வெண்நாகம்

“டாக்டர்! நா திரும்ப அத பாத்தேன்… ரொம்ப கிட்டத்துல” அகிலின் கைகள் உதறின. வார்த்தைகளை வெளிவிடாதபடி ஏதோவொன்று தடுத்தது. அறையுள் நுழையும்போதே ஒருவித பதற்றத்தோடிருந்தான். ‘நான் உடனே தங்களைச் சந்தித்தாக வேண்டும்’ என்று அவன் குறுஞ்செய்தி அனுப்பியபோதே மருத்துவர் குணாவிற்கு ஏதோ அவனை உறுத்துவது விளங்கியது. அவனை நாற்காலியில் அமரச் செய்து குடிக்க தண்ணீர் கொடுத்தார்.…

கீரவாணி

காலையிலிருந்தே ஒரே காற்றும் மழையுமாக இருந்தது. சங்கீத வகுப்பு இருக்கும் நாளில் மழை பெய்தால் எனக்கு கொஞ்சம் சலிப்பு வரும். காரணம் சங்கீத ஆசிரியர் ஈப்போ மாநிலத்தைச் சேர்ந்தவர். குளிர் தாங்க மாட்டார். அதுவும் 1997-இல் கேமரன் மலை பசுமை மாறாமல் இருந்தக் காலம். “எப்படிதான் இந்தக் குளிருல இருக்கீங்களோ? அதுவும் குளிர் சட்டைக் கூட…

சிசில் ராஜேந்திரா: உள்நாட்டில் புறக்கணிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படும் கவிஞர்

முன்னோட்டம் மனிதனின் அடிப்படை உரிமைகளில் மிக முக்கியமான ஒன்று கருத்து சுதந்திரம். ஒருவர் தன் கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த மற்றும் கற்பிக்க எவ்வித தணிக்கையும் தடையும் இல்லாமல்  செயல்பட முடியுமானால் அதுவே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எனப்படுகிறது. மலேசியாவில் பெரும்பாலான நாடுகளைப் போலவே பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு வந்தாலும் அவை சில…

அணைத்தல்

கைப்பேசித் திரையில் முகத்தைப் பார்த்தபோது கண்ணிமைகள் தடித்துப் போயிருப்பது தெரிந்தது. இரண்டு மாதமாகவே சரியான தூக்கமில்லாமல் அலைகிறேன். சுகுமாறன் அங்கிள் மறுபடியும் வேலையில் சேர அழைத்ததற்கும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டேன். இன்று அம்மாவுக்கு எப்படியும் குணமாகிவிடும் என எனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கண்களைக் கசக்கி விட்டு அமர்ந்தேன். காலையிலேயே தூக்கம் குறித்த பயம்…

ஒப்புரவு

பாலம் ஏறிய சிறிது  தூரத்தில், இடது கை கட்டை விரலைக் கவிழ்த்து சைகை காட்டியபடி இருவர் நின்றிருந்தார்கள். தலைகவிழ்ந்த சாலை வெள்ளை விளக்கின் வெளிச்சத்தில் ஒரு இளைஞனும், ஒரு நடுத்தர வயது பெண்ணும்  தனித் தனியாக உதவி கேட்டது தெரிந்தது.  அவன் கையைக் காட்டிய விதமா அல்லது அவன் உடலில் தெரிந்த நிலைகொள்ளாத தன்மையா எனப்…

பூஜாஅன் ஹாத்திக்கு

1985 – ஆம் ஆண்டில் ஐந்தாம் படிவம் பயின்ற தமிழ்மொழிக் கழக மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டி, அந்தக் காலகட்டத் தமிழ்மொழிக் கழக மாணவத் தலைவன் பாஸ்கரன் பழைய மாணவர்கள் வாட்சப் குழுவின் மூலம் அழைப்பு விடுத்திருந்தான். அந்தக் குரல் பதிவை எனக்கு அனுப்பி வைத்திருந்தாள் தனலட்சுமி. “வாட்சப் குழுவில் சேர்கிறாயா?” என்கிற கேள்வியும் உடன்…

சிறுத்தை

“அண்ணா, நான் திவ்யா பேசுறேன். அவருக்கு உடம்பு சரியில்லை’’ என்ற குரல் பதிவைக் கேட்டதும் கைகள் நடுங்கின. சட்டெனச் சாலையோரமாக வாகனத்தை நிறுத்தினேன். “மாலனுக்கு என்னா ஆச்சி?” எனக் குரல் பதிவை அனுப்பினேன். திவ்யாவிடம் பதில் இல்லை. அந்த அமைதி என்னைக் குடைந்தது. நான் செல்லத்தான் வேண்டும். நண்பன் என்பதற்காக இல்லாவிட்டாலும் என் தொழில் தர்மம்…

வெண்ண புட்டு

‘ஏன்மா… நவுறு. பொண்ணு, மருமயன், பேத்திலாம் வந்துருக்காங்க பாரு. வழிவுடு’ ‘சுபத்துரா, அம்மாவ பாத்தியலா…’ ‘காசிக்கு அந்தப்புரம் காசரளி பூந்தோட்டம், நாங்க கண்டா வருவோமுன்னு கதவடச்சி போனியோ, சைஞ்சிக்கு அந்தப்புரம் செவ்வரளி பூந்தோட்டம், நாங்க தெரிஞ்சா வருவோமுன்னு செடிதாப்பா போட்டியோ…’ என்று சின்னதங்கச்சி பாடிக்கொண்டிருந்தாள். ‘ஆயாவ, வாயாமுடி வெளியகொண்டு போய் உட்காரவை’ ‘நல்ல மனுசி… எடுக்க,…

காவல்காரன்

ஜன்னலில்லாத மேல் அறையின் விரிப்பு மெத்தையில் அவன் படுத்த முதுகுப்புற இடவின் வியர்வைக்கோடு அழுந்தியிருந்தது. அழுக்காயிருந்த தலையணை உறையில் முகம் புதைத்தபடி இருந்தான். ஏதோ கருகி மணக்கும் வாசனை கும்மென்று அடைத்த போது இதற்கு முன்னர் தெருவில் யாரோ கொதிக்கும் என்ஜின் எண்ணெய்யை ஊற்றிய நாய் துடிதுடித்த போது பொசுங்கிய மயிர்த்தோலின் வாசனை அவனுக்கு நினைவுக்கு…

செந்தாழை

கெம்பித்தாய்கள், குண்டா வாளால் ஒருவனின் தலையைச் சீவி மக்கள் கூடுமிடத்தில் வைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள். இரத்தம் உறைந்த கழுத்து, சீவிய நுங்கு போல் கண்கள் துருத்திக்கொண்டு ஏக்கத்துடன் நம்மைப் பார்க்கின்றன. இன்னும் கடலில் மிதக்கும் பிணங்கள்… அவை கரையொதுங்கியதும், நாய் இழுத்துக்கொண்டு வருபவற்றை வந்துவேடிக்கை பார்ப்பவர்களிடத்தில் கூறுவதெல்லாம் என்ன… கவனமாக இருங்கள்… கவனமாக…

நட்சத்திரங்களின் வாக்குமூலம்

இதழிலும், இடது கன்னத்திலும் மிருதுவான முத்தங்களை வழங்கி கழுத்துக்குச் சென்று வியர்வை வாடையைப் பொருட்படுத்தாது கீழிறங்கினான். முத்தமிட்டப்படியே அவள் மார்பகங்களுக்குச் சென்றடைந்தான். அவ்வப்போது தலையைத் தூக்கி செயலிலிருந்து விடுபட்டு அவள் முகம் காணவும் தவறவில்லை. கண்கள் சொக்கி மோனத்தில் இருந்தாள். அவளின் மேலாடையைக் களைய முற்படும் போதே அவனுள் எழுந்த படபடப்பு அவனைத் தொந்தரவுக்குள்ளாக்கியது. எவ்வகையிலாவது…

உயிர்மரம்

1 பூத்த மலர் சொரியும் பூவனத்தில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். எல்லாம் குழந்தைகளும் சிறார் சிறுமிகளும். சிதறும் நெல்மணி கொத்தும் பறவைகள் என ஓசை. அங்கு அவர்கள் யாருக்கும் பெயரில்லை, பெயர் வைக்கும் வழக்கமும் அப்பொழுதில்லை. பெரிய உடல் கொண்டிருந்தவர்கள், விளையாடும் அக்குழந்தைகளை குட்டித் திரளாகவே பார்த்தனர். மக்கள் தங்களையும் திரளாகவே உணர்ந்தனர். அங்கிருந்த ஒவ்வொருவரும்…

புதுக்கவிதை நதிக்கரை: ஓர் எதிர்வினை

‘புதுக்கவிதை நதிக்கரை’ என்ற இணைய சந்திப்பின் காணொலியைப் பார்க்க நேர்ந்தது. ஊரடங்கு காலத்தில் இவ்வாறான நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது முக்கியமானது. அவ்வகையில் கவிஞர் மனஹரன் மற்றும் சுதந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஆனால், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதோடு மட்டுமல்லாமல் தரமான பேச்சாளர்களை, ஆய்வாளர்களை அடையாளம் கண்டு நிகழ்ச்சியைக் கட்டமைத்தால் இதுபோன்ற முயற்சிகள் மேலும் சிறந்த பலனைக் கொடுக்கும். …