மலைக்காடு: இழப்பும் நிராகரிப்பும் இணைந்த வாழ்க்கை

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், சஞ்சிக்கூலிகளாக மலேசியாவிற்கு வந்திறங்கிய இந்தியர்களின் வாழ்வியலையும் உளவியலையும் அலசும் இந்நாவல் அதனூடே பல்வேறு அரசியலையும் பேசுகிறது. தர்மபுரி பக்கத்தில் இருக்கும் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. பஞ்சத்தில் வாடிய கிராமத்திலிருந்து தன் 15 வயது மகன் உண்ணாமலையுடன் மலாயா புறப்படுகிறார். வளமான வாழ்வாதாரத்திற்காக அயலகம் புறப்படும் மாரிமுத்துவின் வாழ்க்கை என்னவானது? மூன்று…

மலைக்காடு: மலைமேட்டு முனியின் கனவுகாடு

இரு நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு  குமுகாயத்தின் அடிப்படைத் தேவைகளை எல்லாம் பறித்துக் கொண்டு கொத்தடிமைகளாய், வாய்ப்பொத்திக் கைக்கட்டி ஏவிய வேலைகளைச் செய்ய உலகம் முழுதும் தேடித் திரிந்து வெள்ளையர்கள் அள்ளிக் கொண்டு வந்த பேரினம்தான் தென்னிந்தியத் தமிழர்கள். கப்பல்களில் அடித்தட்டு மக்கள் பயணிக்கக் கூடிய அந்தப் பகுதியில், மனித மலமும் மூத்திரமும் ஒருங்கே காய்ந்து நாறும்…

மண் அகல்

“முதல் கொட்டுக்கு ஆள் வந்துடுவாங்க. இப்பயே எழுந்தா தானே கல்லுக்கு பொங்கல் படைக்க ரெடி பண்ண முடியும், இன்னும் தூங்கிட்டு இருந்தா எப்படி வசந்தி? எந்திரி.” அப்போதுதான் அசந்தது போலிருந்தது வசந்திக்கு. அம்மாவின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள். அம்மாவின் குரலா கேட்டது? உடல் சிலிர்த்தது வசந்திக்கு. ஜோதிமயி பாயிலிருந்து உருண்டு தரையில் கோணல் மாணலாக…

சியர்ஸ்

“புதுசா ஜாய்ன் பண்ணுன மூர்த்தி புரோவுக்காக” என முதல் சியர்ஸில் ஷாம் சொன்னபோதுதான் அவர் முகத்தைத் தெளிவாக கவனித்தேன். மந்தமான மஞ்சள் ஒளியில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். மனதுக்கு நெருக்கமாகாத அந்நியத்தன்மையில் முகவெட்டு. சடங்காகப் புன்னகைத்தேன். வாயில் வைக்கச் சென்ற கிளாஸை நிறுத்தி, அவர் பதிலுக்குச் சிரிப்பதற்குள் பார்வையை விலக்கிக்கொண்டேன். ‘மங்கி ஷோல்டரில்’ ஆரஞ்சு பழச்சாற்றைக்…

‘பேய்ச்சி’ சர்ச்சை

பேய்ச்சி நாவல் குறித்து தமிழ் மலர் நாளிதழில் சிலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். வல்லினம் தரப்பில் இருந்து தமிழ் மலர் நாளிதழுக்கு அந்நாவல் குறித்த நேர்மறையான பார்வைகள் வழங்கப்பட்டும் அந்த நாளிதழின் தர்மத்தின்படி அவை பிரசுரிக்க மறுக்கப்பட்டன. எனவே பேய்ச்சி நாவல் குறித்த பல்வேறு தரப்புகளின் இருந்து கருத்துகள் தொகுக்கப்பட்டு வல்லினத்தில் பதிவிடப்படுகிறது. காழ்ப்பின் குரல்கள்…

சர்வ ஃபூதேஷு

எல்லா ஆன்ஸெலை அவள் அறைக்குள் கொண்டுசென்று படுக்கவைத்துவிட்டு நான் திண்ணைக்கு வந்தபோது கொச்சு மாத்தன் அங்கே நின்றிருந்தான். எண்ணெய்பூச்சில் அவனுடைய பெரிய சிவந்த உடல் பளபளத்துக்கொண்டிருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்து “நடக்கக் கூடாது. பெஞ்சில் உட்கார்ந்திருக்கவேண்டும்” என்றேன். அவன் ‘ஆம், ஆனால் அந்த அறையில் எண்ணெய் மணம், என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்றான். “ஆவிக்குடுவையில்…

விலகிச் செல்லும் பாதை

கோயிலுக்கு வந்த கந்தசாமி பெரிய தகரக்கூண்டால் மூடப்பட்டிருக்கும் தேர் அருகில் நின்றார்.  மதிய உணவு உண்ண மனசில்லாமல் வந்துவிட்டார். வந்த பின் கோயிலுக்குள் செல்ல மனம் வரவில்லை. மூன்றுமுறை வந்துவேண்டியும் ஜோதியின் வாயசைவில் ‘சரி’ என்று ஒரு வார்த்தையை வரவழைக்க முடியவில்லை. கோயிலுக்குள் போனாலும் அவளைத் திருத்தமுடியும் என்று தோன்றவில்லை. பழனிச்சாமி ஐயாவைப் பார்த்தும் ஐந்து…

இயல்வாகை

கருக்கிருட்டில் தெருவிளக்குகள் எரிந்துக்கொண்டிருக்கும் விடிகாலையில் கல்லூரி சாலையைக் காண சத்தியனுக்குப் பிடிக்கும். அடர் கருமையிலிருந்து சாம்பல் மலரும் புலரிப் பொழுது அவருக்கு அணுக்கமானது. பல்கலைக்கழக தபால் அலுவலகத்தின் அருகே அவருடைய வெண்ணிற ஸ்விப்ட் காரை நிறுத்திவிட்டு காலை நடைக்கு தயாரானார். காலை நடையின்போது கைப்பேசியை அணைத்து விடுவார். அதற்காகப் பையிலிருந்து எடுத்தபோதுதான் ஓசையணைத்துக் கிடந்த கைபேசியில்…

துவந்த யுத்தம்

கர்த்தரின் எல்லையிலா கருணைக்கு வாழ்வின் முழுமையையும் அளித்த டயசிஸ் தலைவர் அளப்பரிய அன்புக்குரிய பாதிரி அல்பர்டோ க்ளோடன் அவர்களுக்கு, சுதந்திரம் சமத்துவம் சகோதரதத்துவம் ஆகியவற்றை உலகுக்குப் போதிக்க அமைந்த பிரெஞ்சு தேசத்துக்கு சேவகம் செய்ய பாத்தியாக்கப்பட்ட மேஜர் ழீன் சிரம் தாழ்த்தி எழுதும் கடிதம்:- நமது பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் அல்ஜீரியா காலனியிலிருந்து விருப்ப ஓய்வில்…

வலசைப்பறவைக்குத் திசைகள் கிடையாது

செந்நிறமாக எங்களைச்சுற்றி ஒளி விழுந்துக்கொண்டிருந்தது. செந்நிறமான மண். வானெங்கும் கோடுகோடாக செந்தீற்றல்கள். கடல் தீயாக அலைகொண்டிருந்தது. ஆலிஸின் கண்ணை என் மீது உணர்ந்தேன். அவள் முகமும் தீக்கொண்டதுபோல் சிவந்திருந்தது. கன்னங்கள் பழுத்திருந்தன. தோளில் பருக்கள் நட்சத்திரக்கோவையாக நடனமிட்டன. அவள் என் பக்கமாக திரும்பிப் புன்னகைத்தாள். “மின், இந்த ஒளியில் ஒரு நொடிக்கு, நீ உன் அப்பாவைப்போலவே…

அடித்தூர்

மேற்பற்கள் விழுந்திருந்ததால் மீசைப்பகுதி சற்றே உட்புறம் வளைந்து அடிப்பற்கள் மட்டுமே வாயைத் துருத்தியிருக்க ஆவேசமாய் முனகிக் கொண்டிருந்தார் தாத்தா. இந்த மூன்று நாட்களில் மொத்தமாக சேர்த்துவைத்தால் நான்கு வரி பேசியிருப்பார். அவ்வப்போது ஆள்காட்டி விரலையும் மோதிரவிரலையும் வாயில் அழுத்தி வைத்து எச்சிலைத் துப்பிக் கொண்டிருந்தார். புகையிலைப் போடுவதை நிறுத்தியப்பின்னும் அவரது கடைவாயில் எச்சில் ஊறிக் கொண்டே…

கர்ப்பப்பை

“இது என்ன?” அமலா சுட்டிய திசையில் மிருதுவான உடலைக் கொண்ட சிலிக்கன் பொம்மை கிடையாக வீழ்ந்திருந்தது. செயற்கையான பிளாஸ்டிக் கேசம் அலையாக கலைந்து அதன் முகத்தை மறைத்தது. அமலாவை நோக்க இயலாமல் என் கண்கள் வளைந்து சரிந்தன. எனக்குள் அவமானத்தை மீறி பயமும் கிளர்ந்ததை உணர்ந்து துணுக்குற்றேன். “இது செக்ஸ் டோல் தானே?” என் நாடியைத்…

கறை நதி

படிப்பதற்கு அமைதியான சூழலுடன் இனிமையான அயலவர்களும் கொண்ட தங்குமிடமொன்று அமையவேண்டும் என்று தேடித்திரிந்தபோது மெல்பேர்ன் நகரிலிருந்து நாற்பத்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்த வீட்டு உரிமையாளர்களின் அறிமுகம் கிடைத்தது. நன்கு உயர்ந்து படர்ந்து வளர்ந்த யூக்கலிப்டஸ் மரங்கள் தெருவெங்கும் மொய்த்து கிடக்கும் ரம்யமான பிரதேசத்தில் நான்கு அறைகள்கொண்ட அந்த இத்தாலிய முதியவர்களின் வீடு அமைந்திருந்தது. பிள்ளைகள்…