Category: கட்டுரை

ஆழம்: தட்டையான புனைவு

மலேசியாவில் எழுதப்படும் புனைவுகளைப் பரந்த வாசிப்புக்குக் கொண்டு செல்லவும் அவை குறித்து அரோக்கியமான திறனாய்வு போக்கை உண்டாக்கவும் மார்ச் 2 முதல் மார்ச் 3 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய முகாம் உற்சாகமாக நடந்து முடிந்தது. இம்முகாமின் நான்காவது அங்கத்தில் சீ. முத்துசாமி எழுதிய ‘ஆழம்’ நாவல் குறித்து விமர்சன…

கரிப்புத் துளிகள்: நிகழ மறுக்கும் அற்புதம்

கடந்த மார்ச் 2,3 ஆகிய தினங்களிள் வல்லினத்தின் ஏற்பாட்டில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடந்து முடிந்த விமர்சன முகாமில்   எழுத்தாளர் அ. பாண்டியனின் ‘கரிப்புத் துளிகள்’ நாவல் குறித்த விமர்சன அரங்கும் இடம்பெற்றது. முகாமின் ஐந்தாவது அமர்வில் மூவர் அந்நாவல் தொடர்பான விமர்சனத்தை முன்வைத்ததோடு அதையொட்டிய கேள்விகளும் விவாதங்களும் என இரண்டு மணி நேரம் அவ்வமர்வு…

தாரா: நிபந்தனையற்று மன்னித்தலின் தரிசனம்

மார்ச் 2,3 ஆகிய நாட்களில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்த வாசிப்பு – விமர்சன முகாமில் 3 மார்ச் அன்று ஆறாவது அமர்வில் ‘தாரா’ நாவல் குறித்து ரேவின், புஷ்பவள்ளி, சுதாகர் ஆகியோர் உரையாற்றினர். மூவருமே வெவ்வேறு கோணத்தில் நாவலை அணுகினர். முதலாவதாக ரேவின் பேசினார். “ஒரு புனைவை வாசிக்கும்போது அதில் உள்ள…

இளந்தமிழன் சிறுகதைகள்: பொது உண்மைகளின் பெட்டகம்

கடந்த 2 மார்ச் 2024 முதல் 3 மார்ச் 2024 வரை மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நிகழ்ந்த வல்லினம் முகாமின் இரண்டாவது அமர்வில் எழுத்தாளர் இளந்தமிழன் எழுதிய ‘இளந்தமிழன் சிறுகதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்நூலில் மொத்தம் 45 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ‘இளந்தமிழன் சிறுகதை’ நூலைக் குறித்து எழுத்தாளர்கள் கோ. புண்ணியவான்,…

தேவதைகளைத் தேடும் சிறுகதைகள்

மார்ச் 2,3 ஆகிய இரண்டு நாட்கள் ‘வல்லினம் விமர்சன முகாம் – 4’ மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் நடைபெற்றது. மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த புத்தகங்கள் குறித்த வாசக கலந்துரையாடல் அது. இந்த முகாமின் கலந்துரையாடலுக்காக மூன்று நாவல்களும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 20 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபெற்றனர். ஒவ்வொரு…

முரண்: பழமைவாதத்தின் பரண்

வல்லினத்தின் முன்னெடுப்பில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் 2 மார்ச் முதல் 3 மார்ச் 2024ஆம் ஆண்டு நடந்த இலக்கிய வாசிப்பு முகாமில்2022ஆம் ஆண்டு வெளிவந்த எழுத்தாளர் ந. பச்சைபாலனின் ‘முரண்’ சிறுகதைத் தொகுப்பு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதல் அமர்வில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 20 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பையொட்டி எழுத்தாளர்கள் ஆதித்தன், சாலினி, குமரன் ஆகியோர்…

தனித்துக் களமாடிய இலக்கிய வீரன் க.நா.சு

க. நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் புதுமாதிரியான ஆளுமை. நாவலாசிரியராக, கவிஞராக, சிறுகதையாளராகப் பல படைப்புகளைத் தந்திருந்தாலும் ஓங்கி ஒலித்த ஒரு விமர்சன ஆளுமையாகவே பார்க்கப்பட்டார். நாவல் என்பது தொடர்கதைகளாக, மேம்போக்கான மரபை, குடும்ப உறவுகளைப் போற்றும் கதைகளாக வந்தபோது வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்தும் ஒரு கலை வடிவம் அது என்பதை உணர்ந்து நாவல்…

ஒரு கலைஞன்; ஓர் ஓவியம்; ஒரு திரைப்படம்

தங்கா ஒரு தொன்மையான ஓவியக் கலை. இது திபேத்திய பௌத்த ஓவியத்தின் ஒரு வடிவமாகும். பெளத்த மதத்தில் தங்கா ஓவியம் ஓர் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. இந்த ஓவியங்களைப் பருத்தி அல்லது பட்டுப் துணியில் வடிப்பர். பௌத்த மத தெய்வங்கள், புராணக் காட்சிகள் அல்லது மண்டலாக்ககளைச் சித்தரிப்பவை இந்த ஓவியங்கள். தங்கா ஓவியம் அழகான…

சீனலட்சுமி : கற்பிதங்களுக்குள் இயங்கும் அக உலகும் புற உலகும்

ஒரு படைப்பாளியின் உலகம் தனியானது. சராசரி மனிதர்கள் சமூக நிகழ்வுகளைப் பார்வைக் கொள்வதற்கும் ஒரு படைப்பாளி தனக்கான உளப்பாங்கோடும் தனித்தபார்வையோடும் அவற்றை அணுகுவதற்கும் வேறுபாடுகளுண்டு. சமூக நிகழ்வு அல்லது சமூக நிலை பற்றிய படைப்பாளியின் மனம் சார்ந்த விளைவுகளையும் தாக்கங்களையும் மற்றவர் பார்வைக்கு முன்வைக்கின்ற ஓர் உந்துதல் ஒரு படைப்பு உருவாகக் காரணமாகயிருக்கிறது. படைப்பாக்கச் செயற்பாடென்பது…

தி. ஜானகிராமனின் சிறுகதைகள்

‘ஒரு எழுத்தாளனின் முக்கியத்துவம், மற்றவர்களுக்கு விவரிக்க நேரமில்லாத விடையங்களை விவரிப்பதே’ என்கிறார் ஜேம்ஸ் பால்டவின். ஆனால், மனிதர்களின் இயல்பையும் யாதர்த்தமான உள்ளுணர்வுகளையும் படம்பிடித்துக் காட்டுவது எளிதானது அல்ல. மனிதர்கள் மாற்றத்திற்கும் மறதிக்கும் பழக்கப்பட்டவர்கள். இப்படிப்பட்ட கட்டமைப்பிற்குள் சிக்கிக் கொண்ட நமக்குத் தனது எழுத்துகளின் மூலம் அனுபவத்தை ஆறப்போட்டுச் சிந்திக்கத் தூண்டுகிறார் தி. ஜானகிராமன். அந்த எழுத்தாளுமை…

சோழிகளை விசிறும் புனைவுக்கலைஞன்

மேஜிக் தாத்தாவை நான் பயின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலருக்கும் தெரியும். என் நண்பனை என்றாவது ஒருநாள் பள்ளிக்குக் காரில் அழைத்து வருபவர். அது சிவப்பு நிறக் கார். பெரும்பாலான ஆசிரியர்களே மோட்டார் சைக்கிளில் வந்த காலத்தில் பளிச்சிடும் அந்தச் சிவப்பு நிறக் காரின் மீதும் முழுமையாக நரையேறிய மேஜிக் தாத்தா மீதும் எங்களுக்குப் பெரிதும் ஈர்ப்பிருந்தது.…

யாதனின் யாதனின் நீங்கினோர் காதை

புதிதாக வந்திருக்கும் சினிமாப் பாடல் வரிகளுக்கான தனியிடத்தை உருவாக்குவதற்காக அனுமதி பெறாமலே பள்ளிக்கூடத்தில் படித்த பாடங்களை அழித்துவிடும் தானியங்கி நினைவாற்றல் தான் என்னுடையது என்றாலும், சில ஆங்கில/தமிழ் செய்யுள்களும் பாடங்களும் எப்படியோ அந்த நினைவாற்றலுக்குத் தப்பி கொஞ்சம் மீதமிருக்கவே செய்கின்றன. அப்படி என் நினைவாற்றலில் தப்பிப் பிழைத்த செய்யுள்களுள் ஒன்று ஷேக்ஸ்பியரின் ‘As You Like…

எம்.யுவன் கவிதைகள்: தீராத ருசி

சொற்களும் அர்த்தங்களும் கிளியென்று சொன்னால் பறவையைக் குறிக்கலாம் பச்சையைக் குறிக்கலாம் மூக்கைக் குறிக்கலாம் பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச் சிறையைக் குறிக்கலாம். சமயத்தில் அது கிளியையும் குறிக்கலாம். இப்படித்தான் துவங்குகிறது ‘தீராப்பகல்’ என்ற எம். யுவனின் மொத்தக் கவிதைத் தொகுப்பு. ஆங்கிலத்தில் ‘Absolute’ என்ற சொல்லும் ‘Relative’ என்றவொரு சொல்லும் இருக்கின்றன. முன்னதற்கு ‘அறுதி’ அல்லது ‘துல்லியம்’…

தனியனின் பெருவெளி

புராதனக் கோயில் விமானத்தில்பன்னெடுங்காலமாய் ஒட்டிக்குந்தி வெளிறிய புறாஏனென்றே தெரியாமல்பறந்து செல்ல முனைந்தது.எண்ணற்ற மின்னல்களைஇடிகளை பொழியும் தாரைகளைஓயாமல் உரசும் காலத்தைதாண்டிவந்தபோது இல்லாதஅவசரம் இன்று ஏனோ.கணக்கற்றதூதுப் புறாக்கள்பந்தயப் புறாக்கள்காதல் புறாக்கள்பறந்து கடந்த வானம்மேகத் துணுக்கும் இன்றிவெறிச்சிட்டு இருந்ததுவோகோபுரத்தை நீங்காதுஅழுத்தி வைத்த விசையேதான்மண்ணை நோக்கிஈர்த்ததுவோ,கீழ் நோக்கி உடல்இழுபடும் அதே வேகத்தில்உயரத் துடித்த ஆன்மாவின்உந்துதலோகாலங்காலமாய் ஒடுங்கிவிரிய மறுத்த இறக்கைகளைமீறிமேல்நோக்கி எழும்பிஅல்லாடி அல்லாடிமெல்ல…

ஒரு வட்டம் பல மையங்கள்: குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலை முன்வைத்து

அன்றைய இரவு, இரவுணவு முடித்துவிட்டு நானும் என் மனைவியும் அடுக்களையை சுத்தம் செய்து கொண்டிருந்தோம். அவள் சிங்க்கில் பாத்திரப்பண்டங்களைத் துலக்கிக்கொண்டிருந்தாள். நான் மேடையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். மொழுகி வைத்த மேடையை எந்தத் துணியால் துடைக்க வேண்டும் என்று அவளிடம் கேட்டபோது, பால்கானியில் காயும் நீல கலர் கைப்பிடித்துணி அதை எடுத்துக்கோ என்றாள். நான் பால்கனிக்கு…