Category: கட்டுரை

அமரத்துவ வாழ்வைத் தேடிய ஆதிமனிதன் கில்கமேஷ்

நாடோடி வாழ்க்கையிலிருந்து மாற்றங்கண்டு ஒரு நிலத்தில் நிலையாகத் தங்கி வாழும் காலத்தை மனித நாகரீக வளர்ச்சியின் தொடக்கப் புள்ளியாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனித வாழ்வியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் பின்னர் நகர உருவாக்கங்களுக்கு வழிகோலின. உலகின் முதல் நகர உருவாக்கம் பொ. ஆ. மு 4500 காலக்கட்டத்தில் தோன்றியிருக்கலாம் என அகழ்வாய்வுகள் காட்டுகின்றன.…

சந்தூரியின் மீட்டலும் முரண் பயணமும்

வாழும்நெறி, தத்துவம், உளவியல், எனப் பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைக்கும் குறுங்குறிப்புகள் தினமும் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் அவற்றின் ஆக்கிரமிப்பு அதிகம். சில நிமிட காணொளிகளாகவும் குரல் பதிவுகளாகவும் அவை நம் கைக்குள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரே நேரத்தில் வாழ்க்கை பற்றிய அறிவுரைகளாகவும், நமது அன்றாட வாழ்வை விமர்சித்து அதிலிருந்து கடந்துவிட…

வல்லினம் & GTLF: மூன்று நாள் இலக்கியப் பெருவிழா

நான் கடைசி நேரத்து பணிக்குவியல்களை விரும்பாதவன். அரக்கபரக்க பூர்த்தியாகும் செயல்பாடுகள், நேர்த்தியற்ற விளைபயன்களையே கொடுக்கும் என உறுதியாக நம்புபவன். இவ்வருட இலக்கிய விழா, பிரம்மாண்டமானது என்றும் அதை ஒட்டிய பணிகள் வலுவானவை என்பதையும் நான் அப்பேச்சு தொடங்கப்பட்ட காலத்திலேயே அறிவேன். எனவே, மே மாதமே அதன் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கத் தொடங்கியிருந்தோம். என்னளவில் விழா என்பது…

புதுமைதாசன் : சிங்கப்பூர் கலை எழுச்சியின் அடையாளம்

மெலிந்த சிறிய உருவம். தன்னை வெளிப்படுத்தாத மிகுந்த உள் அடக்கம். பெரும் நிகழ்விலோ  சிறு கூடலிலோ கைகளைப் பின்னால் கட்டியபடி அமைதியாக நிற்கும் பி.கிருஷ்ணனைப் புதிதாகப் பார்க்கும் ஒருவர் சராசரி முதியவர் என்று கடந்துவிடக்கூடும். ஆனால், பழுப்படைந்த விழிகளில் பொதிந்துள்ள அறிவின் ஒளியை எதிர்கொள்ளும்போதும் கணீரென கனத்து ஒலிக்கும் குரலைச் செவிமடுக்கும்போதும் அவர்பால் மரியாதை கலந்த…

காலப் பதிவுகளாகும் நாடகங்கள்: பி.கிருஷ்ணனின் நகைச்சுவை நாடகங்களை முன்வைத்து

சிங்கப்பூர் வரலாற்றில் 1960களும் 1970களும் மிக முக்கியமான காலக்கட்டமாகும். மலேசியாவிலிருந்து பிரிந்து நிச்சயமின்மைகளோடு நாடு தள்ளாடிக்கொண்டிருந்த காலம் முதல் தசாப்தம். அதிக மக்கள் தொகை, வர்த்தகத் தேக்கம், வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை, இனங்களுக்கிடையேயான பதற்றம் எனப் பலவித பிரச்சினைகளை நாடு எதிர்கொண்ட காலக்கட்டமிது. இரண்டாவது தசாப்தத்தை அரசியல் நெருக்கடிகள், பொருளாதாரச் சவால்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை…

பி. கிருஷ்ணன்: எல்லையைக் கடக்கும் கடல் பறவை

1 தமிழகத்தில் நாடகம் என்பது நவீன கலை மட்டுமல்ல. இங்கே குறைந்தது இருபது நாடக வகைகளுக்கு மேல் உள்ளன அல்லது நாடகத்தை போல் அமைப்புக் கொண்ட நிகழ்த்துக் கலைகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களும் அதற்கான தனி நாடக வகைமை/அமைப்புக் கொண்டிருப்பதைக் கரகாட்டத்தின் துணைக்கலைகள் வழி காணலாம். கரகாட்டத்தின் உட்பிரிவுகளான ராஜா ராணி ஆட்டம், கப்பல் பாட்டு,…

பி. கிருஷ்ணனின் நாடக வெளியில் உலக இலக்கியம்

அறிமுகம் எழுத்தாளர் பி. கிருஷ்ணனின் ‘சருகு’ நாடகத் தொகுப்பின் முன்னுரையில் சிங்கப்பூர் வானொலி கடந்து வந்திருக்கும் மாற்றங்களையும் கால அடிப்படையில்  இந்தியப்பகுதியில் பணியாற்றிய அறிவிப்பாளர்களையும் தலைவர்களையும் குறிப்பிட்டு மிக நீண்ட விரிவான வரலாற்றுக் குறிப்பொன்றை அளிக்கின்றார். இந்த வரலாற்றுக் குறிப்பு அளிக்கும் சில அவதானிப்புகள் மிக முக்கியமானவை. தொடக்கக்காலத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் வானொலியின் இடமென்பது…

பி. கிருஷ்ணன் சிறுகதைகள்: புதுமையின் ஊற்றுமுகம்

எழுத்தாளர் பி. கிருஷ்ணன் நாடகம், கட்டுரை, கதைகள் எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களை எழுதிய முன்னோடி படைப்பாளர். புதுமைப்பித்தனின் நேசனான அவர் தன் பெயரைப் புதுமைதாசன் என வைத்துக் கொண்டார். அந்தப் புனைப்பெயரிலேயே அவர் இன்றும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இன்று அவர் சிங்கப்பூர் வாசியாக அறியப்பட்டாலும், பூர்வீகமாக ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். மேலும், சிங்கப்பூர்…

ரத்தம், கண்ணீர், சொற்கள் – பி. கிருஷ்ணன் மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியரின் மூன்று நாடகங்கள்

2016ஆம் வருடம் நாங்கள் லண்டனுக்கு அருகில் ஏவன்  நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ட்ராட்போர்ட் என்ற ஊரில், ஷேக்ஸ்பியரின் இல்லத்தைப் பார்க்கப் போயிருந்தோம். அக்காலத்தைய கணக்கில் அது ஒரு நடுத்தர வர்க்க வீடு. இப்போதைய அளவுகோலில் சற்று வசதியான இல்லம்தான். அவ்வீட்டில் அவரது தந்தை கையால், பாதி தைக்கப்பட்ட தோல் செருப்பைப் பார்வைக்கு வைத்திருந்தனர். அது எனக்கு அப்போது…

அள்ளிய கைகள்: புதுமைதாசனின் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்பை முன்வைத்து

சிங்கை இலக்கியச் சூழலில் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏதாவது ஓர் இலக்கிய அமைப்பில் அல்லது நண்பர் கூடுகையில், மொழிபெயர்ப்புப் படைப்புகளைக் குறித்த உரையாடல் நடைபெறுவது வழக்கம். படைப்புகளைப் பற்றிய உரையாடலில் ஒரு பகுதியாக மொழிபெயர்ப்பின் தரம் அல்லது மொழிபெயர்ப்பாளரின் வெற்றி, தோல்வி குறித்த விவாதம் நடைபெறும். அவ்வகை உரையாடல்களில் பங்குப் பெறும்போதெல்லாம் இரு வகையான உவமைகள் என்…

மண்டலா – 2

மண்டலா 1 படிவம் நான்கில் அறிவியல் துறையில் (Science Stream) படிக்க தகுதியிருந்தாலும், கலையியல் துறையைத் (art stream) தேர்ந்தெடுத்திருக்கும் என்னை அடையாளம் காண டீச்சர் கோர் (Khor) அன்று வகுப்பறைக்கு வந்தார். அவர் கலைக் கல்வி பாட ஆசிரியர். ஒரு சிறந்த ஓவியரும் கூட. அவரின் சுவரோவியம் பள்ளி முழுதும் நிரம்பியிருக்கும். நான் கலையியல்…

வல்லினம் & GTLF இலக்கிய விழா சிறப்பு வருகையாளர்கள்

இவ்வாண்டு சிங்கைப் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் ஃபாலின் ஃபானிடமிருந்து ஒரு புலனச்செய்தி வந்தது. இவ்வருடம் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் இரு தமிழ் அமர்வுகள் இணைக்கப்பட போவதாகவும் அதற்கு நான் பொறுப்பேற்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். இரு அமர்வுகளையும் தமிழிலேயே நடத்தலாம் என்ற அவர் குறிப்பு உடனடியாக என்னைச் சம்மதிக்க வைத்தது. பி. கிருஷ்ணனின் வருகை அந்த…

தமிழ் விக்கி: எழுத்தாளனுக்குக் கொடுப்பதென்ன?

இவ்வாண்டு ஜனவரி 13, ஜெயமோகனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழ் விக்கி குறித்த தனது எண்ணங்களைச் சொல்லி அதில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார். அது சுருக்கமான கடிதம்தான். எப்போதுமே ஆசிரியர்கள் தம் மாணவர்களை நோக்கி குறைவாகவே பேசக்கூடியவர்களாக உள்ளனர். குறைந்த சொற்களின் ஊடே தன் மாணவன் தமது உள்ளக்கிடக்கை புரிந்துகொள்வான் என ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.…