம்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ராமாயண மகாபாரத காலம் துவங்கி பக்தி காலம் வரை, தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரம் தொட்டு கம்ப ராமாயணம், பக்தி காலம் தொடர்ந்து…

நட்சத்திரவாசிகள்: நுண் அதிகார மையங்கள்

வரலாறு முழுவதும் மனிதர்கள் தங்கள் இயல்பைக் கல்வி, தொழில், அரசியல் போன்ற அமைப்புகளின் ஒழுங்குக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருந்து வந்திருக்கின்றது. அவ்வாறு குறிப்பிட்ட ஒழுங்கு முறைக்குள் பழகும்போது மனித இயல்புகள் அடையும் மாற்றங்களை இலக்கியங்கள் நிகர் வாழ்க்கையனுபவமாகப் பதிவு செய்து வந்திருக்கின்றன. கார்த்திக் பாலசுப்ரமணியனின் நட்சத்திரவாசிகள் நாவலும் ஒருவகையில் தொழில் சார்ந்த அமைப்பின்…

அல் கொஸாமா: அறியாத நிலப்பயணம்

மனித குலத்தின் தோற்றம் குறித்த பல அபுனைவுக் கட்டுரைகள் உண்டு. ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வது தொடங்கி அவ்வழி இனக்குழு மனப்பான்மை உருவாகிறது. பின் அது எவ்வாறு தற்காலத்தில் பெரிய பிரிவினைகளாக வளர்ந்து விட்டது என்பதும் மறுபக்கம் சிறு சிறு குழுக்கள் எவ்வாறு இணைந்து பெரு மதங்களாக ஆகின்றன என்பதும் தொடர்ச்சியாக விளக்கப்பட்டும் ஆராயப்பட்டும் வருகிறது.…

குமரித்துறைவி: மகளாகிய அம்மையும் அப்பனாகிய மகனும் 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘குமரித்துறைவி’ குறுநாவல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி, அவரது ஐம்பத்தொன்பதாவது பிறந்தநாள் அன்று அவரது இணையதளத்தில் வெளியானது. கிட்டத்தட்ட நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட இக்குறுநாவலை வெளியான அன்றே வாசித்து முடித்தேன். வாசிக்கையில் மறைந்த என் அப்பாவின் நினைவும் எனது திருமணக்காட்சிகளும் வந்து, வந்து போயின. வாசிப்பின் சில…

சுண்ணாம்பு அரிசி: பெருமதியாகாத தகவல்களின் கலை

பிரிதோர் காலத்தின் பதிவுகளாக, ஒரு சமூகத்தின் ஆழ்மன ரணங்களாக துயரோலங்களின் எச்சங்களாக இப்படி பல்வேறு படிமங்களால் படைப்பிலக்கியத்தின் தளம் ஆழம் செல்கிறது. காலம் விழுங்கிவிட்ட பெறும் வரலாற்றை, பெறும் சம்பவங்களை, பண்டைய வாழ்வை, விழுமியங்களைப் புனைவுகள் மீட்டெடுக்கின்றன. நமக்கு மீண்டும் நினைவுப்படுத்துகின்றன. எனவே புனவுகளைக் காலத்தின் பிரதிகள் என வகைப்படுத்தலாம். ஒரு வாழ்வைத் தரிசிக்க முடிகின்ற…

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்: ஒரு சாவுக்குப் பின்பான கதை

‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ மயிலன் ஜி சின்னப்பனின் முதல் நாவல். மருத்துவ துறையை பின்புலமாக கொண்ட நாவல். ஆசிரியரும் மருத்துவ துறையை சேர்ந்ததால் அதன் நம்பகத்தன்மைக்காக (Authenticity) கூடுதல் கவனம் பெறுகிறது. இது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு 200 பக்கங்களில் எழுதப்பட்ட சிறிய நாவல். இதன் வடிவம் ஒரு டைரி குறிப்பு போல உள்ளது. ஒரு குறிப்பிட்ட…

யுவன் கவிதை முகாமில் கலந்துகொண்டவர்களின் பதிவு

அமானுஷ்ய எழுத்து ஒரு சினிமா அல்லது இசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தால் வந்த மறுநொடி அந்த நிகழ்வைப் பற்றிய நமது அபிப்பிராயங்களை அல்லது அங்கு நாம் சிலாகித்த சில விஷயங்களை உடனே நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பகிர்ந்து மகிழ்வோம். காரணம் அவை காட்சிகளோடு ஒலி ஒளி வடிவில் நமக்குள் புகுந்து நம்மை ரசிக்க…